Jump to content

“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை..

IMG-20201014-WA0007.jpg

யாழ்.வல்வெட்டித்துறையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கைக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெருமை தேடி தந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக அமைக்கப்பட்ட வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.

121521342_893893394474001_60061677408274

மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த நீச்சல் தடாகம் தமிழ் தேசியக்கட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆளுமையற்ற நிர்வாகத்தினால் மக்கள் மயப்படுத்தப்பட்ட குறித்த நீச்சல்  தடாகத்தை உரியமுறையில் பராமரிக்க முடியாத திராணியற்ற சபையாக வல்வெட்டித்துறை நகரசபை விளங்குகிறது. ஆகவே குறித்த நீச்சல் தடாகத்தை தனியாரிடமோ அல்லது சமூக நிறுவனங்களிடமும் ஒப்படைத்து உரிய முறையில் பாதுகாத்து அதன் பயன்பாட்டை மக்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

https://jaffnazone.com/news/20999

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகமுழுக்க டெங்கு டெங்கு நுளம்பு ஒழிப்பு என்று கத்திவிட்டு இப்ப அவங்களே நுளம்பு பக்ரரி  துறந்து வைத்து இருக்காங்களே .

 

 

 

அது சரி இப்ப யாரை குரங்கு என்கிறாங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மத்திய கல்லூரியிலும் ஒரு நீச்சல் தடாகம் திறந்து வைக்கப் பட்டது. அதன் தற்போதைய நிலை எப்படி என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊர் உலகமுழுக்க டெங்கு டெங்கு நுளம்பு ஒழிப்பு என்று கத்திவிட்டு இப்ப அவங்களே நுளம்பு பக்ரரி  துறந்து வைத்து இருக்காங்களே .

 

 

 

அது சரி இப்ப யாரை குரங்கு என்கிறாங்கள் ?

அடுத்தவன் நிதியிலை தடாகம் கட்டி கையிலை கொஞ்ச காசு பாத்திருப்பினம். மற்றும் படி சமூக சேவை அது இது எண்டு ஒரு பளாயுமில்லை. 😁

Link to comment
Share on other sites

திறந்து வைத்தவர்கள்/கட்டி கொடுத்தவர்கள்  தான் பராமரித்தும் குடுக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

121196380_774554416446654_8315021551948555669_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=ddXt-lhkg_cAX8PtJmd&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=50832d00b7d0f0b236b04b350a1044c1&oe=5FAD4680

121567002_774554383113324_6489790354124904091_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=82mPCOwvUfEAX8JI6me&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=60695d6a3ac1308ae87c67f51d361e3b&oe=5FAF5BB0

அருமையான ஒரு திட்டம் போதிய அளவு அறிவு இல்லாமையால் 
இது வீணடிக்க பட்டு இருக்கிறது என்றுதான் எனக்கு படுகிறது.
13 வயதுக்கு மேலான பெருசான பெண் பிள்ளைகள் அங்கு சென்று 
குளிப்பதில் அதற்கு உரிய ஆடை மற்றும் இன்ன பிற காரணங்கள் இருந்து 
இருப்பினும் குறைந்த பட்ஷம் இதை 12 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலரும் 
நீந்த கற்றுக்கொடுக்கவும் ஒரு நீச்சல் வகுப்பை சொல்லி கொடுக்கவும் பயன்படுத்தி 
இருக்கலாம். 6-8 மணித்தியாலங்கள் வரை நீருக்குள்ளால் நீந்தி சென்று சில பெண் 
கரும்புலிகள் சாதனை படைத்த மண் அது.

அங்கிருக்கும் மக்களுக்கு போதிய அறிவும் இல்லை 
சிலதை ஏற்றுக்கொள்ள அவர்களை செருக்கும் விடுவதாக இல்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அபராஜிதன் said:

திறந்து வைத்தவர்கள்/கட்டி கொடுத்தவர்கள்  தான் பராமரித்தும் குடுக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை 

கட்டப்படும்போதே மிக முக்கியமான பிரச்சனையான   குளத்துக்கு  தேவையான 7லட்சம் லீற்றர் நல்ல தண்ணீர் எவ்வாறு பெறப்போகிறார்கள் என்பதுக்கு நடைமுறை சாத்தியமற்ற கடலநீரில் இருந்து நன்நீர் என்றார்கள் இன்று கவுண்டு போய் கிடக்கிறார்கள் .

