Jump to content

உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது கனடா.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது கனடா.!

Screenshot-2020-10-17-12-12-14-280-org-m

ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டாம் என சீனா விடுத்த எச்சரிக்கையை கனடா நிராகரித்துள்ளது.

ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களை வன்முறைக் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தியுள்ள சீனா, அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது என எச்சரித்திருந்தது.

ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு குறித்து கனேடிய தரப்பு உண்மையில்அக்கறை கொண்டிருந்தால் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என கனடாவுக்கான சீனத் தூதர் கொங் பீவு வியாழக்கிழமை கருத்து வெளியிட்டார்.

அத்துடன், ஹொங்கொங்கில் உள்ள 300,000 கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டால் வன்முறையாளர்களுக்கு எதிராகப் போராடும் சீனாவின் முயற்சியை ஆதரிக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்கு நேற்று வெள்ளிக்கிழமை பதிலளித்துள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, சீனாவின் வற்புறுத்தும் இராஜதந்திரத்தை ஏற்க முடியாது என்றார்.

ஹொங்கொங் மற்றும் சின்ஜியாங்கில் சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து முன்நிற்பேன் என்றும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளுக்காக நாங்கள் எங்கள் குரலை உயர்த்துவோம் என ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ட்ரூடோ கூறினார்.

எனினும் சீனாவுடன் மோதல் போக்கில் ஈடுபடவோ, பதட்டங்களை அதிகரிக்கவோ எதிர்பார்க்கவில்லை என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹொங்கொங்கியர்கள் குறித்து சீனா வெளியிட்ட அறிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கவலைக்குரியது என கனேடிய வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் கூறினார்.

கனடா எப்போதும் மனித உரிமைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கனேடியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் என்பதை கனடாவுக்கான சீனத் தூதரை அழைத்துத் தெளிவுபடுத்துமாறு கனேடிய சர்வதேச விவகார பிரிவை அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கையொன்றில் ஷாம்பெயின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஹொங்கொங்கில் சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து சீனாவை கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்தார். வற்புறுத்தும் இராஜதந்திரத்தை சீனா கைவிட வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் வியாழக்கிழமை பத்திரிகையாளர் களைச் சந்தித்த கனடாவுக்கான சீனத் தூதுவர் கொங் பீவு, பிரதமர் ட்ரூடோ வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

சீன தரப்பில் எந்தவொரு கட்டாய இராஜதந்திரமும் இல்லை என்று அவா் கூறினார், ஹொங்கொங் மற்றும் சின்ஜியாங் தொடர்பான பிரச்சினை சீனாவின் உள் விவகாரம். வெளிநாடுகள் இதில் தலையிடக் கூடாது எனவும் அவா் குறிப்பிட்டார்.

ஹொங்கொங் ஜனநாயக சார்பு சீன எதிர்ப்பாளர்களுக்கு கனடா அடைக்கலம் வழங்குவது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது எனவும் சீனா எச்சரித்திருந்தது.

எனினும் சீனாவின் இந்த எச்சரிக்கையை கனடா முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது.

சீனாவின் எச்சரிக்கையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் ஆகியோர் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர்.

http://aruvi.com/article/tam/2020/10/17/18044/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.