Jump to content

லெப். கேணல் நிரோஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் நிரோஜன்

Deputy-Commander-of-Sea-Tigers-Lt.Col_.-Nirojan.jpg

 

கடலில் அவனது காவியம்: கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன்

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன.

கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக் கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும் போது அந்த நீருக்குள்ளும் இந்த நிறோஜனின் கதை இருக்கும்.

1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் ஆரம்பிக்கின்றது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்த தமிழீழ கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்து கொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்ட கால அனுபவமுள்ளவனைப் போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்திருந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டுவந்த அந்தத் தாக்குதல் நடைபெற்றது.

அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிறோஜனின் கடல்வழி விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிறோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இருளின் நடுவில் சடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்னசெய்வதென்றே புரியாத போதிலும் நிறோஜன் நிதானமாகப் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டோறாப் படகின் ஆயுதபலமும் நிறோஜனின் அந்தச் சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது. ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில சிங்களப் படையை கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரை சேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு ஆரம்பமாய் இருந்தது அந்தத் தாக்குதல்தான். அதன் பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்நித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை.

1996ம் ஆண்டு ஒக்டோபரில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது. சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகளும்இ கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும்இ சிறிலங்காவின் தரைஇ கடற்படைகளுக்குமிடையே சண்டை மூண்டது. அந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல. சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிறோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரி மீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடி வரும் அளவிற்கு சிங்களம் துணிந்தமை அவனுக்கச் சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். சிங்களம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடி வந்தது. இப்போது சிங்களத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது.

திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிறோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக்கொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாகப் படகுகளும்இ கரும்புலிப் படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருனோணமலைத் துறைமுகத்தின் வாசல்; அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமைத்துக்கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது.

நிறோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றிமாற்றிச் சண்டை பிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தப் கரும்புலிப்படகை டோறா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல்நீரின் மேல் செயலற்று நின்றது. நிறோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும் நிறோஜன் அந்த டோறாவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சுடுகலனான 20 மி. மீ கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான் நிறோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது. நிறோஜனுக்கு அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாத போதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றி விட வேகமாக இயங்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறிவைக்க நிறோஜனின் கட்டளைப்படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்கஇ நிறோஜன் அந்தக் கனமாக சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதைக் கைவிடாது நீந்திப் படகேறினான் சிங்கத்தை அதன் குகையில் சந்நித்துத் தாக்கிய திருப்தியுடன் புலி தளம் திரும்பிக்கொண்டிருந்தது.

இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத்தளபதி அவன். அந்தப் பணியை பொறுப்பேற்றதிலிருந்தே தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும்இ கடல் மூலமான விநியோகப் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள் தான் அதன் பின் அதிகமாக இருந்தது.

கடலில் விநியோகப்பணியை மேற்கொள்ளும் போது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்து வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிறோஜன்.

இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் விநியோகப் பணிகளை மேற்கொண்ட படகுடன் சிங்களக் கடற்படையின் படகுகள்; தாக்குதலிற்குள்ளான போது 50 கடல்மைல்களிலிருந்து நிறோஜனின் இரு படகுகள் அந்தக் கடற்கலத்தை நோக்கி விரைகின்றன. இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிறோஜன் அந்தக் கடற் சூழலுக்கேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகிறான். ‘மயூரன்’ படகு நான்கு டோறாக்களை எதிர்கொள்ளத் ‘தேன்மொழி’ படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது.

அங்கே அந்தச் சிறிய படகுகள் இரண்டும் அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி முன்னேறிக்கொண்டிருந்தன. இறுதியாக அந்த விநியோகப் படகுகளை மீட்டுக் கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள்.

இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவான போதும் நிறோஜனின் நிதானமானதும்இ சாதுரியமானதும்இ உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறடிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது.

