Jump to content

நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்!

October 12, 2020
56C174E3-2670-403B-BECB-53795393A393-114

எனது சிறைவாசத்திற்கு ஐந்து வருடங்கள். நல்லாட்சி தந்த பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

8911C143-B76E-4C1F-9BA7-B4E0EEF3BE4F-200
முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் மேற்கண்டவாறு தனது உள்ளக்குமுறலை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

11.10.2020ம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு ஐந்து வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம்.

அத்தோடு எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தை உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

 

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில், சிறைக்கு நயவஞ்சகமாக அனுப்பப்பட்டேன். இருந்தாலும், என் மேல் நம்பிக்கை வைத்து, அனைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து, வட கிழக்கில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய 54198 விருப்பு வாக்குகளை அளித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.meenagam.com/?p=15571

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

201712131207570931_children-thumb-suckin

அதென்னமோ போங்கப்பா ..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையான் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

 
IMG_8163-696x392.jpg
 25 Views

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்திற்கு சந்திகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டத்தரணிகள் வராத காரணத்தினால் வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

IMG_8160.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி  மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணையில் தடுத்துவைக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/ஜோசப்-பரராஜசிங்கம்-படுகொ/

Link to comment
Share on other sites

12 minutes ago, Robinson cruso said:

அப்பாவிகளை சிறையிலடைப்பது இங்கு தொடர்கதையாகவே இருக்கிறது. பாவம் பிள்ளையான்.

உங்களுக்கு கொலைகாரரை தெரியும் போலுள்ளது.  எங்களுடன் பகிரலாம். சட்டம் ஒரு இருட்டறை என சொல்ல வருகிறீர்கள் என நினக்கிறேன்.

Link to comment
Share on other sites

2 minutes ago, nunavilan said:

உங்களுக்கு கொலைகாரரை தெரியும் போலுள்ளது.  எங்களுடன் பகிரலாம். சட்டம் ஒரு இருட்டறை என சொல்ல வருகிறீர்கள் என நினக்கிறேன்.

இதெல்லாம் ஊரறிந்த ரகசியம். எனவே எல்லோருக்கும் எல்லாம் தெரியும். ஆமாம், சடடம் ஒரு இருட்டறைதான்.

Link to comment
Share on other sites

இன்னுமொரு தியாகி இனிய பாரதி அவர்கள் இப்ப எங்கு (எந்த சிறையில்) இருக்கின்றார்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பிள்ளை

அது இன்னும் கை  விரல்  சூப்புவதையே மறக்கல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இன்னுமொரு தியாகி இனிய பாரதி அவர்கள் இப்ப எங்கு (எந்த சிறையில்) இருக்கின்றார்?
 

 

3 hours ago, விசுகு said:

பாவம் பிள்ளை

அது இன்னும் கை  விரல்  சூப்புவதையே மறக்கல...

வந்தாறுமூலையில் எனது உறவினர்கள் இருக்கிறார்கள் 
அவர்கள் மட்டுமே எனக்கு கிழக்கில் உறவினர்கள் என்று இருப்பது 
அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து புலிகளின் ஆதரவாளர்கள் 
அவர்கள் இளைய மகன் புலிக்கு போக போகிறார் என்று பயந்து 
எ ல் டெஸ்ட் முடிய மருதங்கேணியில் கொண்டு வந்து விட்டார்கள் 
அப்போது நல்ல நண்பர்களாக பழகிவந்தோம் இங்கு அப்போது ஹிந்திய 
இராணுவத்துடன் சண்டை தொடங்கியதால் புலிகள் தலைமறைவாகி இருந்தனர் 
ஆதாலால் எல்லோருக்கும் இந்திய இராணுவம் பிடிக்கும் என்ற அச்சம் தவிர்த்து மகிழிச்சி 
இனி இவர் புலிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை ஆகவே புலிகளுடன் சேர மாட்டார் என்று 
ஆனால் ஒரு நாள் மாலை அவர் காணாமல் போயிருந்தார் மறுநாள் நன் புலிகளின் 
மறைவு இடத்துக்கு சென்று கேட்டேன் அவர்கள் ஆம் அவர் வந்ததில் இருந்து எமக்கு 
வேலை செய்துகொண்டுதான் இருந்தவர் இப்போது பயிற்சிக்காக சென்றுவிட்டார் என்று.

