Jump to content

சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு

Yang-Jiechi-696x392.jpg

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை கொழும்பு வருகின்றது.

இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆரபாய்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வருகின்றது.

நாளை மறுதினம், ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள் எனவும், ஜனாதிபதி, பிரதமரைத் தவிர வேறு சந்திப்புக்களில் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடனேயே இவர்களுடைய விஜயம் இடம்பெறும். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு உயர்ட்டக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/சீன-உயர்-மட்டக்-குழு-ஒன்ற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பிடிக்குது போல.....😀

மாவு புளிக்கிறது அப்பத்துக்கு நல்லதுதானே..

😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன உயர் குழு கொழும்பை வந்தடைந்தது; தனிமைப்படுத்தல் இல்லை! பி.சி.ஆர். பரிசோதனை மட்டும்

Yang-Jiechi-696x392.jpg

சீன கம்யூனிசக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக் குழு இலங்கை வந்துள்ளது. நேற்றிரவு 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர். இதனை சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லூவோ உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இந்த உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்திப்புக்களை நடத்தவுள்ளது. இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மாத்திரம் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்சா டி சில்வா எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன பிரதிநிதிகள் குழுவினர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் அவர்கள் ஒருநாள் விஜயமாக இங்கு வருகின்றனர் அவர்கள் உயர்மட்ட பிரதிநிதிகள் அவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன பிரதிநிதிகள் குழுவை வரவேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சீன பிரதிநிதிகள் தொடர்பில் பின்பற்றப்பவேண்டிய சுகாதர விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/சீன-உயர்-குழு-கொழும்பை-வந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி.சி.ஆர் பரிசோதனை இன்றி சீனக் குழு இலங்கைக்குள் வந்தது எப்படி? எதிரணிகள் போர்க்கொடி.!

Screenshot-2020-10-09-23-40-10-608-com-a

சீனத்தூதுக் குழுவினருக்கு தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை எதுவுமின்றி நாட்டிற்குள் பிரவேசிக்க வழங்கிய அனுமதி குறித்து நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

சீனாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு நேற்று இரவு விஜயம் செய்த 26 பேரடங்கிய தூதுக் குழுவை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

இதன் பின் இன்றைய தினம் காலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் வைத்து சீனத் தூதுக்குழு சந்தித்தது.

35 வருடங்களுக்கு முன் அப்போதைய சீன ஜனாதிபதியியுடன் மொழிபெயர்ப்பாளராக முதற்தடவை ஸ்ரீலங்கா வந்திருந்ததை நினைவுபடுத்திய முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜீயேஷி, இம்முறை விஜயத்தில் 4 நாடுகளுக்கு பட்டியலிட்டுள்ள நிலையில் முதலாவது விஜயத்தை ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடன்களால் ஸ்ரீலங்கா கடன்பொறிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், நாட்டின் அபிவிருத்திகள் மக்களின் ஜவநோபாயம், பொருளாதாரத்தை உயர்த்த உதவியாக இருந்ததாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலும் சீன அரசாங்கம் எதிர்காலத்திலும் ஸ்ரீலங்காவுக்கு உதவியளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்த அவர், கடந்த போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவிகளையும் நினைவுப்படுத்தினார்.

இதில் கருத்து வெளியிட்ட யாங் ஜீயேஷி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்திற்கான இலக்கு கொள்கைப் பிரகடனத்திலுள்ளவற்றை அமுல்படுத்த உதவியளிப்பதாக வாக்குறுதியளித்தார்.

மேலும் தற்போது இடம்பெற்றுவரும் சீன அபிவிருத்திப் பணிகளை பூரணப்படுத்தவும், விவசாயம், கல்வி, நீர் வடிகாலமைப்பு, டிஜிட்டல் வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்யவும் மற்றும் அம்பாந்தோட்டை தொழிற்பேட்டை நிர்மாணிப்பினை விரைவாக முடிவுறுத்தவும் எதிர்பார்ப்பதாக யாங் ஜீயேஷி குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த சந்திப்புக்களை முடித்துக்கொண்ட சீனத்தூதுக்குழு, இன்று பகல் அலரிமாளிகையில் வைத்து ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது.