இந்த நாட்களில் தான் சிறிலங்காவின் அமைச்சரொருவர் “யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான விநியோகமே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிறோஜனின் காதுகளுக்கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கப்பற் கொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற் தொகுதி முல்லைக் கடற்பரப்பை தாண்டிக் கொண்டிருக்கும் போது நிறோஜனின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின.

மூன்று சண்டைப் படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பற் தொகுதியை மேவி வந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளின் பலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்களும்இ நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும்இ பபதாக்கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்றுகொண்டிருந்தது. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுத பலமும்இ கடற்கலங்களின் பலமும் இருந்தபோதும் அசாத்தியமான துணிச்சலும்இ சண்டையை வழிநடத்தலும் தளபதியின் திட்மிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது.

இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்குவைத்து பின் தொடர்ந்தன கடற்புலிப்படகுகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்த போதும் அவை சண்டை பிடிக்கப் பயந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தன. நிறோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கிப் படகுகள் நெருங்கிச் சௌ;றன. எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற் தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடக்கி வைத்தனர். அவை அப்போதும் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும்இ எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள் பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்ட தூரம் சென்று விட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்படஇ களத்தில் நின்ற படியே சண்டையை வழிநடத்தினான் நிறோஜன். உயர்ந்து எழுந்து விழும் அலைகளுக்குள் நிதானமாக நிற்க முடியாத படகிற்குள் நின்று கொண்டும்இ சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தும்இ நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றுள் நின்றான் நிறோஜன்.

அன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்புக் கலங்களை ஊடறுத்து ‘பபதா’ கப்பல் மீதும்இ ‘வலம்புரி’ கப்பல் மீதும் கரும்புலிப் படகுகள் மோதி வெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள்.

இந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள். அந்தப் படகுகளை வழிமறித்து டோறாப் படகுகள் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்த படகுடன் விரைந்தான் நிறோஜன். “பிரச்சினையில்லை நான் கிட்ட வந்திட்டன்இ நீங்கள் வடிவாச் சண்டை பிடியுங்கோ” தொலைத் தொடர்புக் கருவியில் நிறோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்களத்தில் சமர் புரிந்து கொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினர்.

நிறோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றகைக்குள் இருந்தன எமது படகுகள். இப்போது நிறோஜனின் முற்றகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள்.

நேரம் கடந்துகொண்டிருக்க சண்டை நிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிறோஜனுடன் சேர்ந்து கடல் நடுவே உரக்கக் கூச்சலிட்டனர்.

ஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித்தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிறோஜன் அந்த டோறாவைக் கடலில் கைவிடவில்லை. ஏனைய டோறாப் படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிறந்த டோறாவைக் எங்களது படகில் கட்டி இழுத்து வந்தான். அது இடையில் தானாவே கடலில் மூழ்க ஆரம்பிக்க அதிலிருந்த இராணுவ உபகரணங்கள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமைகள் மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது.

நிறோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும்இ நுட்பமான திட்டங்களாலும்இ நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன். கடலில் சண்டை மூழும் போது கரையில் நின்ற கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீது கொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதல்கள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்து கொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெஐப்பாகச் சீறும் அந்த நிறோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதும் அல்ல. அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகில் இருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போது எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவனை ஒரு கடற்படைத்தளபதியாகப் பார்க்க முடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருப்பதை விட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம்.

அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும் போது சாதாரண போராளிக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமிற்குச் சென்றால் நிச்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது. விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைப் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது.

தொடர்ச்சியாக இரவுபகலாக பணிகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவன் அந்தப் போட்டிகளின் போது நீச்சல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான்.

அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல. ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளனாகஇ ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்டவன். ஆனாலும் இந்த இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத்தளபதி ஒருவனை விட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்கி தனது நுட்பமான திட்டமிட்ட தாக்குதலினால் மட்டுமே அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது.