பின்பு 90 களில் அரசியல்துறை கரிகாலனின் மெய்ப்பாதுக்காப்பாளராக இருந்தார் 
அப்போது ஒருமுறை யாழ் வந்துஇருந்தார் இவரை புலிகளின் நாவலடி வீதியில் இருந்த 
புலிகளின் தலைமை முகாமில் சந்தித்தது இருந்தேன் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது 
பல தாக்குதல்களை தலைமைதாங்கி செய்து இருந்தார் அதனால் கருணாவால் முக்கிய தளபதியாக்க பட்டு 
எல்லோராலும் அறியப்பட்டு இருந்தார் பின்பு இவர்களின் குழு ஒன்று இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு 
இவர் அவர்களை மீட்க சென்று சண்டை பிடித்து அதில் இறந்துபோனார் 

பின்பு கருணா துரோகியாகிய பின் 2007இல் இனியபாரதி இவர்கள் வீட்டுக்கு 
மோட்டார் சைக்கிளில் வந்து இவரது அண்ணாரை வாசலில் வைத்து சுட்டார் 
அவர்தான் மொத்த குடும்பத்தையும் பார்த்து வந்தவர் மிகவும் வறுமையில் இருந்தார்கள் 
அவருக்கு இவர்களை  நன்கு தெரியும் அவர்கள் வீட்டுக்கு கருணா கூட வந்து போயிருக்கிறார் 
பல போராளிகள் வந்து சாப்பிடுவது வழமையான ஒன்று அப்படி இனியபாரதி பலமுறை வந்து 
சாப்பிட்டு போயிருக்கிறார் ... இனியபாரதி இவர்களின் நண்பர்போல பக்கத்துவீட்டு அண்ணர் ஒருவர் 
இவர்கள் மூலம் இனியபாரதியை அறிமுமாக்கி கொண்டவர் ... அவர் இனியபாரதி சுடாதே சுடாதே 
என்று ஓடிவந்து கொண்டிருக்கும்போது அவரையும் சுட்டுவிட்டு சென்றார் 

இன்றுவரை யாருக்கும் தெரியாது ஏன் வந்து சுட்டுவிட்டு போனார் என்று 
இரண்டு உயிர்களை அநியாயமாக பலியெடுத்து போனார் எனக்கு தெரிய 
இன்னமும் எத்தனை கதைகள் முன்னாள் போராளிகள் வீட்டுக்களில் மட்டுவில் 
இருக்கும் என்பது அவர்கள் சொன்னால்தான் தெரியும். 

Link to comment
Share on other sites

எந்த கொலைகாரன் தன்னை ஒத்துக்கொண்டுள்ளான் , வாக்கு போட்ட மக்களை சொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

 

வந்தாறுமூலையில் எனது உறவினர்கள் இருக்கிறார்கள் 
அவர்கள் மட்டுமே எனக்கு கிழக்கில் உறவினர்கள் என்று இருப்பது 
அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து புலிகளின் ஆதரவாளர்கள் 
அவர்கள் இளைய மகன் புலிக்கு போக போகிறார் என்று பயந்து 
எ ல் டெஸ்ட் முடிய மருதங்கேணியில் கொண்டு வந்து விட்டார்கள் 
அப்போது நல்ல நண்பர்களாக பழகிவந்தோம் இங்கு அப்போது ஹிந்திய 
இராணுவத்துடன் சண்டை தொடங்கியதால் புலிகள் தலைமறைவாகி இருந்தனர் 
ஆதாலால் எல்லோருக்கும் இந்திய இராணுவம் பிடிக்கும் என்ற அச்சம் தவிர்த்து மகிழிச்சி 
இனி இவர் புலிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை ஆகவே புலிகளுடன் சேர மாட்டார் என்று 
ஆனால் ஒரு நாள் மாலை அவர் காணாமல் போயிருந்தார் மறுநாள் நன் புலிகளின் 
மறைவு இடத்துக்கு சென்று கேட்டேன் அவர்கள் ஆம் அவர் வந்ததில் இருந்து எமக்கு 
வேலை செய்துகொண்டுதான் இருந்தவர் இப்போது பயிற்சிக்காக சென்றுவிட்டார் என்று.

