Jump to content

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்!  | Athavan News

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம் என பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலநேரங்களில் கொரோனா கிருமிகள், ஹெர்பஸ் என்ற வைரசைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் காதுகேளாமை குறைபாடு உண்டாக வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்ட் மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார். ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரஸால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் இரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

http://athavannews.com/கொவிட்-19-தொற்றினால்-பாதிக-6/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் 19 காரணமாக முழு செவித்திறன் பாதிப்பு... யாருக்கு ஏற்படலாம்?

Ear

Ear ( Photo by Kate Hliznitsova on Unsplash )

உட்செவியின் நரம்பு பாதிக்கப்பட்டு செவித்திறனை இழந்துவிட்டால் இயற்கையாக அந்தத் திறனை மீட்டெடுக்க முடியாது.

நிபுணர்கள் கோவிட்-19 பெருந்தொற்றை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து கொண்டிருக்கும் வேளையில், அதன் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே போவது கவலையளிக்கிறது. கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றைக் கையாள தனி சிகிச்சை மையம் தொடங்கும் அளவுக்கு பின்விளைவுகள் அதிகமாக உள்ளன. அதன் வரிசையில் தற்போது செவித்திறன் இழப்பும் சேர்ந்துள்ளது.

Novel Coronavirus SARS-CoV-2
 
Novel Coronavirus SARS-CoV-2 Photo: AP

இந்தத் தகவலைக் கேட்கும்போது `கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா?' என்று கேட்பதுபோல் சம்பந்தமே இல்லாத பிரச்னையாகத் தோன்றலாம். ஆனால், மருத்துவ ரீதியாக இந்தப் பிரச்னை ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டு காது கேட்காமல் போய்விட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவும் கோவிட்-19 தொற்றுக்கும், நிரந்தரமாகக் காது கேட்கும் திறனை இழப்பதற்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 45 வயது ஆண் ஒருவர் கோவிட் சிகிச்சைக்குப் பிறகு, செவித்திறனை இழந்துவிட்டதாக இங்கிலாந்திலுள்ள காது- மூக்கு - தொண்டை மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னையும் இருந்திருக்கிறது. இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சுவாசிப்பதில் பிரச்னை இருக்கவே அவருக்கு ஆக்ஸிஜனும் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு வாரம் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய நிலையில், சுவாசிப்பதற்கு செலுத்தப்பட்ட டியூப் நீக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சென்றவரின் இடது காதில் இரைச்சல் சத்தம் கேட்பது போன்று தோன்றியிருக்கிறது. தொடர்ந்து சட்டென்று இடது காது கேட்காமல் போய்விட்டது. மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துபடி, கோவிட்-19 பாதிப்புக்கு முன் அவருக்கு காதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆஸ்துமா பிரச்னையைத் தவிர, அவருக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. மிகவும் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார்.

அவர் செவிப்பாதையை ஆராய்ந்தபோது அதில் அடைப்போ அழற்சியோ தென்படவில்லை. காது கேட்கும் பரிசோதனை செய்து பார்த்தபோது இடது காது கேட்கவில்லை. இதன் அடிப்படையில் செவித்திறன் பாதிக்கப்படுவதும் கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய விளைவாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவது கண்டறியப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, சிகிச்சை பெறும் நோயாளிகளின் செவித்திறன் குறித்தும் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ENT Dr. Sudha Maheswari
 

இது பற்றி காது-மூக்கு-தொண்டை மருத்துவர் சுதா மகேஸ்வரியிடம் கேட்டோம்:

``கோவிட்-19 பாதிப்பு உள் காது நரம்புகளைப் பாதிக்கிறது. பாதிப்பின் அளவு 40 அல்லது 50 சதவிகிதம் என நபருக்கு நபர் வேறுபடும். எப்படி கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறதோ, அதே போன்று காதுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களிலும் ரத்த உறைவு ஏற்பட்டு செவித்திறன் பாதிக்கப்படுகிறது.

உட்செவியின் நரம்பு பாதிக்கப்பட்டு செவித்திறனை இழந்துவிட்டால் இயற்கையாக அந்தத் திறனை மீட்டெடுக்க முடியாது.

செவித்திறன் இழப்பு 70 அல்லது 80 சதவிகிதம் பாதித்தால் காது கேட்கும் கருவி பொருத்துவதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய முடியும். 100 சதவிகிதம் பாதிக்கப்படும் பட்சத்தில் கருவி பொருத்த முடியாது. முழுவதுமாக செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து காக்ளியர் இம்ப்ளான்ட் எனப்படும் கருவியைக் காதுக்குள் பொருத்துவதன் மூலம் செவித்திறன் பெறலாம். மும்பையில் கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு, செவித்திறன் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

hearing loss
 
hearing loss

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அங்கு பொருத்தியிருக்கும் கருவிகள், உபகரணங்களின் இரைச்சல் சத்தத்தின் காரணமாகக் காது நரம்புகள் பாதிக்கப்படலாம். அந்தநேரத்தில் எடுக்கும் சில உயிர் காக்கும் மருந்துகளும் ரத்த உறைவை ஏற்படுத்தி செவித்திறனை பாதிக்கலாம்.

திடீரென்று செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டால் அது கோவிட்-19 பாதிப்பாகக்கூட இருக்கலாம். எனவே, கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு, செவித்திறனில் பாதிப்பு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுக வேண்டும். திடீரென்று யாருக்கேனும் செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டால் உடனே கோவிட்-19 பரிசோதனை செய்து பார்க்கத் தயங்கக் கூடாது" என்றார்.

Swab Test
 
Swab Test

கொரோனா வைரஸ் என்ற நுண்கிருமி மனிதனின் ஆணி வேர் வரை அசைத்துப் பார்த்துவிடுகிறது. எனவே, ஊரடங்கு நிலை முடிந்து நம்முடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாலும் நோய்த் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது தனிமனிதனின் கடமை.

 

https://www.vikatan.com/health/healthy/how-covid-19-can-lead-to-permanent-hearing-loss

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.