அன்றைய தினம் 07.01.1999 அன்றும் விநியோகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிகளின் இருபடகுகள். அவற்றில் ஒன்றில் நிறோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றகையிடுகின்றன. சண்டை மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தது. மாலை மங்கிய பொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்த போதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன்படகுகளைப் பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்து போக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரிபொருளில் பாதியை அந்தப் படகுக்கு வழங்கிச் சேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி கரை சேர்ப்பித்தான்.

அதனால் தான் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடும் போது “எந்தச் சிக்கலான சண்டையெண்டாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவன். ஏனெண்டா என்னை விட அவன் சிக்கலான சண்டையள்ள கூட தானும் பதட்டப்படாமல் போராளினளையும் பதட்டமடையாமல் வைச்சு சண்டைபிடிச்சு வெற்றி கொள்ளிறதில திறமையானவன். இதில அவனுக்கு நிகர் அவனே தான்” என்றார்.

இந்தத் திறமையான தளபதி தான் 07.10.1999 அன்றும் விநியோகப் பணியல் ஈடுபட்டுக் கொண்டிருந்த விநியோகப் படகுகளை நடுக்கடலில் டோறாப் படகுகள் வழிமறித்த போது கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்துக் கொண்டு கடற்களத்தில் இறங்கினான். இன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடும் இருள் கடல்வெளியினையே மறைத்துக் கொண்டிருந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக் குழப்பத்தால் தங்களது பணியைச் செய்ய மறுத்துக் கொண்டிருந்தன. நிறோஜன் தன் நீண்டகால கடல் அனுபவத்தினை மட்டுமே வைத்துப் படகினை நகர்த்தினான். விநியோகப் படகிற்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற உறுதியடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப் படகுகள் இரண்டும் இயந்திரக் கோளாறினால் மெதுமெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப் படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவும் சண்டை பிடிக்கவேண்டியதாயிருந்தது.

அவன் எங்களின் விநியோகப் படகுகளை நெருங்குகின்றான். அங்கே எங்களது ஒரு படகைக் காணவில்லை. அது டோறாவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்குச் சேதமில்லை. அவை பத்தரமாக ஒரு படகில் இருந்தன. அவன் அந்தத் திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான். கடல் இப்போதும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் டோறாவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. விநியோகப்படகு பத்திரமாய் கரைதிரும்பிக் கொண்டிருந்தது. இப்போது நிறோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்று கொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்கள் மௌனமாய்க் கிடந்தன. எப்போதும் எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்றுமட்டும் “என்ர படகுக்குச் சேதம் முடிஞ்சா உதவி செய்யுங்கோ இல்லாட்டி பிரச்சினையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத்தொடர்புக் கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டுமே தங்களால் இயன்ற மட்டும் முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிறோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்த நீரரும்புகள் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டைபிடித்து தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்து கொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான்.

நினைவுப்பகிர்வு: மாரீசமைந்தன்
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை 2002).

 

https://thesakkatru.com/deputy-commander-of-sea-tigers-lt-col-nirojan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்!

 

https://eelamhouse.com/?p=1647

 

போர்க்களத்தில் ஒரு போர்வீரனின் உளவுரணைச் சிதைப்பது அவனருகில் காயத்திற்குள்ளான போர்வீரனுக்கு சிகிச்சையளிக்காமல் அப்போர்வீரன் துடித்துக்கொண்டிருப்பதுதான். ஏனெனில் தனக்கும் இதேகதிதான் என அப்போர்வீரனின் மனதில் எழும் உணர்வே அவனைத் தொடர்ந்து போராடுவதற்கான துணிவை இல்லாதொழிக்கும்.

இது சம்ர்க்களங்களில் இயக்கம் கண்டறிந்த போரியல் உண்மை.