பின்பு 90 களில் அரசியல்துறை கரிகாலனின் மெய்ப்பாதுக்காப்பாளராக இருந்தார் 
அப்போது ஒருமுறை யாழ் வந்துஇருந்தார் இவரை புலிகளின் நாவலடி வீதியில் இருந்த 
புலிகளின் தலைமை முகாமில் சந்தித்தது இருந்தேன் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது 
பல தாக்குதல்களை தலைமைதாங்கி செய்து இருந்தார் அதனால் கருணாவால் முக்கிய தளபதியாக்க பட்டு 
எல்லோராலும் அறியப்பட்டு இருந்தார் பின்பு இவர்களின் குழு ஒன்று இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு 
இவர் அவர்களை மீட்க சென்று சண்டை பிடித்து அதில் இறந்துபோனார் 

பின்பு கருணா துரோகியாகிய பின் 2007இல் இனியபாரதி இவர்கள் வீட்டுக்கு 
மோட்டார் சைக்கிளில் வந்து இவரது அண்ணாரை வாசலில் வைத்து சுட்டார் 
அவர்தான் மொத்த குடும்பத்தையும் பார்த்து வந்தவர் மிகவும் வறுமையில் இருந்தார்கள் 
அவருக்கு இவர்களை  நன்கு தெரியும் அவர்கள் வீட்டுக்கு கருணா கூட வந்து போயிருக்கிறார் 
பல போராளிகள் வந்து சாப்பிடுவது வழமையான ஒன்று அப்படி இனியபாரதி பலமுறை வந்து 
சாப்பிட்டு போயிருக்கிறார் ... இனியபாரதி இவர்களின் நண்பர்போல பக்கத்துவீட்டு அண்ணர் ஒருவர் 
இவர்கள் மூலம் இனியபாரதியை அறிமுமாக்கி கொண்டவர் ... அவர் இனியபாரதி சுடாதே சுடாதே 
என்று ஓடிவந்து கொண்டிருக்கும்போது அவரையும் சுட்டுவிட்டு சென்றார் 

இன்றுவரை யாருக்கும் தெரியாது ஏன் வந்து சுட்டுவிட்டு போனார் என்று 
இரண்டு உயிர்களை அநியாயமாக பலியெடுத்து போனார் எனக்கு தெரிய 
இன்னமும் எத்தனை கதைகள் முன்னாள் போராளிகள் வீட்டுக்களில் மட்டுவில் 
இருக்கும் என்பது அவர்கள் சொன்னால்தான் தெரியும். 

கருணாவின் பிளவின் மட்டக்களப்பு கருணா ஒபீஸ் 
சிசிலியா பாடசாலைக்கு பின்புறம் இருந்தது  அந்த கட்டிடத்துடன்  ஒட்டியிருந்த  பாடசாலை கட்டிடத்தில் தான் என்னுடைய தங்கை (சித்தியின் மகள்) உ.த படித்துக்கொண்டிருத்தவர்  , அங்கு கேட்க்கும் சத்தங்களை ஒவ்வொரு நாளும் என்னுடைய சித்தியிடம் சொல்லி அழுவார்  , இயற்கையாகவே மென்மையான இதயம் கொண்டவர் , ஆண்களும் பெண்களும் வலி தாங்காமல் உச்சஸ்தாயியில் கீறிட்டு கத்தும் அவலக்குரல்கள் தாங்காமல் இறுதியாக சிசிலியா பாடசாலை அந்த கருணா ஆபீஸ் காலியாகும்வரை எந்த வகுப்பையும் அந்த கட்டிடத்தில் அனுமதிக்கவில்லை   ,
இனிய பாரதி அடுத்த கட்டப்பஞ்சாயத்து  கேடி , பெண்கள் விவகாரத்தில்  சொல்லவேதேவையில்லை 
ஒரு ஜுனியர் ஹிட்லர் எதிரே நிற்பவரின் தகுதி தராதரம் பார்க்காது மிதி விழும் 

29 minutes ago, பிரபாதாசன் said:

எந்த கொலைகாரன் தன்னை ஒத்துக்கொண்டுள்ளான் , வாக்கு போட்ட மக்களை சொல்லவேண்டும்

ஆனால் இப்படியான கொடூரர்களையும் ,மனித குல எதிரிகளை நம்பினால் தான்  ஏதாவது தேறும் என்ற நிலைக்கு கிழக்கு  மக்களை கொண்டுவந்த ஏக பெருமை கூத்தமைப்பு தேசிக்காய்களையே சாரும் 
ஆகவே மக்களை நோவதை விடுத்து தேசிக்காய்களை நோவுங்கள்  

