Jump to content

இன அழிப்பின் வரலாற்று வடுக்களை மறக்காதிருப்பது முக்கியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2AD9023F-83BB-48E6-88C7-99C71E1F4822.jpeg
 
CC25C38F-5D49-4E61-AF38-5683120E2812.jpeg
 

 

ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது.

 

நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனை வருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்!

 

 யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டாலும் அவர்களும் 

அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமான செய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான அளவில் அவர்கள் நிகழ்த்திய இன அழித்தொழிப்பை மறக்கவில்லை. தொடர்ந்து பண்பாட்டு, அரசியல் தளத்தில் இது பேசப்பட்டபடியே இருக்கிறது. உலகம் எந்த சர்வாதிகாரியை மறந்தாலும் ஹிட்லரை மறக்கவில்லை - ஏனென்றால் இந்த கதையாடல் யூதர்களுக்கு வரலாற்றில் மிகப்பெரிய அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்தன.

 உளவியல் ரீதியாக தம்மை வரலாற்றில் நினைவு கொள்ளவும் இன அழிப்பின் (யூதர்-நாஜிக்கள்) இருமை அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இதன் வெக்கை பொறுக்க முடியாமல் போகும் போது சில யூதர்கள் தம்மை ஒரு கலாச்சார, வரலாற்று மறதிக்குள் தள்ளுவதை, வரலாற்றுக் குற்றங்களை இயல்பாக்கம் செய்ய முயன்றதைப் பற்றி ஹேரிண்ட் எனும் யூத தத்துவஞானி பேசுகிறார். ஈழத் தமிழர்களைப் போன்றே யூதர்கள் மத்தியிலும் எல்லா வகையான மக்களும் இருந்தார்கள் - தப்பித்துப் போனவர்கள், முடியாதவர்கள், இன அழிப்பை மறக்க முயன்றவர்கள், மறுத்தவர்கள், ஹிட்லருடன் சமாதானமாகப் போக முயன்றவர்கள், வெளியே போய் இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியவர்கள், அதை சினிமா, இலக்கிய கதையாடல்களில் பதிவாக்கி நிரந்தரமான ஒரு வடுவாக்கியவர்கள்’, மறக்க முடியாத ஒரு துயரப்பாடலை அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாடிக் கொண்டிருப்பவர்கள். எனக்குத் தெரிந்து ஒரு இன அழித்தொழிப்பு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் நிகழ்ந்த பின்னர் மக்கள் அது நடக்காததைப் போல நம்பி சுமூகமாய் வாழ்ந்ததாய் வரலாறில்லை. ஏனென்றால் அப்படி நடந்தால் உங்கள் வரலாற்று நினைவில் ஒரு கண்ணி உடைந்து போகும், நினைவுச்சங்கிலியில் பிற கண்ணிகள் மொத்தமாய் பொலபொலவென உதிந்து விடும். ஆகையால் ஒரு இனத்தின் தக்கவைப்புக்கு சில நினைவுகளை மறக்காமல் தக்க வைப்பது அவசியம்.

 

அடுத்து, ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறந்த நிரந்தர தீர்வு என்ன?

 

 இன அழித்தொழிப்புக்கு சிறந்த தீர்வு புதிய தேசத்தை உருவாக்குவது தான் என்பது என் பார்வை. ஒரு சில பெரிய தேசங்கள் ஒத்துழைத்தால் மட்டும் போதும். (ஆனால் இதற்கு நடைமுறை சாத்தியம் குறைவு, பின்விளைவுகளும் பாரதூரமானவை.)

 இரண்டாவதாய், இரு இனங்களும் சமாதானமாகப் போக வேண்டும். ஒரே தேசத்தில் சகோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஆனால் இப்போதைய ஜனநாய அமைப்பில் அது சுலபம் அல்ல. ஒற்றுமை வர வேண்டுமென்றால் ஒரு சிறிய முக்கியமான மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் என்பது எப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய்யப்படுகிறார்கள் என்பதில் வர வேண்டும். இம்மாற்றம் வந்தால் பேரினவாத அரசியல் காலவதியாகி விடும். இன அழித்தொழிப்புகள் நிகழாது. மத, இன, சாதி அடிப்படையிலான வன்முறை ஒரு முடிவுக்கு வரும்

 

 எப்படி?

