Jump to content

செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு?

artificial-intelligence  

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பற்றி, ஒரு சர்வதேச மாநாடு ஓசை இன்றி நடந்து இருக்கிறது.

மின்சாரம், இணையம் போல, செயற்கை நுண்ணறிவு (செ.நு.) மனித நாகரிக வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அடையாளம் ஆகும். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு செ. நு. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

‘சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020’ (RAISE 2020) என்ற பொருளில், தொழில் துறை மற்றும் அறிஞர்களுடன் கைகோத்து இந்திய அரசாங்கம் நடத்திய இந்த உச்சி மாநாட்டில், சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் விவாதிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் விற்பன்னர்கள் கலந்து கொண்டு கருத்துகள் தெரிவித்தனர். உலகளாவிய வர்த்தகத் தலைவர்கள், முக்கிய முடுவு எடுப்பவர்கள், அரசுப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் பங்கு பெற்றனர். ஐந்து நாட்களில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சிலவற்றைப் பார்த்தாலே, இந்த மாநாட்டின் முக்கியத்துவம் / பயன்பாடு புரிந்து விடும்.

செ.நு. வழியே உலகை மாற்றுதலில் - நம் முன்னே உள்ள பாதை; 100 கோடி மக்களுக்கு அதிகாரம் வழங்குதல்; மொழிகளுக்கு இடையிலான தடைகளை செ.நு. மூலம் நீக்குதல், தொடர்பு சாதனங்களை இணைத்தல்; unlocking Maps for Societal impact; ஆய்வுக்கூடத்தில் இருந்து சந்தைக்கு (Lab to Market), செ.நு.வால், சுகாதாரத்துறையில் புதுமைகள்; பொறுப்பான செ.நு.வில் தரவுகளின் பங்கு, செ.நு. செயலாக்கத்தில் அரசாங்கத்தின் பங்கு!

ஜூன் 2018-ல் - செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம் (National Strategy for Artificial Intelligence) வெளியிடப்பட்டது. இதன்படி, 2035-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் ஆண்டு வளர்ச்சியை, 1.3% உயர்த்துதல்; சுகாதாரம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இடம் நகர்தல் (mobility) ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருதல் என முடிவாயிற்று.

நிதி ஆயோக் அமைப்பின் ‘அப்ரோச் பேப்பர்ஸ்’, ஆரோக்கியமான செ.நு. அமைப்புக்கு, நான்கு முக்கிய பரிந்துரைகளை முன் வைக்கிறது. 1. ஆய்வுகளை மேம்படுத்துதல் 2. பணியாளர் திறன் வளர்த்தல் 3. செ.நு. தீர்வுகளை தகவமைத்தல் 4. பொறுப்பான செ.நு.க்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்.

கம்ப்யூட்டிங் ஆற்றல், தரவு சேமிப்பு மற்றும் டிஜிட்டல் தரவுகளின் மொத்தம் (வால்யூம்) இவைதாம் செ.நு.வின் விரைந்த வளர்ச்சிக்கு உதவும். இதிலே ‘டிஜிட்டல் இந்தியா’ முனைவுகள் மூலம், டிஜிட்டல் தரவுகள் உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறோம். ஆனாலும், சிறப்பு வாய்ந்த கம்ப்யூட்டர், தகவல் சேகரிப்பு வசதிகளில் நாம் இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது.

2035-ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்துக்கு, 957 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதல் வருமானம் தருகிற வல்லமை, இந்தியாவின் செ.நு. துறைக்கு இருக்கிறது. ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துகிற ஆற்றல் செ.நு.வுக்கு இருப்பதை உணர்ந்த நிதி ஆயோக், புதிய தொழில் நுட்பங்களின் மீது ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக தேசிய நிகழ்வு (National Program on AI) ஒன்றைத் தீட்டி இருக்கிறது. இதை நோக்கியே, 2018 ஜூன் 4 அன்று, ’தேசிய திட்டம்’ வெளியிடப்பட்டது.

இது விஷயத்தில், தேவையான அளவுக்கு பயிற்சி சார் 'validation' இல்லாமை; இது தொடர்பான சோதனைகளுக்கு பெருத்த அளவில் ஆதரவு இன்மை; வளர்ச்சி, பயிற்சி, பணிஅமர்த்தல் கட்டமைப்புக்கு ஆகும் அதீத செலவு ஆகியன நம் முன் உள்ள தடைகள் / சவால்கள்.

இந்தத் தடைகளை வென்றெடுக்க, செ.நு.வை மையமாகக் கொண்ட 'cloud' கட்டமைப்பு நிறுவப்படும். இதற்கு வழி கோலுகிறது - ‘ஐராவத்’ தளம். AIRAWAT (AI Research, Analytics and knoWledge Assimilation platform)

உலகின் மிகுந்த ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டர் அமைப்புகளை, 'TOP500' என்று பட்டியல் இடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்தத் தர வரிசை, ‘லினியர்’ சமன்பாட்டின் அடர்த்தியான அமைப்பில் எத்தனை விரைவாக தீர்வு கண்டுபிடிக்கிறது என்று கணிக்கிற LINPACK முறை ஆகும். இதன்படி, உயர்நிலையில், யார்-யார், எவ்வளவு இருக்கிறார்கள்..? முதல் 500 நிறுவனங்களில், சீனா - 228; அமெரிக்கா - 117; ஜப்பான் - 29.

