Jump to content

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்

தேனி:

பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

 நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணமூர்த்தி. இவர் சென்னையில் ஒரு பழச்சாறு தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி சொந்த ஊர் திரும்பிய அவர், தற்போது ஆடு மேய்த்து வருகிறார்.

மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற்றவர்களில் 1,823-வது இடத்தை ஜீவித்குமார் பிடித்துள்ளார்.

அரசுப்பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் அவர் தனது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். அதற்கு பலனாக தற்போது தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர் ஜீவித்குமாரை, அவரது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/17082432/1985025/NEET-2020-worker-son-achievement.vpf

 

 

பாராட்டுக்கள்  ஜீவித்குமார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து

 

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
பதிவு: அக்டோபர் 17,  2020 13:45 PM
சென்னை

தேனி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை நேற்று (அக்.16) மாலை வெளியிட்டது. தேர்வு எழுதிய 14 லட்சம் மாணவர்களில் மொத்தம் 7,71,500 பேர் (56.44%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவித் குமார். இவரின் தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி. தாய் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜீவித் குமார், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து ஜீவித் குமார் அரசுப் பள்ளி மாணவர்கள் முயன்றால் முடியாது எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் சாதனைபடைத்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

https://www.dailythanthi.com/News/State/2020/10/17134527/In-the-NEET-exam-record-of-the-son-of-a-shepherd.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

 

அருமையான கருத்து.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

இதைத்தான் நானும்  எழுத  வந்தேன்

நன்றி  தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nedukkalapoovan said:

ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்

நாங்களும் ஆடு, மாடு வளர்த்தோம். அவற்றையும் மேய்த்தோம். ☺️ அந்த பெருமையான அனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது😊

ஒரு கூலித்தொழிலாளியின் மகனான ஜீவிதகுமார், வளங்கள், வசதிகள் இல்லாமல் நீட் தேர்வில் சாதனை படைத்தது பாராட்டுக்குரிய விடயமே. ஜீவிதகுமாருக்கு பாராட்டுக்கள்.👏👏👏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

நாங்களும் ஆடு, மாடு வளர்த்தோம். அவற்றையும் மேய்த்தோம். ☺️ அந்த பெருமையான அனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது😊

ஒரு கூலித்தொழிலாளியின் மகனான ஜீவிதகுமார், வளங்கள், வசதிகள் இல்லாமல் நீட் தேர்வில் சாதனை படைத்தது பாராட்டுக்குரிய விடயமே. ஜீவிதகுமாருக்கு பாராட்டுக்கள்.👏👏👏

3 hours ago, உடையார் said:

அரசுப்பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் அவர் தனது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். அதற்கு பலனாக தற்போது தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர் ஜீவித்குமாரை, அவரது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

 

இது தான் அவரின் வெற்றியின் ரகசியம். பாவம்.. அவரின் தந்தையின் பொருண்மிய மீட்டும்.. வழிமுறை செய்தியில் தலைப்பில்.. அந்த இளைஞனின் சுயமுயற்சிக்கு அடைமொழியாவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் & பாராட்டும் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி

 

சென்னை:

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் 720 - 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மொத்தம் 6,692 பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். 


 
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற மாணவி 720க்கு 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 720க்கு - 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

மேலும் நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 70 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/17173729/1985197/1615-students-have-passed-the-training-at-the-Government.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

மாலைமலம் இப்படி தான் எழுதும்.

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

நியாயமான ஆதங்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட்  தேர்வை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்ப்பவர்கள் இவரை முன் மாதிரியாய் கொள்ள வேண்டும் ...வாழ்த்துக்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி அடித்த மாணவர் ஜீவித்குமார் - அன்றும், இன்றும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.