ஒரு நாட்டின் இராணுவமே தனது படைநடவடிக்கைகளில் காயத்திற்குள்ளாகும் இராணுவத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கு இன்னொரு நாட்டின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு விடுதலை இயக்கமாக எந்தவொரு நாட்டின் உதவிகளுமின்றி போர்க்களத்தில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு  போராளிகளைக்கொண்டே சிகிச்சையளித்து பராமரிக்கும் திறனைக் கொண்டிருந்த உலகின் ஒரேயொரு விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.

ஒரு பெரும் தாக்குதல் நடவடிக்கைக்கு எமது படையணிகள் தயாராகத் தொடங்கினால் சமநேரத்தில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அணிகளும் கூடவே நகரத்தொடங்கும். பின்னணித்தளங்களில் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள் அனைத்தும் களஞ்சியப்படுத்தப்படும். அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கும் சிறிலங்கா அரசு பொருளாதாரத்தடை போட்டிருந்தது. பொதுமக்களின் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் பொது வைத்தியசாலைகள் திணறிக்கொண்டிருந்த காலம் அது. போதிய மருத்துவ சிகிச்சையின்றி மக்களின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இயக்கம் மருந்துப்பொருட்களை வழங்கிய சந்தர்ப்பங்களும் நிறையவே நடந்தேறிது.

இவ்வாறான இடர்சூழ்ந்த நிலையிலேயே இயக்கம் ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலை நடத்துவதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டிருந்தது. உலக இராணுவ வல்லுனர்களால், ‘தாக்கியழிக்கப்பட முடியாத தளம்’ என எதிர்வுகூறப்பட்டிருந்த ஆனையிறவுத்தளத்தை அழிப்பதென்பது பெரும் சவாலானதாகவே நோக்கப்பட்டது. ஆனாலும் புலிகளின் போரியலையும் தலைவரின் மதிநுட்பத்தையும் தளபதிகள், போராளிகளின் வீரத்தையும், போராட்டத்திற்கு உறுதுணையாக தொடர்ந்து நம்பிக்கையோடு பயணித்துவரும் மக்களின் விடுதலை அவாவையும் இந்த உலகத்திற்கு உணரவைப்பதற்கு ஆனையிறவுத்தள அழிப்பு காலத்தின் அவசியமென்பதை தலைவர் தனது தீர்க்கதரிசனப் பார்வையால் தெளிவுபடுத்தினார்.

திட்டங்கள் தீட்டப்பட்டது. 

போருக்கான பயிற்சிகள் இரவுபகலாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

கடற்புலிகளுக்கு கண்ணுறக்கம் மறந்தே போனது.

ஆனையிறவு தள அழிப்புக்கு தேவையான ஆயுதவெடிபொருட்களுக்கான வினியோக நடவடிக்கைகளின் போது 01/10/1999 அன்று வங்கக்கடலில் ஏற்பட்ட கடற்சமரில் லெப். கேணல் அண்ணாச்சி, மேஜர் ராகினி உட்பட மிகப்பெறுமதியான கடற்புலி மாவீரர்கள் படகோடு எரிந்து அலையோடே கரைந்துவிட்டிருந்தனர். ஆனாலும் எமது படகுகள் மீண்டும் கடலேறிப் பாய்ந்தது. சீரற்ற காலநிலையெனினும், கடற்க்கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், இருளை ஊடறுத்து போராளிகள் கண்கள் இரத்தச் சிவப்பாக பயணம் தொடர்ந்தது.

ஒருமுனையில் வங்கக்கடல் ஊடான ஆயுதவெடிபொருட்களுக்கான வினியோகமும் மறுமுனையில் மன்னார் கடற்பரப்பு ஊடாக மருத்துவப் பொருட்களுக்கான வினியோகமும் மாறிமாறி நடைபெறத் தொடங்கியது. வினியோகப் படகுகளுக்கான பாதுகாப்பை வழங்க சண்டைப்படகுகள் எந்நேரமும் தயாராக நிறுத்தப்பட்டு, மறிப்புச் சண்டைகளில் ஈடுப்பட்டிருந்தது.

