Jump to content

சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு

பின்லாந்தின் பிரதமர் சன்ன மரினின் புகைப்படம் அந்நாட்டில் விவாதா பொருளாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு 34 வயதில் பதவியேற்ற உலகின் இளம் பிரதமரான சன்ன மரின், பிரபல பத்திரிக்கைக்கு  பிளேஸரின் கீழே சட்டை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார்.

spacer.png

இந்த பத்திரிகை ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்  சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டுள்ளனர்.

spacer.png

பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்ன மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்சேபம் தெரிவித்தவர்கள், இதனால் வாயடைத்துப் போயுள்ளனர்.

இதுபோன்ற படபப்பிடிப்புகளில் ஈடுபடுவதன் மூலம், சர்வதேச அரசியலிலும் பொதுமக்களிடமும் மரின் தனது சொந்த உருவத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது.

"பிரதமரின் பங்கு ஒரு தலைவராக செயல்படுவதே தவிர பேஷன் மொடலாக அல்ல" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் பின்லாந்தில் பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

spacer.png

மரின் பொது வாழ்க்கையிலும், பத்திரிகை தோற்றங்களிலும்  விமர்சனங்களை எதிர்கொண்ட முதல் பெண் அரசியல்வாதியிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார்.

2016 ஆம் ஆண்டில், முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே சண்டே டைம்ஸ் இதழுக்காக லெதர் கால்சட்டை (leather trousers) அணிந்து படம்பிடிக்கப்பட்டதற்கு விமர்சனத்திற்குள்ளானார்.

இதற்கிடையில், பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர் ட்ரேசி பிராபின் அவரது தோள்பட்டையில் உடை சற்று கீழறங்கி இருந்தமையால் இந்த ஆண்டு இணையத்தள பூதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.virakesari.lk/article/92309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்சைக்குரிய வகையில் ஏதும் இல்லையே....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சர்சைக்குரிய வகையில் ஏதும் இல்லையே....🤔

சர்ச்சயே அது தான்.

Link to comment
Share on other sites

மனிதர்கள் தவிர்ந்த எந்தவொரு உயிரினமும் ஆடைகள் அணிவதில்லை. சில நாய்கள் பூனைகளைத்தவிர. அதனதன் எசமானர்களே அவற்றிற்கு அணிந்து விடுகிறார்கள்.

நவீன காலத்து மனிதர்கள் எல்லோரும் அவரவர் வாழும் இடங்களுக்கேற்ப உடையணிகிறார்கள்.

சில இடங்களில் சீருடைகள் கட்டாயமாகிறது. பள்ளிச்சிறார்கள், மருத்துவத்தாதிமார்கள் மற்றும் விமானப்பணிப்பெண்கள் சில உதாரணங்கள்.

தலைமைப்பீடங்களில் இருப்போர் மற்றையோருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

இப்போ கீழுக்கில்லாமல். நாளைக்கு மேலுக்கில்லாமலா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.