Jump to content

சேலம் முதியவர்: ஐஸ் பெட்டியில் அடைத்து உயிர் பிரிய காத்திருந்த குடும்பத்தின் அதிர்ச்சி சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் 24 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 73 வயது முதியவர் பாலசுப்ரமணியம், அவரது சகோதரர் சரவணன், அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சரவணன், ஒரு குளிர் பெட்டியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

இந்த நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, "அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்" என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். "பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே" என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு அவசரஊர்தி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், "பெரியவருக்கு உயிர் உள்ளது. ஐஸ் பெட்டியில் அவர் 24 மணி நேரம் உயிருடன் இருந்ததே ஆச்சரியமான விஷயம்" என்று கூறினர்.

பெரியவர்

பட மூலாதாரம், FB

 

காவல்துறை ஆணையாளர் விளக்கம்

அதிர்ச்சியடைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமாரிடம் பிபிசி கேட்டபோது, பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 238, 336 ஆகியவற்றின் கீழ் உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவரது உடல்நிலை மோசமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் மீண்டும் அவரை வீட்டுக்கே அவரது குடும்பத்தினர் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை ஆணையர் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்ரமணியத்தின் சகோதரர் சரவணன் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆணையாளர் செந்தில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

உடல் நலன் சரியில்லை என்ற காரணத்துக்காக 74 வயது முதியவரை ஐஸ் பெட்டியில் வைத்து அவரது உயிர் பிரிவதற்காக காத்திருந்த குடும்பத்தினரின் செயல் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த பெரியவர் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த காட்சிகளும், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து, மனிதாபிமானமின்றி அந்த குடும்பத்தினர் செயல்பட்டுள்ளதாகக் கூறி தங்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முதியோர் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் என்ன சொல்கிறது?

வீட்டில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர், தங்களுக்கு உதவி தேவைப்படும் சூழல் எழுந்தால் அவர்களுக்கு உதவ சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் தனியாக இருக்கும் முதியோர்கள் மாரடைப்பு போன்ற நோயினால் தீடீரென்று பாதிக்கப்படும் போது உதவிக்கு ஆள் இல்லாமல் மடிந்து போகும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு காவல்துறையினரே வீடு தேடிச் சென்று உதவி செய்யும் ஒரு சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.

இதேபோல, செல்பேசியில் எண்-2 ஐ அழுத்தினால் அருகே உள்ள காவல் நிலைய தொலைபேசி ஒலிக்கும். உடனே தொலைபேசியில் பேசும் காவலர்களிடம் தங்களுக்கான உதவியை முதியோர் கேட்டுப் பெறலாம். தேவைப்பட்டால் வீட்டுக்கே அழைத்து தேவையான உதவிகளை பெறலாம். ஆபத்தான நேரத்தில் கூட செல்பேன். எண்.2 -ஐ அழுத்தி போலீசாரை உதவிக்கு கூப்பிடலாம். ஆனால், களத்தில் இந்த சேவைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.https://www.bbc.com/tamil/54539968

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலத்தில் உயிருடன் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் அடைத்து வைக்கப்படிருப்பது குறித்து தெரியவந்த சூரமங்கலம் காவல்துறையினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

முதியவருக்கு நேற்று மாலை உடல்நிலை பாதிப்பு தீவிரமாகி வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், "சிகிச்சைக்காக முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மயக்கநிலையில் இருந்தார். அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், சிடி ஸ்கேன் பரிசோதனையில் வலிப்பு நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அவரின் ரத்த பரிசோதனையிலும் எந்த பாதிப்புகளும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், நீண்ட காலமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. அதன் காரணமாக அவரது உடல்நிலை நேற்று மாலை மோசமடைந்தது. வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தோம், இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். எத்தனை மணி நேரம் அவர் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்த தெளிவான தகவல்களை பெறமுடியவில்லை," என தெரிவித்தார்.

என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 74 வயது முதியவர் பாலசுப்ரமணியம், அவரது சகோதரர் சரவணன், அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சரவணன், ஒரு குளிர் பெட்டியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர்

பட மூலாதாரம், Facebook

 

இந்த நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, "அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்" என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். "பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே" என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமாரிடம் பிபிசி கேட்டபோது, "பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 287, 336 ஆகியவற்றின் கீழ் சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பாலசுப்ரமணியம் உயிரிழந்ததையடுத்து சந்தேகத்திற்குரிய மரணம் என்ற அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 174 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

முதியவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தபின்னர், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் முதியவர் மீட்கப்பட்ட தினத்தன்று பேசிய ஆணையர் செந்தில் குமார் , "பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அந்த முதியவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்." என தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-54565103

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் நாட்டில் நடப்பது வழக்கம். முழு இந்தியாவிலும் நடக்கிறதோ தெரியவில்லை. 

