Jump to content

ஏன் 800 படத்தை எதிர்க்க வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
0324789E-6FB2-4A5B-90D1-E1FC66A55F7F.jpeg
 

 

ஈழத்தில் நடந்த தமிழர்போராட்டம் இயக்க வடிவம்பெற்று பின்னர் ஒரு பகுதியில்ஆட்சி அமைத்து அதன் பின்னர்வல்லரசுகளின் ஆசியுடன்புலிகளுக்கு எதிரான ஒருஅநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இனஅழித்தொழிப்புக்கு ஆளானதைஅறிவோம். இந்த விசயத்தில் ஒருவினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்தபழியையும் புலிகளின் மீதேசுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும்ஜீன்ஸும் அணிந்து வன்னியப்பெண்களை ஏமாற்றுகிறார்கள்என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒருதரப்பினர் அந்த பெண்ஒழுக்கங்கெட்டவள் எனப்பேசுவதைப் போல. திட்டமிட்டதாக்குதல் மூலம் ஒரு தரப்புமக்களைக் கொன்று விட்டுஅவர்களும் தான் கலவரத்தில்ஈடுபட்டார் என்பதைப் போல. யூதர்களை ஜெர்மனியில்நாஜிக்கள் அழித்தொழித்தபோது ஒரு சாரார் - நாஜிஅல்லாதோர் கூட - “இந்தயூதர்களும் சளைத்தவர்கள்அல்ல, அவர்களின் தன்னலமேஇந்நிலைக்குக் காரணம் எனபழியை மாற்றிப் போட்டார்கள்.

 இந்த பாதிக்கப்பட்டவர்களைபழிப்பதில் தமிழர்களும் ஒருபகுதி ஈழத்தமிழர்களும்ஈடுபடுவதை அறிவோம். ஏன்இப்படி செய்கிறார்கள்?

 

இரண்டு காரணங்கள்:

 

1) “நாங்கள் அமைதியைவிரும்புகிறோம்” - மணிரத்னம்போன்றோரின் படைப்புகளில்இப்படியான ஒரு தொனி வரும். இது ஒரு கார்ப்பரேட்வாதகதையாடல் - நவதாராளவாதபொருளாதாரம் கொழிப்பதற்குஅமைதி அவசியம். ஆனால்இந்த அமைதிக்குள் இருக்கும்போது தான் மக்கள் உங்கள்கண்முன்னால் பெருங்கூட்டமாய்அழிக்கப்பட்டதைப்பார்க்கிறீர்கள். அப்போது ஒருநிம்மதியின்மை ஏற்படுகிறது - உற்பத்தி, நுகர்வு, துய்ப்பு எனஇருப்பதே அமைதி’. இதில்உள்ளார்ந்து உங்கள்நினைவுகள் சார்ந்த ஒருநிம்மதியிழப்பு வரும் போதுஅப்பழியை பேசிப்பேசிபாதிக்கப்பட்டவர்கள் பால்போட்டு விடுவது. அநீதிஇழைத்தவர்கள் மீதுபோடலாமே? முடியாது. அவர்களே உங்கள் முதலாளிகள். அவர்களே ஆளும் வர்க்கம். அவர்கள் நிம்மதியிழந்தால்உங்கள் நிம்மதியும் கெட்டுவிடும் என அஞ்சுகிறீர்கள்.

 

அமைதியை விரும்புவோர் ஏன்அமைதிக்கு மிக அதிகமாய்குந்தகம் விளைவித்தோரைகுற்றம் சாட்டுவதில்லை என்பதில்தான் உள்ளது இந்த பாசாங்கின்மையம்.

