Jump to content

யாழ் பல்கலைகழக துணை வேந்தர் தாக்கினார்... சுடுவோம் என மிரட்டினார்: மாணவர்கள் போராட்டம், குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை மாணவர்கள் 21 பேருக்கு பல்கலை வளாகத்தினுள் நுழைய தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தப் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு, பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் நேற்று நண்பகல் கலைப்பீடச் சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம் நேற்றிரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய – காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

https://www.ilakku.org/யாழ்-பல்கலை-மாணவர்கள்-21-பே/

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் பள்ளிக்கூடமே போகேல்லை எண்டுறன்.....நீங்கள் என்னடாவெண்டால் யூனி கீனி எண்டு கொண்டு......🙃

நம்புறன் டங்கமே

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

சம்பவத்துடன் தொடர்புடைய – காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

காணொளி எடுத்து தாங்கள் செய்கிறது தான் சரி எண்டு காட்ட வெளிக்கிட்டு கடைசியாக அதே காணொளியை வைச்சு இவைக்கு ஆப்பு வைக்கிற காலம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்புறன் டங்கமே

சொன்னால் நம்பமாட்டியள்.....நான் பள்ளிக்கூடமே போகேல்லை..

sadhu13.jpeg?resize=480%2C272&ssl=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இலங்கையில் தனிப்பட 'கல்லூரிகள்' என்ற கட்டமைப்பே இல்லையா..?

பட்டம்(Degree)/பட்டயம்(Diploma) போன்ற படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் போய்தான் படிக்க வேண்டுமா..? 🤔

உதாரணமாக, தமிழ் நாட்டில் பல்கலைக்கழமென்றால் சில குறிப்பிட்ட நிபுணத்துவம்(Specialized) கொண்ட  மேற்படிப்புகள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்தினுள் இருக்கும். இவற்றில் சேர்ந்து படிக்க முதலில் அந்த துறை சார்ந்தவற்றில் மற்ற சிறு நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக எந்த துறையிலும் பட்டம் படிக்க, பக்கத்து நகரங்களில் கல்லூரிகள் பல (பொறியியல், கலை, மருத்துவம், வேளாண்மை என) இருக்கும்.

இந்தக் கல்லூரிகள், அருகேயுள்ள பெருநகரத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துடன் நிர்வாக ரீதியாக(Affiliation) இணைக்கப்பட்டிருக்கும்.

  • மதுரை காமராசர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • மனோண்மனியம் சுந்தரனார்
  • அண்ணாமலை
  • பெரியார்
  • சென்னை
  • திருவாரூர்
  • **
  • **

இப்படி தோராயமாக 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் உண்டு..!

இல்லை வன்னியர்,

இலங்கையில் காலேஜ்/கல்லூரி என அழைக்கப்படுபவை பள்ளிகள்தான். அதாவது ஏ எல் எனப்படும் (பிளஸ்2) உயர்தரம் வரை படிக்கும் இடங்கள்.

ஏ எல் சோதனையில் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில், இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு அரச பல்கலையில் இடம் கிடைக்கும். இது முழுக்க முழுக்க பரிட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே. 

உதாராணமாக ஏ எல் பயோலாஜி படிப்பவர்களில், அதிக கூடிய புள்ளிகள் (மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்) எடுப்பவருக்கு மருத்துவம், அடுத்து, பல்மருத்துவம், அடுத்து மிருக வைத்தியம், அடுத்து பி எஸ் சி சையின்ஸ், படிப்பார்கள்.

இவை எல்லாமுமே கிடைப்பது மிக கடினம்.  இவை எதுவும் கிடைக்காதவர்கள் (ஏ எல் பரீட்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் (80% என நினைகிறேன்) இலங்கையின் அரச பல்கலை கழகங்களிக்கு போக முடியாது.

ஒரு 20/30 வருடம் முன்பு வரை அடுத்து பட்டபடிப்பு படிக்க இருக்கும் ஒரே தெரிவு வெளிநாடு போவது மட்டுமே.

அல்லது, பட்டய கணக்காளர், அல்லது சட்ட கல்லூரியில் சேர்ந்து (சட்ட பல்கலை அல்ல) கணக்காளர், வக்கீல் ஆகலாம்.

நீங்கள் சொல்வது போல தனியார் மருத்துவ காலேஜுகள் 70/80 களில் ஒருமுறையும், 2010-15 இலும் ஆரம்பித்து, எதிர்ப்பால் கைவிடப்பட்டு, அரச பலகலையுடன் இணைக்கப்பட்டன.

ஆனால் இப்போ அவுஸ்ரேலிய, யூகே உட்பட பல பல்கலைகழகங்கள் தமது affiliated campus களை இலங்கையில் திறந்துள்ளமையால், அங்கே இருந்தபடியே ஒரு முழு பட்டபடிப்பையும் முடிக்க முடிகிறது. சிலர் கடைசி வருடம் மட்டும் வெளிநாடு வந்தும் படிப்பார்கள்.

ஆனால் இலங்கையில் இலவசமாக கொடுக்கப்படும் அரச கல்வியை, ஒரு இலங்கை அரச பலகலையில் மட்டும்தான் பெற முடியும்.

எனக்கு தெரிந்தவரை இதுதான் நிலமை.

 இப்போ நிலைமை மாறி இருக்கலாம் ஆனால் வாய்பில்லை என்றே நினக்கிறேன்.