அதாவது முதியவர்களையோ, அல்லது நோய்வாய் பட்டு, விபத்து போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகவோ இருப்பவர்களை, இப்படியாக, அதாவது இயற்கையான மரணம் போல தோற்றம் ஏற்படுத்தி, கொலை  செய்வது.

முழுக் குடும்பமும் இதில் ஈடுபடுவதால், போலீஸ் இற்கு ஒரு சாட்சிகளும் இல்லை, வெளியே தெரிய வந்தாலும்.

இதை பற்றி ஓர் படமும் அண்மையில் வெளிவந்தது (வாட்ச் மன் ஆக இருப்பவர் விபத்தினால் படுத்த படுக்கை ஆகி மகனும், அவர் மனைவியும் சேர்ந்து கொலை செய்ய, அவர் முன்பு வாழ்ந்த சகோதரியின் குடும்பம் அதை வெளி கொண்டு வந்து, போலீஸ் மூலமாக நீதி தேடுவது).

இப்படியான கொலைக்கு, ஓர் பெயரும் உண்டு , மறந்து விட்டது.    

 

14 minutes ago, பிழம்பு said:

"பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அந்த முதியவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்." என தெரிவித்திருந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இது தமிழ் நாட்டில் நடப்பது வழக்கம். முழு இந்தியாவிலும் நடக்கிறதோ தெரியவில்லை. 

அதாவது முதியவர்களையோ, அல்லது நோய்வாய் பட்டு, விபத்து போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகவோ இருப்பவர்களை, இப்படியாக, அதாவது இயற்கையான மரணம் போல தோற்றம் ஏற்படுத்தி, கொலை  செய்வது.

முழுக் குடும்பமும் இதில் ஈடுபடுவதால், போலீஸ் இற்கு ஒரு சாட்சிகளும் இல்லை, வெளியே தெரிய வந்தாலும்.

இதை பற்றி ஓர் படமும் அண்மையில் வெளிவந்தது (வாட்ச் மன் ஆக இருப்பவர் விபத்தினால் படுத்த படுக்கை ஆகி மகனும், அவர் மனைவியும் சேர்ந்து கொலை செய்ய, அவர் முன்பு வாழ்ந்த சகோதரியின் குடும்பம் அதை வெளி கொண்டு வந்து, போலீஸ் மூலமாக நீதி தேடுவது).

இப்படியான கொலைக்கு, ஓர் பெயரும் உண்டு , மறந்து விட்டது.    

 

 

பாரம் படம்,தலைக்குத்து கொலைக்கு பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

 

ஆம், இதுவும் இன்னொரு படம் பார்த்துளேன். 

ஆனால் , நகைச்சுவை உடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர்

வீட்டைப்  பார்க்க... வசதியான குடும்பம் போலுள்ளது...
அப்படியிருந்தும், தனது முதிய  சகோதரரை  கொல்லுமளவிற்கு,
இப்படியான எண்ணம் ஏன் வந்தது?

அதுகும்... ஒரு குடும்பமே சேர்ந்து,  செய்த  இந்தச் செயலை மன்னிக்கவே முடியாது.  😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

பெரியவர்

வீட்டைப்  பார்க்க... வசதியான குடும்பம் போலுள்ளது...
அப்படியிருந்தும், தனது முதிய  சகோதரரை  கொல்லுமளவிற்கு,
இப்படியான எண்ணம் ஏன் வந்தது?

அதுகும்... ஒரு குடும்பமே சேர்ந்து,  செய்த  இந்தச் செயலை மன்னிக்கவே முடியாது.  😡

சிறியர் ஓடுகிறவரைதான் வாழ்க்கை, ஓய்ந்துவிட்டால் அதுவே ஒரு சுமைதான்......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

சிறியர் ஓடுகிறவரைதான் வாழ்க்கை, ஓய்ந்துவிட்டால் அதுவே ஒரு சுமைதான்......!  🤔

சில வேலை யோசிப்பதுண்டு, புலிகள் போல சயனைடு (அல்லது அததற்கு ஈடான) ஏதாவது வைத்து இருக்க வேண்டும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

சிறியர் ஓடுகிறவரைதான் வாழ்க்கை, ஓய்ந்துவிட்டால் அதுவே ஒரு சுமைதான்......!  🤔

அந்த பயம் எனக்கு நெடுகலும் இருக்கு.