யாழில் ஒருவருட மழை  வீழ்ச்சியின் அளவு தெரியுமா ? இந்த அரசியல்வாதிகளுக்கு ?

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நீச்சல் தடாகத்தைப் பராமரிக்க தினமும் பெருமளவிலான நீர் தேவையில்லை  பாவிக்கப்பட்ட நீரையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் சுத்திகரித்துப் பாவிக்கும் முறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது அதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் மிக அதிகமான மின்சாரமும் தேவைப்படும் நீர்த்தடாகத்தின் சுவர்களின் மேற்பரப்பில் தண்ணிர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தி தொடர்ந்து அந்த வாய்க்கால்கள்மூலம் நீர் வழிந்தோடி அந்நீர் நவீன வடிகட்டிகளூடாகச் சுத்திகரித்தபின் அந்நீர் மீண்டும் தடாகத்துக்குள் திரும்பவும் வரும்படியான தொழில்நுட்பம்தான் நான் சொல்வது  சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீரில்ன் குளோரின் மற்றும் சுத்திகரிப்புக்குப் பாவிக்கப்பட்ட ஏனைய இராசாயணங்களது அனுமதிக்கப்பட்ட அடர்த்தியை எப்போதும் தகுதி வாய்தவர்களால் கண்காணிக்கப்படல்வேண்டும் 

தேசியத்தலைவர் பிறந்த ஊர் வல்வெட்டித்துறை ஆகும் அதே வல்வெட்டித்துறைய உள்ளடக்கிய உடுப்பிட்டித்தொகுதியிலேயே மகிந்தவினது பண்டாரநாயக்காவினதும் இடைப்பட்டவர்களதும் சிங்கள அரசியலின்மூலம் தமிழர்களைக்கொண்றொழித்த கைச்சின்னத்துக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள் வீழ்ந்தன. அதே அங்கயன் இராமநாதனுடன் செல்பி எடுத்தவர்கள் எல்லாம் விஜைசேதுபதியைத் துரோகி எனக்கூறுகிறார்கள் 
மணோ கூறியது என்னவென்றால் அதே தமிழர்கள் சிங்களக் கட்சிக்கு ஐந்து பாராளுமன்ற உருப்பினர்களைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள் ***************

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

யாழ். மத்திய கல்லூரியிலும் ஒரு நீச்சல் தடாகம் திறந்து வைக்கப் பட்டது. அதன் தற்போதைய நிலை எப்படி என்று தெரியவில்லை.

யாழ். மத்திய கல்லூரிக்கும் றீகல் தியேட்டருக்கும் இடையே உள்ள குளத்தை ஒரு நீச்சல் தடாகமாக்கும் முயற்சிகளை அச்சமயம் யாழ்நகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரைப்பா என்பவர் மேற்கொண்டார். நன்னீர் குறைபாடு உள்ள அந்தப் பிரதேசத்தில் தடாகம் அமைப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனாலும் அரசுடன் அவருக்கிருந்த செல்வாக்கை வைத்து, பல லட்சங்கள் செலவுசெய்து குளம் தூர்வாரப்பட்டபோதுதான் பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் அதற்காக அமைக்கப்பட்ட குழாய்களும் அந்தக் குளத்தில் வந்து சேருவது தெரியவந்தது. ஆயினும் அதற்கான மாற்றுவழிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

கட்டப்படும்போதே மிக முக்கியமான பிரச்சனையான   குளத்துக்கு  தேவையான 7லட்சம் லீற்றர் நல்ல தண்ணீர் எவ்வாறு பெறப்போகிறார்கள் என்பதுக்கு நடைமுறை சாத்தியமற்ற கடலநீரில் இருந்து நன்நீர் என்றார்கள் இன்று கவுண்டு போய் கிடக்கிறார்கள் .

யாழில் ஒருவருட மழை  வீழ்ச்சியின் அளவு தெரியுமா ? இந்த அரசியல்வாதிகளுக்கு ?

