Jump to content

தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடையும் அபாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2020 at 23:16, தனிக்காட்டு ராஜா said:

இதுவரை புலம்பெயர்ந்தோர் செய்தது என்ன ??  ஏதாவது மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் , முதலீடுகள் , செய்தது என்ன ஒன்று இல்லை ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம் பல நாடுகளை முதலிட சொல்கிறது இலங்கை அரசு அதில் புலம்பெயர்ந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கலாம் ( வேலைவாய்ப்பு ) அரசுக்கு வருமானம் இதைதான் அரசு யோசிக்கிறது . ஆனால் புலத்தமிழர்கள் இலங்கையில் முதலிட மாட்டார்கள் முதலிட போவதுமில்லை ஆனால்  இலங்கையில் முதலிட முடியாது பாதுகாப்புமில்லை என்பார்கள் 

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

இப்படி சொல்லும் நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம் ஆக இருக்கும் இடத்தில் இருந்து அல்வா மட்டும்கொடுப்பம்  சும்மா போங்க சார் பழைய புராணத்தைப் பாடமல் 

 

On 16/10/2020 at 12:04, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

 

 

சொன்னாலும் குற்றம் சொல்லா விட்டாலும் குற்றம் 

"இதுவரை புலம்பெயர்ந்தோர் செய்தது என்ன ??  

ஏதாவது மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் , முதலீடுகள் , செய்தது என்ன ஒன்று இல்லை" 

 

இதை ஒரு உணர்ச்சிவசபட்ட கருத்தாகவே நான் பார்க்கிறேன். இது தனிக்கே தெரியும். 
மிக பெரிய அபிவிருத்தி முதலீடு இந்த இரண்டுக்கும் பதில் ஆம் என்றும் சொல்லலாம். ஆனாலும் இதை 
மற்றவர்களும் புரிந்து கொள்வதுக்காக இந்த இரண்டு விடயம் குறித்தும் பதில் எழுதுகிறேன். அபிவிருத்தி என்பதை முதலில்  பார்ப்போம். புலம்பெயர் தமிழர்களை பொறுத்தவரை மிக பெருத்த அபிவிருத்தி அங்கு செய்ய முடியும்  அவ்வாறானதொரு வசதி நிற்சயமாக புலம்பெயர்ந்தவர்களிடம் உண்டு.  ஆனால் உள்நாட்டில்  என்றாலும் புலம்பெர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்கள்தான். ஒற்றுமையாக ஒரு விடயத்தை  குறிப்பிட்டு நல்ல விடயங்கள் எதையும் முன்னெடுக்க முடியாது . கெட்ட விடயங்கள் சிலது வெற்றி பெறுகின்றன. அவற்றை எல்லாம் தள்ளிவைத்து  இதில் பல இடியப்ப சிக்கல் இருக்கிறது. அபிவிருத்தியை  அங்கிருப்பவர்கள்தான் முன்னெடுக்க முடியும் இங்கிருப்பவர்கள் பணத்தை மட்டுமே கொடுக்க முடியும்  அங்கிருப்பவர்கள் பலர் பணத்தை களவாடி எனக்கு தெரியவே சில பள்ளிக்கூட கட்டிட கட்டுமானங்கள்  கூட இடையில் நிற்கிறது. இதில் ஒரு வேடிக்கையான விடயத்தை நான் பார்த்தேன்.. இலங்கையில் முதலீடு செய்வதாக  இருக்கும் இன்னொரு திரியில் அங்கே எதுவும் செய்ய முடியாது என்று  
பந்தி பந்தியாக கொட்டியவர்கள் இந்த கருத்துக்கு தனிக்கு பச்சை போட்டு உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதை எல்லாம் பார்த்துவிட்டு இது ஒரு வழமையான குழு சண்டை போல தெரிந்ததால் விட்டு விட்டு சென்று விட்டென் .. பின்பு தனி யாழை விட்டு போவதாக எழுதியதால் அவர் மேல் உள்ள மதிப்பு காரணமாக எழுதுகிறேன். அது தவிர்த்து அபிவிருத்தி என்பது அரச அதிபர் கிராம சேவகர் ஊடாக அரசின் சட்ட திட்டங்களுக்கு  உட்பட்டும் இருக்க வேண்டும். நான் என்னுடைய தன்னிச்சையாக அங்கே பாலம் கட்ட முடியாது  அப்படி கட்ட விடுவது இன்னும் ஆபத்து. 