Link to comment
Share on other sites

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அங்கு கேட்க்கும் சத்தங்களை ஒவ்வொரு நாளும் என்னுடைய சித்தியிடம் சொல்லி அழுவார்  

அக்னி,

பிள்ளையான் தலைமையின் கீழ் இவரும் இவருடைய சகாக்களும் தான் தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்களை கடத்தி படுகொலை செய்ததாக பின்னாளில் டி  பி எஸ் என்பவரே ,முழுவிபரத்துடன் கொட்டித்தீர்த்தார். பிரமினி என்ற பெண் தொண்டரை கட்பளித்து இவர் கொலைசெய்தார் என்ற விபரம் அதில் உள்ளது. எனவே நீங்கள் சொல்வது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. நீங்கள் கொல்லவில்லை.. நீங்கள் வைத்திருந்த ஆயுதம் கொன்றது. அந்த ஆயுதத்தை தந்தவர்கள் கொன்றார்கள். அந்த ஆயுதத்தை இயக்க தூண்டியவர்கள் கொன்றார்கள். அந்த ஆயுதத்தை அப்படி அங்கு இயக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள்... செயற்படுத்தியவர்கள் எல்லாமே சேர்ந்து தான் கொன்றார்கள்.

அப்படி என்றால்.. உங்களை.. உங்கள் ஆயுதத்தை அப்படி இயக்க தூண்டியவர்கள்.. திட்டமிட்டவர்கள் யார் என்பதைச் சொல்லலாமே.

சொன்னால்.. எம் பி பதவி மட்டுமல்ல.. உங்கள் உயிரும் பறிபோகலாம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

89/90ம் ஆண்டு பார் வீதியில் அமைந்துள்ள புலிகளது முகாமில் இரவு 12 மணிக்கு பிறகு அலறல் சத்தம் கேக்கும் ...ஆமி மட்டுவை கைப்பற்றி வந்தவுடன் அந்த முகாமில் குறிப்பிட்ட இரு அறைகள் [சித்திரவதைக்கு கூடம்] அருகில் இருந்த மக்களை கூப்பிட்டு காட்டினார்கள். கொடூரம் 
இனியபாரதி செய்தால் என்ன ? பிள்ளையான் செய்தால் என்ன? அடிப்படை எங்கிருந்து வந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மான் கிழக்கு பகுதியில் உளவு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததில் தவறில்லை என்பது நிரூபணமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

89/90ம் ஆண்டு பார் வீதியில் அமைந்துள்ள புலிகளது முகாமில் இரவு 12 மணிக்கு பிறகு அலறல் சத்தம் கேக்கும் ...ஆமி மட்டுவை கைப்பற்றி வந்தவுடன் அந்த முகாமில் குறிப்பிட்ட இரு அறைகள் [சித்திரவதைக்கு கூடம்] அருகில் இருந்த மக்களை கூப்பிட்டு காட்டினார்கள். கொடூரம் 
இனியபாரதி செய்தால் என்ன ? பிள்ளையான் செய்தால் என்ன? அடிப்படை எங்கிருந்து வந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை 

சரியாக இரவு 12 மணிக்கா அல்லது 11.59 ற்கா? தெளிவாகக் கூறுங்கள். 😏

பிழைகளை ஒத்துக்கொள்ள ( அது யாராக இருந்தாலும்) நேர்மை வேண்டும். நேர்மையைவிட நெஞ்சுரம் மிக மிக  அதிகமாகத் தேவை. 👍

என்னைவிட அவன்தான் பெரிய கள்ளன் என்று கூறுவது இழிநிலையின் உச்சம். ☹️

உங்களின் கருத்திற்கு துல்பனின் Like வேறு 😏

வட மாகாணத்தை விட்டு வெளியேற பாஸ் Pass கொடுக்காதபடியால் புலிகளை எதிரியாகக் கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன். 😂

துல்பன் நீங்கள் எப்படி 😂

 

16 hours ago, puthalvan said:

அக்னி,

பிள்ளையான் தலைமையின் கீழ் இவரும் இவருடைய சகாக்களும் தான் தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்களை கடத்தி படுகொலை செய்ததாக பின்னாளில் டி  பி எஸ் என்பவரே ,முழுவிபரத்துடன் கொட்டித்தீர்த்தார். பிரமினி என்ற பெண் தொண்டரை கட்பளித்து இவர் கொலைசெய்தார் என்ற விபரம் அதில் உள்ளது. எனவே நீங்கள் சொல்வது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை 

பிரேமினி த.பு. கழகத்தின் கணக்காளராக இருந்தவர். எனது நண்பனின் மைத்துனர். 😢

பாலியல் வல்லுறவையும் புலிகளே கற்றுக் கொடுத்தார்கள் என்று இரதி அக்கா  கூறாதவரைக்கும் மகிழ்ச்சிதான். 😤

நந்தவனத்திலோராண்டி.. அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி..

கொண்டு வந்தான் ஒரு தோண்டி..

அதை மெத்த..

கூத்தாடி கூத்தாடிப்...

போட்டுடைத்தாண்டி.. 

😭😭😭

 

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

பிரேமினி த.பு. கழகத்தின் கணக்காளராக இருந்தவர். எனது நண்பனின் மைத்துனர். 😢

ஐயோ அப்படியா..அதில் இறந்த கணேஷலிங்கம் எங்களுக்கு தெரிந்தவர். இவர்கள் வந்த வாகனத்துக்கு முதல் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் என்னுடன் கூடவே தொண்டர்களாக புலம்பெயர்நாடுகளில் வேலை செய்தவர்கள்.  கணேஷலிங்கம் மற்றும் பிரேமினி, தோஷினி கடத்தப்பட்டு சொட்பநேரத்தில் எனக்கு அலைபேசி எடுத்து சொன்னவர் என்னுடன் கூட்டாக புனர்வாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் ஒரு இளையோர் அதுவும் பெண், பிரேமினி, தோஷிணியோடு அங்கு சென்றபோது வேலைசெய்தவர்கள் . அவர் அலைபேசி எடுக்கும்போது நான் ஆழ்த்த உறக்கத்தில் இருந்தேன். அலைபேசி எடுத்தவரும் கலவரமாக ஆனால் மென் குரலில் தங்களுடன் வந்த வாகனத்தை கடத்திவிடார்கள் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இலங்கை புலனாய்வு அலைபேசியை ஒட்டுகேக்கக்கூடும் என்ற பயத்தில் தான் அவர்கள் இணைப்பை துண்டித்திருந்தார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

நான் தூக்கத்தில் இருந்து இன்னும் மீளாதநிலையில் இவரும்  கடத்தல்காரர் வசம் மாட்டிக்கொண்டுவிட்டாரா என்று அதிர்ந்துபோனேன். உடனடியாக பலமுறை முயற்றிசெய்து ஒருவாறு மீண்டும் தொடர்பை சிலநிமிடங்களில் எட்படுத்தி விபரங்களை அறிந்து இவர்களை  கொழும்பு அலுவலகத்துடன் இணைந்து பாதுகாப்பான இடத்தில அன்றிரவு தங்கவைத்துவிட்டு உடனடியாக இராஜதந்திர வடாரங்களுக்கு தெரியப்படுத்தினோம். பொலநறுவை/வேலிகந்த பகுதிகளில் அன்று கருணா/பிள்ளையான்/புலனாய்வு ஆதிக்க பகுதியென்பதால் இராஜதந்திர வடாரங்களும் அரச தரப்புடன் தொடர்புகொண்டார்கள். நாங்களும் பல்வேறு சர்வேதேச அமைப்புகள் ஊடாக தொடப்புகளை எட்படுத்தி அழுத்தம் கொடுத்தோம். 3 பேரை மட்டும் மீட்க முடிந்தது. அந்த நாட்களை நினைத்தால் ..😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

சரியாக இரவு 12 மணிக்கா அல்லது 11.59 ற்கா? தெளிவாகக் கூறுங்கள். 😏

பிழைகளை ஒத்துக்கொள்ள ( அது யாராக இருந்தாலும்) நேர்மை வேண்டும். நேர்மையைவிட நெஞ்சுரம் மிக மிக  அதிகமாகத் தேவை. 👍