படகுத்தொகுதிகளில் ஒரு பிரிவு சுண்டிக்குளம் பகுதியிலும்,மற்றொன்று வட்டுவாகல் பகுதியிலும், இன்னொன்று அளம்பில் பகுதியிலும் நிலைகொண்டு,மறிப்புச் சண்டைகளில் ஈடுபட்டுவந்தது. மன்னார் கடல் ஊடான நடவடிக்கைக்காக எமது சண்டைப்படகுகள் இரவோடிரவாக படகுகாவி மூலம் விசுவமடு, வட்டக்கச்சி ஊடாக மன்னாருக்கு இழுக்கப்பட்டது.

வேங்கை, போர்க், எரிமலை போன்ற பெரிய படகுகளை நகர்த்துவது சிரமம் என்பதால் அருணா, கேசவன், சுகி போன்ற சண்டைப்படகுகளையே மன்னாருக்கு அதிகம் நகர்த்துவோம்.

அன்றும் வழமைபோல மன்னாருக்கு நகர்த்துவதற்காக அளம்பில் பகுதியிலிருந்து கேசவன் படகு தயாரானது. இங்கே கேசவன் படகு பற்றிய சிறு வரலாற்றுக்குறிப்பொன்றைப் பகிர்ந்துகொள்வது முதன்மையாகின்றது.

ஓயாத அலைகள் முல்லைத்தீவு படைத்தள அழிப்பின்போது சண்டைப்படகான நெடுமாறன் படகின் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு அதே கடற்சண்டையில் காவியமான கடற்புலி மேஜர் கேசவன் நினைவாக அவனின் பெயர்தாங்கி வலம்வரத்தொடங்கியது கேசவன் சண்டைப்படகு. 

லெப் கேணல் நாவரசன், லெப் கேணல் வள்ளுவன், லெப் கேணல் பழனி, லெப் கேணல் சுயரூபன், மேஜர் ஆழியன் உட்பட பல திறமையான கடற்புலி மாவீரர்கள் கடற்போரியல் கட்டளைத் தளபதிகளாக ஏறிநின்று போரிட்ட கடற்புலிகளின் போர்வாளாக சண்டைக்களங்களில் உறுமித்திரிந்தது மேஜர் கேசவன் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட கேசவன் சண்டைப்படகு. அதில் பொருத்தப்பட்டிருந்த முன்னணி ஆயுதமானது ஓயாத அலைகள்௧ முல்லைச்சமரின்போது, முல்லைக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட றணவிறு எனும் பீரங்கிக்கலத்தில் இருந்து கடற்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினரால் கழட்டியெடுக்கப்பட்ட 14.5 ம்ம் இரட்டைக்குழல் கனரக ஆயுதமாகும். 200 குதிரைவலுக்கொண்ட மூன்று ஜமகா இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 40 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடிய கேசவன் படகில்,

  • ஓட்டியாக மேஜர் காமினியும்,
  • 14.5 மிமீ இரட்டைக்குழல் துப்பாக்கியின் பிரதான சூட்டாளனாக மேஜர் சோழனும், உதவியாளர்களாக 2 ஆம் லெப் இசைவாணன், வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், ஆகியோரும்,
  • இயந்திரப் பொறியியலாளனாக மேஜர் நகுலனும், பொறியியலாளனின் உதவியாளனாக வீரவேங்கை இனியவனும்,
  • தொலைத்தொடர்பாளனாய் கப்டன் இளநிலவனும்,
  • 50 கலிபர் துப்பாக்கிகளின் சூட்டாளர்களாய் மேஜர் குகன், மற்றும் லெப் பாவேந்தனும்,
  • PK GMG துப்பாக்கிகளின் சூட்டாளர்களாக லெப் நாகமணி, லெப் சொற்கோ, லெப் தமிழ்நம்பியும்,
  • RPG உந்துகணை செலுத்தியுடன் 2 ஆம் லெப் மாறனும்,

படகேற…

அன்றைய மன்னார் கடல்வினியோக நடவடிக்கைக்கான பாதுகாப்புக் படகு அணிக்கான கட்டளை அதிகாரியாக படகேறினான் லெப் கேணல் நிரோஜன்.