இதிலே சற்றே வேதனை தருகிற உண்மை - 18 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் 5/500 இருந்தன; ஆனால், இன்று இரண்டு மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம், உலகளவில் இத்துறையில் பல நாடுகளும் தொடர்ந்து காட்டுகிற ஆர்வம் / செய்கிற முதலீடுகள். இதன் காரணமாக, ‘நுழைவுத் தகுதி நிலை’ உயர்ந்து கொண்டு வருகிறது. ஜூன் 2018-ல் 716Tflop/s இருந்தது; நவம்பர் 2019-ல் அது, 1142 Tflop/s ஆக உயர்ந்து விட்டது!

தற்போது நம்மிடம் உள்ள செ.நு. கட்டமைப்பு வசதிகள், பொதுவான பிரயோகங்களுக்கு உகந்தவையாக இல்லை. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே அவை செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, Indian Institute of Tropical Meteorology நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர், பருவ நிலை குறித்த விவரங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. (‘அப்ரோச் பேப்பர்’ - நிதி ஆயோக்) அதற்கு அப்பால் அது ‘பயணிக்காது’.

செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படுகிற அதிநவீன கட்டமைப்புக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டு வருகிறோம். 70-க்கும் மேற்பட்ட, ‘சூப்பர் கம்ப்யூட்டிங் க்ரிட்’ உருவாக்க முயல்கிறோம்.

பல்வேறு அமைச்சரகங்களை ஒருங்கிணைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுக் கட்டுமான அமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே. ‘டிஜிட்டல் பணம் செலுத்துதலில், நவீன அமைப்பு முறையை நாம் கொண்டுள்ளோம். ஆகஸ்ட் 2016-ல் இருந்து, 143 வங்கிகள் மூலம், 125 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகள் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் தற்போதுள்ள குழந்தைப் பருவ, செயற்கை நுண்ணறிவின் ‘ஈக்கோ சிஸ்டம்’ மேலும் வலுப்பெற, ‘க்ளவுட் கம்ப்யூட்டிங்’ கட்டமைப்பு விரிவடைய வேண்டும். மாணவர்கள், ஆய்வாளர்கள், தொழில் நிறுவனங்கள், அரசுத் துறைகள் இணைந்து, ஒரு கால நிர்ணயம் வைத்துக் கொண்டு, இலக்கு நோக்கி முன்னேறுதல் வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் தலைமை இடமாக இந்தியா திகழ்வதற்கான அத்தனை தகுதிகளும் நிரம்பிக் கிடக்கின்றன. உலக நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப, நமது அணுகுமுறை மாறியாக வேண்டும்.

‘செயற்கை நுண்ணறிவா..? அது எதற்கு இப்போது..?’ என்ற கேள்வி, மிகப் பெரிய முட்டுக்கட்டையாகும். ஒரே சமயத்தில், எல்லா துறைகளும் வளர்ச்சி பெறுவதுதான் சரியானதாகும். இதில் முற்போக்கு, பிற்போக்கு என்று ஏதும் இல்லை. இது, இருக்கும் ஒன்றை நசுக்கி விட்டுப் புதிதாய் ஒன்றை வளர்க்கும் முயற்சியும் இல்லை.

ஏற்கெனவே, காலம் காலமாக நாம் வலுவாக உள்ள பல்வேறு களங்களில், மேலும் வளம் பெற, இத்துறை பல்வேறு வழிகளில் துணை புரியும்.

செயற்கை நுண்ணறிவு செழித்து வளர, ‘இயற்கை நல்லறிவு’ இயல்பாக இருத்தல் வேண்டும். இன்றைய சூழலில் சாத்தியமா..?

https://www.hindutamil.in/news/opinion/columns/591901-artificial-intelligence-4.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தான் மனிதர்களை கட்டுப்படுத்தும் நிலை வருமோ? என்னவோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தான் மனிதர்களை கட்டுப்படுத்தும் நிலை வருமோ? என்னவோ!

லண்டன் வந்த புதிதில் 62 போன் நம்பர் நினைவில் வைத்து இருந்தேன் இப்ப என்னுடைய நம்பர் வீட்டு நம்பர் மட்டுமே நினைவில் உள்ளது ஒருமுறை போன் பற்றி தீர்ந்து  போக அவசரமாய்  போன் பண்ண முடியாமல் அந்தரித்த கொடுமை 

முன்பு வாகனமோட்டம் மேப் புத்தகம் பார்த்து தான் பல தெருக்கள் நினைவில்தான் இருக்கும்  இப்ப WAZE நேவிகேஷன் போனுக்குள்ளால்  இருந்து எங்களை கூட்டி செல்கிறது சில  நேரம்களில் லண்டனுக்கு வெளியில் சாட்டிலைட் சிக்னல் கிரகிப்பில் இருக்கும் கோளாறு பயணம்களை ஓரிரு மணி நேர தாமதத்தை கொண்டு வருகிறது அந்த தாமதத்தை நாம் உணரா வண்ணம் வெற்றிகரமாய் பயணத்தை முடித்தது போல் காட்டும் .

உங்கள் நண்பர்களை சொல்லு நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்வது போல் ஒரு ஜிமெயில் கணக்கும் உங்கள் மொபைல் போனும் காணும் ஐந்து வருடத்துக்கு முன் இதே திகதி இந்த நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்பதை சொல்லலாம் .

நீங்கள்  சொல்வது போல் செயற்கை நுண்ணறிவு கட்டுப்படும் நிலைவந்தால் மனிதர்கள் ஒருவித அடிமை நிலைக்கு போயிடுவார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.