Jump to content

நியூசிலாந்து பிரதமராக மீண்டும் ஜெசிந்தா – இன்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பிரதமராக மீண்டும் ஜெசிந்தா – இன்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி!

114933893_80227ae1-900d-48fc-976c-8a669d9bd0ac-960x540.jpg?189db0&189db0

 

நியூசிலாந்தில் இன்று (17) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் ஜெசிந்தா அர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மற்றும் தேசிய கட்சி இரண்டுக்கும் இடையில் போட்டி நிலவிய நிலையில் தொழிலாளர் கட்சி 64 ஆசனங்களை பெற்று பெற்றியை தமதாக்கியது.

இதன்படி நியூசிலாந்தின் 40வது பிரதமராக 40 வயதுடைய ஜெசிந்தா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை தேசிய கட்சி 35 ஆசனங்களையும், ஏ.சி.ரி நியூசிலாந்து 10 ஆசனங்களையும், பச்சை கட்சி 10 ஆசனங்களையும், மோரி கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/நியூசிலாந்து-பிரதமராக-மீ/

 

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி

 

வெலிங்டன்

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.


இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது, அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம் என கூறி உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/17170851/New-Zealand-PM-Jacinda-Ardern-wins-second-term-in.vpf

Link to comment
Share on other sites

நியூசிலாந்து தேர்தலில் ஜசிந்தா ஆர்டன் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னணி

 
  • நியூசிலாந்து சிற்சபேசன்

Sitsabesan.jpgக்டோபர் 17ல் நடைபெற்ற நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலிலே லேபர் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கின்றது.

நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல், செப்டெம்பர் 19ல் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்பட்டதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொற்றின் வீரியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. இருந்தாலும் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலை நிலவியது. அதனால் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது பொருத்தமில்லை. வாக்களிப்பதற்கான இயல்பான சூழல் மக்களுக்குக் கிடைக்காது என்னும் அபிப்பிராயம் கட்சிகளிடையே ஏற்பட்டது. அதனாலேயே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் நியூசிலாந்தில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலாவது உலகமகாயுத்தம் காரணமாக 1917லும், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி (கிரேட் டிப்ரெஷன்) காரணமாக 1934லும், இரண்டாவது உலகமகாயுத்தம் காரணமாக 1941லும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

2020 பாராளுமன்றத் தேர்தலிலே, லேபர் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. கலப்பு அங்கத்தவர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை நியூசிலாந்து கொண்டதாகும். அஃது அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 24 ஆண்டுகளில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்க முடிந்திருக்கின்றது. அத்தகைய சூழலை, தற்போதைய தேர்தல் முடிவு மாற்றியிருக்கின்றது.

jacinda-ardern.600.pngகலப்பு அங்கத்தவர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், இரண்டு பிரிவுகளில் பாராளுமன்ற அங்கத்தவர் தெரிவாகின்றனர். ஒன்று, தொகுதி முறையிலான தெரிவு. மற்றையது, பட்டியல் முறையிலான தெரிவு. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 120 ஆசனங்கள் காணப்படுகின்றன. அதிலே 71 ஆசனங்கள் தொகுதிவாரியான தெரிவுக்கு உரியவையாகும். மீதமுள்ள 49 ஆசனங்கள், ஐந்து சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

ஒரு வாக்காளருக்கு இரண்டு வாக்குகள் உள்ளன. ஒரு வாக்கு, தொகுதிக்கான அங்கத்தவரைத் தெரிவு செய்வதற்கான வாக்காகும். இரண்டாவது வாக்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்காகும்.

ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெறுகின்றவரே, தொகுதி அங்கத்தவராகத் தெரிவாகின்றார்.

2-4.jpgகட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில், ஐந்து சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளுக்கு, பட்டியல் வழியாக ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. கட்சியின் கொள்கைகளுக்காக வழங்கப்படுகின்ற வாக்கு மூலமாகவே, பட்டியல் வழியான அங்கத்தவர்கள் தெரிவாகின்றனர். ஒவ்வொரு கட்சியும், பட்டியல் வழியாகத் தெரிவு செய்யப்படக்கூடிய அங்கத்தவர்களின் பட்டியலைத் தேர்தலுக்கு முன்னரே சமர்ப்பிக்கின்றன. அதனால், கட்சியின் பட்டியல் வழியாக யாரெல்லாம் தெரிவுசெய்யப்படக்கூடும் என்னும் பிரக்ஞையுடனே வாக்கு பெறப்படுகின்றது.

