Jump to content

விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பின்னோட்டங்களை வாசியுங்கள். சுவாரசியமானது...

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மலையகத்தை சேர்ந்த தகுதியில்லாத , அங்கவீனமுற்ற இளைஞனுக்காய் போராடி அவரை அணியில் சேர்த்து பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த சிங்கள அரசிற்கு ஒரு ஓ போடுவம் 

திருந்துவதற்கு இடமிருப்பதாகத்தெரயவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:18, Justin said:

உங்களிடம் இல்லாத இந்த அக்கறையை, அரசியலில் செய்தி கூட வாசித்தறியாத  முரளியிடம் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  

அரசியலில் செய்தி கூட வாசித்து அறியாதவர் அது சம்பந்தமான கேள்விகள் வரும்போது அதைப்பற்றிய புரிதல் எனக்கில்லை அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து காணாமல் போனவர்களுக்காக போராடும் தாய்மார்களை நாடகமாடுவதாக கூறியிருக்க தேவையில்லையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் புகழின் உச்சாணி கொம்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் கதைப்பது செய்கைகள் எல்லாம் யோசித்து செய்யணும் சமூக ஊடகங்கள் பார்த்து கொண்டு தருணம் பார்த்து அவர்களின் பிழையை சுட்டிக்காட்ட வெளிக்கிடும் முன்பு என்றால் நாலு ஊடகங்களை கையுக்குள் வைத்து இருந்தால் காணும் இலகுவாக வெள்ளையடிப்பு செய்து விடுவார்கள் காலம் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள் உதாரணத்துக்கு  திமுகவும் பெரும் நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பாரிய ஊடகங்களை பினாமி பெயர்களின் வாங்கி குவித்தார்கள் இல்லை அரைவாசி பங்குதாரர் ஆகி தங்களுக்கு வேண்டிய  செய்தியை போட்டு இலகுவாக அரசியல் சதுரங்கம்  செய்யலாம் என்று நம்பினார்கள் ஆனால் சமூக ஊடக வீரியம் அவர்களின் எண்ணத்தை கவுட்டு  கொட்டி விட்டது .

எதாவது ஊடகம் பொய்யான தகவலை கொடுத்தாலே அடுத்தநாள் டுவிட் முகநூல் போன்றவற்றில் வறுத்தெடுத்து விடுகிறார்கள் .

இவ்வளவு சொல்லியும் விஜய்சேதுபதி அமைதி கொண்டு இருப்பது இனி அவர் சினி பீல்டீல் தலைமுழுக வேண்டியதுதான் இல்லை முரளிதரன் டேவிட் கமரூனுக்கு  பொய்யான தகவலை கொடுத்துவிட்டேன் மன்னிப்பு கோரினால் நிலைமை ஓரளவுக்கு சரியாகும் கல்கியில் எனக்கு தமிழ் வராது என்று பேட்டிகொடுத்தவர்  இன்று தான் தமிழன் என்று அலறுவதுக்கு காரணம் இந்த சமூக ஊடக களோபரம் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால் திருந்துவதுக்கு  சான்ஸே இல்லை .

இங்கு திரிகளில் முரளிக்கு ஆதரவாய்  குத்தி முறிபவர்கள் வெளியில் உள்ள சமூக ஊடகங்களில்  என்ன நடக்குது என்று கொஞ்சம் எட்டி பார்க்கணும் அவற்றை  இங்கு இணைக்க முடியாது கள விதி அப்படி ஆனாலும் காலம் மாறிக்கொண்டு உள்ளது 3000 பேருக்கு மேல் உள்ள பின்தொடர்பவர்கள் உள்ளவர்களின் முகநூலோ அல்லது மற்றைய சமூக ஊடகத்தை சேர்ந்தவர்களின் இணைப்புகளை இங்கு இணைக்கலாம் என்று மாற்றம் கொண்டுவருவது நல்லது போல் இருக்கு நிர்வாகம் சிந்திக்கணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

அரசியலில் செய்தி கூட வாசித்து அறியாதவர் அது சம்பந்தமான கேள்விகள் வரும்போது அதைப்பற்றிய புரிதல் எனக்கில்லை அதனால் நான் கருத்துக்கூற விரும்பவில்லை என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து காணாமல் போனவர்களுக்காக போராடும் தாய்மார்களை நாடகமாடுவதாக கூறியிருக்க தேவையில்லையே!!

