Jump to content

கடவுளின் குழந்தை


theeya

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

304e8dbe85a9f9c78fe4a3feb4d86941.jpg

 

 

 

முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும்  மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான்.

இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக  மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. 

***

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான். 

அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு.

 நேற்று,  இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பிஞ்சுக் கைகளின் அசைவு இந்தப் பின்பனி காலத்தில் இன்னும் கிடைக்கவில்லை. 

அவர்கள் எங்காவது குடிபெயர்ந்து விட்டார்களா? அப்படியாயின் அங்கு தெரிந்த வெளிச்சம்?  நகரும் உருவங்கள்?  பல கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

“சிலவேளை புதிதாக யாரும் குடிவந்திருக்க வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்காது.” மனம் ஏனோ ஏற்க மறுத்தது.

அவளது தாயும் தந்தையும் வழமையாக வெயில் கால மாலைப் பொழுதில் வீட்டின் முன் முற்றத்தில் மது அருந்தியபடியோ அல்லது புகைத்த படியோ ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவள் சைக்கிள் ஓட்டி அல்லது பந்தடித்து விளையாடிக் கொண்டிருப்பாள். பல வேளைகளில் தாயும் தந்தையும் அவளுடன் விளையாடியும் பார்த்திருக்கிறான். பெரும்பாலான மாலை வேளைகளில் அந்த வீட்டின் கார் பாதையில் யாரும் உள்நுளையாதபடி தற்காலிகமாக தடுப்பு வேலி போடப்பட்டிருக்கும். இப்போது எதுவும் அங்கில்லை. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது.  

அவனால் சரியாக உறங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அந்தக் கையசைப்பு,  சிரிப்பு,  எல்லாம் அவனை வட்டமிட்டபடியே இருந்தது. 

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்கு போவதுபோல் அந்த வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான். 

தூண்டில் போடுபவர்கள் ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். மின்னேசோட்டாவின் ஒரு சிறு நகரின் அழகிய ஆற்றங்கரையை அண்மித்ததாகத்தான் அந்த வீடு இருந்தது.

***

இந்த இடத்துக்கு ஆரம்பத்தில் அவன் குடிபுகுந்த போது அவனுக்கு அந்த ஊரில் யாரையுமே தெரியாது. ஊருக்கு புதியவனாக இருந்தமையால் அவனுடன் அமெரிக்கர்களுக்கான அறிமுகம் கிடைக்க நாளானது. அவன் அடிப்படையில் ஒரு இந்து சமயத்தவனாக இருந்தாலும் பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளை அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கழிப்பதனால் நாளடைவில் பலரின் அறிமுகம் அவனைத்தேடி வந்தது.

“குட்மோர்னிங் மிஸ்டர் சேகர் ”

சத்தம் வந்த திசையில் பார்த்தான். மிகவும் அறிமுகமான அந்த நபர். 

“குட்மோர்னிங் ஆமிசேர்” 

அவர் ஒரு காலத்தில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியமையினால் அவருக்கு அப் பெயரை அவன் சூட்டியிருந்தான்.

அடிக்கடி தேவாலயத்தில் சந்திக்கும் மிகவும் முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயர் “ராயன் ரொபலிங்க்” எல்லோரும் அவரை “ராயன்” என்று அழைப்பர்கள். மிகவும் மரியாதைக்குரிய நபராக எல்லோராலும் மதிக்கப்படுபவர் அவர்.

“கிட்டவா இருக்கிறீர்கள்?” 

“ஆம் அதுதான் என்வீடு”

மூன்றாவது வீட்டைச் சுட்டிக் காட்டி, “அதுதான் என் வீடு நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாருங்கள் பேசலாம்” என்றார் ராயன். 

அவனுக்கு பிரகாசமான ஒரு ஒளி பிறந்தது. அவன் யாரைப் பற்றி அறிய வேண்டி வந்தானோ அவர்களின் வீடும் மிஸ்டர் ராயன் வீடும் எதிரெதிரே இருந்தது.

