Jump to content

வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு - Vanakkam London

வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு!

வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்றிருந்த வேளை, பாதசாரி கடவையைக் கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் சிறுவனை மோதியுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லண்டன் கேய்ஸ் (Uxbridge Road, Hayes,Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவரும் சசிகரன் அகர்வின் (வயது-4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உலக செய்திகள் Archives - No.1 Tamil website in the world | Tamil News |  News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines,  Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI

http://athavannews.com/வவுனியாவை-சேர்ந்த-சிறுவன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடயம், கவனமாக கடக்க வேண்டும் சிக்கனல்களை, சில வாகன ஓட்டிகள் என்ன நிலையில் வருகின்றார்களென்று நமக்கு தெரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான சம்பவம்! எனக்கு மிகவும் தெரிந்தவர்கள்😭. வாகன ஓட்டிகள் தன் பாதுகாப்பை விட எதிரே வருபவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Driving is a serious job என்னும் நிஜத்தினை புரியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, புரிய வேண்டிய நிஜம்:

ஒரு கண கவனக்குறைவு.... சிறைக்கு இழுத்து செல்லும்.

சிறுவனுக்கு அஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு செய்தியில் தாயரை விட்டு தனியாக நடு வீதியில் இறங்கியதால் விபத்து ஏற்பட்டதாகக குறிப்பிட்டிருந்தார்கள்.ஆனாலும் பாவம் குழந்தைப் பிள்ளை.அந்தக் குடும்பதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரின் கவலையீனம் போல உள்ளது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனுக்கு அஞ்சலி.

தெருக்களில் செல்லும் போது பெற்றோர் பிள்ளைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது பிழையான இடத்தில பிழையான தருணத்தில் இருப்பது என்பது. தாய் மற்ற குழந்தையை Pushcart இல் தள்ளிக்கொண்டு இந்த சிறுவனுடன் நடந்து வந்து க்ரோசிங் லைட்டை அமத்தும்போது சிறுவன் தெருவில் காலடி வைத்துவிட்டார். அதே நேரத்தில் வாகனமும் வந்துவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் .....! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.