அப்படித் தான் அவர் செய்திருக்க வேண்டும், செய்யாதது தவறு, சொன்னதும் தவறு என்று தான் சொல்லியிருக்கிறேனே நீங்கள் சுட்டிய கருத்தின் மேலே?

ஆனால், நீங்கள் மேற்கருத்தைப் பிய்த்தெடுத்த இடத்தில் போய், அங்கே நான் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கா, இப்ப இங்க காணாமால் போவோர் பற்றி கண்ணீர் வடிப்போருக்கு தகுதி இருக்கா என்று ஒருக்கா சொல்ல இயலுமா?

25 minutes ago, பெருமாள் said:

இப்ப எல்லாம் புகழின் உச்சாணி கொம்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் கதைப்பது செய்கைகள் எல்லாம் யோசித்து செய்யணும் சமூக ஊடகங்கள் பார்த்து கொண்டு தருணம் பார்த்து அவர்களின் பிழையை சுட்டிக்காட்ட வெளிக்கிடும் முன்பு என்றால் நாலு ஊடகங்களை கையுக்குள் வைத்து இருந்தால் காணும் இலகுவாக வெள்ளையடிப்பு செய்து விடுவார்கள் காலம் மாறி விட்டது என்பதை உணர மறுக்கிறார்கள் உதாரணத்துக்கு  திமுகவும் பெரும் நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பாரிய ஊடகங்களை பினாமி பெயர்களின் வாங்கி குவித்தார்கள் இல்லை அரைவாசி பங்குதாரர் ஆகி தங்களுக்கு வேண்டிய  செய்தியை போட்டு இலகுவாக அரசியல் சதுரங்கம்  செய்யலாம் என்று நம்பினார்கள் ஆனால் சமூக ஊடக வீரியம் அவர்களின் எண்ணத்தை கவுட்டு  கொட்டி விட்டது .

எதாவது ஊடகம் பொய்யான தகவலை கொடுத்தாலே அடுத்தநாள் டுவிட் முகநூல் போன்றவற்றில் வறுத்தெடுத்து விடுகிறார்கள் .

இவ்வளவு சொல்லியும் விஜய்சேதுபதி அமைதி கொண்டு இருப்பது இனி அவர் சினி பீல்டீல் தலைமுழுக வேண்டியதுதான் இல்லை முரளிதரன் டேவிட் கமரூனுக்கு  பொய்யான தகவலை கொடுத்துவிட்டேன் மன்னிப்பு கோரினால் நிலைமை ஓரளவுக்கு சரியாகும் கல்கியில் எனக்கு தமிழ் வராது என்று பேட்டிகொடுத்தவர்  இன்று தான் தமிழன் என்று அலறுவதுக்கு காரணம் இந்த சமூக ஊடக களோபரம் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால் திருந்துவதுக்கு  சான்ஸே இல்லை .

இங்கு திரிகளில் முரளிக்கு ஆதரவாய்  குத்தி முறிபவர்கள் வெளியில் உள்ள சமூக ஊடகங்களில்  என்ன நடக்குது என்று கொஞ்சம் எட்டி பார்க்கணும் அவற்றை  இங்கு இணைக்க முடியாது கள விதி அப்படி ஆனாலும் காலம் மாறிக்கொண்டு உள்ளது 3000 பேருக்கு மேல் உள்ள பின்தொடர்பவர்கள் உள்ளவர்களின் முகநூலோ அல்லது மற்றைய சமூக ஊடகத்தை சேர்ந்தவர்களின் இணைப்புகளை இங்கு இணைக்கலாம் என்று மாற்றம் கொண்டுவருவது நல்லது போல் இருக்கு நிர்வாகம் சிந்திக்கணும் 

