Jump to content

யாழ் பல்கலைகழக துணை வேந்தர் தாக்கினார்... சுடுவோம் என மிரட்டினார்: மாணவர்கள் போராட்டம், குற்றச்சாட்டு!


Recommended Posts

11 hours ago, ராசவன்னியன் said:

கல்வி என்பது வேலை தேவைக்கு ஏற்ப மட்டும்தானா..?

படிப்பறிவற்ற சமூகம் கொண்ட மூன்றாம் தர நாட்டிற்கும், ஓரளவு படிப்பறிந்த சமூகம் கொண்ட நாட்டிற்கும் பாரிய வித்தியாசமுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விதி மீறல்கள் இருந்தாலும், படித்து முன்னேறி வரும் சமூகம் என்பதால் கட்டுக்குள் கொணர்ந்து சுமூகமான மக்கள் வாழ்க்கைக்கு சூழ்நிலை அமைப்பது எளிது அல்லவா..?

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல என்றாலும் நடைமுறை உலகில் கல்வி என்பது வேலைக்கான தகுதியை மதிப்பிடும் ஒன்றாகவே பங்கு வகிக்கிறது. இருந்தாலும் சிறு வயதில் இருந்து பிள்ளைகளின் சமூகவியல் தகைமையை வளர்க்கும் வகையில் கல்வித்திட்டங்கள் அமையும் பட்சத்தில் பரவலாக நாட்டில் கல்வி அறிவுள்ள சமூகம் சார்ந்த சிந்தனை கொண்ட அறிவுஜீவிகளை உருவாக்க முடியும். பொதுவாக தெற்காசிய நாடுகளில் மாணவர்களின் துறைசார் கல்வியை ஊக்கப்படுத்தும் அளவுக்கு சமூகம் சார் கல்வியை அளிப்பதில்லை என்பதே அந்த நாடுகளில் கற்றோர்கள் கூட எவ்வளவு திறமை இருந்தாலும் இணைந்து செயற்பட முடியாமல் ஈகோ போன்ற காரணங்கள் உள்ளது என்பது எனது கருத்து.

சுவிற்சர்லாந்தில் முதலாம் வகுப்பில் இருந்து பிள்ளைகளின் மதிப்பீடு வகுப்பறைகளில் அவர்களின் செயற்பாட்டு அடிப்படையிலேயே ஆரம்பிக்கிறது. மூன்று முக்கிய விடயங்கள் கருத்தில் எடுக்கப்படுகிறன்றன.

1.   படிக்கும் பாடங்களின் திறமை(Fachkompetenz - Professional competence)

2.   பிள்ளைகளின் இயல்பான திறமை (Selbkompentenz – Self- Compentence)

3.   இணைந்து செயற்படும் சமூகத்திறமை (Sozialkompentenz – Socialskils

இந்த மூன்றிலும் Sozialkompentz மிக முக்கியமானதொன்றாக ஆரம்ப கல்வியில் இருந்து மதிப்பீடு செய்யப்பட்டு அந்த திறமை பிள்ளைகள் மத்தியில் வளர்த்தெடுக்ககப்படுகிறது. இணைந்து வேலை செய்யவேண்டிய சிறு சிறு வேலைகளை குழுக்களாக பிரிக்கப்பட்டு  பிள்ளைகளுக்கு கொடுக்கபட்டு அவற்றை எப்படி மற்ற பிள்ளைகளுடன் உரையாடி சிறப்பாக செய்கிறார்கள் என்பது அவதானிக்கப்படும். ஒரு குழுவில் மற்றய பிள்ளைகளின் ஆலோசனைகளை புறந்தள்ளி தான்தோன்றி தனமாக செயற்படுகிறார்களா என்பதும் கவனிக்கப்படும். அதேவேளை சோம்பேறித்தனத்தால் மற்றய பிள்ளைகளின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்பதும் கவனிக்கப்படும். ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து அந்த வேலையை செய்கிறார்கள் என்பதும் கவனிக்கப்படும். இதனால் பிள்ளைகள் வளர்ந்து சமூகத்தில் பலருடன் இணைந்து வேலை செய்யும் போது ஒருவருக்கொருவர் சமமதிப்பை கொடுக்கும் திறமை வளர்தெடுக்கப்படுகிறது. இதனால் அவர்களின் Professional Compentence, self- kompentence ஆகியவற்றின் முழு வினை திறனும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு கிடைக்க செய்வதே இந்த கல்வித்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதனால் பிள்ளைகள் வேலைக்கான கல்வியை கற்றாலும் சமூக பொறுப்பு மிக்கவர்களாக வருவதற்கான ஊக்கப்பாட்டை கல்வி முறை வழங்குகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல என்றாலும் நடைமுறை உலகில் கல்வி என்பது வேலைக்கான தகுதியை மதிப்பிடும் ஒன்றாகவே பங்கு வகிக்கிறது. இருந்தாலும் சிறு வயதில் இருந்து பிள்ளைகளின் சமூகவியல் தகைமையை வளர்க்கும் வகையில் கல்வித்திட்டங்கள் அமையும் பட்சத்தில் பரவலாக நாட்டில் கல்வி அறிவுள்ள சமூகம் சார்ந்த சிந்தனை கொண்ட அறிவுஜீவிகளை உருவாக்க முடியும். பொதுவாக தெற்காசிய நாடுகளில் மாணவர்களின் துறைசார் கல்வியை ஊக்கப்படுத்தும் அளவுக்கு சமூகம் சார் கல்வியை அளிப்பதில்லை என்பதே அந்த நாடுகளில் கற்றோர்கள் கூட எவ்வளவு திறமை இருந்தாலும் இணைந்து செயற்பட முடியாமல் ஈகோ போன்ற காரணங்கள் உள்ளது என்பது எனது கருத்து.

