Jump to content

அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன்  மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர். 

கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார். 

அசோலா வளர்ப்பு மற்றும் தீவன முகாமைத்துவம் தொடர்பில் எம் பண்ணையாளர்களிடையே சரியான புரிதல் இல்லாத நிலையில், அசோலா தொடர்பிலான பல்வேறு விளக்கங்களையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். 

* அசோலா பாசி ஓர் அறிமுகம் 
* அசோலா தொட்டி அமைப்பது எப்படி? 
* அசோலா தொட்டி பராமரிப்பு முறைகள் 
* அசோலா தீவன மேலாண்மை

 

Link to comment
Share on other sites

முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன்  அவரின் துணைவியார் வசந்தி  ஆகியோரின் முயர்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 
நேசன் அவர்கள்  கம்ப் அடிக்க போற மாதிரி நுணுக்கமாகவும், விலவரியாகவும் விளங்கப்படுத்துகின்றார், கேக்க நல்ல இருக்குது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கமாக அசோலா வளர்ப்பு பற்றி சொல்கிறார்....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தாயகத்தில் அசோலா 1 கிலோ 1000 ருபாய் வரை விக்கப்படுகுது.அது சரி ஏன் இப்படியான விடையங்களை தாயகம் சம்பந்தமான ஒரே திரியில் பதியாமல் விடுகிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

8 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப தாயகத்தில் அசோலா 1 கிலோ 1000 ருபாய் வரை விக்கப்படுகுது.அது சரி ஏன் இப்படியான விடையங்களை தாயகம் சம்பந்தமான ஒரே திரியில் பதியாமல் விடுகிறார்களோ தெரியவில்லை.

அது நாற்சந்தியில்  இருப்பதனால் என நினைக்கிறன் எல்லோராலும்  பார்க்க முடியாதல்லவா 

Link to comment
Share on other sites

போராட்டத்திற்குப் போனவர்கள்  திறமைசாலிகள், புத்திசாலிகள். அவர்கள் போராடப் போகாமல் கல்வியைத் தொடர்ந்திருந்தால் இன்று  உயர்ந்த , சிறந்த நிலமைகளில் இருந்திருப்பார்கள்.  இவரைப் போன்றவர்களது சாதனைகள் "சுகமான சூழல்களில்" வளர்ந்து , படித்து சாதித்தவர்களை விட பன்மடங்கு உயர்வானது . இது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.