பெருமாள், இந்த சமூக ஊடக குப்பை மேடுகளை, ஏதோ அரிய நூலகம் போல "எட்டிப் பார்க்க வேணும்" என்று நீங்கள் ஆலோசனை சொல்வது நகைப்பிற்குரியது! இதே களத்தில் இன்னொரு திரி இந்த சமூக ஊடக குப்பை மேட்டின் நாற்றத்தினால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய எக்ஸ்ரா வேலையை மட்டூக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

இப்ப இதை எல்லா இடமும் போடலாம் என்று விதி தளர்த்தினால், அவர்கள் காசுக்கு மட்டூக்களை அமர்த்தித் தான் கிளீன் செய்ய வேண்டியிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி கதைக்காமல் இருந்திருக்க வேண்டும். கதைத்த பின்னாவது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

முரளி ஒன்றும் பபா இல்லை. 2009 வரை ஒதுங்கி இருந்தவர், அதன் பின் தனக்கு எது சுயநலமாக அனுகூலம் தரும் என்பதை கணித்தே திருவாய் மலர்ந்தார்.

ஆகவே இப்போ மன்னிப்பு கேட்டாலும் அது இதயசுத்தியானது அல்ல.

ரசல் ஆர்னால்ட், மத்யூஸ், புஸ்பகுமார இப்படி தமிழ் அல்லது தமிழ் பின்புலம் உள்ளோர் இருந்ததை போல “மூடிகொண்டிருக்க” முரளியாலும் முடிந்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

ஆகவே வி சேயை படத்தை புறகணிக்குமாரு கோருவதில் தவறில்லை.

கோரிக்கைக்கு மேலதிகமாக படம் வந்த பின் பார்க்காமல் விடலாம். ஒரு அடையாள எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

ஆனால்  முடக்குவோம், முட்டுவோம் என மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

 

பெருமாள், இந்த சமூக ஊடக குப்பை மேடுகளை, ஏதோ அரிய நூலகம் போல "எட்டிப் பார்க்க வேணும்" என்று நீங்கள் ஆலோசனை சொல்வது நகைப்பிற்குரியது! இதே களத்தில் இன்னொரு திரி இந்த சமூக ஊடக குப்பை மேட்டின் நாற்றத்தினால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய எக்ஸ்ரா வேலையை மட்டூக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

இப்ப இதை எல்லா இடமும் போடலாம் என்று விதி தளர்த்தினால், அவர்கள் காசுக்கு மட்டூக்களை அமர்த்தித் தான் கிளீன் செய்ய வேண்டியிருக்கும்!

அரைகுறையாய் படித்துவிட்டு வேறு ஒரு திரியை பற்றி இங்கு புலம்புவது குழுவா சேர்ந்து பெட்டிசம் போட்டு அந்த திரியை நாசம் பண்ணிவிட்டு முழுமையாய் முடிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் திரியியல் என்பது விளங்குது இங்கு பலோவோர்ஸ் எனும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை பார்த்து குப்பைகளை கழித்து தரமானவர்களின் பதிவுகளை இங்கு இணைக்கலாமே எனும் வழியை பற்றியே எழுதினனான் . இப்படி எடுத்துக்கெல்லாம் உரட்டுபோட்டுக்கொண்டு நிக்கும் உங்களால் 500 பின் தொடருபவர்களை கொண்டுவருவது குதிரைக்கொம்பாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால்  முடக்குவோம், முட்டுவோம் என மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது மோசமான அணுகுமுறை.

இது காலம் பிந்தியது #TamilsTraitorVijaysethupathi 

போட்டு தாக்குதுகள் ஒரு பக்கத்தில் அண்ணமலை  பல்கலை கழக உரிமை பறி போகுது என்று கத்தினாலும்  யார் கேட்க்கிறார்கள் அவங்களா போதுமென்று நினைக்கும் மட்டும் ஓடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இது காலம் பிந்தியது #TamilsTraitorVijaysethupathi 

போட்டு தாக்குதுகள் ஒரு பக்கத்தில் அண்ணமலை  பல்கலை கழக உரிமை பறி போகுது என்று கத்தினாலும்  யார் கேட்க்கிறார்கள் அவங்களா போதுமென்று நினைக்கும் மட்டும் ஓடும் .