இதில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்களான பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சீன தூதுக்குழுவுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர, அதுபற்றி தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

அதனை விமான நிலைய நிர்வாகக் குழுவினரே நிர்வகிக்கின்றனர் என்பதால் அவர்களிடமே உறுதிப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு - இதனை வெளியுறவுகள் அமைச்சிடமே கேட்க வேண்டும். நாம் நாடு என்ற ரீதியில் செயற்படும்போது ஒரே வகையில் செயற்பட்டால் எல்லா விடயங்களையும் செய்ய முடியாமல் போகும். 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இவ்வாறான நிலைமைகளின் போது 15 ஆவது தினத்தில் தொற்று ஏற்படாதா? என்று சிலர் வினவுகின்றனர். அவ்வாறெனில் மேலும் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரிக்க முடியுமா? எனவே தான் அனைத்து வியடங்களில் இதனை பின்பற்ற முடியாமலுள்ளது”

எவ்வாறாயினும் சீனத்தூதுக் குழுவின் ஸ்ரீலங்காவுக்கான விஜயத்தின்போது கோவிட்-19 வைரஸ் தொடர்பில் அனைவரும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்படாமையிட்டு எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல, சீனத்தூதுக்குழு ஏன் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள் என்று வினவினார்.

மேலும் கோவிட் -19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திய நாடுகளில் ஸ்ரீலங்காவுக்கு இரண்டாம் இடமென குறிப்பிட்டுள்ள சீன அரசாங்கத்தின் கணிப்பு பொய்யானது, அதனை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

http://aruvi.com/article/tam/2020/10/09/17738/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டியும் வரேல்ல, முதலும் வரேல்ல .....

என்ன மாதிரி..... கஸ்டமெண்டா... இப்போதைக்கு கச்சதீவை தாருங்கோ.... பார்த்து செலவுக்கு ஜஞ்சை, பத்தை தாறம்....

இந்தியாவே.... அவயள நாம பார்க்கிறம்..... அது பிரச்சணை இல்லை..... வட்டிக்காசு இல்லாட்டி கச்சதீவு.....

ஒரு மறுமொழியில்லாமல் போனா.... எங்களுக்கு வெடிதான்....

அம்பாந்தோட்டப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு ஓடி வாறம்.... யோசிச்சு முடிவை சொல்லுங்க... 🥺😢😣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

வட்டியும் வரேல்ல, முதலும் வரேல்ல .....

என்ன மாதிரி..... கஸ்டமெண்டா... இப்போதைக்கு கச்சதீவை தாருங்கோ.... பார்த்து செலவுக்கு ஜஞ்சை, பத்தை தாறம்....

இந்தியாவே.... அவயள நாம பார்க்கிறம்..... அது பிரச்சணை இல்லை..... வட்டிக்காசு இல்லாட்டி கச்சதீவு.....

ஒரு மறுமொழியில்லாமல் போனா.... எங்களுக்கு வெடிதான்....

அம்பாந்தோட்டப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு ஓடி வாறம்.... யோசிச்சு முடிவை சொல்லுங்க... 🥺😢😣

அது . 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வட்டியும் வரேல்ல, முதலும் வரேல்ல .....

என்ன மாதிரி..... கஸ்டமெண்டா... இப்போதைக்கு கச்சதீவை தாருங்கோ.... பார்த்து செலவுக்கு ஜஞ்சை, பத்தை தாறம்....

இந்தியாவே.... அவயள நாம பார்க்கிறம்..... அது பிரச்சணை இல்லை..... வட்டிக்காசு இல்லாட்டி கச்சதீவு.....

ஒரு மறுமொழியில்லாமல் போனா.... எங்களுக்கு வெடிதான்....

அம்பாந்தோட்டப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு ஓடி வாறம்.... யோசிச்சு முடிவை சொல்லுங்க... 🥺😢😣

நாதம்ஸ்...  நீங்கள் சொல்வது, நிதர்சனமான கருத்து. 👍
ஸ்ரீலங்காவிற்கு,   பல இறுக்கங்கள், விரைவில்...  வரப் போகின்றது என்பதை,
இந்தச்  சம்பவங்கள்.. கட்டியம் கூறி  நிற்கின்றன. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்...  நீங்கள் சொல்வது, நிதர்சனமான கருத்து. 👍
ஸ்ரீலங்காவிற்கு,   பல இறுக்கங்கள், விரைவில்...  வரப் போகின்றது என்பதை,
இந்தச்  சம்பவங்கள்.. கட்டியம் கூறி  நிற்கின்றன. :)

சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுக்கங்கள் வராது வராது வராது வராது வராது வராது வராது வராது வராது...வட கிழக்கிலை தமிழன்கள் இருக்கும் வரைக்கும் சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுங்கங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுக்கங்கள் வராது வராது வராது வராது வராது வராது வராது வராது வராது...வட கிழக்கிலை தமிழன்கள் இருக்கும் வரைக்கும் சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுங்கங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள்..😎

நீங்கள்... யார், யாரை, சொல்கிறீர்கள் என, நினைத்து... சிரிப்பு. வருகுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நமக்கு ஒரு நாளைக்கு பச்சை குத்தும் லிமிட் இவ்வளவுதானா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அட நமக்கு ஒரு நாளைக்கு பச்சை குத்தும் லிமிட் இவ்வளவுதானா ?

ஒரு நாளைக்கு நாலுதான்......இனி 24 மணித்தியாலம் பொறுத்திருக்க வேணும்,கசவாரம் புடிச்ச யாழ்களம் எண்டு தெரியாதோ.....😁
பேஸ்புக்கிலை குத்துறமாதிரி காய்சமாடு கம்பிலை விழுந்த கதையெல்லாம் இஞ்சை இல்லை....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஒரு நாளைக்கு நாலுதான்......இனி 24 மணித்தியாலம் பொறுத்திருக்க வேணும்,கசவாரம் புடிச்ச யாழ்களம் எண்டு தெரியாதோ.....😁
பேஸ்புக்கிலை குத்துறமாதிரி காய்சமாடு கம்பிலை விழுந்த கதையெல்லாம் இஞ்சை இல்லை....😎

நான் இந்த பச்சை புள்ளிகளை கணக்கில் எடுப்பதில்லை இந்தமுறை மாத்திரம் குத்தி பார்த்தன் இப்படி வந்திருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாளைக்கு நாலுதான்......இனி 24 மணித்தியாலம் பொறுத்திருக்க வேணும்,கசவாரம் புடிச்ச யாழ்களம் எண்டு தெரியாதோ.....😁
பேஸ்புக்கிலை குத்துறமாதிரி காய்சமாடு கம்பிலை விழுந்த கதையெல்லாம் இஞ்சை இல்லை....😎

 

1 minute ago, பெருமாள் said:

நான் இந்த பச்சை புள்ளிகளை கணக்கில் எடுப்பதில்லை இந்தமுறை மாத்திரம் குத்தி பார்த்தன் இப்படி வந்திருக்கு .

Who is Nesamani

மிஸ்டர்ர் ... வண்டு  முருகன்ஸ்...,
ஒரு நாளைக்கு... ஐந்து புள்ளிகள், உள்ளது என்பதை... கவனிக்கவும்.
- அதி உச்ச நீதிபதி, மோகனதாஸ். -  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

 

Who is Nesamani

மிஸ்டர்ர் ... வண்டு  முருகன்ஸ்...,
ஒரு நாளைக்கு... ஐந்து புள்ளிகள், உள்ளது என்பதை... கவனிக்கவும்.
- அதி உச்ச நீதிபதி, மோகனதாஸ். -  :grin:

காவியத் தலைவா எங்கு நீ சென்றாயோ! சிவாஜி கணேசன்- Dinamani

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

காவியத் தலைவா எங்கு நீ சென்றாயோ! சிவாஜி கணேசன்- Dinamani

பாலும், பழமும்...  கைகளில் ஏந்தி வரும் , எங்கள்  அன்புத் தலைவனை தேடுகின்றோம். ❤️ 💓

Link to comment
Share on other sites

சர்வதேச அளவில் தொடர்ந்தும் இலங்கையின் இறைமை சுதந்திரத்திற்காக சீனா குரல்கொடுக்கும்- சீன பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கப்போவதாக சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சீன ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயம் என சீன பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

gota-chinse.jpg
இலங்கை தனது அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றியடைவதற்கு சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதை சீனா முன்னுரிமைக்குரிய விடயமாகியுள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் உள்ளது எனவும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தேச அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டத்தினை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என சீன பிரதிநிதிகள் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/78371

Link to comment
Share on other sites

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்க சீனா இணக்கம்

சீனாவிடமிருந்து இலங்கை 500 மில்லியன் டொலர் கடனுதவியை பெறவுள்ளது.
சீனாவிடமிருந்து 500மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனை பெறுவதற்கான உடன்படிக்கையில் விரைவில் இலங்கை கைச்சாத்திடவுள்ளது.