 

முரளிதரன் பேசும் போது, “முன்புபுலிகள் இருந்த போது பிரதானசாலை வழி போக  முடியாது, சிங்கள அரசியல் தலைவர்கள்மீது புலிகள் குண்டுபோடுவார்கள், தாக்குவார்கள், அதனால் நாங்கள் சுற்றிவளைத்து பயணிக்க வேண்டிவந்தது, ஒருநாளும் நிம்மதிஇருந்ததில்லை என்கிறார். ஆனால் எங்குமே அவர் சிங்களராணுவத்தினர்களும், சிங்களபேரினவாதிகளும் செய்தகொடுங்குற்றங்களைப் பற்றிப்பேசுவதில்லை. எளியோருக்கும்வலியோருக்கும் இடையேசண்டை நடக்கும் போதுஎளியோரை ஆதரிக்க வேண்டும்என்பது உலக நியதி. இதில்தமிழர்-சிங்களவர் வித்தியாசம்கூட இரண்டாம் பட்சமே. முரளிதரனால் ஏன் அப்படி செய்யமுடியவில்லை என்றால்அவருக்கு சிங்களஅரசியல்வாதிகளின் ஆதரவுவேண்டும் என்பதால் அல்ல. அதற்கு அவர் அமைதியாகஇருந்து விட்டுப் போகலாமே. அவர் அடிமனத்தில் இந்தஎண்ணமே இருக்கிறது - அவருக்கு நிம்மதி வேண்டும் - உள்ளார்ந்த நிம்மதி - அதற்குநினைவுகள் ஏற்படுத்தும்நிம்மதிழப்பு  அவருக்கு பெரும்தொந்தரவாகிறது. அதற்காகவேஇப்படிப் பேசுகிறார்.

 

அடுத்து இலங்கையைபிரதிநுத்துவம் செய்த தமிழராகமுரளிதரனுக்கு தன் தேசியம்சார்ந்த ஒரு பிரச்சனைஏற்படுகிறது - அவருக்குஇலங்கை அரசுஆரம்பத்திலிருந்தே எல்லா விதஆதரவுகளையும், மரியாதையையும் கொடுக்கிறது. அவரது பந்து வீச்சுசட்டவிரோதமானது என சர்ச்சைவெடித்த போது இலங்கைகிரிக்கெட் வாரியம் கடைசிவரை அவருக்காக போராடியது. சிங்கள் ரசிகர்களும் அவருக்காககைதட்டுகிறார்கள். அவர்இலங்கை தேசியவாதத்தைஏற்கிறார். ஆனால்ஈழப்போராட்டம் அவருக்கு ஒருமுரணை, அதனாலானஅகத்தொந்தரவை அளிக்கிறது. பிற தமிழர்களுக்குவரலாற்றுரீதியாகவேஇத்தகையை மரியாதையும்ஆதரவும் இலங்கை அரசால் ஏன்வழங்கப்படவில்லை எனயோசிக்க அவர் தயாரில்லை. ஏனென்றால் அவரது தேசியஉணர்வை அது நொறுக்கி விடும். இலங்கை இறையாண்மைஒருவித சிங்கள இறையாண்மைஎனப் பார்க்க அவர்விரும்பவில்லை. “இவன்கள் ஏன்இப்படி தொந்தரவுகொடுக்கிறார்கள்?” என்றேஅவரது மனம் சிந்திக்கும். அதுஏன் மாறாக சிந்திக்கவில்லைஎன்பதற்கு அடுத்து வருகிறேன்.

 

2) அரசியல் நீக்கம்:

அரசியல் நீக்கமானதுநவதாராளாவாதத்தின்அடிப்படையான ஒரு கொள்கை, அது மக்களிடையே ஒரு பொதுசுபாவமாகப் படிகிறது. நீங்கள்நமது பள்ளிக்கல்வியில் இருந்தேஅரசியல்ரீதியான கருத்துக்களைஎங்கும் பொதுஉரையாடல்களில் காணமுடியாது. நமது பொழுதுபோக்குநிகழ்ச்சிகளிலும் அரசியல்சித்தாந்த கருத்துக்கள் இராது. நான் கல்லூரியில் சமூகவியல்வகுப்புகளில் போய் அமர்வேன். அங்கு சமூகப் பிரச்சனைகள்சார்ந்து தீவிர விவாதங்கள் எழும்போது மாணவர்கள் இவற்றைஅதிகமும் தமது தனிப்பட்டகண்ணோட்டத்தில் இருந்தேநோக்குவதை, மிக மிகஅரிதாகவே அரசியல் சார்ந்து, சித்தாந்தம் சார்ந்துயோசிப்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இந்த மாணவர்கள்தனியார் பள்ளிகளால்பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அங்கு மாணவர்கள் செய்தியைக்கூட வெறும் செய்தியாக, அரசியலற்றதாகவேபார்ப்பார்கள். அரசுப்பள்ளிகளும்ஒன்றும் மேலில்லை.