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

பெருமாள்,  ஒரு நீச்சல் தடாகத்தின் பயன்பாடு அதன் பெறுமதி  தெரியாத அங்கு வாழும்  மக்களின் சோம்பேறித்தனத்ததிற்கு வக்காலத்து வாங்க யார் யாரையோ எல்லாம் நீங்கள் திட்டித் தீர்கக வேண்டியுள்ளது. கவுண்டு கிடப்பது அங்குள்ள மக்களே அவர்களது சோம்பேறித்தனத்தால். 

குரங்கு கையில் பூமாலை என்ற தலைப்பு மிகப்பொருத்தமானதே. 

Link to comment
Share on other sites

4 minutes ago, Paanch said:

யாழ். மத்திய கல்லூரிக்கும் றீகல் தியேட்டருக்கும் இடையே உள்ள குளத்தை ஒரு நீச்சல் தடாகமாக்கும் முயற்சிகளை அச்சமயம் யாழ்நகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரைப்பா என்பவர் மேற்கொண்டார். நன்னீர் குறைபாடு உள்ள அந்தப் பிரதேசத்தில் தடாகம் அமைப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. ஆனாலும் அரசுடன் அவருக்கிருந்த செல்வாக்கை வைத்து, பல லட்சங்கள் செலவுசெய்து குளம் தூர்வாரப்பட்டபோதுதான் பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் அதற்காக அமைக்கப்பட்ட குழாய்களும் அந்தக் குளத்தில் வந்து சேருவது தெரியவந்தது. ஆயினும் அதற்கான மாற்றுவழிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

உண்மை பாஞ்ச். நகரத்தை தனது வீட்டைப் போல் பராமரித்தவர் அல்பிரட் துரையப்பா. அவரைப் போல் ஒரு சிறந்த மேயர் கடந்த அரை நூற்றாண்டில் இன்னும் யாழ்நகருக்கு கிடைக்கவில்லை.  

யாழ் ஆஸ்பத்திரி வீதியின் இருவழி போக்குவரத்தை சுலபமாக்குவதற்காக அன்று குறைந்த செலவில் கிடைத்த தார்ப்பீப்பாக்களை நிரையாக அடுக்கிய போது “பீப்பா மேயர்” என்று நக்கல் அடித்தனர் அன்றைய தேசியம் பேசிய கூட்டணியினர். பின்னர் அந்த தார்பீப்பாக்களுக்கு இடையில் மரங்களை நட்டு வீதியை செம்மைப்படுத்தினார். அவரின் காலத்தின் பின்னர் இப்படியான செயல் திட்டங்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

பெருமாள்,  ஒரு நீச்சல் தடாகத்தின் பயன்பாடு அதன் பெறுமதி  தெரியாத அங்கு வாழும்  மக்களின் சோம்பேறித்தனத்ததிற்கு வக்காலத்து வாங்க யார் யாரையோ எல்லாம் நீங்கள் திட்டித் தீர்கக வேண்டியுள்ளது. கவுண்டு கிடப்பது அங்குள்ள மக்களே அவர்களது சோம்பேறித்தனத்தால். 

 

22 minutes ago, Elugnajiru said:

பராமரிக்க தினமும் பெருமளவிலான நீர் தேவையில்லை  பாவிக்கப்பட்ட நீரையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் சுத்திகரித்துப் பாவிக்கும் முறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது அதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் மிக அதிகமான மின்சாரமும் தேவைப்படும் நீர்த்தடாகத்தின் சுவர்களின் மேற்பரப்பில் தண்ணிர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தி தொடர்ந்து அந்த வாய்க்கால்கள்மூலம் நீர் வழிந்தோடி அந்நீர் நவீன வடிகட்டிகளூடாகச் சுத்திகரித்தபின் அந்நீர் மீண்டும் தடாகத்துக்குள் திரும்பவும் வரும்படியான தொழில்நுட்பம்தான் நான் சொல்வது  சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீரில்ன் குளோரின் மற்றும் சுத்திகரிப்புக்குப் பாவிக்கப்பட்ட ஏனைய இராசாயணங்களது அனுமதிக்கப்பட்ட அடர்த்தியை எப்போதும் தகுதி வாய்தவர்களால் கண்காணிக்கப்படல்வேண்டும் 

துல்பன்  இந்த திட்டம் கோமாளி சிவாஜி லிங்கம் தூக்கி கொண்டு வரும்போதே அங்குள்ள மக்களால் Elugnajiru  சொல்வது போல் உள்ள அமைப்பையே கேட்டார்கள் இங்கும் அத்தகைய முறைதான் அநேக ஜிம் களில் ஆனால் விடாப்பிடியாக கடல் நீரில் இருந்து நல்ல தண்ணி பிரித்து எடுக்கும் இயந்திரம் மூலம் தண்ணீர் எடுப்பம் என்றார்கள்   இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று அங்கு வாழுபவர்களுக்கு புரியும் .