 வாக்கரசியலை எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல் சமமாக்குவதன் வழி. அதாவது ஒரு தேசத்தில் எத்தனை சாதிகள், இனங்கள், மதங்கள் இருக்கின்றனவோ அவர்களுக்கு சரிவிகிதமான எண்ணிக்கையில் இடங்கள், பிரதிநுத்துவம். அப்போது பேரினவாத, பெரும்பான்மைவாத அரசியல் அர்த்தமற்றுப் போகும். இலங்கையில் இம்மாற்றம் முதலில் வர வேண்டும். அடுத்து இந்தியாவில்.

 

 இரண்டுமல்லாமல் மூன்றாவதான தீர்வு சிறிய இனங்கள் பேரினங்களுடன் சமாதானமாகப் போவது. உரிமைகளை இழந்தாலும் சுயமரியாதையை இழந்தாலும் மௌனமாய் அதைப் பொறுத்துக் கொண்டு இரண்டாம் தரமாய் நடத்தப்பட்ட ஒப்புக் கொள்வது. இன்றைய நிலையில் இந்த மூன்று சாத்தியங்கள் தாம் கண்ணில் படுகின்றன.

 

 குறிப்பாக இன்று பாசிசமும் மத இனவாதங்களும் கைகோர்த்து முதலீட்டியத்தின் ஆதரவுடன் கோலோச்சி நிற்கும் போது ஒரு லட்சியபூர்வமான ஜனநாயகம் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. அடிமை-ஆண்டான் வாழ்வுமுறையையே இன்றைய ஜனநாயகம் ஒரு பளபளப்பான காகிதம் சுற்றி நமக்கு அளிக்கிறது - அங்கு நாம் அடிப்படையில் சமத்துவம் அற்றவர்களாக இருந்தபடியே வாக்களிப்பதில் மட்டும் சமத்துவம் பெறுகிறோம். இது வேலைப் பங்கீட்டில் மட்டும் சமத்துவம், ஊதியத்தில் இல்லை என்பதைப் போன்றது.

 

ஒரு நாட்டில் இரு மதங்களை / இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஒரு தரப்பு 5%, மற்றொன்று 95%. தேர்தலில் 5% வாக்களிக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களின் உரிமைகளுக்கு, மேம்பாட்டுக்கு, இருப்புக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க மாட்டார்கள். தேவை ஏற்பட்டால் 95%க்காக 5%யை சிறுக சிறுக ஒடுக்கி அழிக்கப் பார்ப்பார்கள்.

 இந்தியாவில் இன்று இஸ்லாமியர்களுக்கு இதுவே நிகழ்கிறது. அவர்களின் எண்ணிக்கை பெருகுவதைப் பற்றி ஒரு நூறாண்டுக்கு மேலாக இந்துத்துவர்கள் கவலை தெரிவித்து வந்ததை அறிவோம். ஏனென்றால் நமது தேர்தல் அமைப்பில் எண்ணிக்கையே அதிகாரம். என்ன ஒரு அநியாயம் இல்லையா! உத்தரபிரதேசம் எனும் மாநிலத்தில் மக்கள் தொகை இவ்வளவு அதிகமாய் இல்லை என்றால் இந்துத்துவம் இவ்வளவு பெரும் சக்தியாகத் தோன்றுவதோ, வழிபாட்டுத்தலங்கள் இடிப்பது, மக்கள் உயிருடன் கொளுத்தப்படுவது, கூட்டங் கூட்டமாய் கொல்லப்படுவது, அவற்றின் விளைவாக தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தது என இந்தியாவின் வரலாறு இவ்வளவு கறைபடிந்ததாக இருந்திருக்காது.

 

 சாதி ஒழிப்பு, சமத்துவம் எனும் அம்பேத்கரின் கனவு முறியபடிக்கப்பட்டது இந்த பெரும்பான்மைவாத அரசியலினால் தான். எண்ணிக்கை அடிப்படையிலான பிரதிநுத்துவம் என்பது மக்களிடையே அச்சத்தை, பொறாமையை, வெறுப்பை உண்டு பண்ணுகிறது. அரசியல் கட்சிகள் இதை வைத்து அறுவடை பண்ணுகின்றன. ஒரு கட்சி ஒரு சிறுபான்மை மதத்தவரை தேர்தலுக்கு முன்பு கலவரத்தின் பெயரில் ரத்த பலிகொடுத்தால் கொடுத்தவருக்கு தேர்தல் வெற்றி நிச்சயம் எனும் நிலை ஏற்படுகிறது.