 

 ஏன் ஒரு சமூகம் அரசியலையோசிக்க வேண்டும், ஏன்அரசியல் சார்ந்து ஒருவிசயத்தைப் பார்க்க வேண்டும்?

 

ஒரு சமூகம் குடிமை சமூகமாகமாற அது அதிகார அரசியலில்பங்கேற்க வேண்டும். அதிகாரஅரசியலுக்குள் வர அதுசித்தாந்த அரசியலை ஏற்கவேண்டும். இல்லாவிடில் அதுதொடர்ந்து சுரண்டப்படும், இனவாத அழிப்புக்கு ஆளாகும், இதை உணராமலே சதாகையேந்தும் நிலையில்இருக்கும், இதைஉணராதிருக்கும்படிநவதாராளாவாதம் நுகர்வுவாழ்க்கையில் மக்களைஅதிகமாய் தள்ளும்: நமதுவேலைகள் நம்மை நமதுஇருப்பில் இருந்துஅந்நியப்படுத்துகின்றன, வெறுமை தோன்றும். வெறுமைஅதிகமாக நாம் குடி, கேளிக்கை, சினிமா என சீரழிவோம். அரசியல் பேச்சு எழும் போதுஇவர்கள் நம்மிடம் அரசியல்பேசினால் நிம்மதி போய் விடும், நிலையின்மை வரும், வறுமைஏற்படும் எனஅச்சுறுத்துவார்கள். இவைபொய்ப்புரட்டு என யோசிக்கும்நிலையில் நாம் இருக்கமாட்டார்கள். நாம் ஒரு குடிமைசமூகமாக அல்ல நுகர்வுசமூகமாகவே எஞ்சுவோம்.

 

 தேர்தலின் போது பணம் வாங்கிவாக்களிக்கிறார்கள் எனஇம்மக்களை கேலி வேறுபண்ணுவோம். எல்லாவற்றையும்நுகர்வாக்கும் இந்தபொருளாதார அமைப்பேதேர்தலிலும் ஊழலைக் கொண்டுவருகிறது என நமக்குப் புரியாது. நான் அரசியலற்றவன், நடுநிலைஎன்று பேசிகிறவர்கள்இப்படியாக நுகர்வைத் தவிரஎதுவும் முக்கியமில்லை எனசிந்திக்கும் அப்பாவிகளே’. இவர்களே புலிகள் உள்ளிட்டஆயுதமேந்திய குழுக்களின்போராட்டத்தைஆதரிக்காதவர்கள். ஏனென்றால்இவர்கள் என்றுமேஅரசியல்மயப்பட்டதில்லை. வெள்ளைக்காரர்கள் இந்தியதுணைக்கண்டத்தை ஆண்டகாலத்தில் இருந்தே இவர்கள்அப்படித்தான். வெள்ளையர்கள்நல்லவர்கள் என நம்புவதேநிம்மதியாக ஒரு காலத்தில்இங்கு இருந்தது. (வெள்ளையர்கள் இந்தியாவைசிறப்பாக ஆண்டார்கள்என்பதான வசனங்களைஅடிக்கடி பெருமூச்செறிந்துசொல்வார்கள்.) வெள்ளையர்காலனியவாதத்தின்பிள்ளைகளான நம்மைப்போன்றே ஒரு பகுதி இலங்கைத்தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசியல் நீக்கத்தைவிரும்பினார்கள். “சிங்களவாதத்துக்கு எதிரானபோராட்டம் எங்கள் அன்றாடவாழ்க்கையை பாதித்தது, ‘நிம்மதியை ஒழித்தது, புலிகளால் நாங்கள்நிம்மதியிழந்தோம்.” எனக்கோரும் இவர்கள் வேறெந்தவிதத்தில் (அஹிம்சையாகப்) போராடினார்கள்? தமிழர்சார்பான அரசியல் கட்சிகள்தோன்றின காலத்தில் இருந்தேஅங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் பேரினவாதத்துக்குஎதிராக ஒட்டுமொத்த மக்களும்திரண்டு தெருவுக்கு வந்தார்கள்என எந்த வரலாறும் அங்குஇல்லை.

