Jump to content

பீர்க்கங்காய் தோலை இனி எறியாதீர்கள். சுவையான ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் தோல் சம்பல்...


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

5 hours ago, நிலாமதி said:

பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

முயன்று பாருங்கள். நிட்சயமாய் உங்களிற்கு பிடிக்கும். என் மகள் தனக்கு இந்த சம்பல் வேண்டும் என வாரத்திற்கு ஒருமுறை கேட்பாள். நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இந்த சம்பல் செய்து சாப்பிட்டதில்லை, வாங்கி செய்ய வேண்டும், நன்றி பகிர்வுக்கு.

என்னடா இந்த முறை கலாய்க்க முடியலையே என்று பார்த்தால்🤔 ஒன்றிருக்கு. பீர்க்கங்காய் உள்ளீட்டை என்ன செய்யனுமென்று சொல்லவில்லேயே😀

 நீங்கள் என்ன செய்தீர்கள் பால்கறியா குழம்பா?

இப்பதான் வீட்டில் விதை போட்டுள்ளேன் இனி இப்படியும் செய்து அசத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பகிர்விற்கு நன்றி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி நிகே.......!  👍

ஊரில் வீட்டுக்கு இரண்டு ஆடு, ஒரு மாடு (அக்கம் பக்கம் என்றாலும்) இருக்கும். அதனால் அதிகம் யாரும் இந்த மாதிரி பீர்க்கங்காய் தோல், வாழைக்காய் தோல் என்று மினக்கடுவதில்லை. கஞ்சி கழனியுடன் சேர்ந்து அவைகளுக்கு போயிடும்......!

ஒருநாள் எனது சதி (சதி பதி) சாப்பிடும்போது ஒரு குழம்பு கொண்டுவந்து ஊத்தினார். நல்லா இருக்கா என்று கேட்க நானும்... ம்....என்றேன்.   இது என்ன குழம்பு என்று சொல்லுங்கோ பார்ப்போம் என்றாள். நானும் ஏதேதோ சொல்ல இல்லை என்று சொல்லிவிட்டு தர்ப்பூசணி பழத்தில் தோலுக்கும் பழத்துக்கும் நடுவில் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியை துண்டுகளாக்கி குழம்பு வைத்திருக்கின்றா.....அப்போதுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிஞ்சுது இரண்டு நாளா மனிசி உருளைக்கிழங்கு முடிசுத்தப்பா வாங்கிக்கொண்டு வாங்கோ என்று கத்தினது.....ஆகவே தேவைகள்தான் மாற்றி யோசிக்கத்  தூண்டுகின்றது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு.இதே மாதிரி வாழைக்காய் தோலிலும் சம்பல் செய்யலாம்.
இப்டிக்கு
சுனா பினா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nige said:

 

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

ஊரில் இருக்கும் போது அதன் அருமை தெரியவில்லை பலருக்கு. அம்மா பருப்பும் போட்டு பால் கறி வைப்பார், நல்ல சுவை.சீனர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

முதுகு ஊத்தை தேய்க்க, பாத்திரம் கழுவ. குழுக்கி விளையாட, நல்ல சத்தம் வரும்😂

Link to comment
Share on other sites

On 11/10/2020 at 00:07, உடையார் said:

ஆகா இந்த சம்பல் செய்து சாப்பிட்டதில்லை, வாங்கி செய்ய வேண்டும், நன்றி பகிர்வுக்கு.

என்னடா இந்த முறை கலாய்க்க முடியலையே என்று பார்த்தால்🤔 ஒன்றிருக்கு. பீர்க்கங்காய் உள்ளீட்டை என்ன செய்யனுமென்று சொல்லவில்லேயே😀

 நீங்கள் என்ன செய்தீர்கள் பால்கறியா குழம்பா?

இப்பதான் வீட்டில் விதை போட்டுள்ளேன் இனி இப்படியும் செய்து அசத்தலாம்

கறிவைக்கலாம் என்று சொன்னதாய் ஞாபகம்.. என் அம்மாவும் உங்கள் அம்மாவைப் போல அதை பருப்பில போட்டு பால்கறிதான் செய்தவ. காய்ககும்போது எங்களிற்கும் அனுப்பி விடுங்கோ...நன்றி 

On 11/10/2020 at 01:37, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பகிர்விற்கு நன்றி..👍

நன்றி தோழர்

Link to comment
Share on other sites

On 11/10/2020 at 02:28, suvy said:

 நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி நிகே.......!  👍

ஊரில் வீட்டுக்கு இரண்டு ஆடு, ஒரு மாடு (அக்கம் பக்கம் என்றாலும்) இருக்கும். அதனால் அதிகம் யாரும் இந்த மாதிரி பீர்க்கங்காய் தோல், வாழைக்காய் தோல் என்று மினக்கடுவதில்லை. கஞ்சி கழனியுடன் சேர்ந்து அவைகளுக்கு போயிடும்......!