“நன்றி” சொல்லிவிட்டு நிச்சயமாக வருவதாக உறுதியளித்த பின் கையசைத்து விடைபெற்றான்.

***

அன்று வேலைநாள் இல்லையாதலால் மாலையே ஆமிசேரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். நல்லகாலம் அவர் வீட்டிலேயே இருந்தார். 

“உள்ளே வாருங்கள்” மிகவும் பரிவுடன் உபசரித்தார். 

அவர் வீட்டு நாய்களைப் பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. நம்மூர் மாடுபோல வளர்ந்து கொளுகொளுவென இருந்தது.

“மிகவும் அழகான நாய்கள்” என்று பேச்சைத் தொடங்கினான். “நாய்” என்று சொன்னதும் ஒருகணம் முகம் ஓடிக் கறுத்து என்னவோ மாதிரி ஆனது. 

“இவை இரண்டும் எனது பிள்ளைகள்” என்றார். ஒரு பழுப்பு நிறமான ஆண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்கு ஒன்பது வயது” என்றும் மற்றைய மண்ணிறமான பெண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்குப் பத்து வயது” என்றும் அறிமுகம் செய்தார். 

அப்படியே நாய் பற்றிய பேச்சின் இடையே சிறிது நேரத்தில் ஆமிசேரின் துணைவி சுடச்சுடச் சூப்புடன் வந்தாள். அவளையும் அவன் ஓரிரு தடவை ஆமிசேருடன் தேவாலயத்தில் பார்த்திருக்கிறான். ஆனால் அவளுடன் அவனுக்கான பழக்கம் அதிகமானதாக இருக்கவில்லை. இப்போது எதிர் வீட்டைச் சுட்டிக் காட்டி, 

“அங்கு ஒரு சிறுமி போன வருடம் விளையாடியதாகவும் இந்த வருடம் அவளை அந்த வீட்டில் காண முடியவில்லையே”  ஆமிசேர் இப்போது எதுவும் பேசவில்லை. அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. நீண்ட அமைதிக்குப் பின் அவரின் துணைவி பேசத் தொடங்கினாள். அவள் பேச்சில் ஒரு விதமான கரகரப்பு தொற்றிக்கொண்டது.

அவள் பேசப் பேச அவன் அப்படியே உறைந்து போய் விட்டான். அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்து அந்த பிஞ்சு குழந்தையைப்  பற்றிய விசாரிப்பில் இறங்கவில்லையாதலால் அப்படியே காற்றுப் போன பலூனாகி விட்டான்.

“கடவுளே நீ இத்தனை கொடுமைக்காரனா?”

“எதற்காக அந்தப் பிஞ்சு உள்ளத்தை உன்னிடம் அழைத்தாய்?’’

“அவளைப் பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பல கேள்விகளைத் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“அச் சிறு பிஞ்சு புற்றுநோய் வந்து இறந்த நாளில் இருந்து அவளின் தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியில் போவதும் இல்லை. யாருடனும் பேசுவதும் இல்லை. அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமே தங்கள் குழந்தையைக் கொன்றதை அறிந்து. குற்ற உணர்வால் துடித்துப்போய் விட்டனர். இப்போது தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்’’

மிஸ்ஸிஸ் ராயன் பேசி முடிக்க, கண்களில் வழிந்த நீரை கையால் துடைத்தபடி, எதுவும் பேச முடியாதவனாக அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

***

ஒரு கோப்பை தேநீருடன் காலை உணவையும் முடித்துக் கொண்டு வேலைக்கு போகத் தயாரானான். அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தச் சிறு மழலையின் அழகிய முகம் பட்டெனத் தோன்றி மறைவதால் இப்போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூடக் கிடையாது.

