Jump to content

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்

61eede68-Maha-Vajiralongkorn-1-Progresst

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார்.

இந்நிலையில் வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார்.

பதவி விலக வலியுறுத்தல்

ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள், ஒன்று கூடி வஜிரலோங்கார்னுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மன்னரின்  ஆட்சியில் சீரமைப்புகள் கொண்டு வரவேண்டும், பிரதமர், பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

மன்னர் கார்

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று மன்னர் நாடு திரும்பியபோது அவர் பவனி வந்த சொகுசு காரை மக்கள் மறிக்க முயன்றனர். இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே அந்த நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

மக்கள் ஐந்து பேர் அல்லது அதற்கு மேல் யாரும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட அனைத்து வகை ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னருக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய தலைவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சல்யூட் போராட்டம்

ஆனால், இதற்கு மாற்றாக போராட்டக்காரர்கள் வேறு ஒரு நூதன வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மூன்று விரலால் சல்யூட் செய்கிறார்கள். ஆனால் இப்போது மக்கள் கூட முடியவில்லை என்றபோதிலும், இந்த எதிர்ப்பு  கடைபிடிக்கப்படுகிறது.

Screenshot-2020-10-16-13-25-28-711-org-m

எமெர்ஜென்சி

தாய்லாந்தில் என்ன நடக்கிறது என்பது ஊடகங்கள் வழியாக வெளியே போய்விடாமல் இருக்க அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால், தாய்லாந்தில் எமெர்ஜென்சி உள்ள நிலையில், இந்த புது எமெர்ஜென்சி எப்படி வித்தியாசப்படுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

https://tamil.oneindia.com/news/international/thailand-government-declared-a-strict-new-state-of-emergency-400587.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசா..... அந்தப்புரத்திலையே.... சரியான அலுவலா இருந்திருக்கிறார்... 😍

அப்பப்ப வெளில வந்து, நாட்டில் மும்மாரி பொழியிதா மந்திரிமாரே எண்டாவது கேட்டிருக்கலாம்... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசாவுக்கு கிடைத்த யோகம்....

தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று, சனம்... வயித்தெரிச்சல்லை போராட்டம் நடத்துகிறார்கள். 😁 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

61eede68-Maha-Vajiralongkorn-1-Progresst

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார்.

முடி.. (மயிர்)  நரைத்த, மன்னர் என்றாலும்,
தலைக்கு  "டை "  அடிக்காமல், இருந்து....
இவ்வளவு... சாதனையை படைக்கும் மன்னர், பலே... கில்லாடிதான்.  😜 :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முடி.. (மயிர்)  நரைத்த, மன்னர் என்றாலும்,
தலைக்கு  "டை "  அடிக்காமல், இருந்து....
இவ்வளவு... சாதனையை படைக்கும் மன்னர், பலே... கில்லாடிதான்.  😜 :grin: 🤣

சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ பெண்களை கவரும் விசயம்.

நான் கூட தாடிக்கு டை அடிப்பதில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சால்ட் அண்ட் பெப்பர் தான் இப்போ பெண்களை கவரும் விசயம்.

நான் கூட தாடிக்கு டை அடிப்பதில்லை😂

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

🤣

கொள்கை பிடிப்புக்கு ஒர் எல்லையே இல்லையா?

மிஸ் பண்ணிடாதேங்கோ...இப்பெல்லாம் கறுப்பு தலைமுடி+ அரை நரைத்தாடிக்குத்தான் கிராக்கி.

நான் சொன்னமாரி வெளிகிட்டு ஒக்டோபர்பெஸ்டுக்கு போங்கோ ....

பிறகு டிமாண்ட்ட பாருங்கோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣

கொள்கை பிடிப்புக்கு ஒர் எல்லையே இல்லையா?

மிஸ் பண்ணிடாதேங்கோ...இப்பெல்லாம் கறுப்பு தலைமுடி+ அரை நரைத்தாடிக்குத்தான் கிராக்கி.

நான் சொன்னமாரி வெளிகிட்டு ஒக்டோபர்பெஸ்டுக்கு போங்கோ ....

பிறகு டிமாண்ட்ட பாருங்கோ😂

Oktoberfest 2020 abgesagt: Absage der Wiesn in München: Kein Volksfest  wegen Corona | Südwest Presse Online

கொரோனா... பயப்பிடுத்துது,
இல்லாட்டி... ஒக்ரோபர்  பெஸ்ட்டுக்கு,  
ஒரு, சவாரி... அடித்திருக்கலாம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

எனது வாழ்க்கையில்....  தலைக்கு  "டை"  அடித்ததில்லை. :grin:
"ஷேவ்"  எடுக்காமல், வெளியே.. போகவே மாட்டேன்.   
ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு, கொள்கை இருக்கும் தானே...  🤣

இதை வாசிச்ச நேரம் தொடக்கம்...
நிண்டு சிரிக்கிறன்
சரிஞ்சு சிரிக்கிறன்
வளைஞ்சு சிரிக்கிறன்
பிரண்டு சிரிக்கிறன்
கிடந்து சிரிக்கிறன்
உருண்டு சிரிக்கிறன்
மல்லாக்காய் படுத்து சிரிக்கிறன்
சுருண்டு கிடந்து சிரிக்கிறன்
குப்புற கிடந்து சிரிக்கிறன்
தலைகீழாய் நிண்டு சிரிக்கிறன்...சிறித்தம்பி இனியும் என்னாலை ஏலாது.பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு 😎 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

இதை வாசிச்ச நேரம் தொடக்கம்...
நிண்டு சிரிக்கிறன்
சரிஞ்சு சிரிக்கிறன்
வளைஞ்சு சிரிக்கிறன்
பிரண்டு சிரிக்கிறன்
கிடந்து சிரிக்கிறன்
உருண்டு சிரிக்கிறன்
மல்லாக்காய் படுத்து சிரிக்கிறன்
சுருண்டு கிடந்து சிரிக்கிறன்
குப்புற கிடந்து சிரிக்கிறன்
தலைகீழாய் நிண்டு சிரிக்கிறன்...சிறித்தம்பி இனியும் என்னாலை ஏலாது.பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு 😎 😁

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

நான் இதை  பார்க்கல😜

(சிறியையும் பார்த்ததில்ல🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இருந்தால் தானே “டை” அடிக்கேளும் எண்டு சொல்ல வாறியள்..... 😁

Vadivelu GIFs | Tenor 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.