அடுத்தது முதலீடு  இது லாபம் பாதுகாப்பு  வருட/வருமான வீதம் என்பது எல்லாம் கணித்துதான் செய்ய முடியும் முதலீடு என்பதின் அடிப்படையே அதுதான். இல்லாவிட்டால் இங்கு சூதாடுவதும் முதலீடுக்குள்தான் வரும். எனக்கு தெரியவே மில்லியன் டொலர் கணக்கில் முதலீடு செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள்  
பிசினஸ் ரெசெர்ச் ஸ்டடி  செய்து எதுவும்  அங்கே சாதகமாக இல்லை. நம்மிக்கையுடன் அடுத்த 5 வருடத்துக்கு  இவர் எனக்கு  வேலை செய்வார் என்று அவருக்கான பயிற்சி கொடுத்து செலவழித்து உருவாக்க கூடிய அளவில் கூட  அங்கே போதுமான நம்பிக்கையான மனித சக்தி இல்லை. நான் இரு தொழில் அவர்களை தொழிலாளிகள்  இல்லாமல் முதலாளிகள் ஆக்கி எனக்கு வெறும் 25 வீத லாபம் மட்டுமே என்று தொடங்கியும்  எந்த பலனும் இல்லை என்னுடைய அவ்வளவு பணமும் வீணானது பற்றி கவலை இல்லை  அவர்களுக்கும் எந்த பயனும் அற்று போனது என்பதுதான்  கசப்பானது உடனடி காசுக்கு ஆசைப்பட்டு திருடி வித்து பொய் கூறி  தங்களை தாங்களே  ஏமாற்றி கொண்டார்கள். 

தனிக்காட்டு ராஜா நாம் இதுபற்றி இன்னொரு திரியில் பேசி இருக்கிறோம் ஆகவே இதில் பெரிதாக அலட்ட
தேவை இல்லை. இரண்டு தளத்திலும் திருத்தம் தேவை கூடுதலாக தாயகத்தி வாழும் மக்களுக்கு முதலீடு பற்றிய  அறிவு விளக்கம் இரண்டும் உடனடியாக தேவை.  

ஐ. நாவரைக்கும்  நீதி கேட்டு குளிருலயும்  வெயிலிலையும் நடந்ததுதான் மிச்சம்

பல நாடுகளை முதலிட சொல்கிறது இலங்கை அரசு அதில் புலம்பெயர்ந்த பணக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கலாம் ( வேலைவாய்ப்பு ) அரசுக்கு வருமானம் இதைதான் அரசு யோசிக்கிறது .

 

ஆனால் புலத்தமிழர்கள் இலங்கையில் முதலிட மாட்டார்கள் முதலிட போவதுமில்லை ஆனால்  இலங்கையில் முதலிட முடியாது பாதுகாப்புமில்லை என்பார்கள் 

முதலிட வேண்டாம் எத்தனை பேர் மீண்டும் குடியேற நினைக்கிறார்கள் காரணம் சொல்வார்கள் இலங்கையில் வாழமுடியாது அரசு எங்களை கொலை செய்து விடும் என்று போராடிய போராளிகளே இங்கு வாழும் போது பொய்ய சொல்லி விசா பெற்றவர்களால் இங்கு வாழமுடியாது அது அவர்களுக்கு தெரியும் . இங்கு வாழ்வதும் மனிதர்கள்தான் . 