வழமையாக நிரோஜன் தொகுதிக் கட்டளை அதிகாரியாக படகேறும் கடற்சண்டைகளில் வினியோகப் படகுகள் பத்திரமாக கரைசேரும் எனும் நம்பிக்கை போராளிகளிகளுக்கு ஏற்பட்டிருந்தது. மருந்துப்பொருட்களுடன் வினியோகப் படகுகள் கரைநோக்கி வந்துகொண்டிருந்தன. 

வாடைக்காற்று வீசியடிக்க கரையினில் அலைகள் மௌனமாக கரைந்துகொண்டிருந்தது. ஆனால் உயரக்கடலில் அலைகள் தாண்டவமாடியது. இப்படியானதொரு கடல்வினியோக நடவடிக்கையொன்றில்தான் லெப் கேணல் நாவரசன் உட்பட புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜாக்கர் மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த மேஜர் சிந்தனைச்செல்வன் எனப் பல போராளிகளை முன்னர் இதே கடற்பரப்பில் இழந்திருந்தோம்.

அன்றும் அதுபோலவே கார்முகில்கள் சூழ்ந்திருக்க இருளை ஊடறுத்து பயணித்துக்கொண்டிருந்த வினியோகப் படகுகளை திடீரென சிறிலங்கா கடற்படை தாக்கத்தொடங்கியது. காரிருள் சூழ்ந்ததனால் ரேடார் கருவிகளில் முற்கூட்டியே எதிரியின் இலக்குகளை கண்காணிப்பது சிரமமானதால் வினியோகப் படகுகள் தாக்குதலுக்குள்ளான பின்னரே சண்டைப்படகுகள் எதிரியின் இலக்குகள் மீது தாக்குதலை தொடங்கியிருந்தது. 

படகு அணியின் கட்டளை அதிகாரியான நிரோஜனின் எண்ணமெல்லாம் வினியோகப்படகுகளை பத்திரமாக மீட்டெடுக்கவேண்டுமென்பதே. அதற்கான முயற்சியில் கடைசிவரை தாக்குதலை வழிநடத்திக்கொண்டிருந்த நிரோஜனின் அந்தக் கம்பீரக்குரல் மன்னார் கடலில் ஓய்ந்துபோனது. அவனுடன் கூடவே 14 கடற்புலி வீரர்களும் அந்தக்கடல் மடியில் கண்ணுறங்கிப்போயினர். கேசவன் படகு கரை திரும்பவில்லை. கரையில் படகுகாவி வெறுமையாக காத்துக்கிடந்தது. அருகில் நிரோஜனின் மோட்டார் சைக்கிள். கடற்போரியலில் களநாயகனாக வலம்வந்த நிரோஜனின் இழப்பும் கேசவன் சண்டைப்படகின் வலிமையும் பின்னாளில் நாம் எதிர்கொண்ட கடற்சமர்களில் எல்லாம் எம்மால் உணரப்பட்டது.

கடற்சண்டைகளின் போது சண்டை இறுகும் நெருக்கடியான நேரங்களில் சிறப்புத்தளபதி சூசையண்ணை அடிக்கடி கூறுவார், 

"நிரோஜனைப் போல முடிவெடுக்கப்பழகுங்கள்…
நிரோஜனைப்போல யோசியுங்கள்…"

வெல்லப்பட முடியாத தளம் என உலகம் கணித்த ஆனையிறவு படைத்தளம் எம் காலடியில் வீழ்ந்தபோது அதன் வெற்றிக்காக கடல்மடியில் கண்ணுறங்கிப்போன லெப் கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகளின் உயிர்த் தியாகங்களே எம் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துப்போனது.

நினைவுகளுடன்…

புலவர்,
கடற்புலிகள்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • nunavilan changed the title to லெப். கேணல் நிரோஜன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.