 ஆயுதம் ஏந்திய, ஏந்தாத இந்தபோராட்டங்களும், எதிர்ப்புகளும் தோன்றிய போதேதமிழர் சமூகம் இலங்கையில்தீவிரமாய்அரசியல்வயப்படுகிறது. எதற்குப்போராடணும், அமைதியாகப்போலாமே எனக் கேட்டவர்கள், இன்றும் கேட்பவர்கள்அரசியல்வயப்படுவதை, ஒருகுடிமை சமூகமாய்உருமாறுவதை விரும்பாதவர்கள். அவர்கள் பேரினவாதத்தால் தாம்ஒடுக்கப்படுவதை கண்மூடிஏற்றுக்கொண்டே, எல்லாவன்முறைகளின் பழியையும்ஆயுதம் தரித்த போராளிகள் மீதுபோடுவதை வசதியாககருதினார்கள். அவர்களேஇன்றும் புலம்பெயர் தமிழர்மத்தியில் புல்லுருவிகளாய் இருக்கிறார்கள்.

 

நான் வலியுறுத்தி சொல்கிறேன் - நான் ஆயுதமேந்தியபோராட்டத்தைஆதரிக்கவில்லை. (வலியவனேஅதில் ஜெயிக்க முடியும்.) ஈழத்தில் அது ஏற்பட்டு விட்டது. அதில் வெல்வதற்கான சக்திபுலிகளுக்கு இல்லை என்றதால்தோற்றார்கள், ஆனால்தோல்வியின் பக்கத்தில் நிற்பதேநீதி. இப்போது போய் அதன்மொத்த பழியையும் புலிகள் மிதுபோடுவது கயவாளித்தனம்.

 

புலிகள் ஆயுதமேந்தியபோராட்டத்தை பெரும்இயக்கமாய்தோற்றுவித்திருக்காவிட்டால்அங்கு மக்கள் அமைதியாக, புன்னகை பூத்த படிவாழ்ந்திருப்பார்கள் என ஒருதரப்பினர் நம்புகிறார்கள். இல்லை. சிறுபான்மைத்தமிழர்களை எதிரியாக்கிய ஒருஇனவாத அரசியல் அங்கு நீண்டகாலமாய் வாக்கரசியலாகிஇருக்கிறது. அதைத் தக்கவைக்க அவர்கள் பல விதஒடுக்குமுறைகளை அவிழ்த்துவிட்டபடி இருந்திருப்பார்கள். எந்த அடிப்படை உரிமையும்இல்லாத அடிமைகளாக்கிநாயாய் நடத்தியிருப்பார்கள். புலிகளின் இயக்கம் இதில் ஒருஇடைநிறுத்தத்தை கொண்டுவந்தது, ஆனால் யுத்தம் வெடித்தபோது சிங்களவர்கள் தம் நீண்டகாலத் திட்டத்தைநிறைவேற்றினார்கள். ரத்தத்தைக் காட்டி சிங்களமக்களை இப்போதைக்குஅமைதிப்படுத்திஇருக்கிறார்கள். ஆனால்இனவாதத்தின் ரத்தவெறிசுலபத்தில் அடங்காது. அடுத்தஅரை நூற்றாண்டில் அவர்களின்பெரும்பான்மைவாத அரசியலைப்பொறுத்து இந்தியாவில் உள்ளCAA போன்ற பலஒடுக்குமுறைகள் அங்கும்சட்டரீதியாகவே நிகழும். எல்லாபேரினவாத அரசியலும்இறுதியில் ஜெர்மனியிலே போய்முடியும். தவிர்க்கவே முடியாது. அடுத்த அரை நூற்றாண்டுக்குள்இங்கு இஸ்லாமியரும் அங்குதமிழர்களும் மீண்டும் குடியுரிமைஇழப்பு, அடிப்படை உரிமைகள்இழப்பு போன்ற கொடுமைகளைபரவலாக - சட்டரீதியாக - சந்திப்பார்கள். இரண்டுநாடுகளிலும் தடுப்பு முகாம்கள்அன்றாட எதார்த்தமாகும். அப்போது இலங்கையில்பழிபோட (போராட) புலிகள்இருக்க மாட்டார்கள்