கைகாலும் மூளையும் ஒழுங்காய் இருக்கும் வரை உயிரோடை இருந்தால் போதும் என்ரை சிவனே எண்டு அடிக்கடி கும்பிடுவது :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

சில வேலை யோசிப்பதுண்டு, புலிகள் போல சயனைடு (அல்லது அததற்கு ஈடான) ஏதாவது வைத்து இருக்க வேண்டும் என்று.

என்ன கடைஞ்சா நீங்கள் இப்படி யோசிக்கிறீங்கள்.....நீங்கள் தனக்குத்தானே செய்ய நினைப்பதைத்தான் அவரின் குடும்பத்தினர் செய்கின்றனர்....அப்ப அது சரியா.......? 

யாரும் சாக நினைத்தாலும் சாக முடியாது, சா வந்துவிட்டால்  அதிலிருந்து தப்பவும் முடியாது.....சமீபத்தில் ரதிகூட ஒரு வீடியோ இணைத்திருந்தார். சாவில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர்கள் என்று.....இந்த முதியவர் கூட ஐஸ் பெட்டியில் வைத்தும் நெடுநேரம் உயிருடன் இருந்து வெளியே வந்திருக்கிறார்........ஆனால் வீட்டுக்குள்ளே குளியலறையில் வழுக்கிவிழுந்து இறப்பவர்கள் அதிகம்.....!

 

7 minutes ago, குமாரசாமி said:

அந்த பயம் எனக்கு நெடுகலும் இருக்கு.

கைகாலும் மூளையும் ஒழுங்காய் இருக்கும் வரை உயிரோடை இருந்தால் போதும் என்ரை சிவனே எண்டு அடிக்கடி கும்பிடுவது :100_pray:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

என்ன கடைஞ்சா நீங்கள் இப்படி யோசிக்கிறீங்கள்.....நீங்கள் தனக்குத்தானே செய்ய நினைப்பதைத்தான் அவரின் குடும்பத்தினர் செய்கின்றனர்....அப்ப அது சரியா.......? 

நான் விரும்பி ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதும்.

அவர்கள் செய்வது தங்களின் வாழ்க்கையில் பொறுப்பை வேண்டா வெறுப்பாக அகற்றுவதத்திற்காக; இற ப்பவர் இன்னமும் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நான் விரும்பி ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதும்.

அவர்கள் செய்வது தங்களின் வாழ்க்கையில் பொறுப்பை வேண்டா வெறுப்பாக அகற்றுவதத்திற்காக; இற ப்பவர் இன்னமும் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போதும்.

 

4 hours ago, Kadancha said:

சில வேலை யோசிப்பதுண்டு, புலிகள் போல சயனைடு (அல்லது அததற்கு ஈடான) ஏதாவது வைத்து இருக்க வேண்டும் என்று.

உங்களை போலவே எனது எண்ண ஓட்டமும். 

என்னிடம் கைவசம் சில ஐடியாக்கள் உண்டு🤣. ஆனால் இங்கே எழுதினால் பிரச்ச்சனை ஆகி விடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

என்னிடம் கைவசம் சில ஐடியாக்கள் உண்டு🤣. ஆனால் இங்கே எழுதினால் பிரச்ச்சனை ஆகி விடும்.

ஆம், அந்த நேரத்தில் கை, கால்  வழங்க கூடியதாக இருக்க வேண்டும், வாய் திறக்க கூடியதாக இருக்க வேண்டும் , அட யோசிக்க கூடிய நிலையில் கூட இருக்க வேண்டும் என்று பலவாறு, ஓய்வாக இருந்து சிந்தித்து, இதை வேறு ஒரு நிறுவனத்துடன் கருணை கொள்ளை உடன் படிக்காய் போட்டு வைத்திருப்பம் என்கிறால், வாயைத் திறந்து ஆம் என்று சொல்லக் கொடிய நிலையில் இருக்க வேண்டும்.

சரி, மூளையின் வரும் சிக்கனல்களை வைத்து வேறு யாரும் முடிவு எடுக்கலாம் என்றாலும்,அது சட்ட அடிப்படியில் அங்கீகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

.....

என்று இப்படி பல சிந்தனைகள்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

நான் விரும்பி ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதும்.

