Jump to content

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"முத்தையா முரளிதரன் என்றுமே தமிழர்" - கொண்டாடும் இலங்கை உறவுகள், டிரெண்டிங்கில் #ShameOnVijaySethupathi

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக, இலங்கை

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் "800" என்ற திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் தொடர்பாக முத்தையா முரளிதனுக்கு எதிராகவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் ஆதரவாகவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

"800" திரைப்படத்தின் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை உள்பட பல நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு அப்பால், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முத்தையா முரளிதரன், உலக அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஒரு தமிழனாக விளங்கி வருகிறார்.

எனினும், முத்தையா முரளிதரன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் பேசுகின்றமை, தமிழர்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஒரு அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

அதுமாத்திரமன்றி, இலங்கையின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின்போது, முத்தையா முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர், யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் சேர்ந்து பயணித்தமையும், ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், 'நான் முதலில் இலங்கையன்... அதன் பின்னரே தமிழன்" என்று முத்தையா முரளிதரன் கூறிய கருத்து, அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அவதானிக்கலாம்.

முத்தையா முரளிதரனின் இந்த கருத்தானது, அண்மை காலமாக மீண்டும் ஒரு சர்ச்சையை சமூக வலைதளங்களில் தோற்றுவித்திருந்தது.

முத்தையா முரளிதரனால் வெளியிடப்பட்ட இந்த கருத்தை, விஜய் சேதுபதி தனது திரைப்படத்தில் கூறுவாரா? எனவும் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், டிவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் கருத்துகளை பதிவிட்டு இலங்கை தமிழருக்கு ஆதரவான உணர்வையும், எதிர்ப்பையும் பதிவிட்டு வருகிறார்கள். எனினும், விஜய் சேதுபதியோ முரளிதரனின் நேரடி தரப்போ இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து வெளியிடவில்லை. அதே நேரம், கடந்த வாரம் நடிகர் விஜய் சேதுபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், முத்தையா முரளிதனின் வரலாறு படத்தில் தானும் அங்கமாக இருப்பதில் பெருமைப்படுவதாக கூறியிருந்தார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

இவ்வாறான சர்ச்சைகளின் பின்னணியில், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் "800" திரைப்படத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுமார் 2 வருட காலத்திற்கு முன்னரே முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் இடம்பெற்ற சுவாரஸ்யங்களை, பட தயாரிப்பு குழு பதிவு செய்து கொண்டதுடன், அந்த கால பகுதியிலிருந்தே திரைப்படத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முத்தையா முரளிதரனின் குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் கூறினர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இந்த திரைப்படத்தை பற்றி எவ்வாறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

படப்பதிவில் எது பிரச்சனையாகும்?

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில், அவரது சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கை தொடர்பிலான விடயங்கள் உள்ளடங்கியிருந்தால், தாம் அதனை வரவேற்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஜெயரட்ணம் துவாரகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதை விடுத்து, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் ஈழத் தமிழர்களை தொடர்புபடுத்தி, தேவையற்ற விடயங்கள் உள்ளடக்கப்படுவதாக இருந்தால், ஈழத் தமிழர்கள் மத்தியில் அது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவிக்கும் என அவர் கூறுகிறார்.

ஈழப் போராட்டத்தின்போது முத்தையா முரளிதரன், ஈழப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதனால், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மாத்திரம் மையப்படுத்தி இந்த திரைபடம் எடுக்கப்படுவதாக இருந்தால், அதில் எந்தவித பிரச்சனைகளும் கிடையாது என கூறும் ஜெயரட்ணம் துவாரகன், ஈழத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்படுவதாக இருந்தால் அது பிரச்சனைக்குரிய விடயம் என குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகின்றது என்பதை எண்ணி பார்க்கும் போது அது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் என இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ்.சக்சிவர்ணன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, மிகவும் சிறந்ததொரு விடயம் எனவும் அவர் கூறினார்.

தமிழர் எதிர்ப்பு ஏன் தீவிரமாகிறது?

முத்தையா முரளிதரனை, அனைவரும் ஒரு விளையாட்டு வீரராகவும், ஒரு சாதனையாளராகவுமே அவதானிப்பதாக கூறும் எஸ்.சக்சிவர்ணன், அவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்பதை இளைய சமூகத்திற்கு இந்த திரைப்படத்தின் ஊடாக கூற வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

எஸ்.சக்சிவர்ணன்

பட மூலாதாரம், Saksivaran

 
படக்குறிப்பு,

எஸ்.சக்சிவர்ணன்

எனினும், இலங்கை அரசியலோடு முத்தையா முரளிதரன் பயணிக்கின்றமையினாலேயே, அவருக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பு எழுந்துள்ளதாக எஸ்.சக்சிவர்ணன் தெரிவிக்கின்றார்.

முத்தையா முரளிதரன் பல்வேறு சந்தர்ப்பங்களில், தன்னை தமிழனாக அடையாளப்படுத்த தவறியமையும், தமிழர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு எழுவதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முத்தையா முரளிதரனை ஒரு விளையாட்டு வீரராக தமிழர்கள் விரும்பினாலும், இலங்கை அரசியல் மற்றும் தமிழர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பல இடங்களில் தவறியமையினாலேயே அவரை பெரும்பாலான தமிழர்கள் புறக்கணிக்க காரணமாக இருந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை திரைப்பட துறையின் பதில்

இலங்கையின் அடையாளம், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி என்ற முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இலங்கையிலேயே எடுத்திருக்க வேண்டும் என இலங்கை திரைப்பட தயாரிப்பாளர் ரேணுகா பாலசூரிய பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ரேணுகா பாலசூரிய

பட மூலாதாரம், RENUKA BALASOORIYA

 
படக்குறிப்பு,

ரேணுகா பாலசூரிய

உலக விளையாட்டு ரசிகர்களினால் மிகவும் அன்புடன் பார்க்கக்கூடிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு இந்தியாவில் படமாக்கப்படுவது குறித்து, தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறுகின்றார்.