இதன் பின் மாற்று தேடி நாத வுக்கு வாக்கு போட்ட பலர், ம.நி. மை பக்கம் திரும்ப கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அரைகுறையாய் படித்துவிட்டு வேறு ஒரு திரியை பற்றி இங்கு புலம்புவது குழுவா சேர்ந்து பெட்டிசம் போட்டு அந்த திரியை நாசம் பண்ணிவிட்டு முழுமையாய் முடிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் திரியியல் என்பது விளங்குது இங்கு பலோவோர்ஸ் எனும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை பார்த்து குப்பைகளை கழித்து தரமானவர்களின் பதிவுகளை இங்கு இணைக்கலாமே எனும் வழியை பற்றியே எழுதினனான் . இப்படி எடுத்துக்கெல்லாம் உரட்டுபோட்டுக்கொண்டு நிக்கும் உங்களால் 500 பின் தொடருபவர்களை கொண்டுவருவது குதிரைக்கொம்பாக இருக்கும் .

நீங்கள் நாடும்  மாற்றத்தை முழுவதும் உள்வாங்கி  எழுதியது. பெட்டிசத் திரி என்ற ஒன்று நான் திறக்கவேயில்லை, தனிப் பெட்டிசனும் போடுவதில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்கள்? எனவே எதையாவது நம்புங்கள்! 

 ஏன் மூவாயிரம் பேர் தொடர்ந்தால் அது பகிரத் தக்க கருத்து என்ற வகைக்குள் அடங்கும்?

ஒரு ஒப்பீட்டுக்கு 80 மில்லியன் பேர் தொடரும் ட்ரம்பின் கீச்சகப் பதிவு 70% பொய்யும் புரட்டும்! 

சூழல் பாதுகாப்பு பற்றி விளக்கும் விஞ்ஞானி பிறையன் கொக்ஸின் கீச்சகப் பதிவைத் தொடர்வோர் 3 மில்லியன் பேர், ஆனால் அவர் பகிர்வது பெரும்பாலும் facts மட்டுமே! 

கருத்துக் களத்தில் நீங்களே எழுதுங்கள்.  

சமூக வலை ஊடகங்கள் என்றிருக்கும் பகுதியில் இந்த சமூக வலைக் குப்பைகளைக் கொட்டுங்கள்.

சுத்தம் செய்வோரின் வேலை இலகுவாகும் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நீங்கள் நாடும்  மாற்றத்தை முழுவதும் உள்வாங்கி  எழுதியது. பெட்டிசத் திரி என்ற ஒன்று நான் திறக்கவேயில்லை, தனிப் பெட்டிசனும் போடுவதில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்கள்? எனவே எதையாவது நம்புங்கள்! 

 ஏன் மூவாயிரம் பேர் தொடர்ந்தால் அது பகிரத் தக்க கருத்து என்ற வகைக்குள் அடங்கும்?

ஒரு ஒப்பீட்டுக்கு 80 மில்லியன் பேர் தொடரும் ட்ரம்பின் கீச்சகப் பதிவு 70% பொய்யும் புரட்டும்! 

சூழல் பாதுகாப்பு பற்றி விளக்கும் விஞ்ஞானி பிறையன் கொக்ஸின் கீச்சகப் பதிவைத் தொடர்வோர் 3 மில்லியன் பேர், ஆனால் அவர் பகிர்வது பெரும்பாலும் facts மட்டுமே! 

கருத்துக் களத்தில் நீங்களே எழுதுங்கள்.  

சமூக வலை ஊடகங்கள் என்றிருக்கும் பகுதியில் இந்த சமூக வலைக் குப்பைகளைக் கொட்டுங்கள்.

சுத்தம் செய்வோரின் வேலை இலகுவாகும் அல்லவா? 

உங்களை போலத்தான் நானும் பயித்தியக்கார ஆஸ்பத்திரி என்று முகநூலை திட்டுவது உள்ளே போனபின் தான் தெரிந்தது அந்த குப்பைகளுக்குள்ளும் மாணிக்கம் கள் உள்ளன என்று . பிளாக்குகளில்  எழுதிக்கொண்டு இருப்பவர்கள் தங்கள்வசதிக்கு ஏற்றது போல் மாறிவிட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படித் தான் அவர் செய்திருக்க வேண்டும், செய்யாதது தவறு, சொன்னதும் தவறு என்று தான் சொல்லியிருக்கிறேனே நீங்கள் சுட்டிய கருத்தின் மேலே?

