Jump to content

மண் சுமந்த மகேசன் - கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மண் சுமந்த மகேசன் - கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை

‘மண் சுமந்த மகேசன்’ சின்னத்திரை வீடியோ நாடகமாகும்.  இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிள்ளையார் கோயிலடி ஆற்றங்கரையிலும்  படம் பிடிக்கப்பட்டன. ஆரையம்பதி திரு.சீ.செல்வநாயகம் அவர்களின் படப்பிடிப்பில் உருவான இப்படத்தின் கதை வசனம் டைரஷ்சன் என்பவற்றை ஆரையூர் இளவல் அவர்களுடையதாகும்.  

ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் முன்றலின் திருவிழங்கு குடி மக்களின் ஆதரவில் 1980 ஆம் ஆண்டு மாணிக்கவாசர் குருபுசை தினம் ஒன்றில் வெளியிடப்பட்ட இவ் சின்னத்திரை ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள்  மட்டக்களப்பின் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது  எமது ஆவணமாக்கல் முயற்சியாகும், “கதைபேசி காலம் கடத்தலை விடுத்து காத்திரமான  செயற்பாடு” என்பதே எமது குறிக்கோள்.  தனது கலை வரலாற்றுப்பயணத்தில் ஆரையம்பதி மண்  பெருமைகொள்ளும் இன்னுமோர் ஆவணம் இது...

இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை என்ற பெருமையை பெற்றுக்கொண்ட இந்த வீடியே நாடகத்தை நீண்ட காலமாக ஆரையூர் இளவல் அவர்கள் வீடியே நாடாவாக பாதுகாத்து வந்திருந்தார். கடந்த வருட முற்பகுதியில் குறித்த வீடியே நாடாவை அவரிடம் இருந்து பெற்று இருந்தேன். குறித்த விடியே நாடா மிகவும் பழுதடைந்த நிலையிலே இது உருமாற்றம் கண்டுள்ளது.

பல்வேறு தடங்கலுடன் நகரும் இந்த வரலாற்று ஆவணத்தை கண்டு மகிழ்வீர்.... ஈழத்தின் மூத்த நாடக நெறியாளர் காலம் சென்ற “ஆரையூர் இளவல்” அவர்களுக்கு சமர்ப்பணம்.

நடிகர்கள்

திரு.சி.சந்திரசேகரம் ( மண்சுமந்த மகேசன் )
திருமதி தங்கம்மா சந்திரசேகரம் ( செம்மனச்செல்வி )
திரு.செ.அரசரெத்தினம் ( சிவபெருமான் )
செல்வி. புனிதமலர் (உமாதேவி )
செல்வி.ஸ்ரீமலர் ( கங்காதேவி )
சைவப்புலவர் சோமசுந்தரம் ( பாண்டியமன்னன் )
செல்வி ஈஸ்வரி காசிப்பிள்ளை ( பண்டிமாதேவி )
திரு.மு.கணபதிப்பிள்ளை (பிரதம அதிகாரி)
திரு. த.பரமக்குட்டி ( திருவாதவுர்அடிகள் )
திரு.க. கார்த்திகேசு, திரு.அரிசந்திரகுமார் ( தளபதி )

உடை
திரு.ச.சூசைப்பிள்ளை

ஒப்பனை
திரு.செ.அரசரெத்தினம்
திரு.க. கார்த்திகேசு
திரு.தனலெச்சுமி கோணாமலை
திருமதி தங்கம்மா சந்திரசேகரம்
திரு.த.சோமஸ்கந்தராசா

கலை
திரு.செ.அரசரெத்தினம்
திரு.க. கார்த்திகேசு
செல்வன்.சா.தவராஜா

இசை
இலங்கேஸ்வரன் புகழ் திரு.க.சுந்தரலிங்கம்
திரு.செ.செல்வராசா

பாடல்கள்
ஆரையுர் இளவல்
அன்புமணி

பின்னணி
திருமதி தங்கம்மா சந்திரசேகரம்
திரு.த.பரமக்குட்டி

நிருவாகம்
திரு.ந.கோணாமலலை

நிருவாக உதவி
திரு.தனலெச்சுமி கோணாமலை
திரு.சா.கனகசுந்தரம்
சாந்தன் சபா


ஒலி-ஒளி அமைப்பு தயாரிப்பு
திரு.சீ.செல்வநாயகம்

ஒலி ஒளி அமைப்பு உதவி
செல்வன்.கோ.கிருபானந்தராஜா
செல்வன்.பு.புரிஷோத்தமன்
செல்வன்.சீ.சுதா
செல்வன் .க.தயா
செல்வன்.கோ.சிறி

கதை வசனம் டைரஷ்சன்
ஆரையூர் இளவல்


- பிரசாத் சொக்கலிங்கம்-
நன்றி : arayampathy.lk

 

https://www.muthusom.com/2020/04/MansumanthaMakesan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.