பிகு: ஆனால் அந்த காலம் முதலே மதுரைகாமராசர் பல்கலைக்கு இலங்கையில் இருந்து படிக்க முடியும் என நினைக்கிறேன்.

மட்டகளப்பில் 90களில் இந்த கற்கைக்கான விளம்பரத்தை பார்த்த நியாபகம்.

பிற் சேர்க்கை:

நான் மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன - கீழே கற்பகதரு அவற்றை சுட்டியுள்ளார். தகவல்களை கீழே எனக்கும் கற்பகதருவுக்குமான உரையாடலில் காணலாம். 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இல்லை வன்னியர்,

இலங்கையில் காலேஜ்/கல்லூரி என அழைக்கப்படுபவை பள்ளிகள்தான். அதாவது ஏ எல் எனப்படும் (பிளஸ்2) உயர்தரம் வரை படிக்கும் இடங்கள்.

ஏ எல் சோதனையில் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில், இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு அரச பல்கலையில் இடம் கிடைக்கும். இது முழுக்க முழுக்க பரிட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே. 

உதாராணமாக ஏ எல் பயோலாஜி படிப்பவர்களில், அதிக கூடிய புள்ளிகள் (மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்) எடுப்பவருக்கு மருத்துவம், அடுத்து, பல்மருத்துவம், அடுத்து மிருக வைத்தியம், அடுத்து பி எஸ் சி சையின்ஸ், படிப்பார்கள்.

இவை எல்லாமுமே கிடைப்பது மிக கடினம்.  இவை எதுவும் கிடைக்காதவர்கள் (ஏ எல் பரீட்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் (80% என நினைகிறேன்) இலங்கையின் அரச பல்கலை கழகங்களிக்கு போக முடியாது.

ஒரு 20/30 வருடம் முன்பு வரை அடுத்து பட்டபடிப்பு படிக்க இருக்கும் ஒரே தெரிவு வெளிநாடு போவது மட்டுமே.

அல்லது, பட்டய கணக்காளர், அல்லது சட்ட கல்லூரியில் சேர்ந்து (சட்ட பல்கலை அல்ல) கணக்காளர், வக்கீல் ஆகலாம்.

நீங்கள் சொல்வது போல தனியார் மருத்துவ காலேஜுகள் 70/80 களில் ஒருமுறையும், 2010-15 இலும் ஆரம்பித்து, எதிர்ப்பால் கைவிடப்பட்டு, அரச பலகலையுடன் இணைக்கப்பட்டன.

ஆனால் இப்போ அவுஸ்ரேலிய, யூகே உட்பட பல பல்கலைகழகங்கள் தமது affiliated campus களை இலங்கையில் திறந்துள்ளமையால், அங்கே இருந்தபடியே ஒரு முழு பட்டபடிப்பையும் முடிக்க முடிகிறது. சிலர் கடைசி வருடம் மட்டும் வெளிநாடு வந்தும் படிப்பார்கள்.

ஆனால் இலங்கையில் இலவசமாக கொடுக்கப்படும் அரச கல்வியை, ஒரு இலங்கை அரச பலகலையில் மட்டும்தான் பெற முடியும்.

எனக்கு தெரிந்தவரை இதுதான் நிலமை.

 இப்போ நிலைமை மாறி இருக்கலாம் ஆனால் வாய்பில்லை என்றே நினக்கிறேன்.

பிகு: ஆனால் அந்த காலம் முதலே மதுரைகாமராசர் பல்கலைக்கு இலங்கையில் இருந்து படிக்க முடியும் என நினைக்கிறேன்.

மட்டகளப்பில் 90களில் இந்த கற்கைக்கான விளம்பரத்தை பார்த்த நியாபகம்.

கோசான்,

நீங்கள் எழுதியதில் ஓரளவே சரியானது. கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் இலவசமாக Diploma கல்விநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி தனியார் நிறுவனம். யாழ்ப்பாண கல்லூரிக்கு சொந்தமானது இது. இங்கு பிரித்தானிய Charted Engineering பரிட்சைக்கான கற்கைநெறிகள் 1982இல் இருந்தே வழங்கப்படுகின்றன. Diploma கற்கை நெறிகளும் உண்டு. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான கல்லூரிகள் உண்டு. இவை தவிர பிற்காலத்தில், 1990இல் இருந்து Affiliated  University Colleges அமைக்கப்பட்டன. இவற்றில் சில இன்று பல்கலைக்கழகங்களாக மாறி விட்டன.

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_உயர்_தொழில்நுட்ப_கல்வி_நிறுவனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

கோசான்,

நீங்கள் எழுதியதில் ஓரளவே சரியானது. கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் இலவசமாக Diploma கல்விநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி தனியார் நிறுவனம். யாழ்ப்பாண கல்லூரிக்கு சொந்தமானது இது. இங்கு பிரித்தானிய Charted Engineering பரிட்சைக்கான கற்கைநெறிகள் 1982இல் இருந்தே வழங்கப்படுகின்றன. Diploma கற்கை நெறிகளும் உண்டு. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான கல்லூரிகள் உண்டு. இவை தவிர பிற்காலத்தில், 1990இல் இருந்து Affiliated  University Colleges அமைக்கப்பட்டன. இவற்றில் சில இன்று பல்கலைக்கழகங்களாக மாறி விட்டன.

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_உயர்_தொழில்நுட்ப_கல்வி_நிறுவனம்

நானும் இந்த தொழில் நுட்ப கல்லூரிகளை பற்றி நினைத்தேன்.