 

ஆனால், நீங்கள் மேற்கருத்தைப் பிய்த்தெடுத்த இடத்தில் போய், அங்கே நான் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்கா, இப்ப இங்க காணாமால் போவோர் பற்றி கண்ணீர் வடிப்போருக்கு தகுதி இருக்கா என்று ஒருக்கா சொல்ல இயலுமா?

அதற்குமேலே  இருந்த கருத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீங்கள் எதையும் சொல்லவேயில்லை ஆனால் இதை எழுதியபின் அடுத்த பக்கத்தில் அந்த கருத்து இருந்ததை கவனித்தேன்.

நீங்கள் கேட்ட கேள்வி இம்முறையும் ராஜபக்சேக்கள் வரவேண்டும் என்றுசொன்னவர்களுக்கானது. நான் அப்படி எதுவுமே சொல்லாததால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை. 

அதற்காக  2005இல் ராஜபக்சேவை ஜனாதிபதியாக வரச்செய்தது பிழையென புலிகள் போரில் மௌனித்தபிறகு  சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. அதுவே வேறுவிதமாக முடிந்திருந்தால் ஆகா ஓகோ என்று இங்குவந்து கருத்துசொல்லியிருப்பீர்கள். அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அதற்குமேலே  இருந்த கருத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீங்கள் எதையும் சொல்லவேயில்லை ஆனால் இதை எழுதியபின் அடுத்த பக்கத்தில் அந்த கருத்து இருந்ததை கவனித்தேன்.

நீங்கள் கேட்ட கேள்வி இம்முறையும் ராஜபக்சேக்கள் வரவேண்டும் என்றுசொன்னவர்களுக்கானது. நான் அப்படி எதுவுமே சொல்லாததால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை. 

அதற்காக  2005இல் ராஜபக்சேவை ஜனாதிபதியாக வரச்செய்தது பிழையென புலிகள் போரில் மௌனித்தபிறகு  சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. அதுவே வேறுவிதமாக முடிந்திருந்தால் ஆகா ஓகோ என்று இங்குவந்து கருத்துசொல்லியிருப்பீர்கள். அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.

சரி, திரியைத் திசை திருப்பாமல் பதில் தர முனைகிறேன். அந்த 2005 முடிவு (அது குறித்து எனக்கு கருத்தெதுவும் இல்லை) அதன் விளைவுகள் உருவாகி 11 வருடங்களுக்குப் பின்னரும் "இராச தந்திரமான முடிவு தான்" என்று இன்னும் வாதாடும் ஒருவரிடம் தான் அதைக் கேட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அப்போது அவர்களுக்கிருந்த இருதெரிவுகளில் ஒன்றை தெரிவுசெய்தனர். அப்போது அவர்களுக்கு அதுசரியென தென்பட்டிருக்கலாம்.

நன்றி தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக விலகு-விஜய் சேதுபதிக்கு தொடரும் சிக்கல்!பகிரங்க வேண்டுகோள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பி பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவனை ஏன் சுட்டார்கள் விஜய் சேதுபதிக்குகேள்வி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. 

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/19155403/1985648/vijay-sethupathi-steps-out-from-800-movie.vpf

800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் - விஜய் சேதுபதிக்கு முரளிதரன் வேண்டுகோள்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. 
 
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர். 
 
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறது
 
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்
 
ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்ததோ. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
 
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை டக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு

800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு

சென்னை, 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

நெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வந்தனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.


800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விஜய் சேதுபதி இதற்கு விளக்கமளித்தார். அதில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் 800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும், நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.  தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முத்தையா முரளிதரன் மீண்டும் இந்த விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி... வணக்கம்... என விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/19153453/Vijay-Sethupathi-decides-to-quit-film-800.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரனின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக செயல்  உலகம் முழுக்க பரவ செய்த 800 படக்குழுவுக்கு நன்றிகள் .