அவர்கள் செய்வது தங்களின் வாழ்க்கையில் பொறுப்பை வேண்டா வெறுப்பாக அகற்றுவதத்திற்காக; இற ப்பவர் இன்னமும் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போதும்.

கருணைக்கொலை சில நாடுகளில் சட்டபூர்வமாக இருக்கின்றது என நினைக்கின்றேன். 
ஜெர்மனியில் நூற்றுக்கு மேற்பட்ட இரகசிய கருணைக்கொலை செய்த தாதியர் ஒருவர் கம்பி எண்ணுகிறார். இருந்தாலும் ஐஞ்சை பத்தை கையுக்கை வைச்சால்  எல்லாம் சுபமாய் முடிக்கலாமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கருணைக்கொலை சில நாடுகளில் சட்டபூர்வமாக இருக்கின்றது என நினைக்கின்றேன்.

ஆம், இருக்கிறது. 

பல நாடுகளில், கொலையை குறிப்பிட்ட நபர் விரும் ஏற்கிறார் என்று நீதி மன்றம் அந்த நேரத்தில்  அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

உயிலில் எழுதி வைத்தாலும், நீதி மன்றம் அதை ஏற்காது. 

ஏனெனில், சட்டத்தில் சாதாரண உணர்ச்சிகள் (அதாவது ஐம்புலன்களை கொண்டு) மூலமாக அறிந்ததே, வழங்குவதே சாட்சி ஆகும்.

 இப்பொது இந்த electronic, cyber space என்பதன் தாக்கம் வாழ்க்கையில்  தவிர்க்க முடியதால், அவற்றுக்காக மட்டும் சட்டங்கள் ஆக்கப்பட்டு, மனித உயிர் தொடர்பு படத விடயங்களில், அந்த சாட்சிகளை நீதி மன்றங்கள் பரிசீலித்து (witness admissibility)  ஏற்றுக்கொள்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

ஆம், இருக்கிறது. 

பல நாடுகளில், கொலையை குறிப்பிட்ட நபர் விரும் ஏற்கிறார் என்று நீதி மன்றம் அந்த நேரத்தில்  அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

உயிலில் எழுதி வைத்தாலும், நீதி மன்றம் அதை ஏற்காது. 

ஏனெனில், சட்டத்தில் சாதாரண உணர்ச்சிகள் (அதாவது ஐம்புலன்களை கொண்டு) மூலமாக அறிந்ததே, வழங்குவதே சாட்சி ஆகும்.

 இப்பொது இந்த electronic, cyber space என்பதன் தாக்கம் வாழ்க்கையில்  தவிர்க்க முடியதால், அவற்றுக்காக மட்டும் சட்டங்கள் ஆக்கப்பட்டு, மனித உயிர் தொடர்பு படத விடயங்களில், அந்த சாட்சிகளை நீதி மன்றங்கள் பரிசீலித்து (witness admissibility)  ஏற்றுக்கொள்கின்றன. 

பெரும்பாலும் மாற்ற முடியாத புற்று நோய்களுக்கு மட்டுமே கருணைக்கொலை சட்டம் அனுமதிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பளையா பிறந்தால் சாகுமட்டும் உழைக்கணும் படுக்கையில் என்று விழுகிறமோ அன்று மட்டும் கொஞ்சம் விசேடமாக சாப்பாடுகள் கேட்டு  வாங்கி சாப்பிட்டு விட்டு சிறு புன்னகையுடன்  அடுத்தநாள் விடியக்கூடாது நமக்கு மட்டும் என்ற கொள்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 14:43, Kadancha said:

இது தமிழ் நாட்டில் நடப்பது வழக்கம். முழு இந்தியாவிலும் நடக்கிறதோ தெரியவில்லை. 

அதாவது முதியவர்களையோ, அல்லது நோய்வாய் பட்டு, விபத்து போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகவோ இருப்பவர்களை, இப்படியாக, அதாவது இயற்கையான மரணம் போல தோற்றம் ஏற்படுத்தி, கொலை  செய்வது.

இப்படியான கொலைக்கு, ஓர் பெயரும் உண்டு , மறந்து விட்டது.    

தலைக்கு ஊத்துவது என்று பெயர். இந்த தலைப்பில் நடக்கும் கொலைகள் குறித்து, தமிழக வார இதழ் ஒன்றில் கட்டுரை வந்தது.

