Jump to content

இறுதி 2 வாரங்கள் போர் நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்! - சரத் பொன்சேகா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி 2 வாரங்கள் போர் நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்! - சரத் பொன்சேகா!

 

இலங்கையில் போர் முடிவுக்குவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சீனா சென்றது உண்மையே என்றும், அங்கிருந்தபடியே போர் நகர்வுகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, போர் முடிவுக்கு வரும் வேளையில் சரத் பொன்சேகா சீனாவிலேயே இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா, போர் முடிவுக்கு வர இரண்டு வாரங்களே இருந்தபோது கீழ்மட்ட அதிகாரிகளின் பணிகள் மட்டுமே அவசியம் என்ற நிலைப்பாடு இருந்தது என்று கூறினார்.

அப்போது இராணுவத்துக்கு போர்த் தாங்கியொன்று தேவைப்பட்டது எனவும், அதனைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அதனைப் பெறுவதற்காக தாம் நேரடியாகவே சீனாவுக்குச் செல்ல நேரிட்டதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். "குறித்த தினத்துக்குள் வராவிட்டால் போர்த் தாங்கிகள் எமக்கு வழங்கப்படாது எனக் கூறினார்கள். அதற்காகவே நான் அங்கு (சீனா) சென்றேன்" என்றார் பொன்சேகா.

"ரணில், மைத்திரி போன்றவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் எம்மால் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியாது. அதனை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளேன்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://aruvi.com/article/tam/2020/10/09/17707/?fbclid=IwAR02w9Jh4SK1zKqVBAgwFi98dJ6mMWdjhFE2Y1hD_YSi6DQMj0NXPwoA5G0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வெளிச்சத்துக்கு வருகிறது.

கிந்தியா, தன்னை அறியாமலேயே (இல்லை அறிந்துமோ தெரியாதது), RAW  சீனாவின் ஏவல் படையாக / சக்தியாக சிங்களத்தின்  வழியே இருந்திருக்கிறது என்பதும் வெளியில் வருகிறது.

ஆனால், மலையாள மேனன்கள், நாராயணங்கள், rao க்கள், நம்பியார்கல், அந்தோணிகள், பஞ்சாபி பிரதமர், பெங்காலி முகர்ஜி இப்படி முழு இந்திய அர்ஷின் அச்சனி முடுக்குகள் எல்லாருமே ஏவல் படையாக மாறியது சீனப் பணமா அல்லது தத்துவமா?       

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

எல்லாம் வெளிச்சத்துக்கு வருகிறது.

கிந்தியா, தன்னை அறியாமலேயே (இல்லை அறிந்துமோ தெரியாதது), RAW  சீனாவின் ஏவல் படையாக / சக்தியாக சிங்களத்தின்  வழியே இருந்திருக்கிறது என்பதும் வெளியில் வருகிறது.

ஆனால், மலையாள மேனன்கள், நாராயணங்கள், rao க்கள், நம்பியார்கல், அந்தோணிகள், பஞ்சாபி பிரதமர், பெங்காலி முகர்ஜி இப்படி முழு இந்திய அர்ஷின் அச்சனி முடுக்குகள் எல்லாருமே ஏவல் படையாக மாறியது சீனப் பணமா அல்லது தத்துவமா?       

உங்களுக்கு புரியவில்லை, இல்லையா? சீனா, இந்தியா, இலங்கை, இந்து சமுத்திர பிராந்திய வல்லரசுகளின் நகர்வுகள், கொள்கைகள் பற்றிய அறிவில் தவறிருப்பதை அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம் இது.

Link to comment
Share on other sites

புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால்  4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று  நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சீனாவில் இருந்து வழிநடத்தினோரோ.. வழிஞ்சிட்டு இருந்தாரோ தெரியாது.. ஹிந்தியா அதன் உச்ச சற்றலைட் வலுவையும் பாவித்து இஸ்ரோவின் உதவியோடு வன்னியில் புலிகளின் நகர்வுகளைக் கண்காணித்து களத்தில் இருந்த தனது படைகளுக்கு உதவியது.. இந்தப் போரை வெற்றி கொள்ள. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒண்டும் கிழிக்கவில்லை...