அன்று மாலை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அச் சிறு பிஞ்சின் தாயும் தந்தையும் அவன் வீட்டின் முன் தெருவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 

அவள் கிட்டத்தட்ட நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. கணவனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

 “கடவுள் இருக்கிறான்” 

மனதுக்குள் நினைத்தபடி உள்ளே சென்று மறைந்தான்.

 

http://www.thiyaa.com/2020/10/blog-post.html

Link to comment
Share on other sites

On 13/10/2020 at 18:32, theeya said:

304e8dbe85a9f9c78fe4a3feb4d86941.jpg

 

 

 

முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும்  மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான்.

இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக  மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. 

***

பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான். 

அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு.

 நேற்று,  இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பிஞ்சுக் கைகளின் அசைவு இந்தப் பின்பனி காலத்தில் இன்னும் கிடைக்கவில்லை. 

அவர்கள் எங்காவது குடிபெயர்ந்து விட்டார்களா? அப்படியாயின் அங்கு தெரிந்த வெளிச்சம்?  நகரும் உருவங்கள்?  பல கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

“சிலவேளை புதிதாக யாரும் குடிவந்திருக்க வாய்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்காது.” மனம் ஏனோ ஏற்க மறுத்தது.

அவளது தாயும் தந்தையும் வழமையாக வெயில் கால மாலைப் பொழுதில் வீட்டின் முன் முற்றத்தில் மது அருந்தியபடியோ அல்லது புகைத்த படியோ ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவள் சைக்கிள் ஓட்டி அல்லது பந்தடித்து விளையாடிக் கொண்டிருப்பாள். பல வேளைகளில் தாயும் தந்தையும் அவளுடன் விளையாடியும் பார்த்திருக்கிறான். பெரும்பாலான மாலை வேளைகளில் அந்த வீட்டின் கார் பாதையில் யாரும் உள்நுளையாதபடி தற்காலிகமாக தடுப்பு வேலி போடப்பட்டிருக்கும். இப்போது எதுவும் அங்கில்லை. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது.  

அவனால் சரியாக உறங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அந்தக் கையசைப்பு,  சிரிப்பு,  எல்லாம் அவனை வட்டமிட்டபடியே இருந்தது. 

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்கு போவதுபோல் அந்த வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான். 

தூண்டில் போடுபவர்கள் ஆற்றை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். மின்னேசோட்டாவின் ஒரு சிறு நகரின் அழகிய ஆற்றங்கரையை அண்மித்ததாகத்தான் அந்த வீடு இருந்தது.

***

இந்த இடத்துக்கு ஆரம்பத்தில் அவன் குடிபுகுந்த போது அவனுக்கு அந்த ஊரில் யாரையுமே தெரியாது. ஊருக்கு புதியவனாக இருந்தமையால் அவனுடன் அமெரிக்கர்களுக்கான அறிமுகம் கிடைக்க நாளானது. அவன் அடிப்படையில் ஒரு இந்து சமயத்தவனாக இருந்தாலும் பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளை அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கழிப்பதனால் நாளடைவில் பலரின் அறிமுகம் அவனைத்தேடி வந்தது.

“குட்மோர்னிங் மிஸ்டர் சேகர் ”

சத்தம் வந்த திசையில் பார்த்தான். மிகவும் அறிமுகமான அந்த நபர். 

“குட்மோர்னிங் ஆமிசேர்” 

அவர் ஒரு காலத்தில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியமையினால் அவருக்கு அப் பெயரை அவன் சூட்டியிருந்தான்.

அடிக்கடி தேவாலயத்தில் சந்திக்கும் மிகவும் முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயர் “ராயன் ரொபலிங்க்” எல்லோரும் அவரை “ராயன்” என்று அழைப்பர்கள். மிகவும் மரியாதைக்குரிய நபராக எல்லோராலும் மதிக்கப்படுபவர் அவர்.

“கிட்டவா இருக்கிறீர்கள்?” 