என்னைவிட அவன்தான் பெரிய கள்ளன் என்று கூறுவது இழிநிலையின் உச்சம். ☹️

உங்களின் கருத்திற்கு துல்பனின் Like வேறு 😏

வட மாகாணத்தை விட்டு வெளியேற பாஸ் Pass கொடுக்காதபடியால் புலிகளை எதிரியாகக் கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன். 😂

துல்பன் நீங்கள் எப்படி 😂

 

பிரேமினி த.பு. கழகத்தின் கணக்காளராக இருந்தவர். எனது நண்பனின் மைத்துனர். 😢

பாலியல் வல்லுறவையும் புலிகளே கற்றுக் கொடுத்தார்கள் என்று இரதி அக்கா  கூறாதவரைக்கும் மகிழ்ச்சிதான். 😤

நந்தவனத்திலோராண்டி.. அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி..

கொண்டு வந்தான் ஒரு தோண்டி..

அதை மெத்த..

கூத்தாடி கூத்தாடிப்...

போட்டுடைத்தாண்டி.. 

😭😭😭

 

நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .


நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .


நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

இரதி கப்பித்தான் மாதிரி வாதிட முடியாவிடின் வாதிடாமலிருக்கலாம் அதைவிட்டுவிட்டு வால் நூல் என்றெல்லாம் கதைப்பது கருத்துப்பஞ்சத்தை காட்டுகிறது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

1) நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் .

2) உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...

3) மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...

4) இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு

5) ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .


நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

1) பிழைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராயுள்ள நீங்கள் எதற்கு மேலே கொலைகளை நியாயப்படுத்துகிறீர்கள். ஆகக் குறைந்தது பதிலளிக்காமலாவது இருந்திருக்கலாம்

2) என்னை வால் என்று நினைவூட்டியதற்கு நன்றி. இதுவரை நான் தலையோ என்று சந்தேகம் எனக்குள் இருந்து வந்தது. 

ஆனாலும் ..

எலிக்கு தலையாய் இருப்பதைவிட புலிக்கு வாலாயிருப்பது பெருமை என எண்ணுகிறேன். (நீங்கள் எப்படி 😀)

3) முரளீதரனும் அவர் ஆட்களும் செய்த படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் சிறிய பிழைகளா உங்களுக்கு ? அதுவும் வடபகுதியைச் சேர்ந்தவர்கள், போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் என்பதற்காக ☹️

4) என்ன.. நீங்கள் சுற்றுவது கொஞ்சம் பெரிய சட்டி. நான் சுற்றுவது கொஞ்சம் சிறிய சட்டி. அவ்வளவும்தான் வித்தியாசம். உலகத்தைக் கட்டியாண்டவர்களின் தேசத்திலிருப்பதால் உங்களுக்கு உலகம் தெரியும் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். 😀

5) அப்படியென்றால் என்ன செய்யலாம். கொட்டாபயவின் காலடியில் போய் விழலாம் என்கிறீர்களா ? எனக்கு முள்ளந்தண்டு வளைந்து கொடுக்காது அக்கா. எதுக்கும் எப்படி காலில் விழுவது என்று முரளீதரனிடம் கேட்டுச் சொல்லுங்கள். முயன்று பார்க்கிறேன். 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உங்களின் கருத்திற்கு துல்பனின் Like வேறு

யாழ் இணைய உறுப்பிர் ஒருவருக்கு தான் விரும்பிய கருத்துக்கு லைக் போட கூட உரிமை இல்லையா ?மற்றவர்கள் மீது ஏதோச்சதிகாரம் செய்யும் சிந்தனையை எங்கிருந்து பெற்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

யாழ் இணைய உறுப்பிர் ஒருவருக்கு தான் விரும்பிய கருத்துக்கு லைக் போட கூட உரிமை இல்லையா ?மற்றவர்கள் மீது ஏதோச்சதிகாரம் செய்யும் சிந்தனையை எங்கிருந்து பெற்றீர்கள்

ஏனையா ....கற்பனைக்கு அளவு வேண்டாமா 😂

எதேச்சதிகாரம்.... 🤥

அவர் தாராளமாக Like போடலாம். அதனை மறுதலிக்க எனக்கு எந்தவித உரிமையும் இல்லைத்தான்.  ஆனால் எதற்கு Like போடுவது என்று விவஸ்தை வேண்டாமா 😏

அதிகமாக யோசிக்காதீர்கள். அப்படி யோசித்தால் என்ன எழுதுகிறோம் என்பதும் எழுதியதன் அர்த்தம் என்ன என்பதும் புரியாமல் போகும் அபாயம் இருக்கிறது. 