ஜெர்மனியின் யூத பலி, இலங்கையின் தமிழர் பலி ஆகியவை இதன் இனவாத சொரூபங்களே அன்றி வேறில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து சாதி, இன, மத ரீதியில் சிறுமைப்படுத்தாமல், துன்புறுத்தி, அடிமைப்படுத்தி, அடிப்படை உரிமைகளைப் பறிக்காமல் நம் எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயக தேர்தல் எந்திரத்தால் வேலை செய்ய முடியாது. ஆம், சில முற்போக்கான மாநிலங்களில், நாடுகளில் சமரசத்துடன் அனைத்து பிரிவினரும் ஒரு உயர்ந்த லட்சியத்தின் அடிப்படையில் வாழ முடியும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் இந்த லட்சியங்கள் செத்து விட்டன. இனி எளியோரின் ரத்த பலி மட்டுமே நமது ஜனநாயக அமைப்பை தக்க வைக்கும். அடுத்த 50 ஆண்டுகள் எல்லாவகையான சிறுபான்மையினருக்கும் உலகம் முழுக்க நரகமாக அமையும் என நம்புகிறேன்.

 

 இச்சூழலில் status பிரதி quoவை தக்க வைப்பது அடுத்த அரை நூற்றாண்டில் மிக ஆபத்தான ஒன்றாக சிறுபான்மையினருக்கு மாறும். இந்த பார்வை தவறாகவும் இருக்கலாம், எதிர்காலத்தில் உலகம் முழுக்க அரசியல் போக்குகள் மாறலாம், ஆனால் இப்போதைக்கு இதுவே என் நம்பிக்கை.

 

 

நான் சொல்கிற முறையில் வாக்களிப்பை மாற்றினால் ஹத்ராஸ் மாதிரியான சம்பவமே எங்கும் நிகழாது. ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு தலித் முதல்வர் இல்லை, ஏன் திராவிட கட்சிகளில் மத்திய சாதியினர் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனும் கேள்வி இராது. அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகளை எதிர்த்து வரும் பிராமணர்கள் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஒரே நாளில் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சமம் எனும் நிலை தோன்றும். உலகம் முழுக்க இது இன, மத அளவிலான வேற்றுமையை அழித்து சமத்துவத்தை கொண்டு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:
2AD9023F-83BB-48E6-88C7-99C71E1F4822.jpeg
 
CC25C38F-5D49-4E61-AF38-5683120E2812.jpeg
 

 

ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது.

 

நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனை வருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்!

 

 யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டாலும் அவர்களும் 

அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமான செய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான அளவில் அவர்கள் நிகழ்த்திய இன அழித்தொழிப்பை மறக்கவில்லை. தொடர்ந்து பண்பாட்டு, அரசியல் தளத்தில் இது பேசப்பட்டபடியே இருக்கிறது. உலகம் எந்த சர்வாதிகாரியை மறந்தாலும் ஹிட்லரை மறக்கவில்லை - ஏனென்றால் இந்த கதையாடல் யூதர்களுக்கு வரலாற்றில் மிகப்பெரிய அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்தன.

 உளவியல் ரீதியாக தம்மை வரலாற்றில் நினைவு கொள்ளவும் இன அழிப்பின் (யூதர்-நாஜிக்கள்) இருமை அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இதன் வெக்கை பொறுக்க முடியாமல் போகும் போது சில யூதர்கள் தம்மை ஒரு கலாச்சார, வரலாற்று மறதிக்குள் தள்ளுவதை, வரலாற்றுக் குற்றங்களை இயல்பாக்கம் செய்ய முயன்றதைப் பற்றி ஹேரிண்ட் எனும் யூத தத்துவஞானி பேசுகிறார். ஈழத் தமிழர்களைப் போன்றே யூதர்கள் மத்தியிலும் எல்லா வகையான மக்களும் இருந்தார்கள் - தப்பித்துப் போனவர்கள், முடியாதவர்கள், இன அழிப்பை மறக்க முயன்றவர்கள், மறுத்தவர்கள், ஹிட்லருடன் சமாதானமாகப் போக முயன்றவர்கள், வெளியே போய் இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியவர்கள், அதை சினிமா, இலக்கிய கதையாடல்களில் பதிவாக்கி நிரந்தரமான ஒரு வடுவாக்கியவர்கள்’, மறக்க முடியாத ஒரு துயரப்பாடலை அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாடிக் கொண்டிருப்பவர்கள். எனக்குத் தெரிந்து ஒரு இன அழித்தொழிப்பு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் நிகழ்ந்த பின்னர் மக்கள் அது நடக்காததைப் போல நம்பி சுமூகமாய் வாழ்ந்ததாய் வரலாறில்லை. ஏனென்றால் அப்படி நடந்தால் உங்கள் வரலாற்று நினைவில் ஒரு கண்ணி உடைந்து போகும், நினைவுச்சங்கிலியில் பிற கண்ணிகள் மொத்தமாய் பொலபொலவென உதிந்து விடும். ஆகையால் ஒரு இனத்தின் தக்கவைப்புக்கு சில நினைவுகளை மறக்காமல் தக்க வைப்பது அவசியம்.