ஆனால் இவற்றில் எதிலும் பட்டபடிப்பு வழங்கபடுவதில்லையே? நான் அறிந்தவரையில் துறைசார் தொழில்நுட்ப டிப்ளோமக்கள்தான் இங்கே வழங்கபடுவன, டிகிறிகள் அல்ல என நினைவு.

கட்டுபெத்த கல்லூரி பின்னாளில் மொரட்டுவ பல்கலையாக மாறியது, ஆனா மாறியபின் அனுமதி பலகலைகழக வழிமுறைபடியேதான் என நினக்கிறேன்.

நீங்கள் சொல்லும் affiliated university colleges பற்றி நான் கேள்விபடவில்லை. 

Kottalawala Defense Academy, பெளத்த பிரிவேனா கல்லூரி இவற்றை சொல்கிறீகளா? அவையும் துறைசார் அமைபுகளே அன்றி, தமிழக முறை போல அல்லவே?

 

ஆனால் பள்ளிகள் மட்டும் இன்றி இப்படியான தொழில் நுட்ப கல்லூரிகளும், கல்லூரி என அழைக்கப்பட்டன என்பதை ஏற்று கொள்கிறேன்.

ஆனால் இவை தமிழ் நாட்டில் இருக்கும் - affiliated colleges of a university அமைப்பில் வராது என நினைகிறேன்.

Link to comment
Share on other sites

29 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்லும் affiliated university colleges பற்றி நான் கேள்விபடவில்லை. 

ஆனால் இவை தமிழ் நாட்டில் இருக்கும் - affiliated colleges of a university அமைப்பில் வராது என நினைகிறேன்.

கண்டி, பொல்கொல்ல affiliated university college இன் பௌதீகவியல் ஆய்வுகூடத்தை, நான் அங்கு பணியாற்றிய போது அமைத்து கொடுத்தேன். அந்த கல்லூரி இப்போது  மத்திய மாகாண பல்கலைக்கழகமாக மாறி விட்டது. வவுனியாவில் இருந்த affiliated university college இப்போது யாழ். பல்கலைக்கழகத்துடன் முழுமையாக இணைந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

கண்டி, பொல்கொல்ல affiliated university college இன் பௌதீகவியல் ஆய்வுகூடத்தை, நான் அங்கு பணியாற்றிய போது அமைத்து கொடுத்தேன். அந்த கல்லூரி இப்போது  மத்திய மாகாண பல்கலைக்கழகமாக மாறி விட்டது. வவுனியாவில் இருந்த affiliated university college இப்போது யாழ். பல்கலைக்கழகத்துடன் முழுமையாக இணைந்துவிட்டது.

தகவலுக்கு நன்றி.

இந்த affiliated university colleges இற்கான மாணவர் சேர்க்கை எப்படி நிகழ்ந்தது? ஏ எல் முடிவுகளை வைத்தா?

யாழ் பல்கலையின் இப்போதைய வவுனியா வளாகம் முன்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

இந்த முறை எப்போ கைவிடபட்டு இவை பல்கலைகளோடு இணைக்கப்பட்டன?

ஏன்?

தகவல்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி.

இந்த affiliated university colleges இற்கான மாணவர் சேர்க்கை எப்படி நிகழ்ந்தது? ஏ எல் முடிவுகளை வைத்தா?

யாழ் பல்கலையின் இப்போதைய வவுனியா வளாகம் முன்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

இந்த முறை எப்போ கைவிடபட்டு இவை பல்கலைகளோடு இணைக்கப்பட்டன?

ஏன்?

தகவல்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

 

ஏ.எல். முடிவுகளில் பல்கலைக்கழக அனுமதி பெற முடியாமல் போனவர்களுக்கு இங்கே அனுமதி கிடைத்தது. பின்னர் இடம்பெற்ற மாற்றங்களுக்கான காரணங்களை நான் ஆராயவில்லை. இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Junior_University_Colleges_(Sri_Lanka)

https://www.ugc.ac.lk/en/universities-and-institutes/other-recognized-degrees.html
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ஏ.எல். முடிவுகளில் பல்கலைக்கழக அனுமதி பெற முடியாமல் போனவர்களுக்கு இங்கே அனுமதி கிடைத்தது. பின்னர் இடம்பெற்ற மாற்றங்களுக்கான காரணங்களை நான் ஆராயவில்லை. இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Junior_University_Colleges_(Sri_Lanka)

https://www.ugc.ac.lk/en/universities-and-institutes/other-recognized-degrees.html
 

 

நன்றி இணைப்புக்களை பார்க்கிறேன்.

நான் நினைக்கிறேன் பல்கலை மாணவர் எதிர்பு, தொழில்சங்க எதிர்ப்பால் இந்த முறை ஆரம்பித்து குறைந்த வருடங்களிலேயே கைவிடபட்டிருக்கும் என.

அண்மையில் தனியார் மருத்துவ கல்லூரியையும் மாணவர்களும், தொழில்சங்கங்களுமே எதிர்த்ததாக நினைவு.

நான் வழங்கிய தகவலை திருத்தியமைக்கும், புதிய தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி 🙏🏾.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் மற்றும் கற்பகதரு இருவரின் பதிவுகளுக்கும் நன்றி.

இதன்படி பார்த்தால் ஒருவர் பள்ளி இறுதித் தேர்வில் அதாவது ஏ.எல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால் (50 சதவீதத்தும் கீழே, Say 35% Just Pass) அவர் உயர்கல்வி கற்க இயலாதே..?