பல 100 வருடங்கள் கடந்தும் இலங்கையில் இவ்வாறான சாதனை வீரர் ஒருவர் இருந்தார் என்பது இந்த திரைப்படத்தின் ஊடாக பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, உலகிலுள்ள பலர் முத்தையா முரளிதரனை வீழ்த்துவதற்கு முயற்சித்த போதிலும், அவற்றையெல்லாம் கடந்து ஒரு சாதனை படைத்த வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக இலங்கை பிரபல திரைப்பட இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

விளையாட்டு ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அவரை வீழ்த்த முயற்சித்த போதிலும், அவர் அவற்றை எல்லாம் கடந்து 800 விக்கெட்களை கைப்பற்றியது என்பது மாபெரும் சாதனை என அவர் குறிப்பிடுகின்றார்.

அடுத்த தலைமுறையில் கூட முத்தையா முரளிதரனின் சாதனைகளை முறியடிக்க முடியுமா என்ற கேள்வி கூட எழுவதாக அவர் கூறுகிறார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை இயக்குநராக இருந்து, தன்னால் எடுக்க முடியாது போனது குறித்து கவலை அடைவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

குடும்பத்தாரின் கருத்து

இவ்வாறான எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த பின்னணியில், அவரது குடும்பத்தார் இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கின்றனர் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

முத்தையா முரளிதரன் மற்றும் அவரது குடும்ப தலைமுறைகள் அனைவரும் மலையகத்தில் பிறந்த, மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) என்பதை எவராலும் மாற்ற முடியாது என முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

முத்தையா பிரபாகரன்

பட மூலாதாரம், MUTHIAH PRABHAKARAN

 
படக்குறிப்பு,

முத்தையா பிரபாகரன்

யார் எவ்வாறான கருத்துக்களை வெளியிட்டாலும், தனது சகோதரன் என்றும் தமிழனாகவே இருப்பார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுகின்ற போதிலும், சாதனை வீரனான தனது சகோதரன் தொடர்பில் சாதனை படைத்த எவரும் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதில்லை என அவர் கூறுகின்றார்.

முத்தையா முரளிதரன் தனது சொந்த முயற்சியில், எந்தவித பின்னணியும் இல்லாமல் இன்று உலகிலேயே தலை சிறந்த கிரிக்கெட் வீரராக பயணித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தனது சகோதரன் அரசியலில் எந்தவித பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும், அவர் ஒரு சாதனை குடிமகனாகவே ஆதரவு வழங்கியிருந்தார் எனவும் அவரது சகோதரர் குறிப்பிடுகிறார்.

முத்தையா முரளிதரன் தமிழ் மொழி மூலமாகவே தனது கல்வியை பயின்றார் எனவும், தமிழ் கழகமொன்றின் ஊடாகவே கிரிக்கெட் பிரவேசத்தை அவர் பெற்றார் எனவும் முத்தையா பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

எனினும், தம்மை சுற்றியிருக்கும் பலரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முத்தையா முரளிதரன் பெரும்பாலும் சிங்கள மொழியில் பேசுவார் என்ற போதிலும், அவர் என்றுமே தமிழ் மொழியை மறக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்கவுள்ளமை தொடர்பில் அவரது குடும்பத்தார் என்ற வகையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "800" படம், இலங்கை, இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவிருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கி, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

இதற்கிடையே, தற்போதைய சர்ச்சை தொடர்பாக "800" திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தார் (Dar) மோஷன் பிக்சர்ஸ் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பல்வேறு வகையில் அரசியலாக்கப்பட்டு வருவதை அறிகிறோம். "800" திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழக்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக அது இருக்கும் என்று கூறியுள்ள தார் மோஷன்ஸ் நிறுவனம், ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலான காட்சியமைப்புகள் அதில் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பல தமிழ் திரைத்துறையினர், கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கலைஞர்களுக்கும் கலைக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும், நம்பிக்கையையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம் என்று தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/54542846

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்துகளை எல்லாரும் சொல்லியிருக்கிறீர்கள். மனோ கணேசன் அவர்களின் நேர் கொண்ட பார்வை அற்புதம்.

வி.சே இதையெல்லாம் உள்வாங்கி நல்ல முடிவை எடுப்பார் என  நம்புகிறேன். 

படம் வெளி வந்தால் பார்க்க ஆவலுடன் உள்ளேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசல் பிரேமகுமாரன் ஆர்னோல்டு VS முத்தையா முரளிதரன்

ரசல் & முரளி இருவருமே தமிழர்கள் தான்.

ரசல் யாழ் வம்சாவளி தமிழர்.
முரளி இந்திய வம்சாவளி தமிழர்.

இருவரும் கிரிக்கட் விளையாட சென்றார்கள் கிரிக்கட் விளையாடினார்கள். அதில் முரளிதரன் மட்டும் விமர்சிக்கப்படுவதற்கு காரணம் அவரின் அபார வளர்ச்சியும் உளவியல் ரீதியிலான யாழ் மையவாத அரசியலுமேயாகும்.

சிங்கள இலட்சனை (அவர்கள் பார்வையில்) எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது, இலங்கை அரசின் இலட்சணையுடன் வரும் புத்தகத்தை படித்து சிங்கள இலட்சனைகளுடன் இருக்கும் கல்லூரிகளில் படித்து படிப்பில் வல்லவர்கள் என்று மார்தட்ட முடியும் என்றால் சிங்கள இலட்சனை அணிந்து விளையாடி கிரிக்கட்டில் சிறந்தவர் என்று முரளி மார்தட்டுவதில் என்னதான் பிரச்சனை உள்ளது ??