 

அடுத்து, ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறந்த நிரந்தர தீர்வு என்ன?

 

 இன அழித்தொழிப்புக்கு சிறந்த தீர்வு புதிய தேசத்தை உருவாக்குவது தான் என்பது என் பார்வை. ஒரு சில பெரிய தேசங்கள் ஒத்துழைத்தால் மட்டும் போதும். (ஆனால் இதற்கு நடைமுறை சாத்தியம் குறைவு, பின்விளைவுகளும் பாரதூரமானவை.)

 இரண்டாவதாய், இரு இனங்களும் சமாதானமாகப் போக வேண்டும். ஒரே தேசத்தில் சகோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஆனால் இப்போதைய ஜனநாய அமைப்பில் அது சுலபம் அல்ல. ஒற்றுமை வர வேண்டுமென்றால் ஒரு சிறிய முக்கியமான மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் என்பது எப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய்யப்படுகிறார்கள் என்பதில் வர வேண்டும். இம்மாற்றம் வந்தால் பேரினவாத அரசியல் காலவதியாகி விடும். இன அழித்தொழிப்புகள் நிகழாது. மத, இன, சாதி அடிப்படையிலான வன்முறை ஒரு முடிவுக்கு வரும்

 

 எப்படி?

 வாக்கரசியலை எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல் சமமாக்குவதன் வழி. அதாவது ஒரு தேசத்தில் எத்தனை சாதிகள், இனங்கள், மதங்கள் இருக்கின்றனவோ அவர்களுக்கு சரிவிகிதமான எண்ணிக்கையில் இடங்கள், பிரதிநுத்துவம். அப்போது பேரினவாத, பெரும்பான்மைவாத அரசியல் அர்த்தமற்றுப் போகும். இலங்கையில் இம்மாற்றம் முதலில் வர வேண்டும். அடுத்து இந்தியாவில்.

 

 இரண்டுமல்லாமல் மூன்றாவதான தீர்வு சிறிய இனங்கள் பேரினங்களுடன் சமாதானமாகப் போவது. உரிமைகளை இழந்தாலும் சுயமரியாதையை இழந்தாலும் மௌனமாய் அதைப் பொறுத்துக் கொண்டு இரண்டாம் தரமாய் நடத்தப்பட்ட ஒப்புக் கொள்வது. இன்றைய நிலையில் இந்த மூன்று சாத்தியங்கள் தாம் கண்ணில் படுகின்றன.

 

 குறிப்பாக இன்று பாசிசமும் மத இனவாதங்களும் கைகோர்த்து முதலீட்டியத்தின் ஆதரவுடன் கோலோச்சி நிற்கும் போது ஒரு லட்சியபூர்வமான ஜனநாயகம் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. அடிமை-ஆண்டான் வாழ்வுமுறையையே இன்றைய ஜனநாயகம் ஒரு பளபளப்பான காகிதம் சுற்றி நமக்கு அளிக்கிறது - அங்கு நாம் அடிப்படையில் சமத்துவம் அற்றவர்களாக இருந்தபடியே வாக்களிப்பதில் மட்டும் சமத்துவம் பெறுகிறோம். இது வேலைப் பங்கீட்டில் மட்டும் சமத்துவம், ஊதியத்தில் இல்லை என்பதைப் போன்றது.

 

ஒரு நாட்டில் இரு மதங்களை / இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஒரு தரப்பு 5%, மற்றொன்று 95%. தேர்தலில் 5% வாக்களிக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களின் உரிமைகளுக்கு, மேம்பாட்டுக்கு, இருப்புக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க மாட்டார்கள். தேவை ஏற்பட்டால் 95%க்காக 5%யை சிறுக சிறுக ஒடுக்கி அழிக்கப் பார்ப்பார்கள்.