கல்வி மறுக்கப்படும் நிலை தோன்றுமே..? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தொழில்முறை (பொறியியல், மருத்துவம், வேளாண்மை) கல்விகளுக்கு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் பள்ளி இறுதிதேர்வில் 50 சதவீதம் எடுத்தால் அவர் அக்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற கல்விகளுக்கு (கலை, பட்டயம்-Diploma முதலியன)35% சதவீதம் மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.

கல்லூரியில் இறுதி அனுமதி என்பது கிடைக்கும் இருக்கைகளின் எண்ணிகையை பொறுத்து ரேங்க் (Merit List) அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கப்படும் அல்லது நாமே தெரிவு செய்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

கோசான் மற்றும் கற்பகதரு இருவரின் பதிவுகளுக்கும் நன்றி.

இதன்படி பார்த்தால் ஒருவர் பள்ளி இறுதித் தேர்வில் அதாவது ஏ.எல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால் (50 சதவீதத்தும் கீழே, Say 35% Just Pass) அவர் உயர்கல்வி கற்க இயலாதே..?

கல்வி மறுக்கப்படும் நிலை தோன்றுமே..? 🤔

இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு அதுதான் சரியான தெரிவு வன்னியர் 
இப்போ கொஞ்சம் சனத்தொகை கூடியதால் கொஞ்சம் விரிவாக்கமும் 
தேவைப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் சாராசரியாக எத்தனை 
இதய வைத்தியர் எத்தனை பல் வைத்தியர் தேவை என்பதை சரியாக 
கணக்கிட்டு அதன் தேவைக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்கி கொள்ளலாம்.

கொம்பியூட்டர் மற்றும் எஞ்சினீரிங் தான் கொஞ்சம் வில்லங்கம் 
காரணம் அது எவ்வளவு தேவை என்பதை கணக்கிட முடியாது 
திடீரென ஒரு பாரிய சாப்ட்வேர் கொம்பனி இலங்கையில் வெற்றி பெற்றால் 
அவர்களுக்கு 2000 பேர் தேவை என்றால் பூர்த்தி செய்ய முடியாது

சுவிஸ் போன்ற மேலை நாட்டில் கூட கல்விமுறை இப்படித்தான் 
வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்கி என்ன பயன்? 
சுவிஸ் சிறிய நாடு 1990களில் சனத்தொகை வெறும் 6.5 மில்லியன்கள்தான் 
இப்போ எங்கட ஆக்க்களையும் முஸ்லிமையும் உள்ளுக்கு விட்டு 
அதுகள் ஒரு 2 மில்லியன் குட்டி போட்டிருக்கு இப்போ 8.5 மில்லியன் 
அதலால் பல்கலைப்படிப்பு  இலங்கை போல ஓ/ல் எ/ல் பாஸ் ஆனால்தான் உண்டு 
அங்கு ஓ/ல் ஏ/ல் இல்லை கிட்டதட்ட அதுக்கு ஒப்பான ஒரு முறைமைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு அதுதான் சரியான தெரிவு வன்னியர் 
இப்போ கொஞ்சம் சனத்தொகை கூடியதால் கொஞ்சம் விரிவாக்கமும் 
தேவைப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் சாராசரியாக எத்தனை 
இதய வைத்தியர் எத்தனை பல் வைத்தியர் தேவை என்பதை சரியாக 
கணக்கிட்டு அதன் தேவைக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்கி கொள்ளலாம்.

...

கல்வி என்பது வேலை தேவைக்கு ஏற்ப மட்டும்தானா..?

படிப்பறிவற்ற சமூகம் கொண்ட மூன்றாம் தர நாட்டிற்கும், ஓரளவு படிப்பறிந்த சமூகம் கொண்ட நாட்டிற்கும் பாரிய வித்தியாசமுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விதி மீறல்கள் இருந்தாலும், படித்து முன்னேறி வரும் சமூகம் என்பதால் கட்டுக்குள் கொணர்ந்து சுமூகமான மக்கள் வாழ்க்கைக்கு சூழ்நிலை அமைப்பது எளிது அல்லவா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

கல்வி என்பது வேலை தேவைக்கு ஏற்ப மட்டும்தானா..?

படிப்பறிவற்ற சமூகம் கொண்ட மூன்றாம் தர நாட்டிற்கும், ஓரளவு படிப்பறிந்த சமூகம் கொண்ட நாட்டிற்கும் பாரிய வித்தியாசமுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விதி மீறல்கள் இருந்தாலும், படித்து முன்னேறி வரும் சமூகம் என்பதால் கட்டுக்குள் கொணர்ந்து சுமூகமான மக்கள் வாழ்க்கைக்கு சூழ்நிலை அமைப்பது எளிது அல்லவா..?

