Jump to content

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா?

இயக்குனர் சீனு ராமசாமியின் பதிவு

இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் கதையில் நடிக்க வேண்டாம் என்பதற்காக இப்படி பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/10160504/1963559/Seenu-Ramasamy-Request-to-Vijay-Sethupathi.vpf

 

 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை/ மதிவாணன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்சேதுபதிக்கு எச்சரிக்கை!-இளஞ்சென்னியன்

இந்த நூற்றாண்டில் மனித குலம் வெட்கி தலைகுனியத்தக்க இனப்படுகொலையை நிகழ்த்திய அரசின் பக்கமாக நின்று ஓர் இனத்தின் விடுதலை போராட்டத்தை அதனை தலைமையேற்று நடத்திய விடுதலை இயக்கத்தை கொச்சைபடுத்தி பேசி வரும் அறமற்ற விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் அவரின் இனத்துரோக வரலாறே முதன்மையானது. அதை தவிர்த்து அவரது விளையாட்டு வாழ்க்கையை பதிவு செய்ய போவதாக தாங்கள் சொன்னால் அது உங்கள் மீதான நன்மதிப்பை கேள்விக்கு உள்ளாக்கும். சமூகம்சார்ந்த சனநாயக கருத்துக்களை தொடர்ந்து ஆளும் வர்க்கத்து அஞ்சாது கூறிவந்த நீங்கள் சிங்கள இனப்படுகொலை ஆட்சியாளர்களின் கருத்துருவாக்கவாதியாக நின்றால் தமிழினத்துக்கு எதிரான அணியிலையே காலம் உங்களையும் வைத்து பார்க்க வைத்து விடும். உடனடியாக இந்த பட ஒப்பந்தங்களில் இருந்து தாங்கள் தங்களை விடுவித்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் உரிய விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்கிறோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி வண்டியும் ,தொந்தியுமாய் இருக்கிறார் ...எப்படி முரளியின் வேடத்திற்கு பொருந்தி வருவார்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் விபரீதம் விஜய்சேதுபதி | ராஜபட்சே கொண்டாடுவது தமிழினத்திற்கு எதிரானது

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் சொல்லப்படாத கதை என்ற தலைப்பில் வருகின்ற படத்தில் திரு விஜய்சேதுபதி அவர்கள் நடிக்க இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பொது உளவியல் தன்மைக்கு எதிரானது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் செல்வனா சிங்கள செல்வனா | விஜய் சேதுபதியிடம் அன்பான வேண்டுகோள் | Vijay sethupathi | Himlar

 

Link to comment
Share on other sites

On 10/10/2020 at 22:39, உடையார் said:

அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா..

எத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட; மேலே குறிப்பிட்ட, அவருக்குப் பொருத்தமான ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பது தான் அவருக்குப் பெருமை என்பது எனது பணிவான கருத்து. இதை விடுத்துப் பல கோடித் தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடிய ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் வேதனையானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதில நா.த.க குரல்கள் ஓங்கி ஒலிப்பதால் மட்டும் கேட்கிறேன், யாராவது பதில் தெரிந்தால் தாருங்கள் (நாக்கை நீட்டாமல்!)

"எவனிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" - இது சீமான் அவர்கள் ஹிற்லரின் வாசகமொன்றை மேற்கோள் காட்டிய பின்னர் சொன்னது. 

இலங்கையில், முன்னேறக் கஷ்டப் படும் ஒரு சமூகத்தில் இருந்து வந்து, உலக கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஒரு தமிழர்! சமாதான காலத்தில் புலிகளால் வரவேற்கப் பட்டு வன்னி போய் அவர்களது விளையாட்டு அபிவிருத்தி மீதான ஆர்வத்தை வெளியுலகுக்குக் காட்டியவர். இப்படி பல நல்ல விடயங்கள் இருக்க, இப்ப ராஜபக்ஷவின் நண்பன் என்பதால் மட்டுமே ஏன் இப்படி எதிர்ப்பு? 

இவர் ஹிற்லரை விட மோசமானவரா? 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இப்ப இதில நா.த.க குரல்கள் ஓங்கி ஒலிப்பதால் மட்டும் கேட்கிறேன், யாராவது பதில் தெரிந்தால் தாருங்கள் (நாக்கை நீட்டாமல்!)

"எவனிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்" - இது சீமான் அவர்கள் ஹிற்லரின் வாசகமொன்றை மேற்கோள் காட்டிய பின்னர் சொன்னது. 