“ஆம் அதுதான் என்வீடு”

மூன்றாவது வீட்டைச் சுட்டிக் காட்டி, “அதுதான் என் வீடு நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாருங்கள் பேசலாம்” என்றார் ராயன். 

அவனுக்கு பிரகாசமான ஒரு ஒளி பிறந்தது. அவன் யாரைப் பற்றி அறிய வேண்டி வந்தானோ அவர்களின் வீடும் மிஸ்டர் ராயன் வீடும் எதிரெதிரே இருந்தது.

“நன்றி” சொல்லிவிட்டு நிச்சயமாக வருவதாக உறுதியளித்த பின் கையசைத்து விடைபெற்றான்.

***

அன்று வேலைநாள் இல்லையாதலால் மாலையே ஆமிசேரின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். நல்லகாலம் அவர் வீட்டிலேயே இருந்தார். 

“உள்ளே வாருங்கள்” மிகவும் பரிவுடன் உபசரித்தார். 

அவர் வீட்டு நாய்களைப் பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. நம்மூர் மாடுபோல வளர்ந்து கொளுகொளுவென இருந்தது.

“மிகவும் அழகான நாய்கள்” என்று பேச்சைத் தொடங்கினான். “நாய்” என்று சொன்னதும் ஒருகணம் முகம் ஓடிக் கறுத்து என்னவோ மாதிரி ஆனது. 

“இவை இரண்டும் எனது பிள்ளைகள்” என்றார். ஒரு பழுப்பு நிறமான ஆண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்கு ஒன்பது வயது” என்றும் மற்றைய மண்ணிறமான பெண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்குப் பத்து வயது” என்றும் அறிமுகம் செய்தார். 

அப்படியே நாய் பற்றிய பேச்சின் இடையே சிறிது நேரத்தில் ஆமிசேரின் துணைவி சுடச்சுடச் சூப்புடன் வந்தாள். அவளையும் அவன் ஓரிரு தடவை ஆமிசேருடன் தேவாலயத்தில் பார்த்திருக்கிறான். ஆனால் அவளுடன் அவனுக்கான பழக்கம் அதிகமானதாக இருக்கவில்லை. இப்போது எதிர் வீட்டைச் சுட்டிக் காட்டி, 

“அங்கு ஒரு சிறுமி போன வருடம் விளையாடியதாகவும் இந்த வருடம் அவளை அந்த வீட்டில் காண முடியவில்லையே”  ஆமிசேர் இப்போது எதுவும் பேசவில்லை. அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. நீண்ட அமைதிக்குப் பின் அவரின் துணைவி பேசத் தொடங்கினாள். அவள் பேச்சில் ஒரு விதமான கரகரப்பு தொற்றிக்கொண்டது.

அவள் பேசப் பேச அவன் அப்படியே உறைந்து போய் விட்டான். அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்து அந்த பிஞ்சு குழந்தையைப்  பற்றிய விசாரிப்பில் இறங்கவில்லையாதலால் அப்படியே காற்றுப் போன பலூனாகி விட்டான்.

“கடவுளே நீ இத்தனை கொடுமைக்காரனா?”

“எதற்காக அந்தப் பிஞ்சு உள்ளத்தை உன்னிடம் அழைத்தாய்?’’

“அவளைப் பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பல கேள்விகளைத் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். 

“அச் சிறு பிஞ்சு புற்றுநோய் வந்து இறந்த நாளில் இருந்து அவளின் தாயும் தந்தையும் வீட்டை விட்டு வெளியில் போவதும் இல்லை. யாருடனும் பேசுவதும் இல்லை. அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமே தங்கள் குழந்தையைக் கொன்றதை அறிந்து. குற்ற உணர்வால் துடித்துப்போய் விட்டனர். இப்போது தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்’’

மிஸ்ஸிஸ் ராயன் பேசி முடிக்க, கண்களில் வழிந்த நீரை கையால் துடைத்தபடி, எதுவும் பேச முடியாதவனாக அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

***

ஒரு கோப்பை தேநீருடன் காலை உணவையும் முடித்துக் கொண்டு வேலைக்கு போகத் தயாரானான். அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தச் சிறு மழலையின் அழகிய முகம் பட்டெனத் தோன்றி மறைவதால் இப்போது அவன் அந்த வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூடக் கிடையாது.