ஏற்கனவே தேவையில்லாத சிங்கள ராணுவம் குடாநாட்டின்  கடல் நீர் புகும் இடம்களையும் மழை  நீர் கடலுக்குள் விரைவாக செல்வதுக்கு   ஊக்கியாக இருக்கிறார்கள் காரணம் அவர்களின் பங்கர்கள்  மழை  நேரங்களில் வெள்ளம் புகாமல் இருப்பதுக்கு அவர்களின் சொந்த இடம் இல்லைத்தானே. 

மாநகரசபையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்குள்ள மக்கள் உள்ளே செல்லவே முடியாது எப்பவுமே பூட்டு  போட்டு வைத்துள்ளார்கள் ஏன் என்று கேட்டால் சப்பை காரணம்கள் சொல்கிறார்களாம் . இதில் அங்குள்ள  மக்கள் என்ன செய்வது ?

துறப்பு விழாவுக்கு உரிய நீரையே  நிலாவரை கிணறு யாழின் நிலக்கீழ்  நீர் ஆதாரம் அங்கிருந்து பவுசர்கள்  மூலமா கொண்டுவந்து நிரப்பி கொண்டாடி உள்ளார்கள் .

11 minutes ago, tulpen said:

உண்மை பாஞ்ச். நகரத்தை தனது வீட்டைப் போல் பராமரித்தவர் அல்பிரட் துரையப்பா. அவரைப் போல் ஒரு சிறந்த மேயர் கடந்த அரை நூற்றாண்டில் இன்னும் யாழ்நகருக்கு கிடைக்கவில்லை.  

வீட்டை போல பார்த்தவருக்கு யாழ் ஆஸ்பத்திரி கழிவு நீர் எங்கு போகுதென்று தெரியாத அடி  முட்டாள் அவருக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் .

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

ஆகா... இந்தக் கதை மாத்தள விமான நிலையத்தை நினைவூட்டுகிறதே, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

ஆகா... இந்தக் கதை மாத்தள விமான நிலையத்தை நினைவூட்டுகிறதே, 

 

அரசியல்வாதிகள் பணம் சேர்ப்பதில் அதி புத்திசாலிகள் இலங்கையின் ஆங்கில பத்திரிகைகளில் இந்த வெள்ளையானை கதை பேமஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு  பலமுறை  எழுதியது  தான்

மக்கள் தான் குரங்கு மனநிலையில் இருக்கிறார்கள்

உங்களுக்குத்தெரியும்

எனது ஊரிலே 7 மில்லியன் ரூபாய்கள் செலவளித்து

புங்குடுதீவு  மகாவித்தியாலயத்துக்கு சுற்றுமதில் கட்டிக்கொடுத்தோம்

வாசல்  கதவு  மட்டும்  பல  லட்சம்.

அந்தக்கதவு பூட்டுப்படாமல் காற்றுக்கு திறந்து திறந்து

மதிலில் அடிபட்டு மதில் உடைந்து  விட்டது

ஆனால் அதை அங்குள்ள மக்களோ

மாணவர்களோ  ஏன் அதிபர் ஆசிரியர்கள் கூட  கவனிக்கவில்லை

தடுக்க  வழிசெய்யவில்லை

இங்கிருந்து   ஊர் சென்ற ஒரு உறுப்பினரே அதை அவர்களின் கவனத்துக்கும் எமது கவனத்துக்கும் கொண்டு வந்தார்

இது தான் எல்லாவற்றிற்கும்?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கட்டப்படும்போதே மிக முக்கியமான பிரச்சனையான   குளத்துக்கு  தேவையான 7லட்சம் லீற்றர் நல்ல தண்ணீர் எவ்வாறு பெறப்போகிறார்கள் என்பதுக்கு நடைமுறை சாத்தியமற்ற கடலநீரில் இருந்து நன்நீர் என்றார்கள் இன்று கவுண்டு போய் கிடக்கிறார்கள் .