வயதானவர்களை, மருத்துவ செலவு கட்டுப்படியாகாத குடும்பங்களில் இது சாதாரணமாக நடக்கின்றது என்று எழுதினார்கள். அவரை குளிப்பாட்டி, நல்ல உணவு கொடுத்து, அத்துடன் விஷம் கலந்த பாயாசத்தினை கொடுத்து கதையினை முடிப்பது.

பாயசம் கொடுக்கும் முன்னர், சாராயம் கொடுத்து விடுவார்கள் என்றும் எழுதி இருந்தார்கள்.

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

தலைக்கு ஊத்துவது என்று பெயர். இந்த தலைப்பில் நடக்கும் கொலைகள் குறித்து, தமிழக வார இதழ் ஒன்றில் கட்டுரை வந்தது.

வயதானவர்களை, மருத்துவ செலவு கட்டுப்படியாகாத குடும்பங்களில் இது சாதாரணமாக நடக்கின்றது என்று எழுதினார்கள். அவரை குளிப்பாட்டி, நல்ல உணவு கொடுத்து, அத்துடன் விஷம் கலந்த பாயாசத்தினை கொடுத்து கதையினை முடிப்பது.

பாயசம் கொடுக்கும் முன்னர், சாராயம் கொடுத்து விடுவார்கள் என்றும் எழுதி இருந்தார்கள்.

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு....நான் இப்பிடியொண்டை கேள்விப்படவேயில்லை..😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு....நான் இப்பிடியொண்டை கேள்விப்படவேயில்லை..😲

இந்த வயதானவரின் கதையினை நம்ம முடியவில்லை.... இப்படியும் செய்வார்களா என்று சொல்கிறோம்.

ஆனால்.... .. "கிடப்பது கிடக்கட்டும்... கிழவியை தூக்கி பரணில் வை" என்பது ஒரு முதுமொழி.

இறக்க போகும் வயதான மனிதர்களை தூக்கி பரணில் வைத்து விட்டு, அவ்வப்போது இறந்து விட்டார்களா என்று செக் பண்ணிக்கொள்வது.

ஆக... இது பழைய காலத்திலேயே இருந்திருக்கிறது.

https://ta.wikipedia.org/wiki/தலைக்கு_ஊத்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஊரில் நானும் ஒரு விடயம் கேள்விப்பட்டு   இருக்கிறேன்.  மிக வயது முதிர்ந்த ஒருவர் மரணத்துக்கு  காத்திருக்கும் நிலை வரும் போது  செம்புக்   காசை தாய்ப்பாலில் உரைத்து அந்த பாலை வாய்க்குள்  ஊற்றுவார்களாம்  நான் நினைக்கிறன் செம்பின் (செழும்பு )  நஞ்சு என்று . 

A. Palliative care is whole-person care that relieves symptoms of a disease or disorder, whether or not it can be cured. Hospice is a specific type of palliative care for people who likely have 6 months or less to live. In other words, hospice care is always palliative, but not all palliative care is hospice care.

 என்று இருக்கிறது .இறக்கும்     நிலையில் இருக்கும் ஒருவரை அப்படியே நீராகரம் 
மட்டும் கொடுத்து (திண்ம உணவு சுவாசத்துக்கு பிரச்சனையாகலாம்   ) சுத்தமாக வைத்து இருப்பார்கள் நோயாளியொரு மயக்க சோர்வு நிலையிலிருப்பார் .ஆறு மாதங்களுக்குள் அவர் பரகதியடைந்து விடுவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இன்னொரு முக்கிய விடயம். நமது ஊர்களில், ஆட்டிசம், வலது குறைவான குழந்தைகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

நீங்கள் சொல்லுவது புரிகிறது. அநேகமாக அவர்கலின் வருத்தத்தை சாட்டி, உண்மையான கொலையை இயற்கயான இறப்பாக காட்டுவது.

அப்படியானால், இங்கு மேற்கில் எம்மவரிடையே, இந்த autism பாதிப்பு மிகவும் குறைவாக தானே இருக்கிறது. இது எனது தனிப்பட்ட அவதானம் மாத்திரமே. 

ஆனாலும், வெள்ளையரில் (இப்பொது) வருவதற்கு, அவர்களின் மனதை கட்டுப்  படுத்த முடியாத வாழ்க்கை முறை என்றே கருத வேண்டி இருக்கிறது.

அதாவது, மகப்பேறு காலத்தில், தமக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வது, சிசுவின் நலம் என்று கூட பாராமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிலாமதி said:

A. Palliative care is whole-person care that relieves symptoms of a disease or disorder, whether or not it can be cured. Hospice is a specific type of palliative care for people who likely have 6 months or less to live. In other words, hospice care is always palliative, but not all palliative care is hospice care.