ஒருநாள் எனது சதி (சதி பதி) சாப்பிடும்போது ஒரு குழம்பு கொண்டுவந்து ஊத்தினார். நல்லா இருக்கா என்று கேட்க நானும்... ம்....என்றேன்.   இது என்ன குழம்பு என்று சொல்லுங்கோ பார்ப்போம் என்றாள். நானும் ஏதேதோ சொல்ல இல்லை என்று சொல்லிவிட்டு தர்ப்பூசணி பழத்தில் தோலுக்கும் பழத்துக்கும் நடுவில் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியை துண்டுகளாக்கி குழம்பு வைத்திருக்கின்றா.....அப்போதுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிஞ்சுது இரண்டு நாளா மனிசி உருளைக்கிழங்கு முடிசுத்தப்பா வாங்கிக்கொண்டு வாங்கோ என்று கத்தினது.....ஆகவே தேவைகள்தான் மாற்றி யோசிக்கத்  தூண்டுகின்றது.....!

சூப்பர். மனைவி என்றால் இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நான் எது தேவையென்றாலும் அதை உடனே வாங்குவதுண்டு. கணவர் அதை கண்டிக்காததால் எனக்கு அது ஒரு பிரச்சனையாய் தெரியவில்லை. வாரத்திற்கு நான்கு முறை shopping போவதுண்டு. அது எனக்கு பிடித்த விடயமும் கூட. Covid வந்ததுக்கு பிறகுதான் வாழ்க்கை பற்றிய பயமே ஆரம்பித்தது. இருப்பதை கொண்டு சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். எட்டு மாதமாக நான் கடைக்கே போனதில்லை. ஏன் வீட்டுபடி தாண்டியதில்லை. சிக்கனம் என்றால் என்ன என்பதை இப்போது நான் உணர்ந்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடிகிறேன் என்றால் உங்கள் மனைவியை நினைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. பெண்கள் எவ்வளவு சிக்கனமாய் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி....

 

Link to comment
Share on other sites

On 11/10/2020 at 14:23, சுவைப்பிரியன் said:

நன்றி பதிவுக்கு.இதே மாதிரி வாழைக்காய் தோலிலும் சம்பல் செய்யலாம்.
இப்டிக்கு
சுனா பினா.

நானும் செய்திருக்கிறேன். நன்றாக இருக்கும்.பதிவுக்கு நன்றி சுவைபிரியன்...

On 11/10/2020 at 17:37, குமாரசாமி said:

ஊரிலை பிசுக்கங்காயை  கனபேர் கணக்கெடுத்தும் பாக்கிறேல்லை.ஆனால் வெளிநாடுகளிலை வாங்கிறது பெரிய கஷ்டம். பிசுக்கங்காயிலை பால்க்கறிவைக்கவும் நல்லாயிருக்கும்.
சம்பல் செய்முறைக்கு நன்றி

ஆரும் பிசுக்கங்காய் பொச்சு பாவிச்சு இருக்கிறீங்களோ? 😁

100% Pure Castor Oil 16 oz - Best Massage Oil & Moisturizer for Hair and  Skin: Amazon.in: Home & Kitchen 

512pGiLhGSL.jpg

நான் இதை பாவித்திருக்கிறேன். எங்கள் வீட்டு வேலியில் நிறைய இருக்கும். பக்கத்தில் இருந்தபோது அதன் அருமை புரியவில்லை. இதுதான் உலகம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nige said:

சூப்பர். மனைவி என்றால் இருப்பதை வைத்து சமாளிக்க தெரிய வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். நான் எது தேவையென்றாலும் அதை உடனே வாங்குவதுண்டு. கணவர் அதை கண்டிக்காததால் எனக்கு அது ஒரு பிரச்சனையாய் தெரியவில்லை. வாரத்திற்கு நான்கு முறை shopping போவதுண்டு. அது எனக்கு பிடித்த விடயமும் கூட. Covid வந்ததுக்கு பிறகுதான் வாழ்க்கை பற்றிய பயமே ஆரம்பித்தது. இருப்பதை கொண்டு சமாளிக்கவும் கற்றுக்கொண்டேன். எட்டு மாதமாக நான் கடைக்கே போனதில்லை. ஏன் வீட்டுபடி தாண்டியதில்லை. சிக்கனம் என்றால் என்ன என்பதை இப்போது நான் உணர்ந்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடிகிறேன் என்றால் உங்கள் மனைவியை நினைக்க எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. பெண்கள் எவ்வளவு சிக்கனமாய் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்தமைக்கு நன்றி....

 

தெய்வமே! 
கொரோனா தெய்வமே! 
நன்றி சொல்வேன்... 
கொரோனா தெய்வமே! 
மனிசரை திருத்தி எடுப்பதற்கு.. 
நன்றி சொல்வேன் கொரோனா தெய்வமே..

😁

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

Link to comment
Share on other sites

On 13/10/2020 at 16:39, குமாரசாமி said:

தெய்வமே! 
கொரோனா தெய்வமே! 
நன்றி சொல்வேன்... 
கொரோனா தெய்வமே! 
மனிசரை திருத்தி எடுப்பதற்கு.. 
நன்றி சொல்வேன் கொரோனா தெய்வமே..

😁

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

😀😀😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.