யாழில் ஒருவருட மழை  வீழ்ச்சியின் அளவு தெரியுமா ? இந்த அரசியல்வாதிகளுக்கு ?

வெள்ளையானையை கொண்டுவந்து பாலைவனத்தில் வைத்து பராமரிப்பது போல் கதை .

நீங்கள் சொலவதின் படி, வடபகுதி அல்லது அதை ஒத்த காலநிலை உள்ள இலங்கைத்  தீவின் எந்த பகுதியிலும் செயற்கை நீச்சல் தடாகம் அமைக்க கூடாது.  

நீச்சல் தெரிந்து இருப்பது, முக்கியமாக வளர்ந்து வரும் தலைமுறைக்கு, பொருளாதாரம், உடல் நலம், பொழுதுபோக்கு என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது., ஏனெனில் எமது 2/3 அடிப்படை வளம் (நிலத்தை விட்டால்), கடலும், குளங்கள், ஆறுகள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

நீங்கள் சொலவதின் படி, வடபகுதி அல்லது அதை ஒத்த காலநிலை உள்ள இலங்கைத்  தீவின் எந்த பகுதியிலும் செயற்கை நீச்சல் தடாகம் அமைக்க கூடாது.  

நீச்சல் தெரிந்து இருப்பது, முக்கியமாக வளர்ந்து வரும் தலைமுறைக்கு, பொருளாதாரம், உடல் நலம், பொழுதுபோக்கு என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது., ஏனெனில் எமது 2/3 அடிப்படை வளம் (நிலத்தை விட்டால்), கடலும், குளங்கள், ஆறுகள்.   

இதான் சொல்வது முந்திரித்தனமாய் மூக்கை நுழைக்க கூடாது என்பது .

என்கருத்துக்களை சரியாக வாசிக்காமல் வந்து கொளுவனும் என்பதுக்காக  இங்கு வந்து ................ .

நான் எங்கு நீச்சல் குளம் அமைப்பதை எதிர்த்தேன் ஏழு ஞாயிறு  சொல்வது போல் உள்ள திட்டமே  நடைமுறையில் சாத்தியம் என்பதையே இங்கு எழுதினது .அந்த நன்நீர் பிறப்பாக்கி இதுவரை அங்கு தொழில்ப்படவில்லை என்ற விபரமாவது தெரியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் உங்க ஆள் வடமராட்சி கிழக்கில் உள்ள ஐஸ் பாக்ரரிகளுக்கு அரசாங்கத்தால் அனுமதிக்க பட்ட அளவை விட கூடுதல் நிலக்கீழ் நன்நீரை உப யோகிக்க கோர்ட் ஏறி வாதாடி பெற்றுக்கொடுக்க இன்று வடமராட்ச்சியில் அநேக  நல் நீர் கிணறுகள் உவர்ப்பாக  மாறியுள்ளன சுமத்திரனுக்கு அந்த கேஸில் கிடைத்த வருமானம் தான் முக்கியம் அவரின் சுயநலத்தால்  பல்லாயிரக்கணக்கான மக்கள் உவர் நீரை பருகி இல்லாத நோய்களை சுமக்க தொடங்கியுள்ளார்கள் என்பதாவது அவருக்கு தெரியுமா ?

அங்கு 16 வயது பெண்பிள்ளைக்கும் சலரோகம் அங்கு 20 வயது ஆணுக்கு கழுத்தில் தைரொயிட் ஏன் என்று யாரவது சிந்திக்கிறார்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

நான் எங்கு நீச்சல் குளம் அமைப்பதை எதிர்த்தேன் ஏழு ஞாயிறு  சொல்வது போல் உள்ள திட்டமே  நடைமுறையில் சாத்தியம் என்பதையே இங்கு எழுதினது .அந்த நன்நீர் பிறப்பாக்கி இதுவரை அங்கு தொழில்ப்படவில்லை என்ற விபரமாவது தெரியுமா ?

நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று சொல்லவில்லை.

ஆனால், நீங்கள்  சொன்ன மழை வீழ்ச்சி அளவு என்பது, யாழ் குடாவிற்கு பொதுவானது. வடபகுதியில் பல இடங்களுக்கும் பொருந்தும்.

அந்த இடங்களில் அமைத்தால் இந்த பிரச்னை வரும் என்று தானே சொல்கிறீர்கள்.