 

தமிழர்களுக்கு ஈழப்போரில்நடந்த உண்மை தெரியாது, அவர்கள் கற்பனை செய்துகண்ணீர் வடிக்கிறார்கள், போரின் போது எந்தஅழுத்தத்தையும்கொடுக்கவில்லை, இப்போதுஒப்பாரி வைக்கிறார்கள்என்பதெல்லாம் அநியாயம். தமிழர்களில் ஒரு சிறிய தரப்பினர்மட்டுமே ஈழ ஆதரவு அரசியலைமுன்னெடுக்கிறார்கள். ஆனால்கணிசமான தமிழர்கள் கடந்தஅரை நூற்றாண்டாகஅரசியல்வயப்படாமலே வெறும்நுகர்வு, சாதிய சமூகமாகஇருந்து வருகிறார்கள். அவர்களே இப்போதுபேஸ்புக்கிலும் முரளிதரனின்பாத்திரத்தில் விஜய் சேதுபதி ஏன்நடிக்கலாகாது, அது படைப்புசுதந்திரம், சினிமாவைஅரசியல்மயப்படுத்தக் கூடாது, தடை கோரும் அரசியல்பாசிசமாகும் என்றெல்லாம்அபத்தமாய் எழுதுகிறார்கள்.

இதற்கு என்னுடைய பதில் இது?

அப்படத்தின் படப்பிடிப்பைவன்முறை கொண்டு தடைசெய்தாலோ, படவெளியீட்டைதடுத்தாலோ தான் தப்பு. ஆனால்அப்படம் எடுக்க வேண்டாம் எனக்கோருவதில் எந்த தப்பும்இல்லை

அரசியல் இல்லாதகலைப்படைப்பே இல்லை; எந்தபடத்திலும் ஒரு மறைமுகபிரச்சாரம் உண்டு; இப்படம்நிச்சயமாய் சிங்களவர்-ஈழத்தமிழர் உறவைஅரசியல்நீக்கம் செய்து ஒரு லாலா லா விக்கிரமன் பட பாணிஉறவாக சித்தரிக்கவேவாய்ப்பதிகம். இல்லாவிடில்இரண்டு இனங்களுமே சமஅளவில் பாதிக்கப்பட்ட ஒருபோர் என பொய்யைகட்டியெழுப்பி எனும் வரலாற்றில்வெள்ளையடித்து விடுவார்கள்.

 

 ஒரு சுத்தமான விளையாட்டுப்படமாக இதை எடுக்கக்கூடாதா

முரளிதரன் பாத்திரத்தில் தமிழ்பேசி விஜய் சேதுபதி நடித்தாலேஅது அரசியல் படமாகி விடும். தவிர்க்கவே முடியாது. பாஜககட்சியில் இருக்கிற ஒருஇஸ்லாமிய தலைவரைப் பற்றிபடமெடுக்கிறார்கள் எனவைப்போம். (அதில் மம்முட்டிநடிக்கிறார் என நினைப்போம்.) என்னவாகும்? அவர்இஸ்லாமியர் பற்றி பேசாமல்நடித்தாலே கூட அங்கு ஒருஇந்துத்துவ பிரச்சார அரசியல்ஏற்பட்டு விடும். தவிர்க்கமுடியாது. ஒரே வழி இப்படத்தைநேரடியாய் சிங்களத்தில் எடுத்துவெளியிடுவது. படம் முழுக்கமுரளிதரன் பாத்திரம் தமிழ்அடையாளமே அற்றவராகசிங்கள் மொழி மட்டுமேதெரிந்தவராகக் காட்டட்டும். முரளிதரன் பிறப்பால் சிங்களவர், மதத்தால் பௌத்தர் எனக் காட்டிவிடுங்கள். பிரச்சனையே வராது. முடியாதில்லையா? அப்போதுபிரச்சனை வரத்தான் செய்யும்.

