Jump to content

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்

61eede68-Maha-Vajiralongkorn-1-Progresst

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார்.

இந்நிலையில் வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார்.

பதவி விலக வலியுறுத்தல்

ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள், ஒன்று கூடி வஜிரலோங்கார்னுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மன்னரின்  ஆட்சியில் சீரமைப்புகள் கொண்டு வரவேண்டும், பிரதமர், பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

மன்னர் கார்

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று மன்னர் நாடு திரும்பியபோது அவர் பவனி வந்த சொகுசு காரை மக்கள் மறிக்க முயன்றனர். இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே அந்த நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

மக்கள் ஐந்து பேர் அல்லது அதற்கு மேல் யாரும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட அனைத்து வகை ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னருக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய தலைவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சல்யூட் போராட்டம்

ஆனால், இதற்கு மாற்றாக போராட்டக்காரர்கள் வேறு ஒரு நூதன வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மூன்று விரலால் சல்யூட் செய்கிறார்கள். ஆனால் இப்போது மக்கள் கூட முடியவில்லை என்றபோதிலும், இந்த எதிர்ப்பு  கடைபிடிக்கப்படுகிறது.

Screenshot-2020-10-16-13-25-28-711-org-m

எமெர்ஜென்சி

தாய்லாந்தில் என்ன நடக்கிறது என்பது ஊடகங்கள் வழியாக வெளியே போய்விடாமல் இருக்க அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால், தாய்லாந்தில் எமெர்ஜென்சி உள்ள நிலையில், இந்த புது எமெர்ஜென்சி எப்படி வித்தியாசப்படுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

https://tamil.oneindia.com/news/international/thailand-government-declared-a-strict-new-state-of-emergency-400587.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசா..... அந்தப்புரத்திலையே.... சரியான அலுவலா இருந்திருக்கிறார்... 😍

அப்பப்ப வெளில வந்து, நாட்டில் மும்மாரி பொழியிதா மந்திரிமாரே எண்டாவது கேட்டிருக்கலாம்... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசாவுக்கு கிடைத்த யோகம்....

தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று, சனம்... வயித்தெரிச்சல்லை போராட்டம் நடத்துகிறார்கள். 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

61eede68-Maha-Vajiralongkorn-1-Progresst

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார்.

முடி.. (மயிர்)  நரைத்த, மன்னர் என்றாலும்,
தலைக்கு  "டை "  அடிக்காமல், இருந்து....
இவ்வளவு... சாதனையை படைக்கும் மன்னர், பலே... கில்லாடிதான்.  😜 :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முடி.. (மயிர்)  நரைத்த, மன்னர் என்றாலும்,
தலைக்கு  "டை "  அடிக்காமல், இருந்து....
இவ்வளவு... சாதனையை படைக்கும் மன்னர், பலே... கில்லாடிதான்.  😜 :grin: 🤣

சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ பெண்களை கவரும் விசயம்.

நான் கூட தாடிக்கு டை அடிப்பதில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ பெண்களை கவரும் விசயம்.

நான் கூட தாடிக்கு டை அடிப்பதில்லை😂

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

🤣

கொள்கை பிடிப்புக்கு ஒர் எல்லையே இல்லையா?

மிஸ் பண்ணிடாதேங்கோ...இப்பெல்லாம் கறுப்பு தலைமுடி+ அரை நரைத்தாடிக்குத்தான் கிராக்கி.

நான் சொன்னமாரி வெளிகிட்டு ஒக்டோபர்பெஸ்டுக்கு போங்கோ ....

பிறகு டிமாண்ட்ட பாருங்கோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣

கொள்கை பிடிப்புக்கு ஒர் எல்லையே இல்லையா?

மிஸ் பண்ணிடாதேங்கோ...இப்பெல்லாம் கறுப்பு தலைமுடி+ அரை நரைத்தாடிக்குத்தான் கிராக்கி.

நான் சொன்னமாரி வெளிகிட்டு ஒக்டோபர்பெஸ்டுக்கு போங்கோ ....

பிறகு டிமாண்ட்ட பாருங்கோ😂

Oktoberfest 2020 abgesagt: Absage der Wiesn in München: Kein Volksfest  wegen Corona | Südwest Presse Online

கொரோனா... பயப்பிடுத்துது,
இல்லாட்டி... ஒக்ரோபர்  பெஸ்ட்டுக்கு,  
ஒரு, சவாரி... அடித்திருக்கலாம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

இதை வாசிச்ச நேரம் தொடக்கம்...
நிண்டு சிரிக்கிறன்
சரிஞ்சு சிரிக்கிறன்
வளைஞ்சு சிரிக்கிறன்
பிரண்டு சிரிக்கிறன்
கிடந்து சிரிக்கிறன்
உருண்டு சிரிக்கிறன்
மல்லாக்காய் படுத்து சிரிக்கிறன்
சுருண்டு கிடந்து சிரிக்கிறன்
குப்புற கிடந்து சிரிக்கிறன்
தலைகீழாய் நிண்டு சிரிக்கிறன்...சிறித்தம்பி இனியும் என்னாலை ஏலாது.பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு 😎 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

இதை வாசிச்ச நேரம் தொடக்கம்...
நிண்டு சிரிக்கிறன்
சரிஞ்சு சிரிக்கிறன்
வளைஞ்சு சிரிக்கிறன்
பிரண்டு சிரிக்கிறன்
கிடந்து சிரிக்கிறன்
உருண்டு சிரிக்கிறன்
மல்லாக்காய் படுத்து சிரிக்கிறன்
சுருண்டு கிடந்து சிரிக்கிறன்
குப்புற கிடந்து சிரிக்கிறன்
தலைகீழாய் நிண்டு சிரிக்கிறன்...சிறித்தம்பி இனியும் என்னாலை ஏலாது.பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு 😎 😁

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

நான் இதை  பார்க்கல😜

(சிறியையும் பார்த்ததில்ல🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

Vadivelu GIFs | Tenor 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.