துல்பனே ஏன் என்று இன்னமும் கேட்கவில்லை. நீங்கள் ஏன் முந்துகிறீர்கள் 🤔

விதண்டாவாதத்திற்கு நீங்களும் Like போட்டீர்களோ 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகள், சித்திரவதைகள், மனித அவலங்களை யார் செய்தாலும், ஏற்படுத்தினாலும் அது இலங்கை அரசபடைகளாகட்டும், புலிகளாகட்டும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆகட்டும், இந்திய படைகளாகட்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளாகட்டும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது, ஒதுக்கப்படவேண்டியது. இல்லாதுவிடின் மனிதம் செத்துவிடும். 

சட்டங்களின் பிடியில் சிக்காமல் குற்றவாளிகள் தப்பக்கூடும். ஆனால் மனச்சாட்சி உள்ளவர்களை அவர்தம் ஆயுள்காலம் முழுதும் புற்றுநோயாக தாம் செய்த பாவங்கள் அரித்து அரித்து மனதை வாட்டி எடுக்கும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். வரலாறு புகட்டும் பாடம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சட்டங்களின் பிடியில் சிக்காமல் குற்றவாளிகள் தப்பக்கூடும். ஆனால் மனச்சாட்சி உள்ளவர்களை அவர்தம் ஆயுள்காலம் முழுதும் புற்றுநோயாக தாம் செய்த பாவங்கள் அரித்து அரித்து மனதை வாட்டி எடுக்கும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். வரலாறு புகட்டும் பாடம் இது.

இருக்கு நிறைய பரிகாரங்கள் இருக்கு, டக்ளஸ் அங்கிள் சிறிதர் தியேட்டரின் பின் பகுதியில் சித்திரவதைக் கூடம் வைச்சிருந்தவர் இப்ப அமைச்சரா இருக்கிறார். கருணாம்மான் அவரைச் சொல்லி வேலையில்ல லெப் கேணல் நியூட்டனை வாகனத்தில் அரை உயிருடன் கட்டி இழுத்தவர் இப்ப இலங்கையின் பணக்காரர்களில் ஒருவர். கவுரவ முன்னாள் பாஉ சுரேஸ் பல தமிழ் போராளிகள் அவர் தம் ஆதரவாளர்களின் தலைகளைக் கொய்து காட்சிக்கு வைத்தவர் இன்று விக்கி அய்யாவின் செல்லப்பிள்ளை. கவுரவ பிள்ளையான் முன்னாள் கிழக்கு முதல்வர் இந்நாள் பாஉ. அதவிட கவுரவ சுரேஸ் அவர்களின் முந்நாள் உதவியாளர் கட்டை ரவி என்பவர்(பெயர் சரியோ தெரியாது) கனடாவில் கிறிதவராகி பாவ மன்னிப்பு பெற்றாராம். இப்படிப் பலர் வினை விதைத்து திணை அறுத்திருக்கிறார்கள்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . உங்களிடமும், உங்களை போன்ற வால்களிடம் தான் அது அறவே இல்லை ...மற்றவர்கள் ஒரு சின்ன பிழை செய்தாலும் அதை பெரிதாக்கும் நீங்கள் புலி ஒரு பெரிய பிழை விட்டாலும் அதை கழுவி ஊத்திறத்தில் நில்லுங்கோ...இப்படியே உள்ளுக்குள் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி போட்டு ஒருத்தரும்[சர்வதேசம்] எங்களை கண்டு கொள்ளவில்லை என்று புலம்புரத்திற்கு தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சரி .


நான் மட்டும் தான் இடம் பெயர்ந்தேன் ...இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்  

"நான் பிழைகளை ஏற்றுக் கொள்ள எப்பவுமே தயாராய் உள்ளேன் . 

.இப்பவும் அந்த முகாமை சுத்தியுள்ள மக்கள் அங்கு தான் இருக்கிறார்கள்"  

தயவு செய்து அந்த முகாமை கூகிளில் டாக்  (Google Tag) பண்ணி இங்கே போடுவீர்களா? 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.