இது ஒரு சிக்கலான விடயம் வன்னியர் 
எடுத்த எடுப்பில் இது சரி இது பிழை என கூற முடியாது 

100 டொக்டர்களுக்கு மட்டுமே வேலை இருக்கும் இடத்தில் 
200 டாக்ட்டர்களை உருவாக்கினால். வேலையில்லாத 
100இல் ஒரு 20 என்றாலும் படித்த படிப்பை சமூகத்துக்கு 
எதிரான வழியில் பணத்துக்கு ஆக பயன்படுத்தும் 

மற்றது தொட்டில்பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல 
பருவத்தில் கல்வியில் ஆர்வம் இல்லாதவர்கள் பின்பு 
ஏதும் சுத்துமாத்து வேலைக்குத்தான் கல்வியை நாடுவார்கள் 
அதுதான் ஹாக்கர்ஸ் 

இவை எல்லாம் 1910-1940க்கு உட்பட்ட காலப்பகுதியில் 
இருந்த உலக அமைப்பிற்கு ஏற்றவாறு உருவாக்க பட்டவை 

இப்போதைய உலகுக்கு ஒத்துவருமா? என்பது கொஞ்சம் சிக்கலானதுதான் 
இலங்கையில் படித்துவிட்டு அமேரிக்கா கனடா லண்டன் வந்தவர்கள் முன்னேறியதுக்கும் 
மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்களால் இவ்வாறு முன்னேற முடியாமல் 
போனதுக்கும் இதுதான் காரணம். அங்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் 
உயர்கல்வியை குறித்த முறையில்தான் கற்க முடியும் 
இங்கு அமெரிக்காவில் காசு இருந்தால் படித்துக்கொண்டே இருக்கலாம் 
இங்கு கல்லூரிகளும்  வியாபாரம்தான் ஆதலால்தான் ட்ராம் போன்றவர்கள் 
ஜனாதிபதி ஆக முடிகிறது. 

சமூதாய சீர் சீர்கேடு போன்றவை கணக்கில் எடுக்க படுகிறது 
மற்றையபடி குறித்த வயதுவரை கட்டாய கல்வி உண்டு 

1970களிலேயே தெற்காசியாவில் இலங்கை எழுத்து/வாசிப்பு கல்வியறிவு 98வீதம் 
இந்தியா இப்போதும் இல்லை என்றுதான் எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முன் தானே இந்த உபவேந்தரை வாழ்த்தி வரவேற்றார்கள்.. அதற்குள் இவ்வளவு பிரச்சனையா.

இவருக்கு அண்மையில்.. கோத்தா என்ற தமிழின அழிப்பாளன்.. புதிய பதவி ஒன்றையும் வழங்கி இருந்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நன்றி இணைப்புக்களை பார்க்கிறேன்.

நான் நினைக்கிறேன் பல்கலை மாணவர் எதிர்பு, தொழில்சங்க எதிர்ப்பால் இந்த முறை ஆரம்பித்து குறைந்த வருடங்களிலேயே கைவிடபட்டிருக்கும் என.

அண்மையில் தனியார் மருத்துவ கல்லூரியையும் மாணவர்களும், தொழில்சங்கங்களுமே எதிர்த்ததாக நினைவு.

நான் வழங்கிய தகவலை திருத்தியமைக்கும், புதிய தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி 🙏🏾.

 

கோசான், கல்வியியல் கல்லூரிகளை விட்டுட்டியள் ஆனால் இதில் படித்தால் ஆசிரியராக மட்டுமே முடியும். இதுவும் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 06:46, ராசவன்னியன் said:

இலங்கையில் தனிப்பட 'கல்லூரிகள்' என்ற கட்டமைப்பே இல்லையா..?

பட்டம்(Degree)/பட்டயம்(Diploma) போன்ற படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் போய்தான் படிக்க வேண்டுமா..? 🤔

உதாரணமாக, தமிழ் நாட்டில் பல்கலைக்கழமென்றால் சில குறிப்பிட்ட நிபுணத்துவம்(Specialized) கொண்ட  மேற்படிப்புகள் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்தினுள் இருக்கும். இவற்றில் சேர்ந்து படிக்க முதலில் அந்த துறை சார்ந்தவற்றில் மற்ற சிறு நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக எந்த துறையிலும் பட்டம் படிக்க, பக்கத்து நகரங்களில் கல்லூரிகள் பல (பொறியியல், கலை, மருத்துவம், வேளாண்மை என) இருக்கும்.

இந்தக் கல்லூரிகள், அருகேயுள்ள பெருநகரத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துடன் நிர்வாக ரீதியாக(Affiliation) இணைக்கப்பட்டிருக்கும்.

  • மதுரை காமராசர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • மனோண்மனியம் சுந்தரனார்
  • அண்ணாமலை
  • பெரியார்
  • சென்னை
  • திருவாரூர்
  • **
  • **

இப்படி தோராயமாக 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் உண்டு..!

வன்னியர்,

உங்கள் கேள்விகளுக்கு, கள உறுப்பினர்கள் பதில் தந்துள்ளனர்.

அவர்கள் தர தவறிய சில விடயங்களை முன்னர் உங்களுடன் பகிர்ந்துளேன்..... மீண்டும்...

தமிழகத்தில் கல்லூரி என்பது, அமெரிக்க மிஷன் அறிமுகப்படுத்திய, தமிழகம் முழுவதும் இன்றும் உள்ள, அதே  அமெரிக்க  ஸ்டைல். ( மதுரை அமெரிக்க மிஷன் கல்லூரி)

இலங்கையில் மிஷன் பாடசாலைகள் ஆக அதே அமெரிக்க மிஷன் தான் ஆரம்பித்தாலும், பிரிட்டிஷ் காலத்தில் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்கு தயார் படுத்துவனவாக இருந்ததால், அவை கல்லூரிகள் என்றே அழைக்கப்பட்டன. இத்தேர்வுகளில் சித்தி அடைந்தோர், பிரிட்டன் பல்கலைகழகங்களுக்கும், கல்கத்தா பல்கலைகழகம், சென்னைப் பல்கலைகழகளுக்கும் மேல் படிப்புக்கு சென்றனர்.