இலங்கையில், முன்னேறக் கஷ்டப் படும் ஒரு சமூகத்தில் இருந்து வந்து, உலக கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஒரு தமிழர்! சமாதான காலத்தில் புலிகளால் வரவேற்கப் பட்டு வன்னி போய் அவர்களது விளையாட்டு அபிவிருத்தி மீதான ஆர்வத்தை வெளியுலகுக்குக் காட்டியவர். இப்படி பல நல்ல விடயங்கள் இருக்க, இப்ப ராஜபக்ஷவின் நண்பன் என்பதால் மட்டுமே ஏன் இப்படி எதிர்ப்பு? 

இவர் ஹிற்லரை விட மோசமானவரா? 🤔 

தெரிந்தும் தெரியாத மாதிரியும் விளங்கியும் விளங்காதமாதிரியும் நடிப்பவர்களை என்ன செய்ய - 🤔

புலிகள் இருக்கும் போது இவர் அவர்களுக்கு ஏதிராக அல்லது தமிழ் மக்கள் இறப்பது சந்தோஷமென கூறியிருந்தாரா -அதற்கான பதிவுகளை தரமுடியுமா???  

May 2009 புலிகள் மக்களின் அழிவை பார்த்து தனக்கு சந்தோஷமென கூறியிருந்தார் இதுதான் இவரின் உண்மை முகம்,

அதுசரி - அன்று புலிகள் கூப்பிட்ட படியால் போய் ஏதே விளம்பரத்துக்கு செய்தார், May 2009 க்கு பின் என்னத்தை கிழித்தார் கூற முடியுமா (நாக்கை நீட்டாமல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்கை எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை, ஆனா இவரை கொண்டாடி படமெடுக்குமளவுக்கு பொது வாழ்கையில் நல்லவரா?

இவரை W.A Silva Mawatha இல் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி காணலாம், அங்கு போக முதல் Hamdon Lane இல் ஒரு பாமர்சி இருக்கு அங்கும் அடிக்கடி வருவார், அந்த பாமர்சிக்கு பக்கத்தில் தான் என் நண்பர்கள் கடை வைத்திருந்தார்கள், அங்குதான் கூட நேரமிருப்பது, இவரின் தனிப்பட்ட வாழ்கையும் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:

தெரிந்தும் தெரியாத மாதிரியும் விளங்கியும் விளங்காதமாதிரியும் நடிப்பவர்களை என்ன செய்ய - 🤔

புலிகள் இருக்கும் போது இவர் அவர்களுக்கு ஏதிராக அல்லது தமிழ் மக்கள் இறப்பது சந்தோஷமென கூறியிருந்தாரா -அதற்கான பதிவுகளை தரமுடியுமா???  

May 2009 புலிகள் மக்களின் அழிவை பார்த்து தனக்கு சந்தோஷமென கூறியிருந்தார் இதுதான் இவரின் உண்மை முகம்,

அதுசரி - அன்று புலிகள் கூப்பிட்ட படியால் போய் ஏதே விளம்பரத்துக்கு செய்தார், May 2009 க்கு பின் என்னத்தை கிழித்தார் கூற முடியுமா (நாக்கை நீட்டாமல்)

அதெல்லாம் பதிவில் இருக்கே உடையார், அதுவா என் கேள்வி? இதெல்லாம் சொல்லியிருந்தாலும் அவர் புலிகளை அழிக்கவில்லை, தமிழரைக் கொல்லவில்லை, யாரையும் கொல்லவில்லை! 

உங்கள் தல சீமானின் கொள்கைப் படி இவரது சாதனையை நாம் ஆவணப்படுத்த வேண்டாமா என்றே கேட்டேன்! ஏனென்றால், 10 மில்லியன் பேரைக் கொன்ற ஹிற்லரில் இருந்தே நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டுமெண்டல்லோ சொல்லியிருக்கிறேர்? 

இல்லையா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அதெல்லாம் பதிவில் இருக்கே உடையார், அதுவா என் கேள்வி? இதெல்லாம் சொல்லியிருந்தாலும் அவர் புலிகளை அழிக்கவில்லை, தமிழரைக் கொல்லவில்லை, யாரையும் கொல்லவில்லை! 

உங்கள் தல சீமானின் கொள்கைப் படி இவரது சாதனையை நாம் ஆவணப்படுத்த வேண்டாமா என்றே கேட்டேன்! ஏனென்றால், 10 மில்லியன் பேரைக் கொன்ற ஹிற்லரில் இருந்தே நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டுமெண்டல்லோ சொல்லியிருக்கிறேர்? 

இல்லையா? 🤔

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 

5 minutes ago, உடையார் said:

அதை சிங்களவன் செய்தானா ?

 ஆவணப்படுத்திதான் இருக்கின்றார்கள் இவரின் சாதனைகளை.