 

பிரச்சனையை யாருமேகிளப்பவில்லை. ஒரு திறந்தபுண்ணைப் போல அது ஏற்கனவேஅங்கு இருக்கிறது. அதைப்பாருங்கள் எனக் கோருகிறோம். அதைப் பற்றி பேசுங்கள், இனவாதிகளை தொடர்ந்துஎதிர்க்க இதைபயன்படுத்துங்கள் என்கிறோம்.

 

 800 படத்துக்கு எதிரான தீபரவட்டும்!
 

http://thiruttusavi.blogspot.com/2020/10/800.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன மூக்கைச் சுத்தி யோகாசனப் பொசிஷனில நின்ற படியான விளக்கமோ தெரியாது🤣

வி.சே தமிழ் பேசி நடித்தாலே அது முரளி typical தமிழன் என்று ஆகி விடுமாம்! முரளி தமிழன் தானே? கோத்தா கட்சியில் இருப்போரையே தமிழன் என்பதற்காக ஈழவர்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பும் காலத்தில் , மலையகத்தில் பிறந்த ஒருவரை தமிழர் என்பதற்கு மேலதிக சான்றிதழ் கேட்கும் பாணி வேறெங்கையோ இருந்து வரும் பாணி போல இருக்கே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

 

 

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க.. முரளியின் ரசிகன் கிடையாது.. சொறீலங்கா கிரிக்கெட் அணி விசிறியும் கிடையாது. அதனால்.. இந்தப் படத்தை பார்க்கனுன்னு ஒரு எண்ணமே இல்லை. 

முரளியின் காலத்தில் சேன் வோன்... ஜொன்ரி ரோட்ஸ்..  கன்ஸி கொரஞ்சே ரசிகனாக இருந்ததே அதிகம். 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

 

புரியவில்லை என்பது மட்டும் தெரியுது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

உண்மையில் சரியாக கவனிக்கவில்லை தேடிக்கொண்டு இருக்கிறேன் அந்த பச்சை  குத்தலை நிர்வாகம் தூக்கிபோட்டுதோ  தெரியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

அடுத்த திரியில் போய் கருத்து எழுதி ,பசசை  குத்தும் போது தெரியவில்லையா? ... அவர்களிடம் கேள்வி இல்லை 

நீங்கள்  இணைத்தவரின் முகநூல் குழுமத்தை சேர்ந்தவர் அரசியலை தவிர்த்து மற்றதெல்லாம் சுவைபட எழுதுவார் இங்கு இணைக்கமுடியாது காரணம் ஆள் எழுதுவது முகப்பு புத்தகத்தில் மாத்திரமே அதனால் தான் கேட்டேன் சில திறமையானவர்கள் பிளாக் குடுக்கும் அரியண்டம் தாங்க முடியாமல் முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

குரு £&@வினால் குற்றமில்லை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

குரு £&@வினால் குற்றமில்லை 🤣

கடுப்புத்தான் வருகுது கோஷ் எது எண்டு விளக்குமாறு கேட்க்கிறேன் ?

யாழில் எழுதும் கருத்துக்களோ கொள்ளுபாடுகளோ சுடலையில் போடும் சடலம் போன்றது திரும்பிப்பார்க்காமல் போயிடனும் நோட்டிபிகேஷன் வந்தால் எட்டி பார்க்கலாம் .அதுதான் நம்ம விளையாட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கடுப்புத்தான் வருகுது கோஷ் எது எண்டு விளக்குமாறு கேட்க்கிறேன் ?

பெரிதாக ஒண்டுமில்லை பெரும்ஸ்.

முரளி பற்றிய மற்றைய திரியில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் வீடியோ எல்லாம் - முரளி எதிர் அணியால் இணைக்கப்பட்ட போது எழாத கேள்வி, ரதி இங்கே முரளி ஆதரவாக இணத்தபோது எழுவதை சுட்டினேன்.

எனது நண்பர் செய்தால் குற்றம் இல்லை/கண்டும் காணாமல் போவோம் ஆனால் நமக்கு ஒவ்வாதோர் அதையே செய்தால் சுட்டி காட்டுவோம் என்ற போக்கின் ஒரு அங்கமாக இது என் மனதில் பட்டது. 