இந்தியாவில் இருந்து பலர் வந்து படித்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்னர், ஒரு மலையாளி, யாழ்ப்பாணம் வந்து தனது தாத்தா படித்த, கல்லூரி என்று நினைவு கூர்ந்ததை இங்கே யாழில் பகிர்ந்தனர்.

அவ்வகையில் யாழ்ப்பாணம் வந்து படித்து இங்கேயே தங்கிய ஒருவர், தெலுங்கர்... ரெட்டி... யாழ்பாண இந்துக் கல்லூரி அதிபராக 1920 களில் இருந்து இருக்கிறார்.

பின்னர் இலங்கை பல்கலைக்கழகங்கள், முதலாவதாக கொழும்பு பல்கலைக்கழகமும், பின்னர் பேராதனை (கண்டி) பல்கலைக்கழகமும் ஆரம்பமாகின.

இவை தமிழக ஸ்டைலில் இல்லாது, பிரிட்டிஷ் ஸ்டைலில் ஆரம்பமாகின. அதாவது, மாணவர்கள் பல்கலைக்கழங்கள் சென்று அங்கேயே விடுதிகளில் தங்கி இருந்து படிப்பது.

1948 சுதந்திரத்தின் பின்னர், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சை மெதுவாக நின்று போக, கல்லூரிகள், பல்கலைக்கழக தெரிவுக்கு தயார் செய்யும் (அதாவது உங்கள் +2 ) அட்வான்ஸ்ட் லெவல் உடன் நின்று கொண்டன. 

மாணவர்கள், பெற்றவர்கள் விருப்பம்  காரணமாக, சுதந்திரத்துக்கு முன்னர் கல்லூரிகள் என அழைக்கப்படவை அதே பெயரிலும், புதிய பாடசாலைகள், மகா வித்தியாலயம் என்றும் அழைக்கப்படுகின்றன. (உதாரணம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், வேலணை மத்திய மகா வித்தியாலயம்). ஆனாலும் மக்கள், பழக்க வழக்கத்தால், கிளிநொச்சி சென்றல் காலேஜ், வேலணை சென்றல் காலேஜ் என்பர்.

இலங்கை முதலாவது பிரதமர் நினைவாக, கொழும்பில் 1967ல் ஆரம்பமானது, டி எஸ் சேனநாயக்கா வித்தியாலயா. இது பழக்க தோசத்தால் டி எஸ் சேனநாயக்கா காலேஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால் அடிப்படையில் அவை உயர் நிலைப் பள்ளிகள்.

1983ன் பின்னர் தமிழகத்துக்கு படிக்கச் சென்ற பலர், அங்குள்ள கல்லூரி நண்பர்களுக்கு, இந்த விடயங்களை புரிய வைக்க தடுமாறினார். சிலருக்கு நான் சொன்ன இந்த விபரங்கள் தெரியாமல் இருந்தமையும் ஒரு காரணம். 

கல்லூரி ஒன்றில் படித்தவர் மீண்டும் ஏன் தமிழக கல்லூரியில் சேர்ந்து ஆரம்பத்தில் இருந்து படிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தர முடியாமல் தடுமாறினார். அது கல்லூரி இல்லை, மேல் நிலைப் பள்ளி என்று சொல்வது எங்கனம் என்று குழம்பியவர்களை குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிலர் அது வேறு கோர்ஸ், முடிக்க முடியல.... சண்டை... அது இங்கே இல்லை, அதனால் புதிதாக ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி.... 'ஆ... அதுதானே பார்த்தேன்'... என்று பதில் வாங்கியவர்களும் உண்டு.

இது குறித்து, ஈழத்தமிழர் எழுதிய விபரங்கள் ஒரு தமிழக வாரப்பத்திரிக்கையில் வந்ததாக அங்கே படித்த ஒருவர் சொல்லி உள்ளார்.

இன்னுமொரு முக்கியமான விடயம், இலங்கையில் இலவசகல்வி முழுமையாக அமுலில் உள்ளது. முதலாம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம்  வரை இலவசம்.

இடையே சில தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்க முனைந்தாலும், இலவச கல்விக்கு ஆப்பு என்று கருதிய, மாணவர் பேரெதிர்ப்பு காரணமாக அவை பின்வாங்கின.

இலங்கையின் சில புகழ் மிக்க கல்லூரிகள் 

ராயல் காலேஜ், கொழும்பு,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,
கொழும்பு இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, 
பருத்தித்துறை ஹாட்டலி கல்லூரி,
ஆனந்தா காலேஜ், கொழும்பு,
ரிச்மண்ட் காலேஜ், காலி,
ட்ரினிட்டி காலேஜ், கண்டி,

மெதடிஸ் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு

இவைகள் மாணவர்களை, சேர்த்துக் கொள்ளவே பரீட்சை வைக்கும் அளவுக்கு புகழ் மிக்கவை. ஆனால் இவை அனைத்துமே மேல் நிலைப் பள்ளிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்...  வேம்படி, சுண்டுக்குளி, யாழ். இந்து மகளிர் போன்ற பெண்கள் கல்லூரிகளை...
நீங்கள், சேர்க்காமல் விட்டதற்கு  வன்மையான  கண்டனங்கள்.  😜

***********************

எதிர்பார்த்து, ஒரு கும்புடுதலுடன் ஒரு இடம் துண்டு போட்டு வைத்திருக்கிறன். 

வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, யாழ். இந்துமக்களிர் கல்லூரி.