ஏன் இப்ப இவரின் சாதனையை தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் படமாக எடுக்க வேண்டும் - தமிழருக்கு இவர் என்ன செய்தார்,

சிங்களத்துக்குதான் அள்ளி அள்ளி செய்கின்றார் இன்னும், அந்த சிங்களவன் இவரை கருவேப்பிலையாகதான் பாவிக்கின்றான். அவர்கள் ஏன் ஆவணபடமாக எடுக்க கூடாது

இவரைவிட தமிழ் நாட்டில் சாதனை செய்த அல்லது பல பெரியவர்களை ஆவணப்படமாக எடுக்கலாம்,

இப்ப இவரின் படத்தை எடுப்பதன் பின்னனி சிங்கள அரசியல்

யாரைப் பற்றி படம் எடுப்பதென்று விஜய் சேதுபதியும் தயாரிப்பாளரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? இவை இருவரும் அல்லாதோர் ஏன் எச்சரிக்கையெல்லாம் விட வேண்டும்? படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 

நல்லதை எடுத்து கொண்டார்கள் - அதற்காக அவரை கொண்டாட வேண்டெமென்றில்லையே?

ஹிட்லரில் நல்லதை எடுத்துக்கொண்டால், அவரை படமெடுக்கனுமென்றிருக்கா?

உங்களின் எண்ணம் விளங்கவில்லை, இவரின் திறமையை நல்லதை எடுத்து பயிற்ச்சி கொடுக்கலாம், அதற்காக தலையில் கொண்டாடுமளவிற்கு இவருக்கு தகுதியில்லை.

அத்துடன் இதில் ஏதிர்ப்பவர்கள் எல்லாம் நா.த.க இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இன்னும் நீங்கள் கேள்விக்குப் பதில் தரவில்லையே உடையார்? கொலைகாரன் ஹிற்லரிடமிருந்தே நல்லதைப் பார் என்றால், நா.த ஏன் முரளியை இப்படி முழுமூச்சாய் தூக்கியடிக்க வேணுமெண்டு தான் விளங்காமல் கேட்டேன்! 

உண்மையில் எனக்கு முரளியிலும் ஆர்வமில்லை, கீரிக்கட்டிலும் ஆர்வமில்லை! விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பிடிக்கும்! 
 

யாரைப் பற்றி படம் எடுப்பதென்று விஜய் சேதுபதியும் தயாரிப்பாளரும் அல்லவா முடிவு செய்ய வேண்டும்? இவை இருவரும் அல்லாதோர் ஏன் எச்சரிக்கையெல்லாம் விட வேண்டும்? படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

படம் பார்ப்பவர்களால்தான் இவர்கள் வாழ்கை ஓடுகின்றது, பார்பவர்களுக்கும் உரிமையிருக்கு, மக்கள் இல்லையேல் இவர்கள் இல்லை, இது ஒரு சின்ன பிள்ளைக்கு கூடவிளங்கும் - உங்களுக்கு?

நமல் ராஐபகசவின் ஊடுருவல் - இதுதான் அரசியல் 

வேண்டாம் விஜய்சேதுபதி | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

 

தமிழ் தேசியம் பேசினாலே நாம் தமிழர் கட்சி என சிந்திப்பவர்கள் இக்காணொளியைப்பார்த்துவிட்டு யோசியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

படம் பிடித்தால் பார்க்கலாம், இல்லையேல் பார்க்காமல் இருக்கலாம் அல்லவா? 

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

டுவிட்டரில் டிரெண்டாகும்  “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

விஜய்சேதுபதி

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/14122538/1974441/Shame-On-VijaySethupathi-hashtag-trending-on-twitter.vpf

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அது நியாயமான மனிதர்கள் செய்து கொள்வது அப்படி தான்.

யாரைப் பற்றி படம் எடுக்கலாம் அந்த படத்தில் நடிக்கலாமா என்பதெல்லாம் ஹிற்லரிடமிருந் பாசிசம் கற்று கொண்டவர்களின் நடவடிக்கை.

 

நியாயமான மனிதர்களைப்பற்றி நீங்கள் கதைக்கின்றீர்களா; கட்டுமிராட்டிதனத்தை செய்த கோத்தாவை கண்டீதீர்களா என்று கேட்க பதிலே சொல்லாமல் ஓடியவரல்லவா? நீங்கள் ஆதரிப்பதில் எந்த பிழையுமில்லை இனம் இனத்தோடுதான் சேரும்.

விளங்கனும் இன்னும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

டுவிட்டரில் டிரெண்டாகும் “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

டுவிட்டரில் டிரெண்டாகும்  “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” ஹேஷ்டேக்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர். 