mahinda-china-dele-300x186.jpg
சிலநாட்களுக்கு முன்னர் இலங்கை;கு விஜயம் மேற்கொண்ட சீன உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவர்த்தைகளின் போது இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த கடனை இலங்கை பத்துவருட காலப்பகுதியில் திருப்பிசெலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள திறைசேரி அதிகாரிகள் கடனை எதற்காக பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார மீட்சி திட்டங்களுக்காக இந்த கடனை இலங்கை பயன்படுத்தவுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78746

சீனா செல்கின்றார் ஜனாதிபதி கோட்டபய; முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்

gotabaya-1-1-1024x521.jpgசீனாவின் உயர் மட்டக்குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் இந்த விஜயத்தை அவர் முன்னெடுப்பார் எனவும், அதன்போது முக்கியமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

https://thinakkural.lk/article/78744

Link to comment
Share on other sites

600 மில்லியன் யுவான்களை வழங்கியது சீனா!

சீன அரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதாக (16.5 பில்லியன் ரூபாய்) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9ம் திகதி கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைவாகவே சீனா இலங்கைக்கு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதேவேளை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் இருந்து கடனாக பெறவும் இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/600-மில்லியன்-யுவான்களை-வழங/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mr.இந்திய வாத்திற்கு வயிறெரிய  தொடங்கியிருக்கும்,
துட்டை எறிந்து எறிந்து  நம்முடைய பழைய அயிட்டத்தை அமத்திகொண்டு திரியிறானே இந்த சப்ப மூக்கன், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 09:06, குமாரசாமி said:

சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுக்கங்கள் வராது வராது வராது வராது வராது வராது வராது வராது வராது...வட கிழக்கிலை தமிழன்கள் இருக்கும் வரைக்கும் சிறிலங்காவுக்கு இறுக்கம்/ இறுங்கங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள் வர விடமாட்டாங்கள்..😎

ஆர் விடமாட்டாங்கள் எண்டு சொல்லுறியள்? சீனனோ இந்தியனோ? 

Link to comment
Share on other sites

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் சீன தூதரகம் மேலும்தெரிவித்துள்ளதாவது

china-embassy-1.jpg

ஒக்டோபர் 9 ம் திகதி இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையிலேயே இலங்கைக்கு நிதிவழங்கும் விடயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சீன உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்தவேளை இந்த உடன்படிக்கையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு அபிவிருத்தி முகவர் அமைப்பின் தலைவரும் இலங்கையின் நிதியமைச்சின் திறைசேரிசெயலாளரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த அவசரமான மிகதேவைப்படுகின்ற உதவிக்காக இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78914

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

ஆர் விடமாட்டாங்கள் எண்டு சொல்லுறியள்? சீனனோ இந்தியனோ? 

நாங்கள் என்னத்துக்கு சீனா இந்தியா எண்டு யோசிப்பான்?????
 சிலோனிலை பிரச்சனையே இல்லை எண்டு உலகம் முழுக்க வீடு வீடாய் போய் சொல்லுறதுக்கு சம்பந்தன் கொம்பனியும் டக்ளசரும் காணுமே...😎

இனிமேல் ஒண்டும் தெரியாதமாதிரி இப்பிடியான விசர்க்கேள்வியள் கேட்டால் ஆரெண்டும் பாராமல் கடிச்சுப்போடுவன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செண்பகம் said:

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் சீன தூதரகம் மேலும்தெரிவித்துள்ளதாவது

china-embassy-1.jpg

ஒக்டோபர் 9 ம் திகதி இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையிலேயே இலங்கைக்கு நிதிவழங்கும் விடயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சீன உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்தவேளை இந்த உடன்படிக்கையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு அபிவிருத்தி முகவர் அமைப்பின் தலைவரும் இலங்கையின் நிதியமைச்சின் திறைசேரிசெயலாளரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த அவசரமான மிகதேவைப்படுகின்ற உதவிக்காக இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78914

இது கொஞ்சம் ஓவராக்கிடக்குது! மேல அதேயளவு ரூபாய் எண்டெல்லோ எழுதியிருக்கு. தினக்குரலின்ரை ஆசைக்கு ஒரு அளவுக்கணக்கு இல்லைப்போல??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.