நான்... சுமே அக்கா வருவா எண்டு பார்த்தால்.... நீங்கள் வந்து இருக்கிறியள்.... பரவாயில்லை....

அது சரி, எந்த பள்ளிக்கூடத்து, ச****க்கு லவ் லெட்டர், ராக்கெட் மாதிரி எறிய , அது சுழன்று வந்து, பின்னால சைக்ளில் வந்த, அப்பா கையில் சிக்கினது என்றும் சொல்லலாம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

இலங்கையின் சில புகழ் மிக்க கல்லூரிகள் 

ராயல் காலேஜ், கொழும்பு,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,
கொழும்பு இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, 
பருத்தித்துறை ஹாட்டலி கல்லூரி,
ஆனந்தா காலேஜ், கொழும்பு,
ரிச்மண்ட் காலேஜ், காலி
ட்ரினிட்டி காலேஜ், கண்டி

இவைகள் மாணவர்களை, சேர்த்துக் கொள்ளவே பரீட்சை வைக்கும் அளவுக்கு புகழ் மிக்கவை.

நாதம்ஸ்...  வேம்படி, சுண்டுக்குளி, யாழ். இந்து மகளிர் போன்ற பெண்கள் கல்லூரிகளை...
நீங்கள், சேர்க்காமல் விட்டதற்கு  வன்மையான  கண்டனங்கள்.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்...  வேம்படி, சுண்டுக்குளி, யாழ். இந்துமக்களிர் போன்ற பெண்கள் கல்லூரிகளை...
நீங்கள், சேர்க்காமல் விடடதற்கு ஆழ்ந்த கண்டனங்கள்.  

பதில் மேலே.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நாதமுனி மற்றும் தமிழ்சிறி.

ஒருசமயம் "இவர்களென்ன கல்லூரி என்கிறார்கள், ஏ.எல்  என்கிறார்கள், பிறிதொரு சமயம் பல்கலைக்கழகம் என்கிறார்களே..?" எனக்கு பலகாலம் இந்த குழப்பம் இருந்தது.

குழப்பம் தீர்ந்தது.

நான் படிக்கும்போது இந்த +2 இல்லை.

உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். அதற்கு பெயர் எஸ்.எஸ்.எல்.சி. (Secondary School Leaving Certificate-SSLC)அந்த பள்ளி இறுதியாண்டில் கிட்டிய மதிப்பெண்கள் மூலம் ஏதாவதொரு கலைக் கல்லூரியில் சேர்ந்து பி.யூ.சி(Pre-University Course - PUC) ஒரு வருடம் படிக்க வேண்டும்.

அந்த பி.யூ.சி யில் கிட்டிய மதிப்பெண்களின் தரவரிசைப்படி பொறியியல், மருத்துவம் அல்லது வேளாண்மை கல்லூரியில் இடம் கிட்டலாம். அப்பொழுது பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பிற்கு குறைந்தது 90% கூட்டுத்தொகையில்(Aggregate) மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (இப்பொழுது 50% இருந்தால் போதுமானது)

இந்த கூட்டுத்தொகை கணிதம், பெளதீகம், இரசாயணம் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி (Aggregate)அதன் சதவீத அடிப்படையில் கிட்டுவதாகும்.

குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கலைக் கல்லூரிகளில் மற்ற பாடங்களுக்கான பட்டப் படிப்பு படிக்கலாம். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பள்ளிப் படிப்பு வரை(+2) இலவசக் கல்வியாகும். பட்டப் படிப்பிற்கு நாம்தான் செலவு செய்ய வேண்டும்.

1985ம் ஆண்டிற்கு பிறகே பள்ளியின் 11ம் வகுப்பையும், பி.யூ.சி வருடத்தையும் இணைத்து +2 என்ற முறையில் பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார்கள்.

இதில் சிறிய அசெளகரியம் இருந்தது. அதாவது +2 முடித்துவிட்டு கல்லூரிக்கு முதல் வருடம் படிக்க செல்லும்போது போதிய அளவு பக்குவம் இருக்காது, தடுமாற்றம் இருக்கும். ஏனெனில் வீட்டில் பெற்றோரின் கண்காணிப்பிலேயே +2 வரை படித்திருப்பதால்.

அதே பி.யூ.சி யில் ஒரு வருடம் தனியாக கல்லூரியில் படித்தவரிடம் சிறிது பக்குவம், துணிவு இருக்கும், ஒரு வருடம் வீட்டை விட்டு தனியாக இருந்ததால்..(இது சில பேராசிரியர்களின் அனுபவச் சொல்)

நான் பி.யூ.சி ஒரு வருடம் நகரத்திலுள்ள கலைக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துவிட்டு, பின்னர் கிராமத்தை விட்டு வெகுதூரம் சென்று பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பொறியியலில் ஐந்து வருடங்கள் படித்தேன். (அப்பொழுது பொறியியல் படிப்பு ஐந்து வருடங்கள் படிக்க வேண்டும்).

ஏற்கனவே தனியாக இருந்த துணிவு, சக அறைத் தோழர்களிடம் பழகும் பக்குவம் இருந்ததால், விடுதி/கல்லூரியில் இரண்டரை மாதங்கள் தொடர்ந்த ராகிங்-கை எளிதாக சமாளிக்க முடிந்தது. (இவை எனது அனுபவம். :))

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

நன்றி, நாதமுனி மற்றும் தமிழ்சிறி.