இத்தகைய பிரச்சனைகள் எல்லாம் ஒருவகை வாக்குவங்கி அரசியலாகவும் யாழ் மையவாத அரசியலாகவும் மட்டுமே இருக்கிறது. அதை தாண்டி எந்தவொரு தாத்பரியமும் ஆக்கபூர்வமான செயல்பாடும் இத்தகைய எதிர்ப்புகளில் இல்லை.

தமிழ் என்பதை முன்வைக்கும் எவருமே "தமிழராக அந்த அணியில் நீடித்து நின்று சாதனை புரிய" அவர் எவ்வளவு சவால்களை சந்தித்து வந்திருப்பார் அவற்றை எல்லாம் தாண்டி சாதித்த அவரை எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும் என்பதை சிந்திக்க மாட்டார்கள். அவ்வளவு தான் அவர்களின் தமிழ் பற்று..

இவர்கள் எல்லாம் முகநூல் கீபோர்ட் வீரர்கள். இத்தகையவர்களுக்கு தன்னை ஒரு முற்போக்காளன் போன்றும், கள வீரன் போன்றும் காட்டிக்கொள்ள முரளிதரன் தேவைப்படுகிறார் மற்றப்படி இவர்கள் அனைவரும் வீட்டுக்கு ஒருவர் வேண்டும் என்ற பொழுது ஓடி ஒழிந்தவர்கள் தான் ..

வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் ஆர்மி சுடுறான், நாட்டுக்கு போனால் இறந்துவிடுவேன் என்று கூறி அங்கு குடியுரிமை வாங்கியவன் எல்லாம் தியாகியாம், நாட்டிலையே வசித்து அதில் வரும் பிரச்சனைகளுக்கு ஏற்றது போல் அனுசரித்து சென்று சாதனை புரிந்தவர் துரோகியாம். இப்படி கூறுபவர்கள் யார் என்று பார்த்தால் இங்கு இருந்தால் இயக்கம் பிடிச்சிடும் எண்டு 50லட்சம் செலவழித்து வெளிநாடு போன வீர தியாகிகளாக இருக்கிறார்கள்.

அவரின் அரசியல் விமர்சனங்களும் கூற்றும் ஏற்றக்கொள்ள முடியாது என்று ஒரு கூட்டம் இருக்கிறது.. வெளியில் சிங்கள பேரினவாதம், தமிழ் தேசியம் என கூறி வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் இலங்கை சட்டத்திட்டங்களை மதித்து அவற்றிற்க்கு பங்கம் ஏற்படுத்தாது நடந்துகொள்வேன் என்று பதிவி ஏற்பதற்கு பதிலாக பாராளுமன்றத்தில் செய்யப்போவதை வெளிப்படயைாக கூறுபவர் எப்படி பிழையானவராவார் ?? ஆக அரசியல் விமர்சனமும் அர்த்தமற்றதேயாகும்

கொள்கையில் சாதித்தோம் என்று சொல்ல ஒரு விடையம் கூட இல்லாத காரணமே குறுகிய சிந்தனை கொண்ட கொள்கைவாதம் என்பதை உணராதவரை எதுவுமே இவர்களால் வசப்படாது.

 

நன்றி வினோத் பாலச்சந்திரன் முகனூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி நடத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் கம்பன் கழகம்.. இவரை (முரளியை) கூட்டி வைச்சு விருது வழங்கிச்சே. 

அப்ப எல்லாம் அடக்கி வாசிச்சவை..

வன்னியில் தமிழீழ காவல்துறையினருடன் முரளி நிழற்படம் பிடித்த போது பாராட்டி மகிழ்ந்தவர்கள்..

இன்று..

முரளி என்றுமே தன்னை தமிழனாக அடையாளப்படுத்த விரும்பிய ஒருவர் அல்ல.

அவருக்கு விஜய் சேதுபதி திரை உருவம் கொடுப்பது.. விஜய் சேதுபதியின் பிழைப்பு. இதில் இனப்பற்றை எல்லாம் கலந்தடிக்கக் கூடாது.

விஜய் சேதுபதியாக உணர்ந்து ஏதாவது செய்தால் அன்றி.. அவரை வற்புறுத்த எம்மவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. 

காரணம்.. போரின் போது மக்கள் சாகச் சாக.. கருணா நிதியின்..  மானாட மயிலாட பார்த்து நிதி சேர்த்துக் கொடுத்த ஈழப் புலம்பெயரிகள் பலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இள வயது முரளிதரனாக நடிக்க இளம் நடிகர் ரீஜே அருணாச்சலம் மறுப்பு; குவியும் பாராட்டு!

“முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இளவயது முரளிதரனாக நடிக்க படக்குழு என்னிடம் கேட்டது. எனது தாய் ஈழத்தில் பிறந்தவராதலால் அவர்கள் சொன்ன கதையில் சரியான அரசியல் இல்லை என நான் உணர்ந்தேன். ஆதலால் அப்படத்தில் நடிக்க நான் மறுத்தேன்” என்று தெரிவித்திருக்கிறார் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளம் நடிகரும், பாடகருமான ரீஜே அருணாச்சலம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரீஜே அப்படத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்ததற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நான் இந்தியாவில் இருந்த போது ‘800’ படக்குழு என்னை அணுகியது. நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று கதையின் சில பகுதிகளைக் கேட்டேன். எனக்கு இளவயது முரளிதரனாக நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

எனினும், ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய சரியான அணுகுமுறை இப்படத்தில் இல்லை என எனக்குத் தோன்றியது. எனது தாய் ஈழத்தில் பிறந்தவர். ஆதலால் அந்த கதையின் பட அரசியலுக்குள் புகுந்து கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் மறுப்புத் தெரிவித்தேன்” என்றுள்ளார்.

teejay-arunachalam-20190408113659-41611.https://newuthayan.com/இள-வயது-முரளிதரனாக-நடிக்/