அன்று மாலை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அச் சிறு பிஞ்சின் தாயும் தந்தையும் அவன் வீட்டின் முன் தெருவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 

அவள் கிட்டத்தட்ட நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. கணவனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

 “கடவுள் இருக்கிறான்” 

மனதுக்குள் நினைத்தபடி உள்ளே சென்று மறைந்தான்.

 

http://www.thiyaa.com/2020/10/blog-post.html

வலிசுமந்த வரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 07:32, theeya said:

 

அவர் வீட்டு நாய்களைப் பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. நம்மூர் மாடுபோல வளர்ந்து கொளுகொளுவென இருந்தது.

“மிகவும் அழகான நாய்கள்” என்று பேச்சைத் தொடங்கினான். “நாய்” என்று சொன்னதும் ஒருகணம் முகம் ஓடிக் கறுத்து என்னவோ மாதிரி ஆனது. 

“இவை இரண்டும் எனது பிள்ளைகள்” என்றார். ஒரு பழுப்பு நிறமான ஆண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்கு ஒன்பது வயது” என்றும் மற்றைய மண்ணிறமான பெண் நாயைச் சுட்டிக் காட்டி, “அதற்குப் பத்து வயது” என்றும் அறிமுகம் செய்தார். 

இனி இப்படி அவர்களுக்கு முன் சொல்ல கூடாது, என்ன பெயரென கேளுங்கள், அப்பதான் அவர்களுக்கு சந்தோஷம். நாங்களும் அவளை பிள்ளைபோல்தான் வளர்கின்றோம், நல்ல செல்லம். கடவுள் இருக்கின்றார்கள். சில வெள்ளைகள் வீட்டில் பிள்ளைகளுக்கு முன் நன்றாக புகைவிடுவார்கள், அது பிள்ளையைதான் பாதிக்கும். ஒன்றும் அறியா பிள்ளைகள்தான் இதனால் பாதிப்பு, நல்ல கதை, கடவுள் இருக்கின்றான் உலகில் ஏதோ ஒரு உருவில், அவர்களுக்கு படிப்பினையையும்  & இன்னொரு பிள்ளை கொடுத்து நிருபித்திருக்கின்றான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

வலிசுமந்த வரிகள்

நன்றி 

8 hours ago, உடையார் said:

இனி இப்படி அவர்களுக்கு முன் சொல்ல கூடாது, என்ன பெயரென கேளுங்கள், அப்பதான் அவர்களுக்கு சந்தோஷம். நாங்களும் அவளை பிள்ளைபோல்தான் வளர்கின்றோம், நல்ல செல்லம். கடவுள் இருக்கின்றார்கள். சில வெள்ளைகள் வீட்டில் பிள்ளைகளுக்கு முன் நன்றாக புகைவிடுவார்கள், அது பிள்ளையைதான் பாதிக்கும். ஒன்றும் அறியா பிள்ளைகள்தான் இதனால் பாதிப்பு, நல்ல கதை, கடவுள் இருக்கின்றான் உலகில் ஏதோ ஒரு உருவில், அவர்களுக்கு படிப்பினையையும்  & இன்னொரு பிள்ளை கொடுத்து நிருபித்திருக்கின்றான்

உண்மைதான் உணர்ந்து கொண்டேன். எங்களுக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது கடவுளையும் இருக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 05:02, theeya said:

அவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கமே தங்கள் குழந்தையைக் கொன்றதை அறிந்து. குற்ற உணர்வால் துடித்துப்போய் விட்டனர்

வேதனை .. பகிர்விற்கு நன்றி தோழர் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வேதனை .. பகிர்விற்கு நன்றி தோழர் ..

நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.