அங்கு வந்து குடியேறினால் தமிழர்களுடைய சனத்தொகை கொஞ்ச அதிகரிக்கும் 
ஒரு 2 லட்ஷம் பேர் வந்து குடியேறினாலும் அதனால் என்ன பெரிய லாபம் வர போகிறது?
தேர்தலில் வாக்கு போடுவதை விட. வந்து குடியேறினாலும் நகர்புறங்களில்தான் குடியேற போகிறார்கள் ஆகவே இவர்களால் கிராமப்புற குடியேற்றத்தை தடுக்க முடியாது. மாறாக உள்ளூர் காணி நிலங்கள் விலையை கூட்டி அங்கிருக்கும் மக்கள் ஒரு அங்குலமும் வாங்க முடியாத ஒரு சூழலை மட்டுமே உருவாக்க முடியும் குடியேறுவது என்பதில் இனத்துக்கு பெருத்த லாபம் ஒன்றும் இல்லை. கொலை கொள்ளை அச்சுறுத்தல் சிங்கள இராணுவ போலீசால் மட்டுமே உண்டு என்றும் இல்லை...... உள்ளூர் ரவுடிகளாலும் உண்டு. 

 

இப்படி சொல்லும் நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்து அரசை எதிர்த்து போராட  முடியாது

????????

அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடியாது சொல்லுங்கள் பார்ப்பம் ஆக இருக்கும் இடத்தில் இருந்து அல்வா மட்டும்கொடுப்பம்  சும்மா போங்க சார் பழைய புராணத்தைப் பாடமல் 

"அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்."

 


இதும் ஒரு உணர்ச்சி தழும்பலாகவே பார்க்கிறேன் 
உங்கள் பதிலுக்கு வரும் பதிலை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கும்போது 
உங்கள் பதிலை இனொருவர் ஏறுகொள்ளவேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் மீண்டும் தற்காலிகமாக முனிவராகி ஒரு குட்டி தவம் செய்து 
அபார சக்தியுடன் தனிக்காட்டு சிங்கமாக வாருங்கள். கிழக்கு மக்களின் 
குரலாக இங்கே இருக்கும் உங்கள் குரலை மட்டும் தயவு செய்து தணித்து விடாதீர்கள் 
இதுதான் நீங்கள் கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகமாக நான் எண்ணுகிறேன் 

 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2020 at 01:04, தனிக்காட்டு ராஜா said:

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

என்ன தல பிஸ்டல் குண்டுக்கே இப்படி   நிலை குலையலாமோ ...
மாறி PK யை தூக்கி அடிக்க வேணாமோ, சும்மா களத்தை விட்டு போறேன் அது இது என்று  கொண்டு 
நாமளும் இப்படி ஒதுங்கிவிட்டால் , நாட்டில் நடப்பதை இங்கே பட்டவர்த்தனமாக போட்டு தோல் உரிக்க யார் இருக்கிறார்கள் ,அதற்கும் ஒரு படி மேலே போய்  தேசிய தேசிக்காய் மோகிகள்  யதார்த்தம் தெரியாது  நிரந்தரமாக தங்கள் கனவுலகிலேயே சஞ்சரிக்க தொடங்கிடுவினம், நாட்டில் நிதர்சனமாகும்  வேறு ஒன்றும் அவர்களது கனவுலகில் நடப்பதாக அவர்களே கற்பனை பண்ணிக்கொள்ளும் தேசியமும் உண்மையாக மொத்த  ஈழ தமிழினத்தின் தேசியத்தை நோக்கிய பாய்ச்சலுக்கு எவ்வளவு  ஆபத்து என்பதை அவர்களது கனவை கலைத்து நிஜத்தை உணரவைக்கும் எமக்கு தலை மேலுள்ள பொறுப்புகள்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:04, தனிக்காட்டு ராஜா said:

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

தனிக்காட்டு ராஜாவின்,  இந்த முடிவு சரியல்ல.
அனுபவம் வாய்ந்த, யாழ்.களத்தின்   நீண்ட கால உறுப்பினர்.. 
இப்படி ஒரு முடிவை எடுத்தது எதிர்பார்க்காதது.
தயவு செய்து உங்கள், முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2020 at 01:34, ரதி said:

ஒரு கருத்தை எழுதினால் அதற்கான விமர்சனத்தை எதிர் நோக்க பழகிக் கொள்ளுங்கள் ...கருத்திற்கு கருத்தால் பதில் சொல்லாமல் துரோகி என்பதும் ,யாழை விட்டு ஒருவரை துரத்தும் நிலைக்கும் வர பண்ணுவது எந்த வகையான செயல் யாயினி ?