ஒருசமயம் "இவர்களென்ன கல்லூரி என்கிறார்கள், ஏ.எல்  என்கிறார்கள், பிறிதொரு சமயம் பல்கலைக்கழகம் என்கிறார்களே..?" எனக்கு பலகாலம் இந்த குழப்பம் இருந்தது.

குழப்பம் தீர்ந்தது.

நான் படிக்கும்போது இந்த +2 இல்லை.

உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். அதற்கு பெயர் எஸ்.எஸ்.எல்.சி. (Secondary School Leaving Certificate-SSLC)அந்த பள்ளி இறுதியாண்டில் கிட்டிய மதிப்பெண்கள் மூலம் ஏதாவதொரு கலைக் கல்லூரியில் சேர்ந்து பி.யூ.சி(Pre-University Course - PUC) ஒரு வருடம் படிக்க வேண்டும்.

அந்த பி.யூ.சி யில் கிட்டிய மதிப்பெண்களின் தரவரிசைப்படி பொறியியல், மருத்துவம் அல்லது வேளாண்மை கல்லூரியில் இடம் கிட்டலாம். அப்பொழுது பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பிற்கு குறைந்தது 90% கூட்டுத்தொகையில்(Aggregate) மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (இப்பொழுது 50% இருந்தால் போதுமானது)

இந்த கூட்டுத்தொகை கணிதம், பெளதீகம், இரசாயணம் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி (Aggregate)அதன் சதவீத அடிப்படையில் கிட்டுவதாகும்.

குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கலைக் கல்லூரிகளில் மற்ற பாடங்களுக்கான பட்டப் படிப்பு படிக்கலாம். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பள்ளிப் படிப்பு வரை(+2) இலவசக் கல்வியாகும். பட்டப் படிப்பிற்கு நாம்தான் செலவு செய்ய வேண்டும்.

1985ம் ஆண்டிற்கு பிறகே பள்ளியின் 11ம் வகுப்பையும், பி.யூ.சி வருடத்தையும் இணைத்து +2 என்ற முறையில் பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார்கள்.

இதில் சிறிய அசெளகரியம் இருந்தது. அதாவது +2 முடித்துவிட்டு கல்லூரிக்கு முதல் வருடம் படிக்க செல்லும்போது போதிய அளவு பக்குவம் இருக்காது, தடுமாற்றம் இருக்கும். ஏனெனில் வீட்டில் பெற்றோரின் கண்காணிப்பிலேயே +2 வரை படித்திருப்பதால்.

அதே பி.யூ.சி யில் ஒரு வருடம் தனியாக கல்லூரியில் படித்தவரிடம் சிறிது பக்குவம், துணிவு இருக்கும், ஒரு வருடம் வீட்டை விட்டு தனியாக இருந்ததால்..(இது சில பேராசிரியர்களின் அனுபவச் சொல்)

நான் பி.யூ.சி ஒரு வருடம் நகரத்திலுள்ள கலைக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துவிட்டு, பின்னர் கிராமத்தை விட்டு வெகுதூரம் சென்று பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பொறியியலில் ஐந்து வருடங்கள் படித்தேன். (அப்பொழுது பொறியியல் படிப்பு ஐந்து வருடங்கள் படிக்க வேண்டும்).

ஏற்கனவே தனியாக இருந்த துணிவு, சக அறைத் தோழர்களிடம் பழகும் பக்குவம் இருந்ததால், விடுதி/கல்லூரியில் இரண்டரை மாதங்கள் தொடர்ந்த ராகிங்-கை எளிதாக சமாளிக்க முடிந்தது. (இவை எனது அனுபவம். :))

 

மாணவர்கள், பல்கலைக்கழக தெரிவானது, மிகவும் சிக்கலானது. கடும் போட்டி நிறைந்தது. A/L பரீட்சைகள்  கடினமானவை.

கல்வி, மாணவர்களுக்கு தமிழ், சிங்களம் ஆகிய வேறு மொழிகளில் இருந்தாலும், ஒரே கேள்விகளே, தமிழ், சிங்களம், ஆங்கிலத்திலும் ஒரே நாளில், தீவு முழுவதும் நடாத்தப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமையவே தெரிவு நடக்கும்.

ஒரு காலத்தில் தரப்படுத்தல் முறையில் தமிழ் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

குறிப்பாக யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் 1960களில் ஓர் ஆண்டில் ஒரு வகுப்பில் இருந்து 29 மாணவர்கள், பொறியியல் பீடத்துக்கு தெரிவாக அரண்டு போன சிங்கள அரசு தரப்படுதலை கொண்டு வந்தது என்பர்.

இப்போது.... பல பல்கலைக்கழங்கள்.... தவிர தமிழர்கள் குடி பெயர்ந்தும் விட்டனர். ஆகவே முறைப்பாடுகள் குறைவு.

மறுபுறம்.... வெளிநாடுகளில் சக்கை போடு போடுகின்றனர். கள உறவுகள், விசுகர், தமிழ்சிறி பிள்ளைகள் சான்று. பிரிட்டனில் தமிழ் மாணவர் இல்லாத மருத்துவ பீடமே இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரியில் ஸ்ட்ரைக், கலாட்டா, அடிதடி எல்லாம் நடந்தது.. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது போல ஆசிரியர்களிடம் மோதுவது இல்லை. 🤔

ஏனெனில் ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான், உள்ளக மதிப்பிட்டு எண்கள் (Internal marks) வழங்க வேண்டும். அவையும் அந்த குறிப்பிட்ட பாடத்தின் செமஸ்டர் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையில் சேரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.