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்துத் தலைவியை  சாதி காரணமாக கூட்டங்களில் தரையில் அமர வைத்து திருப்த்திபட்ட தமிழ்நாட்டுக்கு அவசியமான பிரச்சனை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பஞ்சாயத்துத் தலைவியை  சாதி காரணமாக கூட்டங்களில் தரையில் அமர வைத்து திருப்த்திபட்ட தமிழ்நாட்டுக்கு அவசியமான பிரச்சனை தான்

இப்ப தமிழ்நாட்டு தமிழர்கள் தான் முத்தையா வெருளியின் பிரசினையை கொண்டு செல்கிறார்கள் என்று சொன்னதுக்கு நன்றி எங்கோ ஒரு மூலையில் நடந்த விடயத்தை இந்த விடயத்துடன் ஓட்ட வைக்கிறீர்கள் உங்கள் முயட்சி வெற்றி யடைய  வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் கம்பன் கழகம்.. இவரை (முரளியை) கூட்டி வைச்சு விருது வழங்கிச்சே. 

அப்ப எல்லாம் அடக்கி வாசிச்சவை..

வன்னியில் தமிழீழ காவல்துறையினருடன் முரளி நிழற்படம் பிடித்த போது பாராட்டி மகிழ்ந்தவர்கள்..

இன்று..

கருணா அம்மான் என அழைக்கப்படும்  வினாயகமூர்த்தி முரளிதரனையும்  ஒரு காலம் தலையில் வைத்து கொண்டாடினோம்.  
இன்று கொண்டாட முடியவில்லை.
உங்களால்.....??????
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

முரளி என்றுமே தன்னை தமிழனாக அடையாளப்படுத்த விரும்பிய ஒருவர் அல்ல.

அவர் பல இடங்களில் முதலில் நான் சிறிலங்கன் அப்புறம் தான் நான் தமிழன் என்கிறாரே இதன் அர்த்தம் என்ன சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அவருக்கு விஜய் சேதுபதி திரை உருவம் கொடுப்பது.. விஜய் சேதுபதியின் பிழைப்பு. இதில் இனப்பற்றை எல்லாம் கலந்தடிக்கக் கூடாது.

2009 ம் ஆண்டுதான் எனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டு என சொல்பவரின் வரலாறு உங்களுக்கு இனிக்கின்றதா சார்?

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

விஜய் சேதுபதியாக உணர்ந்து ஏதாவது செய்தால் அன்றி.. அவரை வற்புறுத்த எம்மவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. 

காரணம்.. போரின் போது மக்கள் சாகச் சாக.. கருணா நிதியின்..  மானாட மயிலாட பார்த்து நிதி சேர்த்துக் கொடுத்த ஈழப் புலம்பெயரிகள் பலர்.

மானாட மயிலாட பார்த்துக்கொண்டாவது பணங்களையு உதவிகளையும் அள்ளி வழங்கி உணர்ச்சிகரமாக இருந்தனர்.இன்றும் தாயக ஏக்கங்களுடனேயே இருக்கின்றனர். உங்களைப்போல் விசா ஏக்கங்கள் இல்லை. விசாவிற்காக தாலி கட்டியவர்களும் அல்லர்.

ஆனால் அன்று தொடக்கம் இந்த நொடி வரைக்கும் புலிகளையே வசைபாடி வயிறு வளர்த்துக்கொண்டிருப்பவர்களை விட மானாட மயிலாடல்காரர் நேர்மை நியாயமானவர்கள்.

கடைசியாக தங்களுக்கு ஒரு வசனம். யாருமே  விஜய் சேதுபதிக்கு எதிரிகள் அல்ல. மாறாக ரசிகர்கள். விஜய் சேதுபதி தவறான ஒருவருக்கு  வேடம் கொடுத்து புனிதராக காட்டமுனையக்கூடாது என்பதுதான் அனைவரின் ஆதங்கம்.

⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂

கடைசியாக தங்களுக்கு ஒரு வசனம். யாருமே  விஜய் சேதுபதிக்கு எதிரிகள் அல்ல. மாறாக ரசிகர்கள். விஜய் சேதுபதி தவறான ஒருவருக்கு  வேடம் கொடுத்து ......முரளிதரனை  புனிதராக காட்டமுனையக்கூடாது என்பதுதான் அனைவரின் ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இவரின் படம், நாளை கோத்த & மகியின் படம்.

தமிழனுக்கு பெருமை சேர்த்த ஏதிர் வீரசிங்கத்தை படமெடுக்கலாமே, பேராசிரியர் துரைராசா... இப்படி பலர்.

முரளி மட்டும்தான் தமிழருக்கு பொருமை சேர்ந்தாரா?

 பெருமையுடன் தமிழரை இழிவுபடுத்தியவர், உறவுகளை காணவில்லையென்று போராடும் மக்களை இவரைபோல் இழிவாக யாரும் இதுவரை பேசியதில்லை, தமிழராக இருந்திருந்தால் அந்த வலி புரிந்திருக்கும், இவன் சிங்களவனாக வாழ்ந்தவனாச்சே, இப்ப தலையில் தூக்கி கொண்டாட வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் வ கௌதமன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சிங்களன்,ஹிந்திகாரர்,தெலுங்கர்,கூட்டணில,நீங்க யாரு.!?" எச்சரிக்கும் பாலமுருகன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழன பத்தி பேசாத.. தமிழ்நாட்டுல படத்த ஓடவே விடக்கூடாது..!!” | கொந்தளிக்கும் கலையரசி நடராஜன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

“தமிழன பத்தி பேசாத.. தமிழ்நாட்டுல படத்த ஓடவே விடக்கூடாது..!!” | கொந்தளிக்கும் கலையரசி நடராஜன்

 

என்ன இந்த அம்மணி, இந்தப் போடு போடுது..? 🤔:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் செல்வனா.!? சிங்கள மக்கள் செல்வனா.!? இடும்பாவனம் கார்த்தி சராமரி கேள்வி | 800 | Ntk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதா? வேண்டாமா? - விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல்

முரளிதரன் பயோபிக் குறித்து முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி ஓரிரு நாளில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதா? வேண்டாமா? - விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல்
முரளிதரன், விஜய் சேதுபதி
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. 