 என்று இருக்கிறது .இறக்கும்     நிலையில் இருக்கும் ஒருவரை அப்படியே நீராகரம் 
மட்டும் கொடுத்து (திண்ம உணவு சுவாசத்துக்கு பிரச்சனையாகலாம்   ) சுத்தமாக வைத்து இருப்பார்கள் நோயாளியொரு மயக்க சோர்வு நிலையிலிருப்பார் .ஆறு மாதங்களுக்குள் அவர் பரகதியடைந்து விடுவார். 

மேற்கில் இதை தான் செய்வார்கள். நேரடி அனுபவமும் இருக்கிறது.

கேட்டால், நோயாளி அனுபவிக்காமல், peace ஆக வைத்து இருக்கிறோம் என்பார்கள்.

அவர் உணவை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே கொடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஆம், அந்த நேரத்தில் கை, கால்  வழங்க கூடியதாக இருக்க வேண்டும், வாய் திறக்க கூடியதாக இருக்க வேண்டும் , அட யோசிக்க கூடிய நிலையில் கூட இருக்க வேண்டும் என்று பலவாறு, ஓய்வாக இருந்து சிந்தித்து, இதை வேறு ஒரு நிறுவனத்துடன் கருணை கொள்ளை உடன் படிக்காய் போட்டு வைத்திருப்பம் என்கிறால், வாயைத் திறந்து ஆம் என்று சொல்லக் கொடிய நிலையில் இருக்க வேண்டும்.

சரி, மூளையின் வரும் சிக்கனல்களை வைத்து வேறு யாரும் முடிவு எடுக்கலாம் என்றாலும்,அது சட்ட அடிப்படியில் அங்கீகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

.....

என்று இப்படி பல சிந்தனைகள்.      

இங்கே யூகேயில் இருந்தால் விசயம் சரிவராது. ஆக முடியாமல் போனபின், வைத்தியர்கள் palliative care என்பதாக, நோவை, நினைவை மறக்கடித்து அனுப்பி வைப்பது மட்டுமே இங்கே சட்டபடி முடியும்.

அதுவரைக்கும் இருப்பது வேண்டாம் என்ற மனநிலையில் இருப்போர்க்கு வேறு வழியில்லை.

சுபிஸ்சலாந்து போகலாம். செய்வார்கள். இதற்கென ஒரு வைத்திய(?)சாலையும் உண்டு. ஆனால் உடலில் வலு உள்ளபோது சுவிசுக்கு போக வேண்டும். இல்லாமல் தனியே போக முடியாமல் யாரும் கூட்டி கொண்டு போய் விடுவதாக உடன்பட்டாலும், அவர்கள் மீது aiding and abetting suicide சட்டம் பாயும்.

ஆகவே ஒரு வயதுக்கு பின், நிலமை படு மோசமாக முதலே எஸ் ஆவதே ஒரே வழி🤣

அப்போ இதே தைரியம் இருக்குமா? யாருக்கு தெரியும்.

பிகு: spectrum disorders பற்றி நீங்கள் சொன்னதுடன் உடன் படுகிறேன். ஊரிலும் இப்படியான பிள்ளைகள் உள்ளார்கள். ஆனால் இந்த குறைபாடு மிக மோசமாக தெரிபவர்களை மட்டும் “வலசு” என ( மோசமாக) அடையாளப்படுத்தி விட்டு, அதிக பாதிப்பு இல்லாதவர்களை, அவன் “குழப்ப, அல்லது “பிரளி” அல்லது “விறுக்கன்” என கடந்து போய் விடுவோம்.

டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்பட்ட எத்தனை எம் கூட படித்தவர்களை எமக்கு தெரியும்? எவருமில்லை. அவர்களை “மொக்கு” என கடந்து வந்து விட்டோம்.

ஆனால் இப்போ நிலமை எவ்வளவோ பரவாயில்லை. நகர் புற பெற்றாருக்காவது இந்த விளக்கங்கள் இருக்கிறது.

மகப்பேற்று காலத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்பே கூட தாய் மது எடுப்பது பிள்ளைகளை பாதிப்பது உண்மை ஆனால் இது இப்படியான விழைவை தருமா என்பதை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. 

ஆனால் ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளை ஊரில் வகை தொகையாக கொல்வதாக நான் நினைக்கவில்லை. 

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.