அதைதான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பெரிதாக ஒண்டுமில்லை பெரும்ஸ்.

முரளி பற்றிய மற்றைய திரியில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் வீடியோ எல்லாம் - முரளி எதிர் அணியால் இணைக்கப்பட்ட போது எழாத கேள்வி, ரதி இங்கே முரளி ஆதரவாக இணத்தபோது எழுவதை சுட்டினேன்.

எனது நண்பர் செய்தால் குற்றம் இல்லை/கண்டும் காணாமல் போவோம் ஆனால் நமக்கு ஒவ்வாதோர் அதையே செய்தால் சுட்டி காட்டுவோம் என்ற போக்கின் ஒரு அங்கமாக இது என் மனதில் பட்டது. 

அதைதான் சொன்னேன்.

உங்களுக்கு டான் அசோக் பற்றி தெரியாது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உங்களுக்கு டான் அசோக் பற்றி தெரியாது போல் உள்ளது .

இல்லை- ஆள் பெரிய அப்பாடக்கரோ?

ஆனால் யார் இணைப்பு என்றாலும், யாழில் சமூகவலை பதிவுகளை  இணைகலாமா இல்லையா எனும் விதி அனைவருக்கும் பொதுவானதுதானே.

ஆனால் அவரின் கட்டுரையில் பிழை உண்டு. முரளிக்காக அர்ஜுன அம்பயரோடு முண்டியது 1995 இல். 1999இல் அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை- ஆள் பெரிய அப்பாடக்கரோ?

அப்படித்தான்  பிரான்ஸ் தமிழிச்சி  போல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை வைத்து சில முடிவுகள் எடுத்தால்  நல்லது போல் படுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அப்படித்தான்  பிரான்ஸ் தமிழிச்சி  போல் 

ஒ...நான் பேஸ்புக் போவதில்லை. தமிழச்சி ஜல்லிகட்டு நேரம் கலக்கி திரிந்தது தெரியும். பிறகு பார்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 

 

இவ்வளவு பெருமைக்கும் அந்த ரோடு ரோடாய்  கத்திக்கொண்டு  இருப்பவனையே சேரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:
4 hours ago, பெருமாள் said:

முக நூலில் இருந்த பதிவுகளை இணைக்கலாமா இங்கு ?

இதே விடயத்தை விவாதிக்கும் இன்னொரு திரியில் இணைத்திருக்கிறார்கள், முகனூல், கீச்சகம் என்பவற்றிலிருந்து! என்ன அங்கே முரளியைக் கண்டிக்கும் இணைப்புகள் தரப்பட்டதால் இந்தக் கேள்வி  வரவில்லையென நினைக்கிறேன்!

அதே தான் அது இங்கு வழக்கமாக நடப்பது தானே

2 hours ago, nedukkalapoovan said:

நாங்க.. முரளியின் ரசிகன் கிடையாது.. சொறீலங்கா கிரிக்கெட் அணி விசிறியும் கிடையாது. அதனால்.. இந்தப் படத்தை பார்க்கனுன்னு ஒரு எண்ணமே இல்லை. 

 

பிடிக்காததை பார்க்காமல் விடுவது இது தான் நியாயவாதிகள் செய்வது. எனக்கு பிடிக்காத படத்தில் அந்த நடிகர் நடிக்க கூடாது என்று அஜராகம் செய்ய மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நீங்கள்  இணைத்தவரின் முகநூல் குழுமத்தை சேர்ந்தவர் அரசியலை தவிர்த்து மற்றதெல்லாம் சுவைபட எழுதுவார் இங்கு இணைக்கமுடியாது காரணம் ஆள் எழுதுவது முகப்பு புத்தகத்தில் மாத்திரமே அதனால் தான் கேட்டேன் சில திறமையானவர்கள் பிளாக் குடுக்கும் அரியண்டம் தாங்க முடியாமல் முகநூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .

இவரைப் பற்றி எனக்குத் தெரியாது பெருமாள் ...என்னுடைய நண்பர் ஒருவர் மு.பு இணைத்திருந்தார் ...அதை நான் இங்கு இணைத்தேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

122082992_1989903111166587_7016133446724 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.