...

நல்ல கருத்து. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

கல்லூரியில் ஸ்ட்ரைக், கலாட்டா, அடிதடி எல்லாம் நடந்தது.. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது போல ஆசிரியர்களிடம் மோதுவது இல்லை. 🤔

ஏனெனில் ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான், உள்ளக மதிப்பிட்டு எண்கள் (Internal marks) வழங்க வேண்டும். அவையும் அந்த குறிப்பிட்ட பாடத்தின் செமஸ்டர் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையில் சேரும்.

இந்தவகை கலாசாரம்.... தென் இலங்கை சிங்கள மாணவர்கள், யாழ் பல்கலைக்கழகம் வந்து படிக்க ஆரம்பித்த (2009 க்கு) பின்னர் வந்து சேர்ந்து இருக்கிறது.

அண்மையில், கூட ராக்கிங்கில் சிக்கியவர்கள் சிங்கள மாணவ, மாணவியர்.

இந்த பிரச்சனையில் சிக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. விரைவில் தெரியலாம்.

இது வேறு கலைப்பீடம் என்கிறார்கள்.... அநேகமாக கலைப்பீடமாணவர்கள், பெரும்பாலும் சிங்களவர்கள், தான் இந்த பிரச்சனைகளுக்கு முன்னே நிற்பவர்கள். 

எனக்கும், தமிழ்சிறிக்கும் சிலவேளை நில்மினிக்கும் தெரிந்த ஒருவர்... கந்தர்மடம், அரசடி வீதி, ரவிராஜ் என்பவர்.

கண்டி பேராதனை மருத்துவ பீடத்துக்கு போனார். ஒரு பேராசிரியருடன் மோதினார்.

நான் இருக்கும் வரை நீ, படிப்பு முடித்து வெளியே போக மாடடாய் என்று நேரடியாக சொன்னார் அந்த சிங்கள பேராசிரியர்.

ஆனால் அவர் இனத்துவேசி அல்ல. எனது அக்கா அதே பாச்சில்... படித்து வெளியே வந்து அமெரிக்காவில் இருக்கின்றா.

அவ்வாறே நடந்தது. கடைசி வருட பரீடசை முடிக்க முடியாமல், பாஸ் பண்ண முடியாமல், வெளியே வந்து, காம்பவுண்டராக வாழ்வினை ஓட்டி அண்மையில் இறந்து போனார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவச கல்வியை உதாசீனம் செய்து மற்றைய மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு விளைவிப்பவர்களுக்கு துணைவேந்தர் தனது கையால் அவர்கள் செவிட்டை பொத்தி இரண்டு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல 'நாங்கள் அச்சாப் பிள்ளையள், சிங்களவன் வந்து கெடுத்து விட்டான்" என்ற திசையிலயும் போகுது விளக்கம்! 

இது ஆசிரியர்களை, துணைவேந்தரை வேண்டுமென்றே தாக்கிய நிகழ்வா என்பதே முதலில் சந்தேகம், ஏதோ தள்ளு முள்ளுப் பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

இது போல ஆசிரியரைத் தாக்கும் நிகழ்வுகள் சிங்களப் பகுதிகளில் இருக்கும் பல்கலை.களிலும் நடப்பதில்லை. ரவிராஜ் கேஸ் பேராதனை வரும் புதுமுக மாணவர்களுக்கு சிரேஷ்டர்கள் urban legend போல சொல்லும் ஒரு விடயம். மது ஆறாக ஓடிய நிகழ்வொன்றில் நடந்த கையோங்கலே அமரர் ரவிராஜின் சோகத்திற்குக் காரணம். இதனால், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அளவாகக் குடியுங்கள் என்பதை வலியுறுத்த   இவரை உதாரணமாகச் சொல்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

வழக்கம் போல 'நாங்கள் அச்சாப் பிள்ளையள், சிங்களவன் வந்து கெடுத்து விட்டான்" என்ற திசையிலயும் போகுது விளக்கம்! 

