Jump to content

“இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் கைப்பற்றப்பட்ட சஞ்சிகைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் “இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றில் நடைபெற இருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://thamilkural.net/newskural/news/80225/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு கொழுத்தா வளையில் தங்காது என்பது இதனா..?

* லவ் ஜிகாத்

* மதமாற்றம்

* இன பெருக்க வீதம் .?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

“இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் கைப்பற்றப்பட்ட சஞ்சிகைகள்!

தமிழர்களுக்கு கூட இலங்கையை தமிழ்நாடாக மாற்றும் எண்ணம் வரவேயில்லை.
திண்ணையில் ஒதுங்க இடம் விட்டால் இதுதான் பிரச்சனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் “இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றில் நடைபெற இருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://thamilkural.net/newskural/news/80225/

நானா... சும்மா இரிங்கவா.

நம்ப செல்ல வந்தது.... சவுதி மாதரி... எண்ண.... தோண்டி எடித்து... அத... உத்து.... சல்லி சம்பாதித்து.... நாட்ட.... அரேபிக்காரன் மாதிரி..... மிச்சம் சல்லி வைச்சீக்கிற நாடா மாத்திறை பத்தி.....

இவனுவளுக்கு வெளக்கம்.... நாட அப்படியே ..... இஸ்லாத்துக்கு தூக்கிட்டு பேத்திற மாதிரி....

இனி... என்ன செல்லேலும் வாப்பா..... இரிட்டில பாக்கிறவன் கண்ணுக்கு.... பாக்கிறதெல்லாமே...சைத்தான்... கத போலதானே ஈக்கு.. வாப்பா.... 😛

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

நானா... சும்மா இருங்கவா.

நம்ப செல்ல வந்தது.... சவுதி மாதரி... எண்ண.... தோண்டி எடித்து... அத... உத்து.... சல்லி சம்பாதித்து.... நாட்ட.... அரேபிக்காரன் மாதிரி..... மிச்சம் சல்லி வைச்சீக்கிற நாடா மாத்திறை பத்தி.....

இவனுவளுக்கு வெளக்கம்.... நாட அப்படியே ..... இஸ்லாத்துக்கு தூக்கிட்டு பேத்திற மாதிரி....

இனி... என்ன செல்லேலும் வாப்பா..... இரிட்டில பாக்கிறவன் கண்ணுக்கு.... பாக்கிறதெல்லாமே...சைத்தான்... கத போலதானே ஈக்கு.. வாப்பா.... 😛

நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.

கிண்டலா.... அனங், மணங்...பேச வேணாம் ஜீட்....நாணா. 🤨

நம்ம பேச்சே.... அயித்தானேவா..... 😛

நம்ம டாம் ஸரீட் பஜார் பெடியன்மாருவா.... நபீசா ஓட்டல்ல, ஆசிக்கா.... ரொட்டியும்.... ரோஸ் பீவ்வும் துன்னு வளர்ந்த ஆளுவா.... 😁

நம்ம, ரா(க்)மன் கத படிச்சீங்களாவா,

நம்ம தெமட்டகொட கூட்டாளி சசி வர்ணம் நானா கிட்ட கேளுங்கவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.

என்ன பொருளாதார அபிவிருத்தி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

என்ன பொருளாதார அபிவிருத்தி ?

கற்பகத்தார்! காத்தான்குடி பேரீச்சம்பழ அபிவிருத்தியைத்தான் சொல்லுறார் எண்டு நினைக்கிறன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கற்பகத்தார்! காத்தான்குடி பேரீச்சம்பழ அபிவிருத்தியைத்தான் சொல்லுறார் எண்டு நினைக்கிறன்😎

அப்ப  பேரீச்சம் பழ  வியாபாரத்தில் பில்லியன்கணக்கில் வருமானம் வரப்போகுது என்று கற்பகத்தரு சொல்ல வருகிறார் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் இனவாத கருத்து... சர்ச்சைக்குள்ளான ஜமாலியா அரபுக் கல்லூரி விவகாரம் குறித்து உண்மை இதுதான் என விளக்குகிறார் மத்ரசா அதிபர் சம்சுதீன் .

தொகுப்பு: முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்) 

அநுராதபுரம், ஹெட்டுவெவ அரபுக் கல்லூரி பற்றி அண்மையில் சிங்கள ஊடகங்கள்

மூலம் வெளியான தவறான செய்தி பற்றிய உண்மைத்தன்மை தொடர்பில், அரபுக் கல்லூரியின் அதிபர் சம்சுதீன் தெரிவிக்கின்றார்.

அநுராதபுர மாவட்டம், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஹெட்டுவெவ கிராமத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஜமாலியா அரபுக் கல்லூரியானது இந்த ஆண்டு தனது 25 வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவையும் கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழாவையும் கடந்த 11.10.2020 அன்று நடாத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதோடு அவ்விழாவில் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர்களின் வாழ்த்துச்செய்திகள், அதிதிகளின் வாழ்த்துச்செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கி 'வெள்ளிவிழா சிறப்பு மலர்' எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. 

இதற்கிடையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது நாட்டில் மீண்டும் பரவியதை அடுத்து 06.10.2020 அன்று சுகாதார அமைச்சினால்

நாட்டில் களியாட்ட நிகழ்வுகள், தனியார் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற ஒன்று கூடல் என்பனவற்றுக்கு மறு அறிவித்தல் வரை தடைவிதித்தது.