#AntiTamilKalananithiMaran #GenocideSupporterMurali

சன்ரைஸ் பயிற்சியாளர் அங்கிருந்தும் ஆளை தூக்க சொல்லி தொடங்குகிறார்கள் காணமல் போனோரின் தாய் மாரின் சாபம் விடாது திரத்துகிறது .

இம்முறை மாறன் அரசியல் நொடி அனல் பறக்கும்  என்று எதிர்பார்க்கலாம் .

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளிதரன் கோரிக்கை- 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்

October 19, 2020
 
 
Share
 
 
1-58-696x348.jpg
 26 Views

‘ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்,தனது வாழ்கைப்படமான 800 திரைப்படத்தில் இருந்து விலகுமாறு விஜய்சேதுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டரில் ‘நன்றி, வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டது 800 திரைப்படம். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் சிங்களருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் விஜய்சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தம்முடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான 800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் அறிக்கையில் கூறி உள்ளதாவது:

“விஜய் சேதுபதிக்கு அழுத்தம் எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

விஜய்சேதுபதி விலக வேண்டுகோள் அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடுவதில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.

நிச்சயம் படம் வரும் இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அனைவருக்கும் நன்றி இந்த சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி விலகல், முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கை வெளியா உடனேயே இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார் நடிகர் விஜயசேதுபதி. மேலும் அந்த பதிவில் நன்றி வணக்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகியுள்ளது.

 

https://www.ilakku.org/முத்தையா-முரளிதரனின்-கோர/

18 minutes ago, பெருமாள் said:

முத்தையா முரளிதரனின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக செயல்  உலகம் முழுக்க பரவ செய்த 800 படக்குழுவுக்கு நன்றிகள் .


அத்துடன் சிலரின் உண்மை முகங்களையும் கண்டறிய உதவியது👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுக்கு மதிப்பளித்த வி.சே க்கு நன்றி.

இந்த பிரச்சனையை கண்ணியமாக கையாண்டது - முரளியை கொண்டே விலகும் முடிவை அறிவிக்க வைத்தது - வி.சே மீதான அபிமானத்தை கூட்டியுள்ளது.

சரி இப்போதான் வி.சே விலகி விட்டாரே? இவரை மறுபடியும் தமிழனாக சேர்த்துகொள்வோமா🤣

அல்லாட்டி இன்னும் தெலுங்கன்தானா🤦‍♂️

இந்த சர்சையால் ரெண்டு நல்ல விடயங்கள் நடந்தது.

1. முரளி எப்படி பட்ட சுயநலமி என்பதை உலகம் அறிந்து கொண்டது

2. சாதிய அடிப்படையில் தமிழன் என்று இனத்தூய்மை பேசும் அரசியல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது அப்பட்டமாகியுள்ளது.

ஆனால் இந்த படம் பாலிவுட்டில் இதை விட பெரிய அளவில் வரும் என நினைக்கிறேன்.

தம்பிகள் திரைசீலையை கிழிக்க தயாராகவும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விஐய் சேதுபதி, உங்களின் மன உலைச்சல்தான் கடந்த சில நாட்களாக எங்களுக்கும், இதுவும் கடந்து போகும், நல்லதொரு கலைஞன் இன்னும் வளர வாழ்த்துகள்

21 minutes ago, goshan_che said:

 

1. முரளி எப்படி பட்ட சுயநலமி என்பதை உலகம் அறிந்து கொண்டது

2. சாதிய அடிப்படையில் தமிழன் என்று இனத்தூய்மை பேசும் அரசியல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது அப்பட்டமாகியுள்ளது.

ஆனால் இந்த படம் பாலிவுட்டில் இதை விட பெரிய அளவில் வரும் என நினைக்கிறேன்.

தம்பிகள் திரைசீலையை கிழிக்க தயாராகவும்🤣

அதை புலம் பெயர் இன மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளவார்கள், சிங்கள கிந்திய தேசத்தைத் தவிர வேறு எங்கும் எடுக்கவிடமாட்டார்கள். 

எடுத்தாலும் பார்ப்பவர்கள் தமிழர்களா என யோசித்து பார்க்கட்டும்

இரண்டாவது விளங்கவில்லை விளங்கப்படுத்த முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.