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். 

800 பட போஸ்டர்

இந்நிலையில்,  800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ளதால் நடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விஜய்சேதுபதி ஆலோசிக்க உள்ளதாகவும், ஒரிரு நாளில் இதுகுறித்து தனது முடிவை அவர் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/16151322/1974916/vijay-sethupathi-decision-about-800-movie-in-2-days.vpf

விஜய் சேதுபதி படத்திற்கு குவியும் எதிர்ப்புகள் - முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு , ஜே வி பி போராட்டத்தில் நடந்த வன்முறை , பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போர் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800.

இது இப்போது பல்வேறு காரணங்களுக்குக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு தான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

முத்தையா முரளிதரன்

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள் போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது, என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறு நாள் உயிருடன் இருக்க மாட்டார், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படி பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினைத் தெரிவித்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

என்னை பொறுத்தவரையில் சிங்களர்கள் இருந்தாலும் மலையக தமிழர்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழன் நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?

இவை அனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/16163427/1974934/MuthiahMuralidaran-statement-about-800-movie.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி நீங்கள் விவேகி - வைரமுத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முரளி - அந்த தாய்மார்கள் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்களென்ப்பதைபற்றி வாயே திறக்கவில்லை இந்த அறிக்கையில் எப்படிப்பட்ட ஆள் இவர்

37 minutes ago, உடையார் said:

 

விஜய் சேதுபதி படத்திற்கு குவியும் எதிர்ப்புகள் - முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை

 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/16163427/1974934/MuthiahMuralidaran-statement-about-800-movie.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி திரித்து செய்தி வெளியிடுக்கின்றார்களென்று - முரளி செய்தியாளர்களை கூட்டி பகிரங்கமாக அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை ஒரு போதும் நான் ஆதரித்தது இல்லையென்று கூற முடியுமா??? இலங்கை இரணுவத்தை கண்டித்து அறிக்கை விடமுடியுமா

 

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா...? முத்தையா முரளிதரன் வேதனை
 

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள 800 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையிலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

முரளிதரனின் குழந்தைப் பருவத்தில் துவங்கி, அவரது பந்து வீசும் முறை சர்ச்சையானது, அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசுகிறது இத்திரைப்படம்.
'800' படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் கூறி உள்ளதாவது:- 

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க முயலுகிறார்கள். 800 திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள். இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா.

மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளேன். 2002ம் ஆண்டு எல்டிடிஇ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளேன்.

போர் முடிந்த பிறகு எனது அறக்கட்டளை மூலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு நான் செய்த உதவிகள் அதிகம்
எனது சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 800 திரைப்படத்தை எடுக்க சம்மதித்தேன்.

போர் முடிவுற்றதால் தான் 2009ம் ஆண்டை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன். தமிழர்களை கொன்று குவித்த நாளை நான் மகிழ்ச்சியான நாளாக கூறியதாக அவதூறு பரப்புகிறார்கள். அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை ஒரு போதும் நான் ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்
என கூறினார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/16164001/SriLanka-Tamils-born-My-fault-muttiah-muralitharan.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
0324789E-6FB2-4A5B-90D1-E1FC66A55F7F.jpeg
 

 

ஈழத்தில் நடந்த தமிழர் போராட்டம் இயக்க வடிவம் பெற்று பின்னர் ஒரு பகுதியில் ஆட்சி அமைத்து அதன் பின்னர் வல்லரசுகளின் ஆசியுடன் புலிகளுக்கு எதிரான ஒரு அநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இன அழித்தொழிப்புக்கு ஆளானதை அறிவோம். இந்த விசயத்தில் ஒரு வினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்த பழியையும் புலிகளின் மீதே சுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும் ஜீன்ஸும் அணிந்து வன்னியப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒரு தரப்பினர் அந்த பெண் ஒழுக்கங்கெட்டவள் எனப் பேசுவதைப் போல. திட்டமிட்ட தாக்குதல் மூலம் ஒரு தரப்பு மக்களைக் கொன்று விட்டு அவர்களும் தான் கலவரத்தில் ஈடுபட்டார் என்பதைப் போல. யூதர்களை ஜெர்மனியில் நாஜிக்கள் அழித்தொழித்த போது ஒரு சாரார் - நாஜி அல்லாதோர் கூட - “இந்த யூதர்களும் சளைத்தவர்கள் அல்ல, அவர்களின் தன்னலமே இந்நிலைக்குக் காரணம் என பழியை மாற்றிப் போட்டார்கள்.

 இந்த பாதிக்கப்பட்டவர்களை பழிப்பதில் தமிழர்களும் ஒரு பகுதி ஈழத்தமிழர்களும் ஈடுபடுவதை அறிவோம். ஏன் இப்படி செய்கிறார்கள்?

 

இரண்டு காரணங்கள்:

 

1) “நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” - மணிரத்னம் போன்றோரின் படைப்புகளில் இப்படியான ஒரு தொனி வரும். இது ஒரு கார்ப்பரேட்வாத கதையாடல் - நவதாராளவாத பொருளாதாரம் கொழிப்பதற்கு அமைதி அவசியம். ஆனால் இந்த அமைதிக்குள் இருக்கும் போது தான் மக்கள் உங்கள் கண்முன்னால் பெருங்கூட்டமாய் அழிக்கப்பட்டதைப் பார்க்கிறீர்கள். அப்போது ஒரு நிம்மதியின்மை ஏற்படுகிறது - உற்பத்தி, நுகர்வு, துய்ப்பு என இருப்பதே அமைதி’. இதில் உள்ளார்ந்து உங்கள் நினைவுகள் சார்ந்த ஒரு நிம்மதியிழப்பு வரும் போது அப்பழியை பேசிப்பேசி பாதிக்கப்பட்டவர்கள் பால் போட்டு விடுவது. அநீதி இழைத்தவர்கள் மீது போடலாமே? முடியாது. அவர்களே உங்கள் முதலாளிகள். அவர்களே ஆளும் வர்க்கம். அவர்கள் நிம்மதியிழந்தால் உங்கள் நிம்மதியும் கெட்டு விடும் என அஞ்சுகிறீர்கள்.