இதையடுத்து ஜமாலியா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் ஏழாவது பட்டமளிப்பு விழாவையும் கல்லூரி நிர்வாகத்தால் நாட்டின் சூழ்நிலையைக் கருதி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த விழாவில் வெளியிட தீர்மானித்த சஞ்சிகையானது மிஹிந்தலை நகரில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் அச்சுப்பதிப்புக்காக வழங்கப்பட்டிருந்தது, குறித்த வேலை நடைபெறும் போது அங்கே பணிபுரியும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரால் அரபு எழுத்தணியில் இலங்கை வரைபட உருவில் வரையப்பட்ட ஆக்கம் ஒன்றை அவதானிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இலங்கை முழுவதையும் அரபு நாடாக மாற்றப்பார்க்கின்றார்கள் எனக்கருதி தவறான புரிதலின் அடிப்படையில் இது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் 09.10.2020 அன்று முறையிட்டுள்ளனர்

இதையடுத்து மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த அச்சகத்தை நாடி ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த அச்சகத்தின் உரிமையாளர் கஹடகஸ்திகிலிய பிரதேசதில் அமைந்துள்ள ஜமாலியா அரபுக் கல்லூரியினால் அச்சுப்பதிப்புக்காக வழங்கப்பட சஞ்சிகை என தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த அரபுக் கல்லூரி நிருவாககத்திற்கு மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக அழைப்பு விடுக்கப்பட்டு கல்லூரி அதிபர், செயலாளர் உள்ளிட்ட நிரவாகத்தை பொலிசாரால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர். 

குறித்த விசாரணையின் போது அரபு எழுத்தாணி என்பது ஓர் கலை என்றும், அது நாம் எமது விருப்பத்திற்கமைய அரபு எழுத்துக்களை கொண்டு வரைதல் ஆகும், இதில் வேறு எதுவிதமான மறைமுக கருத்தக்களும் இல்லை என்பதனை மத்ரசா நிர்வாகம் பொலிசாருக்கு தெளிவுபடுத்தினர்

இதையடுத்து குறித்த 'அரபு எழுத்தாணி' கலை பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக ஒரு கடிதத்தினை பெற்றுத்தருமாறு, பொலிசாரால் அரபுக் கல்லூரி நிருவாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

மேலும் பொலிசார் குறித்த சஞ்சிகை அச்சுப்பதிப்பு செய்யும் அச்சகத்திற்கும் கல்லுரியின் நிர்வாகத்திற்கும் அவ் சஞ்சிகையின் சர்ச்சைக்குரிய வரைபடம் தொடர்பில் முழுமையான விசாரணை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். 

இதனையடுத்து 10.10.2020 அன்று கல்லூரி நிர்வாகத்தால் குறித்த விடயம் சம்மந்தமாக, முஸ்லிம்கள் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன், அரபுக் கல்லூரி நிருவாகம் தொடர்புகொண்டு பிரச்சினையை தெளிவுபடுத்திய பின்னர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கடிதத்தினை தொலைநகல் மூலம் வழங்குவதற்கு திணைக்களம் இணக்கம் தெரிவித்தது, 14.10.2020 அன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

 

இதையடுத்து 14.10.2020 மாலை மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு ஜமாலியா அரபுக் கல்லூரி நிர்வாகத்தை வரவழைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த சஞ்சிகையை முழுமையாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு அதில் வேறு ஏதேனும் முரண்பாடுகள் உள்ளனவா என முழுமையாக ஆராய்ந்த பின்னரே சஞ்சிகையினை அச்சுப்பதிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவும், வெளியிடவும் முடியும் என இறுதியாக உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை இப்பிரச்சினையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பல தமிழ், சிங்கள ஊடகங்கள் உண்மை நிலையை கண்டறியாது, இலங்கையை அரபு நாடாக மாற்றுவது தொடர்பிலான சஞ்சிகை ஒன்று வெளியிட குறித்து கல்லூரி தீர்மானித்திருந்தாகவும், அந் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், அப்பட்டமான பொய்களை உள்ளடக்கி நாளுக்கு நாள் செய்திகளை வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Racism-Against-Jamaliya-Arabic-College-Anuradhapura-2.jpg

https://yarl.com/forum3/topic/249061-“இலங்கையை-அரேபியாவாக-மாற்றுவோம்”-என்ற-தலைப்பில்-கைப்பற்றப்பட்ட-சஞ்சிகைகள்/?tab=comments#comment-1487110

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Racism-Against-Jamaliya-Arabic-College-Anuradhapura-2.jpg

சீனா காரன் கண்ணில் இது பட்டால் 
அரபு எண்ணையை குறைந்த விலையில் 
அல்லாஹ்வின் பெயரில் இறக்க திட்டம் வகுத்து கொடுப்பான்
அதே நேரம் உள் ஊரில்  வெளி காயம் தெரியாமல் எப்படி போட்டு 
குத்துவது என்றும் சொல்லி கொடுப்பான். அவன் கண்ணில் படாமல் 
பார்ப்பதுதான் இலங்கை முசுலீம்களுக்கு நன்று 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.