 இந்தியாவில் இன்று இஸ்லாமியர்களுக்கு இதுவே நிகழ்கிறது. அவர்களின் எண்ணிக்கை பெருகுவதைப் பற்றி ஒரு நூறாண்டுக்கு மேலாக இந்துத்துவர்கள் கவலை தெரிவித்து வந்ததை அறிவோம். ஏனென்றால் நமது தேர்தல் அமைப்பில் எண்ணிக்கையே அதிகாரம். என்ன ஒரு அநியாயம் இல்லையா! உத்தரபிரதேசம் எனும் மாநிலத்தில் மக்கள் தொகை இவ்வளவு அதிகமாய் இல்லை என்றால் இந்துத்துவம் இவ்வளவு பெரும் சக்தியாகத் தோன்றுவதோ, வழிபாட்டுத்தலங்கள் இடிப்பது, மக்கள் உயிருடன் கொளுத்தப்படுவது, கூட்டங் கூட்டமாய் கொல்லப்படுவது, அவற்றின் விளைவாக தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தது என இந்தியாவின் வரலாறு இவ்வளவு கறைபடிந்ததாக இருந்திருக்காது.

 

 சாதி ஒழிப்பு, சமத்துவம் எனும் அம்பேத்கரின் கனவு முறியபடிக்கப்பட்டது இந்த பெரும்பான்மைவாத அரசியலினால் தான். எண்ணிக்கை அடிப்படையிலான பிரதிநுத்துவம் என்பது மக்களிடையே அச்சத்தை, பொறாமையை, வெறுப்பை உண்டு பண்ணுகிறது. அரசியல் கட்சிகள் இதை வைத்து அறுவடை பண்ணுகின்றன. ஒரு கட்சி ஒரு சிறுபான்மை மதத்தவரை தேர்தலுக்கு முன்பு கலவரத்தின் பெயரில் ரத்த பலிகொடுத்தால் கொடுத்தவருக்கு தேர்தல் வெற்றி நிச்சயம் எனும் நிலை ஏற்படுகிறது.

ஜெர்மனியின் யூத பலி, இலங்கையின் தமிழர் பலி ஆகியவை இதன் இனவாத சொரூபங்களே அன்றி வேறில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து சாதி, இன, மத ரீதியில் சிறுமைப்படுத்தாமல், துன்புறுத்தி, அடிமைப்படுத்தி, அடிப்படை உரிமைகளைப் பறிக்காமல் நம் எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயக தேர்தல் எந்திரத்தால் வேலை செய்ய முடியாது. ஆம், சில முற்போக்கான மாநிலங்களில், நாடுகளில் சமரசத்துடன் அனைத்து பிரிவினரும் ஒரு உயர்ந்த லட்சியத்தின் அடிப்படையில் வாழ முடியும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் இந்த லட்சியங்கள் செத்து விட்டன. இனி எளியோரின் ரத்த பலி மட்டுமே நமது ஜனநாயக அமைப்பை தக்க வைக்கும். அடுத்த 50 ஆண்டுகள் எல்லாவகையான சிறுபான்மையினருக்கும் உலகம் முழுக்க நரகமாக அமையும் என நம்புகிறேன்.

 

 இச்சூழலில் status பிரதி quoவை தக்க வைப்பது அடுத்த அரை நூற்றாண்டில் மிக ஆபத்தான ஒன்றாக சிறுபான்மையினருக்கு மாறும். இந்த பார்வை தவறாகவும் இருக்கலாம், எதிர்காலத்தில் உலகம் முழுக்க அரசியல் போக்குகள் மாறலாம், ஆனால் இப்போதைக்கு இதுவே என் நம்பிக்கை.

 

 

நான் சொல்கிற முறையில் வாக்களிப்பை மாற்றினால் ஹத்ராஸ் மாதிரியான சம்பவமே எங்கும் நிகழாது. ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு தலித் முதல்வர் இல்லை, ஏன் திராவிட கட்சிகளில் மத்திய சாதியினர் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனும் கேள்வி இராது. அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகளை எதிர்த்து வரும் பிராமணர்கள் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஒரே நாளில் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சமம் எனும் நிலை தோன்றும். உலகம் முழுக்க இது இன, மத அளவிலான வேற்றுமையை அழித்து சமத்துவத்தை கொண்டு வரும்.

நல்லதொரு ஆக்கம் பகிர்விற்கு நன்றி தோழர் ..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.