விஜய்சேதுபதி

இந்நிலையில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானதால் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/14122538/1974441/Shame-On-VijaySethupathi-hashtag-trending-on-twitter.vpf

 

நியாயமான மனிதர்களைப்பற்றி நீங்கள் கதைக்கின்றீர்களா; கட்டுமிராட்டிதனத்தை செய்த கோத்தாவை கண்டீதீர்களா என்று கேட்க பதிலே சொல்லாமல் ஓடியவரல்லவா? நீங்கள் ஆதரிப்பதில் எந்த பிழையுமில்லை இனம் இனத்தோடுதான் சேரும்.

விளங்கனும் இன்னும்

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நல்லதை எடுத்து கொண்டார்கள் - அதற்காக அவரை கொண்டாட வேண்டெமென்றில்லையே?

ஹிட்லரில் நல்லதை எடுத்துக்கொண்டால், அவரை படமெடுக்கனுமென்றிருக்கா?

உங்களின் எண்ணம் விளங்கவில்லை, இவரின் திறமையை நல்லதை எடுத்து பயிற்ச்சி கொடுக்கலாம், அதற்காக தலையில் கொண்டாடுமளவிற்கு இவருக்கு தகுதியில்லை.

அத்துடன் இதில் ஏதிர்ப்பவர்கள் எல்லாம் நா.த.க இல்லை. 

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 
தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் 
உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான்.
ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் 
நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு செய்தால் 
அது உங்களுக்கும் வீணான வேலைதான். 

சிலவற்றை பார்த்தவுடனேயே புரிந்துகொள்ள வேண்டும்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்று காரணத்தோடுதான் 
முன்னையவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
துஷ்டனை கண்டால் போராடி விரட்டு என்று சொல்லாததில் 
நிறைய அர்த்தம் உண்டு. துஷ்டனுக்கான அர்த்தத்தை நீங்கள் 
தெளிவு கொண்டால் மட்டுமே மூதையார் சொல்ல வந்ததை புரிய முடியும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

விடுங்க உடையார் இவர்கள் வீரமெல்லாம் இங்குதான்  அங்கு நிலைமை கட்டுமீறி போய் கொண்டு இருக்கு 

#ShameOnVijaySethupathi என்று இணையமெங்கும் அதிருது 

முரளிதரன் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்களாம் இங்கு ஒருவர் சொல்கிறார் அவ்வளவுதான் அவரின் பார்வையின் தூரம் முரளிதரன் மேட்டுக்குடி வர்க்கம் என்பது அவர்கேள்விப்படவில்லையாக்கும் பிஸ்கட் கொம்பனி ஓனர் .இலங்கையில் பியர் தயாரிக்க என்று அனுமதித்த அளவை விட இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அதிக அளவு எதனால் இறக்குமதி செய்து பலமுறை தண்டப்பணம் கட்டியவர். 

 

இப்படித்தான் விசு வும் எங்களில்  சொரிந்து புண்ணாகியவர் .ஆனால் இம்முறை சேதுபதி விடயத்தில் எல்லா பார்ட்டியும் ஒன்றாய் நிக்கிறார்கள் அங்கு இங்கும் வழக்கம் போல் எடுத்ததுக்கெல்லாம் நீங்கள்  நான்கு கால் என்றால் இல்லை மூன்று கால் என்பார்கள் நீங்கள் சரியப்பா மூன்று கால்த்தான் என்று அமைதியானாலும் அவர்கள் விட மாட்டார்கள் இல்லை இரண்டைரை கால் என்று வருவார்கள் அவர்களுக்கு முதலில் மன ஆற்றுப்படுத்தல் செய்யணும் சேதுபதி விடயத்தில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் உண்மை அவர்களுக்கு சார்பாக இருக்காது எனும் காரணத்தினால் இங்கு கொள்ளுப்படுகினம் .

அசினும் இப்படித்தான் சொல்ல சொல்ல கெட்டு  குட்டி சிவரானவ.

சேதுபதி புத்திசாலி என்று அவருடன் அரபுலகில் வேலை செய்த நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மை பொய் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் .

 

16 minutes ago, Maruthankerny said:

முயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 
தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் 
உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான்.
ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் 
நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு செய்தால் 
அது உங்களுக்கும் வீணான வேலைதான். 

சிலவற்றை பார்த்தவுடனேயே புரிந்துகொள்ள வேண்டும்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்று காரணத்தோடுதான் 
முன்னையவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
துஷ்டனை கண்டால் போராடி விரட்டு என்று சொல்லாததில் 
நிறைய அர்த்தம் உண்டு. துஷ்டனுக்கான அர்த்தத்தை நீங்கள் 
தெளிவு கொண்டால் மட்டுமே மூதையார் சொல்ல வந்ததை புரிய முடியும்.    

நன்றி மருதங்கேணி & பெருமாள்

 இதை சேதுபதி சீரியசாக எடுத்தால், நல்ல நடிகர் என்ற பெருமையடன் இன்னும் மிளிர்வார், பார்ப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.