நன்னீர் பிறப்பாகி தொழில்படவில்லை என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற தோற்றமே நீங்கள் எழுதியதில் இருந்து விளங்க கூடியதாக உள்ளது.   


இததற்கான தீர்வு வழிமுறைகளை பற்றி (இந்த நீச்சல் தடகத்துக்கு) ஒருவருமே சிந்திக்கவில்லையா?      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று சொல்லவில்லை.

ஆனால், நீங்கள்  சொன்ன மழை வீழ்ச்சி அளவு என்பது, யாழ் குடாவிற்கு பொதுவானது. வடபகுதியில் பல இடங்களுக்கும் பொருந்தும்.

அந்த இடங்களில் அமைத்தால் இந்த பிரச்னை வரும் என்று தானே சொல்கிறீர்கள்.

நன்னீர் பிறப்பாகி தொழில்படவில்லை என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற தோற்றமே நீங்கள் எழுதியதில் இருந்து விளங்க கூடியதாக உள்ளது.   


இததற்கான தீர்வு வழிமுறைகளை பற்றி (இந்த நீச்சல் தடகத்துக்கு) ஒருவருமே சிந்திக்கவில்லையா?      

யாழில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி எவ்வளவு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

யாழில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி எவ்வளவு ?

நினைவில் இல்லாவிட்டாலும் , அது பூச்சியத்திற்கு அண்மித்து இல்லை என்பது தெரியும், அதனால் மழை வீழ்ச்சி அளவு என்பது இரண்டாம், அல்லது மூன்றாம் பட்ச காரணம்.

ஓர் வசதி செய்து தரப்பட்டால், அதை பராமரிக்க வேண்டியது பாவிப்பார்கள் கடமை. 

பெருமாள், எல்லாவற்றையும் வேறு யாராவது பெற்று தருவார்கள் அல்லது செய்து தருவார்கள் என்று எதிர்பார்த்திஉ இருக்க கூடாது என்பதே நான் சொல்வது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

நன்னீர் பிறப்பாகி தொழில்படவில்லை என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற தோற்றமே நீங்கள் எழுதியதில் இருந்து விளங்க கூடியதாக உள்ளது.   

மக்களுக்கு என்று சொல்லி விட்டு ஏன் கவுன்சில் வைத்துக்கொண்டு இருக்குது உங்களுக்கு ஒன்று தெரியுமா அந்த ஊரில் பள்ளியும் சரி வைத்தியசாலையும் சரி அங்குள்ள ஊர் மக்களால் அமைக்கப்பட்டது  பேருக்கு அரசு மிகுதி 30 வீதமான கட்டிடடங்கள் அரசு அமைத்துக்கொண்டது இப்பவும் ஒன்றும் குறைந்து போகவில்லை மாநகரசபை அங்குள்ள மக்களிடம் பராமரிப்பை கொடுத்தாலே காணும் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்  ஆனால் அரசியல் விடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, பாவிக்காவிட்டாலும் அதை சுத்தமாக வைத்து இருக்கலாம் தானே? 

அதற்கான  ஊக்கம் ஏன் இல்லாமல் போனது, இப்படி விட்டால் தூர் வாரும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

பெருமாள், எல்லாவற்றையும் வேறு யாராவது பெற்று தருவார்கள் அல்லது செய்து தருவார்கள் என்று எதிர்பார்த்திஉ இருக்க கூடாது என்பதே நான் சொல்வது. 

வடகிழக்கில் எந்த  ஒரு ஊரையும் பார்க்காத உங்களுடன் வாதிடுவதில்  நேர விரயம் நன்றி வணக்கம் .

யாழில் நன் நீர் வளத்தை எப்படி கூட்டுவது என்று அருமையான திட்டத்தை கரவெட்டியை சேர்ந்த ஆனந்தராஜ எனும் எந்திரியார் 2015ல் வரைபு ஒரு பிளாக்கில் கண்டேன் சமிபத்தில் அதை தேடிய போது  காணவில்லை ஒரு சில நண்பர்களுடன் கதைத்த  போது  அவர் 2017ல் தவறி விட்டார் என்று சொல்கிறார்கள் அவர்பற்றிய மேலதிக விபரங்கள் யாரிடமும் இருக்கின்றதா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.