 

அமைதியை விரும்புவோர் ஏன் அமைதிக்கு மிக அதிகமாய் குந்தகம் விளைவித்தோரை குற்றம் சாட்டுவதில்லை என்பதில் தான் உள்ளது இந்த பாசாங்கின் மையம்.

 

முரளிதரன் பேசும் போது, “முன்பு புலிகள் இருந்த போது பிரதான சாலை வழி போக  முடியாது, சிங்கள அரசியல் தலைவர்கள் மீது புலிகள் குண்டு போடுவார்கள், தாக்குவார்கள், அதனால் நாங்கள் சுற்றி வளைத்து பயணிக்க வேண்டி வந்தது, ஒருநாளும் நிம்மதி இருந்ததில்லை என்கிறார். ஆனால் எங்குமே அவர் சிங்கள ராணுவத்தினர்களும், சிங்கள பேரினவாதிகளும் செய்த கொடுங்குற்றங்களைப் பற்றிப் பேசுவதில்லை. எளியோருக்கும் வலியோருக்கும் இடையே சண்டை நடக்கும் போது எளியோரை ஆதரிக்க வேண்டும் என்பது உலக நியதி. இதில் தமிழர்-சிங்களவர் வித்தியாசம் கூட இரண்டாம் பட்சமே. முரளிதரனால் ஏன் அப்படி செய்ய முடியவில்லை என்றால் அவருக்கு சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டும் என்பதால் அல்ல. அதற்கு அவர் அமைதியாக இருந்து விட்டுப் போகலாமே. அவர் அடிமனத்தில் இந்த எண்ணமே இருக்கிறது - அவருக்கு நிம்மதி வேண்டும் - உள்ளார்ந்த நிம்மதி - அதற்கு நினைவுகள் ஏற்படுத்தும் நிம்மதிழப்பு  அவருக்கு பெரும் தொந்தரவாகிறது. அதற்காகவே இப்படிப் பேசுகிறார்.

 

அடுத்து இலங்கையை பிரதிநுத்துவம் செய்த தமிழராக முரளிதரனுக்கு தன் தேசியம் சார்ந்த ஒரு பிரச்சனை ஏற்படுகிறது - அவருக்கு இலங்கை அரசு ஆரம்பத்திலிருந்தே எல்லா வித ஆதரவுகளையும், மரியாதையையும் கொடுக்கிறது. அவரது பந்து வீச்சு சட்டவிரோதமானது என சர்ச்சை வெடித்த போது இலங்கை கிரிக்கெட் வாரியம் கடைசி வரை அவருக்காக போராடியது. சிங்கள் ரசிகர்களும் அவருக்காக கைதட்டுகிறார்கள். அவர் இலங்கை தேசியவாதத்தை ஏற்கிறார். ஆனால் ஈழப்போராட்டம் அவருக்கு ஒரு முரணை, அதனாலான அகத்தொந்தரவை அளிக்கிறது. பிற தமிழர்களுக்கு வரலாற்றுரீதியாகவே இத்தகையை மரியாதையும் ஆதரவும் இலங்கை அரசால் ஏன் வழங்கப்படவில்லை என யோசிக்க அவர் தயாரில்லை. ஏனென்றால் அவரது தேசிய உணர்வை அது நொறுக்கி விடும். இலங்கை இறையாண்மை ஒருவித சிங்கள இறையாண்மை எனப் பார்க்க அவர் விரும்பவில்லை. “இவன்கள் ஏன் இப்படி தொந்தரவு கொடுக்கிறார்கள்?” என்றே அவரது மனம் சிந்திக்கும். அது ஏன் மாறாக சிந்திக்கவில்லை என்பதற்கு அடுத்து வருகிறேன்.

 

2) அரசியல் நீக்கம்:

அரசியல் நீக்கமானது நவதாராளாவாதத்தின் அடிப்படையான ஒரு கொள்கை, அது மக்களிடையே ஒரு பொது சுபாவமாகப் படிகிறது. நீங்கள் நமது பள்ளிக்கல்வியில் இருந்தே அரசியல்ரீதியான கருத்துக்களை எங்கும் பொது உரையாடல்களில் காண முடியாது. நமது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் அரசியல் சித்தாந்த கருத்துக்கள் இராது. நான் கல்லூரியில் சமூகவியல் வகுப்புகளில் போய் அமர்வேன். அங்கு சமூகப் பிரச்சனைகள் சார்ந்து தீவிர விவாதங்கள் எழும் போது மாணவர்கள் இவற்றை அதிகமும் தமது தனிப்பட்ட கண்ணோட்டத்தில் இருந்தே நோக்குவதை, மிக மிக அரிதாகவே அரசியல் சார்ந்து, சித்தாந்தம் சார்ந்து யோசிப்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அங்கு மாணவர்கள் செய்தியைக் கூட வெறும் செய்தியாக, அரசியலற்றதாகவே பார்ப்பார்கள். அரசுப்பள்ளிகளும் ஒன்றும் மேலில்லை.

 

 ஏன் ஒரு சமூகம் அரசியலை யோசிக்க வேண்டும், ஏன் அரசியல் சார்ந்து ஒரு விசயத்தைப் பார்க்க வேண்டும்?