இதுக்குத்தான் எங்கடை ரதி அக்கி வரவேணும் என்றது ...
அக்கி வந்திட்டா  இனி வாங்கோ பாப்பம் மல்லுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

அண்ணை, நீங்கள் "தாற்பரியத்தோடு" எழுதும் பதில்களை பதில் கருத்தென்று நீங்கள் நினைப்பது, அகற்ற வேண்டிய கருத்தென்று மட்டூஸ் நினைப்பது. இதனால் நீங்கள் அடிக்கடி மூக்குச் சிந்துவது, இதெல்லாரும் பார்ப்பதும் அறிந்ததும் தானே? இதை அறியாத ஒருவர் நீங்கள் மட்டும் தான்! 

உங்கள் கணக்கு சரியானதே! 

நீங்கள் ஒரு தடவை எனக்கு தனிமடலில் உங்கள் மருத்துவ திரிக்கு வந்து கருத்து எழுதும்படி கேட்டிருந்தீர்களே? அப்போது எனது தாற்பரியங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?😜

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:04, தனிக்காட்டு ராஜா said:

.

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

அடப்பாவி

நம்ம முனிவர்  எங்கே????

தாயகத்துக்கும் புலத்துக்குமான இந்த விரிசல் ஆரம்பமாகி  பல  வருடங்களாச்சு

ஆனால் நாம்  பேசணும்

இன்னும்  அதிகம் பேசணும்

இன்னும் இன்னும் அதிகம் பேசணும்

காலத்தின்  தேவை  இது

காலத்தின் கட்டாயம் இது

இந்த காலத்தின் எமது கடமை  இது

வா  ராசா  வா

உன்னை நல்லவன் என்று  சொல்ல உன் அண்ணன் நான் இருக்கிறேன்  சாட்சியாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:04, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான ஒன்றை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஞாபகத்திற்கு படம் எடுத்தோம் ஆனால் நாங்கள் எங்கு சுற்றினோம் எந்த சிறுவர் இல்லங்களுக்கு சென்றோம், எத்தனை ஏழை சிறார்கள் கல்விக்கு உதவினோம் என்பதை தம்பட்டம் அடிக்க வில்லை அது உங்களுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. 

நான் தற்போது  நாட்டில் நடந்து வருவதை ,ஜதார்த்தத்தை எழுதும் போது அதை ஏற்க பலரால் முடியவில்லை . நான் இங்கு சொகுசு வாழ்க்கை வாழவில்லை விடுமுறையில் தினக்கூலி வேலைக்கு செல்கிறேன் நம்புவீர்களா? நம்ம மாட்டீர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் இந்த முகம் தெரியாத இணையத்தில் பல லட்சம் சம்பாதித்து இருப்பேன் அது இங்கு எனக்கு உதவி செய்கிறோம் என்று சொன்ன உள்ளங்கள் அறியும் யாயினி

 

பலருக்கு வெறுப்பு வந்திருக்கு, கவனமாக பழக சொல்லியும் எழுதி உள்ளீர்கள் நீங்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் இருக்கலாம் அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இத்தனை காலம் பயணித்துள்ளோம் . நான் அரச கைக்கூலியும் அல்ல அனைைவருக்கும் நன்றி .

அடியேனை மன்னித்து விடுுங்கள் இனி இந்த ராஜா யாழ் இணைையத்திற்கு வரமாட்டார்.

எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.😏😏😏 

தனி, தயவுசெய்து யாழில் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்கள் உங்களுக்கு சரியெனப்பட்டால் அதை நீங்கள் பதிவிடுவதில் எந்த தவறும் இல்லை. ஒரு குற்றச்சாட்டை வைக்கும்போது அதை specific ஆக சம்பவத்தை குறிப்பிட்டு எழுதுங்கள். பொதுப்படையாக புலம்பெயர்ந்தோர் அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று எழுதுவதை தவிர்க்கலாம். அதற்காக இவ்வளவுநாளும் எம்முடன் இணைந்திருக்கும் உங்களை ஒரேநாளில் துரோகி,அரச கைக்கூலி என வசைபாடுவோருக்காக நான் ஒருபோதும் கைதூக்கமாட்டேன். 

இணைந்திருங்கள் தனி!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.