இது ஆசிரியர்களை, துணைவேந்தரை வேண்டுமென்றே தாக்கிய நிகழ்வா என்பதே முதலில் சந்தேகம், ஏதோ தள்ளு முள்ளுப் பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

இது போல ஆசிரியரைத் தாக்கும் நிகழ்வுகள் சிங்களப் பகுதிகளில் இருக்கும் பல்கலை.களிலும் நடப்பதில்லை. ரவிராஜ் கேஸ் பேராதனை வரும் புதுமுக மாணவர்களுக்கு சிரேஷ்டர்கள் urban legend போல சொல்லும் ஒரு விடயம். மது ஆறாக ஓடிய நிகழ்வொன்றில் நடந்த கையோங்கலே அமரர் ரவிராஜின் சோகத்திற்குக் காரணம். இதனால், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அளவாகக் குடியுங்கள் என்பதை வலியுறுத்த   இவரை உதாரணமாகச் சொல்வர்.

ஜஸ்ரின் அண்ணா,
சிங்களப் பகுதிகளில் ஏன்நடப்பதில்லைஇபேராதனைப் பல்கலைக்கழகத்தில்நான் படிக்கும் போது டீன் தொடக்கம்நாலைந்து விரிவுரைடயாளர்களை அடித்து மலசலகூட தண்ணீரால் குளிப்பாட்டினார்கள் . பக்கெட்டிங் (புச்கெடிங் ) கொஞ்சம் மோசமாக போனதால் விரிவுரையாளர்கள் தடுத்த போதுநடந்தது. உங்களுக்குநிறைய விடயங்கள் தெரிந்தாலும் சிலது உங்களுக்கு தெரிய வரவில்லை என்பதற்காக அதுநடந்திருக்கவே வாய்ப்பில்லை என முடிவெடுக்காதீர்கள்.அது சிங்கள மாணவர்கள் என்பதால் மன்னிப்புடன் முடிந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 05:40, குமாரசாமி said:

சொன்னால் நம்பமாட்டியள்.....நான் பள்ளிக்கூடமே போகேல்லை..

sadhu13.jpeg?resize=480%2C272&ssl=1

சொன்னால் நம்பமாட்டியள்.....நான் பள்ளிக்கூட போகமல் பள்ளிக்கூட சீசன் காட்டில் பள்ளி கூட பஸ்ராண்டில் இறங்கி திரும்ப வீடு நோக்கி நடப்பது வழமை 6 மாத த்திற்கு மேல், பிறகு என்னுடன் என் நண்பனும் சேர செய்யாத அட்டாகாசமில்லை, பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவானென என் நல்ல காலத்திற்கு சொந்தக்கார அண்ணையிடம் பிடிபட்டு பூசை அபிஷேகம் எல்லாம் நடந்து அதற்கு பின் மந்திரிச்ச மாதிரி பள்ளிக்கு போனேன், அதிலும் 2-3 பாதுகாவலர்களுடன், அவர்களுக்கு இப்ப நன்றி சொல்லனும்😀

20 minutes ago, வாதவூரான் said:

ஜஸ்ரின் அண்ணா,
சிங்களப் பகுதிகளில் ஏன்நடப்பதில்லைஇபேராதனைப் பல்கலைக்கழகத்தில்நான் படிக்கும் போது டீன் தொடக்கம்நாலைந்து விரிவுரைடயாளர்களை அடித்து மலசலகூட தண்ணீரால் குளிப்பாட்டினார்கள் . பக்கெட்டிங் (புச்கெடிங் ) கொஞ்சம் மோசமாக போனதால் விரிவுரையாளர்கள் தடுத்த போதுநடந்தது. உங்களுக்குநிறைய விடயங்கள் தெரிந்தாலும் சிலது உங்களுக்கு தெரிய வரவில்லை என்பதற்காக அதுநடந்திருக்கவே வாய்ப்பில்லை என முடிவெடுக்காதீர்கள்.அது சிங்கள மாணவர்கள் என்பதால் மன்னிப்புடன் முடிந்தது

வாதவூரன் நீர் வேறு இதை சீரியசாக எடுத்துக்கொண்டு, எல்லா பல்கலையிலும் இது நடந்திருக்கு😂

On 12/10/2020 at 10:55, நியாயத்தை கதைப்போம் said:

இலவச கல்வியை உதாசீனம் செய்து மற்றைய மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு விளைவிப்பவர்களுக்கு துணைவேந்தர் தனது கையால் அவர்கள் செவிட்டை பொத்தி இரண்டு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.