 

ஒரு சமூகம் குடிமை சமூகமாக மாற அது அதிகார அரசியலில் பங்கேற்க வேண்டும். அதிகார அரசியலுக்குள் வர அது சித்தாந்த அரசியலை ஏற்க வேண்டும். இல்லாவிடில் அது தொடர்ந்து சுரண்டப்படும், இனவாத அழிப்புக்கு ஆளாகும், இதை உணராமலே சதா கையேந்தும் நிலையில் இருக்கும், இதை உணராதிருக்கும்படி நவதாராளாவாதம் நுகர்வு வாழ்க்கையில் மக்களை அதிகமாய் தள்ளும்: நமது வேலைகள் நம்மை நமது இருப்பில் இருந்து அந்நியப்படுத்துகின்றன, வெறுமை தோன்றும். வெறுமை அதிகமாக நாம் குடி, கேளிக்கை, சினிமா என சீரழிவோம். அரசியல் பேச்சு எழும் போது இவர்கள் நம்மிடம் அரசியல் பேசினால் நிம்மதி போய் விடும், நிலையின்மை வரும், வறுமை ஏற்படும் என அச்சுறுத்துவார்கள். இவை பொய்ப்புரட்டு என யோசிக்கும் நிலையில் நாம் இருக்க மாட்டார்கள். நாம் ஒரு குடிமை சமூகமாக அல்ல நுகர்வு சமூகமாகவே எஞ்சுவோம்.

 

 தேர்தலின் போது பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள் என இம்மக்களை கேலி வேறு பண்ணுவோம். எல்லாவற்றையும் நுகர்வாக்கும் இந்த பொருளாதார அமைப்பே தேர்தலிலும் ஊழலைக் கொண்டு வருகிறது என நமக்குப் புரியாது. நான் அரசியலற்றவன், நடுநிலை என்று பேசிகிறவர்கள் இப்படியாக நுகர்வைத் தவிர எதுவும் முக்கியமில்லை என சிந்திக்கும் அப்பாவிகளே’. இவர்களே புலிகள் உள்ளிட்ட ஆயுதமேந்திய குழுக்களின் போராட்டத்தை ஆதரிக்காதவர்கள். ஏனென்றால் இவர்கள் என்றுமே அரசியல்மயப்பட்டதில்லை. வெள்ளைக்காரர்கள் இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட காலத்தில் இருந்தே இவர்கள் அப்படித்தான். வெள்ளையர்கள் நல்லவர்கள் என நம்புவதே நிம்மதியாக ஒரு காலத்தில் இங்கு இருந்தது. (வெள்ளையர்கள் இந்தியாவை சிறப்பாக ஆண்டார்கள் என்பதான வசனங்களை அடிக்கடி பெருமூச்செறிந்து சொல்வார்கள்.) வெள்ளையர் காலனியவாதத்தின் பிள்ளைகளான நம்மைப் போன்றே ஒரு பகுதி இலங்கைத் தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசியல் நீக்கத்தை விரும்பினார்கள். “சிங்களவாதத்துக்கு எதிரான போராட்டம் எங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தது, ‘நிம்மதியை ஒழித்தது, புலிகளால் நாங்கள் நிம்மதியிழந்தோம்.” எனக் கோரும் இவர்கள் வேறெந்த விதத்தில் (அஹிம்சையாகப்) போராடினார்கள்? தமிழர் சார்பான அரசியல் கட்சிகள் தோன்றின காலத்தில் இருந்தே அங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் பேரினவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் திரண்டு தெருவுக்கு வந்தார்கள் என எந்த வரலாறும் அங்கு இல்லை.

 ஆயுதம் ஏந்திய, ஏந்தாத இந்த போராட்டங்களும், எதிர்ப்புகளும் தோன்றிய போதே தமிழர் சமூகம் இலங்கையில் தீவிரமாய் அரசியல்வயப்படுகிறது. எதற்குப் போராடணும், அமைதியாகப் போலாமே எனக் கேட்டவர்கள், இன்றும் கேட்பவர்கள் அரசியல்வயப்படுவதை, ஒரு குடிமை சமூகமாய் உருமாறுவதை விரும்பாதவர்கள். அவர்கள் பேரினவாதத்தால் தாம் ஒடுக்கப்படுவதை கண்மூடி ஏற்றுக்கொண்டே, எல்லா வன்முறைகளின் பழியையும் ஆயுதம் தரித்த போராளிகள் மீது போடுவதை வசதியாக கருதினார்கள். அவர்களே இன்றும் புலம்பெயர் தமிழர் மத்தியில் புல்லுருவிகளாய் இருக்கிறார்கள்.

 

நான் வலியுறுத்தி சொல்கிறேன் - நான் ஆயுதமேந்திய போராட்டத்தை ஆதரிக்கவில்லை. (வலியவனே அதில் ஜெயிக்க முடியும்.) ஈழத்தில் அது ஏற்பட்டு விட்டது. அதில் வெல்வதற்கான சக்தி புலிகளுக்கு இல்லை என்றதால் தோற்றார்கள், ஆனால் தோல்வியின் பக்கத்தில் நிற்பதே நீதி. இப்போது போய் அதன் மொத்த பழியையும் புலிகள் மிது போடுவது கயவாளித்தனம்.