இவர் சீனத்து வவ்வால் திண்டு போட்டு படுத்துக் கிடந்தவர்..😁

எங்கண்ட கோத்தா ஐயா தான் வழி நடத்தினவர்....😜

அது சரி.... கொஞ்ச நாளா மாரித்தவளை கத்துது.... கோத்தா பாம்பு, உள்ள தூக்கி போடப்போகுது.... கவனம்... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

புலிகள் எடுத்த ஒரு மிக தவறான முடிவென்றால் அது சீனாவின் பக்கம் சாராமல் மேற்கு அல்லது இந்தியாவின் பக்கம் சார்ந்தது. சீனாவின் ஆதரவை நாடியிருந்தால்  4ம் கட்ட ஈழப்போரில் புலிகள் தோற்று இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் 4ம் கட்ட ஈழப்போரே நடந்திராது ..அதே போல் சீனாவிடம் சிங்களவன் பெற்று  நாசம் பண்ணும் நிதி உதவிகளை புலிகளின் நிர்வாகத்தில் இருக்கும் தேசத்துக்கு கொடுத்திருந்தால் அதை வைத்து எப்படியெல்லாம் எமது மண்ணை வளர்த்திருக்கலாம். மேற்கை/ இந்தியாவை நம்பி இறுதியில் விடுதலை போராட்டம் நிர்மூலமாகி இந்தியாவின் விமான நிலையம் என்ற பெயரில் கொட்டில் கிடைத்தது தான் மிச்சம். அங்கால அவர் ஒருத்தர் மத்திய கிழக்கை வன்னியில் நிறுவியது தான் எமது 30 வருட போராட்டம் கண்ட பயன்.

 

நான் முன்பும் பலமுறை எழுதி நிர்வாகத்தால் தூக்கப்பட்ட கருத்துதான் இருந்தாலும் எழுதுகிறேன். போர் நிறுத்த காலத்தில் சீனாவிலிருந்து தலைவரை காண வந்த ஒரு உயர்மட்ட குழுவை அவரை பார்க்க விடாமல் திருப்பியனுப்பிய பெருமை சுப தமிழ்செல்வனையே சாரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இவர் சீனாவில் இருந்து வழிநடத்தினோரோ.. வழிஞ்சிட்டு இருந்தாரோ தெரியாது.. ஹிந்தியா அதன் உச்ச சற்றலைட் வலுவையும் பாவித்து இஸ்ரோவின் உதவியோடு வன்னியில் புலிகளின் நகர்வுகளைக் கண்காணித்து களத்தில் இருந்த தனது படைகளுக்கு உதவியது.. இந்தப் போரை வெற்றி கொள்ள. 

நீஙகள் இப்படி புட்டுப் புட்டு வைக்கிறியள்.

மகிந்தா அல்லக்கை.... வீரவன்சன்ச கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறார்.... புது அல்லக்கை ஆனந்த வீரசேகர.... இந்தியா ஒப்பந்தப்படி ஒண்டுமே செய்யேல்ல.... அதால...13A.... ஒப்பந்தம்.... கான்சல் எண்டுறாரே...

மகிந்தா நூல் விட்டுப்பாக்கிறார்...

‘பயப்படாதடா, நீ தான் தைரியமான ஆளாச்சே.... பயப்படாதே’ எண்டு சொல்ல... சீனாக்காரன் உடன வந்து இறங்கீட்டான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நான் முன்பும் பலமுறை எழுதி நிர்வாகத்தால் தூக்கப்பட்ட கருத்துதான் இருந்தாலும் எழுதுகிறேன். போர் நிறுத்த காலத்தில் சீனாவிலிருந்து தலைவரை காண வந்த ஒரு உயர்மட்ட குழுவை அவரை பார்க்க விடாமல் திருப்பியனுப்பிய பெருமை சுப தமிழ்செல்வனையே சாரும்.

உண்மை பொய்க்கு அப்புறம்.....
சீனாவுடன் தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்  இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்திருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கொஞ்ச நாளா மாரித்தவளை கத்துது.... கோத்தா பாம்பு, உள்ள தூக்கி போடப்போகுது.... கவனம்...

ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு. தன்னிலை மறந்து உளறுவார் வீர அக்களிப்பில். எல்லாப் பழியையும் அவர் மேல் சுமத்தி, உள்ளுக்கை போட்டு பருப்பும், பாணும் குடுக்கேக்கை விழித்தெழுவார் இவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

உண்மை பொய்க்கு அப்புறம்.....
சீனாவுடன் தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்  இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்திருக்கும்?

அவர்கள் இருவரும் எப்போதும் செய்யும் துரோகத்தனங்களையே செய்துகொண்டிருந்திருப்பார்கள். ஆனால் ஒரு வல்லரசுக்கு நிகரான நாட்டுடன் தொடர்பிலிருக்கும் போராட்டக்குழுக்களை அவ்வளவு எளிதில் யாராலும் வெற்றி கொள்ள முடியாதென்பது வரலாறுகள் நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆயுத உதவிகளும் இலகுவாக கிடைத்திருக்கலாம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 08:50, குமாரசாமி said:

உண்மை பொய்க்கு அப்புறம்.....
சீனாவுடன் தலைவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால்  இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்திருக்கும்?

சிங்களாஆட்சியாளருக்கு முழு ஆதரவு கொடுத்திருப்பார்கள்....

தாய்வானுக்கு ஆதரவு இந்தியா கொடுப்பதால் சீனா சிறிலங்காவுக்கு ஐ .நா  வில் ஆதரவு கொடுக்க உசாராக இருக்கினம் வில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.