சரியாக சொன்னீர்கள் - உணராதவர்களை வீட்டுக்கு அனுப்புவது நல்லதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

ஜஸ்ரின் அண்ணா,
சிங்களப் பகுதிகளில் ஏன்நடப்பதில்லைஇபேராதனைப் பல்கலைக்கழகத்தில்நான் படிக்கும் போது டீன் தொடக்கம்நாலைந்து விரிவுரைடயாளர்களை அடித்து மலசலகூட தண்ணீரால் குளிப்பாட்டினார்கள் . பக்கெட்டிங் (புச்கெடிங் ) கொஞ்சம் மோசமாக போனதால் விரிவுரையாளர்கள் தடுத்த போதுநடந்தது. உங்களுக்குநிறைய விடயங்கள் தெரிந்தாலும் சிலது உங்களுக்கு தெரிய வரவில்லை என்பதற்காக அதுநடந்திருக்கவே வாய்ப்பில்லை என முடிவெடுக்காதீர்கள்.அது சிங்கள மாணவர்கள் என்பதால் மன்னிப்புடன் முடிந்தது

அதுவும் தள்ளு முள்ளுத் தானே?  பக்கெட்டிங் செய்யும் போது மாறி சப் வார்டனையும் தூக்கி ஹில்டா மண்டப நீர்ச்சுனைக்குள் போட்டதும் நடந்தது தான். இதெல்லாம் ஆசிரியர் மீதான தாக்குதலா? இல்லையென்பது தான் என் அபிப்பிராயம். 

என் பதில் ஏதோ இதெல்லாம் யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் கொண்டு வந்த வன்முறைக் கலாச்சாரம் என்ற நாதத்தின் கருத்துக்கு பதில் கருத்து. அவர் சொன்னதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி  இருந்த

எத்தனையோ புரட்சிகளுக்கு  வழிகாட்டிய பல்கலைக்கழகம்  இன்று?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 02:36, ராசவன்னியன் said:

தமிழ்நாட்டில் தொழில்முறை (பொறியியல், மருத்துவம், வேளாண்மை) கல்விகளுக்கு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் பள்ளி இறுதிதேர்வில் 50 சதவீதம் எடுத்தால் அவர் அக்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற கல்விகளுக்கு (கலை, பட்டயம்-Diploma முதலியன)35% சதவீதம் மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.

கல்லூரியில் இறுதி அனுமதி என்பது கிடைக்கும் இருக்கைகளின் எண்ணிகையை பொறுத்து ரேங்க் (Merit List) அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கப்படும் அல்லது நாமே தெரிவு செய்து கொள்ளலாம்.

வன்னியர்,

என் அனுபவத்தில் பள்ளியில் கல்வி கற்று அதன் தொடர்சியாக அரச பல்கலை புகுவதற்கு மிகவும் கஸ்டமான நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இங்கே லண்டனில் டாக்டர், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் என காலரை தூக்கி விடும் பலரோடு வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். இவர்களில் பலர் இலங்கையில் பிறந்திருந்தால் பல்கலை கழக அனுமதியே கிடைத்திருக்காது.

அப்படி ஒரு “வடி கட்டும்” போட்டி பரீட்சை முறை அங்கே: முக்கிய காரணம் வளத்தட்டுப்பாடு. ஒரு வருடத்தில் 1000 பேரை மட்டுமே டாக்டர் ஆக்க முடியும்.  எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் 1001வது ஆள் டாக்டராக படிக்க வளம் இல்லை. 

ஆகவே வடிகட்டலில் தப்புவோருக்கு மட்டுமே இடம்.

கல்கி கிருஸ்ணமூர்தி தன் யாழ்பாண பயண கட்டுரையில் - யாழ்பாணத்தின் பிரதான கைத்தொழில் கல்வி என்கிறார். 

இது முழு இலங்கைக்கும் பொருந்தும். 94% கல்வியறிவு உள்ள நாடு. ஒரு காலத்தில் மலேசியாவிலும், நைஜீரியாவிலும் ஆசிரியர்களா போன மக்கள். 

திறமையாக திட்டமிட்டு, மேல் கல்வியை விரிவு படுத்தி இருந்தால்- அவுட்சோசிங்கில் பெங்களூர், ஹைதரபாத்துக்கே தண்ணி காட்டி இருக்கலாம்.

ஆனால் “எல்லாரும் டாக்டர் ஆகிவிட்டால் யாருக்கு வைத்தியம் பார்ப்பது” என்ற குண்டு சட்டி மனப்பான்மையால் - அதி புத்திசாலிகள், கடும் உழைப்பாளிகள் மட்டுமே அரச பல்கலை போகலாம் எனும் நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.