 

புலிகள் ஆயுதமேந்திய போராட்டத்தை பெரும் இயக்கமாய் தோற்றுவித்திருக்காவிட்டால் அங்கு மக்கள் அமைதியாக, புன்னகை பூத்த படி வாழ்ந்திருப்பார்கள் என ஒரு தரப்பினர் நம்புகிறார்கள். இல்லை. சிறுபான்மைத் தமிழர்களை எதிரியாக்கிய ஒரு இனவாத அரசியல் அங்கு நீண்ட காலமாய் வாக்கரசியலாகி இருக்கிறது. அதைத் தக்க வைக்க அவர்கள் பல வித ஒடுக்குமுறைகளை அவிழ்த்து விட்டபடி இருந்திருப்பார்கள். எந்த அடிப்படை உரிமையும் இல்லாத அடிமைகளாக்கி நாயாய் நடத்தியிருப்பார்கள். புலிகளின் இயக்கம் இதில் ஒரு இடைநிறுத்தத்தை கொண்டு வந்தது, ஆனால் யுத்தம் வெடித்த போது சிங்களவர்கள் தம் நீண்ட காலத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். ரத்தத்தைக் காட்டி சிங்கள மக்களை இப்போதைக்கு அமைதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இனவாதத்தின் ரத்தவெறி சுலபத்தில் அடங்காது. அடுத்த அரை நூற்றாண்டில் அவர்களின் பெரும்பான்மைவாத அரசியலைப் பொறுத்து இந்தியாவில் உள்ள CAA போன்ற பல ஒடுக்குமுறைகள் அங்கும் சட்டரீதியாகவே நிகழும். எல்லா பேரினவாத அரசியலும் இறுதியில் ஜெர்மனியிலே போய் முடியும். தவிர்க்கவே முடியாது. அடுத்த அரை நூற்றாண்டுக்குள் இங்கு இஸ்லாமியரும் அங்கு தமிழர்களும் மீண்டும் குடியுரிமை இழப்பு, அடிப்படை உரிமைகள் இழப்பு போன்ற கொடுமைகளை பரவலாக - சட்டரீதியாக - சந்திப்பார்கள். இரண்டு நாடுகளிலும் தடுப்பு முகாம்கள் அன்றாட எதார்த்தமாகும். அப்போது இலங்கையில் பழிபோட (போராட) புலிகள் இருக்க மாட்டார்கள்

 

தமிழர்களுக்கு ஈழப்போரில் நடந்த உண்மை தெரியாது, அவர்கள் கற்பனை செய்து கண்ணீர் வடிக்கிறார்கள், போரின் போது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை, இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள் என்பதெல்லாம் அநியாயம். தமிழர்களில் ஒரு சிறிய தரப்பினர் மட்டுமே ஈழ ஆதரவு அரசியலை முன்னெடுக்கிறார்கள். ஆனால் கணிசமான தமிழர்கள் கடந்த அரை நூற்றாண்டாக அரசியல்வயப்படாமலே வெறும் நுகர்வு, சாதிய சமூகமாக இருந்து வருகிறார்கள். அவர்களே இப்போது பேஸ்புக்கிலும் முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி ஏன் நடிக்கலாகாது, அது படைப்பு சுதந்திரம், சினிமாவை அரசியல்மயப்படுத்தக் கூடாது, தடை கோரும் அரசியல் பாசிசமாகும் என்றெல்லாம் அபத்தமாய் எழுதுகிறார்கள்.

இதற்கு என்னுடைய பதில் இது?

அப்படத்தின் படப்பிடிப்பை வன்முறை கொண்டு தடை செய்தாலோ, படவெளியீட்டை தடுத்தாலோ தான் தப்பு. ஆனால் அப்படம் எடுக்க வேண்டாம் எனக் கோருவதில் எந்த தப்பும் இல்லை

அரசியல் இல்லாத கலைப்படைப்பே இல்லை; எந்த படத்திலும் ஒரு மறைமுக பிரச்சாரம் உண்டு; இப்படம் நிச்சயமாய் சிங்களவர்-ஈழத்தமிழர் உறவை அரசியல்நீக்கம் செய்து ஒரு லா லா லா விக்கிரமன் பட பாணி உறவாக சித்தரிக்கவே வாய்ப்பதிகம். இல்லாவிடில் இரண்டு இனங்களுமே சம அளவில் பாதிக்கப்பட்ட ஒரு போர் என பொய்யை கட்டியெழுப்பி எனும் வரலாற்றில் வெள்ளையடித்து விடுவார்கள்.

 

 ஒரு சுத்தமான விளையாட்டுப் படமாக இதை எடுக்கக் கூடாதா

முரளிதரன் பாத்திரத்தில் தமிழ் பேசி விஜய் சேதுபதி நடித்தாலே அது அரசியல் படமாகி விடும். தவிர்க்கவே முடியாது. பாஜக கட்சியில் இருக்கிற ஒரு இஸ்லாமிய தலைவரைப் பற்றி படமெடுக்கிறார்கள் என வைப்போம். (அதில் மம்முட்டி நடிக்கிறார் என நினைப்போம்.) என்னவாகும்? அவர் இஸ்லாமியர் பற்றி பேசாமல் நடித்தாலே கூட அங்கு ஒரு இந்துத்துவ பிரச்சார அரசியல் ஏற்பட்டு விடும். தவிர்க்க முடியாது. ஒரே வழி இப்படத்தை நேரடியாய் சிங்களத்தில் எடுத்து வெளியிடுவது. படம் முழுக்க முரளிதரன் பாத்திரம் தமிழ் அடையாளமே அற்றவராக சிங்கள் மொழி மட்டுமே தெரிந்தவராகக் காட்டட்டும். முரளிதரன் பிறப்பால் சிங்களவர், மதத்தால் பௌத்தர் எனக் காட்டி விடுங்கள். பிரச்சனையே வராது. முடியாதில்லையா? அப்போது பிரச்சனை வரத்தான் செய்யும்.

 

பிரச்சனையை யாருமே கிளப்பவில்லை. ஒரு திறந்த புண்ணைப் போல அது ஏற்கனவே அங்கு இருக்கிறது. அதைப் பாருங்கள் எனக் கோருகிறோம். அதைப் பற்றி பேசுங்கள், இனவாதிகளை தொடர்ந்து எதிர்க்க இதை பயன்படுத்துங்கள் என்கிறோம்.

 

 800 படத்துக்கு எதிரான தீ பரவட்டும்!

http://thiruttusavi.blogspot.com/2020/10/800.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.