பொதுவாக மேற்கத்திய அரசியல்கட்சிகள் சித்தாந்த ரீதியிலே அமைந்தவையாகும். பாரம்பரியம், முதலாளித்துவம் போன்றவற்றை முதன்மைப்படுத்துகின்றவை வலதுசார் கட்சிகள் எனப்படுகின்றன. ஒடுக்கப்படுகின்ற மக்களின் குரலாகவே இடதுசார் கட்சிகள் அடையாளமாகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் வலது மற்றும் இடதுசார் கட்சிகளும் மையவாத அரசியலிலேயே காணப்படுகின்றன. அதற்கு, நியூசிலாந்தின் இரண்டு பெரிய கட்சிகளான வலதுசார் நஷனல் கட்சியும், இடதுசார் லேபர் கட்சியும் விதிவிலக்கல்ல. பொருளாதாரக் கொள்கை, அடிப்படைக் கட்டுமான அபிவிருத்தி போன்ற விடயங்களிலே இரண்டு கட்சிகளும் ஒத்ததன்மைகளையே கொண்டிருக்கின்றன. வரிச்சுமை, வேலையற்றவர்களுக்கான உதவித்தொகை போன்ற விடயங்களிலேயே பெரிய கட்சிகளிடையே ஓரளவு வேறுபாட்டைக் காணலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் இடதுசார் கிரீன் கட்சியே தீவிரமான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

3-4.jpg120 அங்கத்தவர்களைக் கொண்ட நியூசிலாந்து பாராளுமன்றத்திலே ஆட்சி அமைப்பதற்கு 60 அங்கத்தவர்களின் ஆதரவு தேவையாகும். 2017 பாராளுமன்றத் தேர்தலில் நஷனல் கட்சிக்கு 56 ஆசனங்களே கிடைத்தது. அதனுடைய கூட்டாளியான அக்ட் கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைத்தது. மறுவளத்தில், லேபர் கட்சிக்கு 46 ஆசனங்களே கிடைத்தது. அதனுடைய கூட்டாளியான கிரீன் கட்சிக்கு 8 ஆசனங்களே கிடைத்தன. அதனால் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒன்பது ஆசனங்களைக் கொண்டிருந்த நியூசிலாந்து வெஃஸ்ட் கட்சியே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகியது. அதனாலேயே பாராளுமன்றப் பலத்தைக் கொண்டிராத லேபர் கட்சியினால் ஆட்சி அமைக்க முடிந்தது. ஜசிந்தா ஆர்டனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராக முடிந்தது.

2020 தேர்தலிலே நிலைமை முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. லேபர் கட்சிக்கு 64 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் தனித்து ஆட்சி அமைக்கும் பலம் கிடைத்திருக்கின்றது. ஆனாலும், கூட்டாளியான கிரீன் கட்சியை அரவணைத்த வகையிலேயே லேபர் கட்சி செயற்படுமெனக் கணிக்கப்படுகின்றது. மறுவளத்தில், நஷனல் கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கின்றது.

நியூசிலாந்துப் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். பொதுவாக ஆட்சியைப் பொறுப்பேற்கின்ற கட்சி, ஆகக் குறைந்தது இரண்டு பதவிக்காலத்துக்கேனும் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு அமைந்துவிடுகின்றது. அந்தவகையிலே 2017ல் ஆட்சிப்பீடமேறிய லேபர் கட்சி, தற்போதைய தேர்தலிலும் வெற்றிபெறுமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலப்பு அங்கத்தவர் விகிதாசார தேர்தல் முறையிலே தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படவில்லை. கொரோனத் தொற்றை அரசு கையாள்கின்ற பாங்கே, லேபர் கட்சியின் மகத்தான வெற்றிக்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.

4-2.jpgஉலகளாவியரீதியில் கொரோனாத் தொற்று சவாலானதாகக் காணப்படுகின்றது. நியூசிலாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலாவது கொரோனாத் தொற்று நியூசிலாந்தில் பெப்ரவரியில் ஆரம்பமாகியது. கொரோனாத் தொற்றை அரசு கையாள்கின்ற பாங்கு, உள்நாட்டில் நம்பிக்கைகளை ஏற்படுத்தியது. துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெறுவது, தீர ஆராய்ந்து துரிதமான தீர்மானங்களை மேற்கொள்வது, அவ்வாறான தீர்மானங்களை பொதுமக்களுக்கு புரியும்படி சொல்வது என்னும் மூன்று விடயப்பரப்பு வழியாகக் கொரோனாப் பேரிடரைக் கையாண்ட, ஜசிந்தா ஆர்டனின் தலைமைத்துவப் பண்பு பரவலான கவனத்தை ஈர்த்தது.

கொரோனாப் பேரிடருக்கு முன்னர் ஏற்பட்ட கிரைஸ்ட்சேர்ச் படுகொலை சம்பவமும், ஜசிந்தா ஆர்டனின் சாதுர்யமான தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தின.

தொடர்சியான சம்பாஷணைகள், கூட்டுத் தீர்மானங்கள், அரவணைக்கும் பாங்கு, எளிமையான உரையாடல்கள் என்பவையே ஜசிந்தா ஆர்டனின் தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளாகும். அதுவே, கட்சி வேறுபாடுகளைக் கடந்து நியூசிலாந்தை வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராக ஜசிந்தா ஆர்டனை 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவு அடையாளப்படுத்தியுள்ளது

 

https://thinakkural.lk/article/81215

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.