Jump to content

வென்றார் முரளி! சேதுபதி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kuna kaviyalahan said:

 

குணா,

முரளி ஏன் படம் எடுத்துவிட்டு அரசியலுக்கு வரவேண்டும்? கொழும்பு போன்ற ஒரு மாவட்டத்தில் அரச கட்சியில் இறங்கினால் சிங்கள வாக்குகளால் மட்டுமே எம்பியாக வரலாம். இல்லாவிடில் இருக்கவே இருக்கு தேசிய பட்டியல். 

“முரளி நமது ஆள்” என்பதை அவர் போதுமானவரை சிங்கள மக்கள் மனங்களில் பதிய வைத்து விட்டார், இனி அப்படி ஒரு தேவை இருப்பதாக தெரியவில்லை.

நான் நினக்கிறேன் அவர் இந்த படத்தை தமிழகத்தில் எடுக்க காரணம் - சந்தை, தொழில்நுட்ப வசதிகளில் சிங்கள சினிமா கோடம்பாக்கத்தின் 10% கூட இல்லை என்பதால்தான்.

இந்த படம் சகல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் ஒரு கமெர்சியல் பிளாக்பாஸ்டராக திட்டமிடபடுகிறது. சிங்கள படமாக, இலங்கையில் எடுதால் ஒரு நல்ல ஆர்ட் பில்மாக எடுப்பார்களே ஒழிய - காசு பார்க்க முடியாது.

அதற்காக இந்த படத்தை எடுப்பதில் அரசியல் காரணம் இல்லை என நான் சொல்லவில்லை. நிச்சயமாக உண்டு. ஆனால் நீங்கள் சொல்வதல்ல அந்த காரணம் என்பதே என் கருத்து.

Link to comment
Share on other sites

சிறிலங்கா சினிமா சர்வதேச தரம் வாய்ந்தவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
800 விக்கட் எடுத்ததும், உலக கோப்பையில் விளையாடி வென்றதும்  சிங்கள அரசின் ஏன் சிங்கள மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டார் முரளி.
வியாபார ரீதியாக சிந்திப்பதால் சிங்களத்தில் படம் எடுப்பதிலும் பார்க்க தமிழ் நாட்டில் படம் எடுப்பதன் மூலம் மேலும் புகழையும் பணத்தையும் தேட முடியும். அத்தோடு நீங்கள் சொல்வது போல் ஏனைய இந்திய மொழிகளிலும் எடுக்க முடியும்.
இலங்கை அரசுடன் இணைய வியாழேந்திரன் போன்றோர் இவ்வளவு கஸ்டப்படவில்லையே? முரளி ஏன் அதிக கஸ்டப்பட்டு தன்னை நம்பிக்கையானவராக காட்ட வேண்டும்? ஏற்கனவே அவர் அவர்களுக்கு நம்பிக்கையானவர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த பார்த்தார், சில வீழ்ந்தன, பல இல்லை, அவருக்கும் இது ஒரு பின்னடைவே. நன்றி பகிர்வுக்கு. இந்த ஏதிர்ப்பினால் இன்னும் அவருக்கு சிங்கள தரப்பில் ஆரதவு கூடும், அது மறுக்கு முடியாத ஒன்று. சிங்கள படங்களின் கதை தரமானது, மலையாளத்தை போன்று, ஆனா அவர்களால் உலக தரத்தில் எடுக்க இன்னும் வளரவில்லை. 

விஐய் சேதுபதிக்குதான் பாதிப்பு அதிகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதத்தின் தமிழ்முகம்

 
1-58-696x348.jpg
 52 Views

‘முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்’ என்கிற அரசியல் பார்வை முன் வைக்கப்படுகிறது.

அது பலமடையுமா? அல்லது பலவீனமடையுமா? என்பதை சிங்களமே தீர்மானிக்கப் போகிறது.

‘ஒருவர் மீதோ அல்லது அவர் சார்ந்த கட்சியின் மீதோ விமர்சனங்களை முன் வைக்கும் போது, அவர்கள் அதனைச் தமக்குச் சாதகமாக மாற்றுவார்கள்’ என்பது இயல்பானது.

தேர்தல் காலங்களில்,’ரணிலைப் பகிரங்கமாக ஆதரித்தால், சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தருக்கு ஆதரவு அதிகரித்துவிடும்’ என்று கூட்டமைப்பினர் கூறுவதை நாம் அவதானித்துள்ளோம். அது ஓட்டு அரசியலின் மறைமுகமான தந்திரம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அரசியல் தந்திரோபாயக் களம் வேறு வகையானது .
முத்தையா முரளிதரன் என்கிற ‘சர்வதேச கிரிக்கட் முகம்’ பேசும் பேரினவாத சார்பு அரசியலால் வரும் தாக்கம் பெரியது. இதன் மீது தமிழ்த்தேசிய அரசியல் தொடுக்கும் விமர்சனப் போர், சிங்களத்தின் மனதில் தற்காலிக இடம் பிடிக்கும் சந்தர்ப்பத்தை முரளிக்குக் கொடுக்கலாம்.

ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் முதல்வர் மகிந்த இராஜபக்ச, இதனை எவ்வாறு தனது சர்வதேச அரசியல் நகர்வுகளுக்குப் பயன்படுத்தப் போகிறார் என்பதை அவதானிக்க வேண்டும். அதுதான் தமிழ்த்தேசிய விடுதலை அரசியல் எதிர்நோக்கும் சவால்.

லக்ஸ்மன் கதிர்காமரை தனது சர்வதேசப் பரப்புரைக்காக, சந்திரிகா விஜயகுமார ரணதுங்க எவ்வாறு கையாண்டார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

முரளியைப் பொறுத்தவரை அர்ஜுனா ரணதுங்க போல தானும் ஒரு அரசியல் பிரமுகராக வலம் வரவேண்டுமென்கிற ஆசை இருக்கலாம்.

எவ்வாறு இந்திய-அமெரிக்க உறவில் இலங்கையை இணக்கமாகப் பொருத்திப் பார்ப்பதற்கு , அமெரிக்க நண்பர் மிலிந்த மொரகொடவின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறதோ, அதேபோன்று வழுவழுத்த இந்திய-இலங்கை தடுமாற்ற உறவில் தானும் ஒரு தமிழ் மிலிந்தாவாக ஆகிவிட முடியாதாவென முரளி கற்பிதம் கொள்ளலாம்.

ஆகவே கிரிக்கட்டால் பெற்ற புகழ்வெளிச்சத்தை, சினிமா ஊடாக இந்தியாவெங்கும் பரவவிட்டு, தனக்கான கொழும்பு -இந்திய சிம்மாசனத்தை முரளி உருவாக்க எண்ணுகிறார் போலுள்ளது.

கடந்த தேர்தலில் மகிந்த சார்பில் நுவரெலியாவில் தனது சகோதரரை இறக்கினார்.
அது தோல்வியிலேயே முடிந்தது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.சிங்களக் கடும்போக்காளர் விமல் வீரவன்சவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அவருடைய சகல அரசியல் நகர்வுகளும் சிறுதளவேனும் வெற்றி வாய்ப்பினை அளிக்கவில்லை.
‘இவரல் எந்த நாடாளுமன்ற அரசியல் இலாபமும் தமக்கு இல்லை’ என்பதனை மகிந்த சகோதரர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள்.

பொதுவாகவே, தமது கட்சிக்கு வாக்குச் சேகரிக்க முடியாதவர்களை, இந்த அதிகாரத்தரப்பானது எப்போதுமே கெளரவ நடிகர்களாகவே வைத்துக் கொள்ளும்.

இராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு இப்போது சீனாவிற்கெதிரான வல்லரசுநாடுகளை சமாளிக்க, அந்த நாடுகளால் கனிவாகப் பார்க்கப்படும் நல்லெண்ணத் தூதுவர்கள் (அம்பாசிடர்ஸ்) தேவை.

முன்னாள் பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் யாழ். விஜயத்தின் போதே சிங்களத்தின் ‘அம்பாசிடர் முரளிதரன்’ களமிறங்குகிறார்.

பிரெஞ்சு அதிபர் சென்றிருந்தால் வேறொருவர் சென்றிருப்பார்.
ஆதலால் கிரிக்கட் இரசிகரான கமரூன் வரும்போது முரளியை முன்னிறுத்துகிறது சிங்களத்தின் இராஜ தந்திரம்.

முரளியின் ஆட்டக்களம் எதுவென்பதை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

அவர்களே இவரின் இருப்பிடத்தைத் தீர்மானிப்பார்கள்.

கருணா போன்று, பொதுஜன பெரமுனவின் உப-உப- தலைவர்களில் ஒருவராகலாம்.
இல்லையேல் அம்சா போல, சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராகலாம். எதுவும் நடக்கலாம்.

பெற்ற பேரையும் புகழையும் காசாக்குவதற்கு கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரம் உண்டு.
ஆனால் சேர்த்த பணத்தையும் புகழையும் பாதுகாக்க, பலருக்கு தலையைச் சுற்றி ‘அரசியல் ஒளிவட்டம்’ தேவைப்படுகிறது.

இவர் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்.
அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை ஆதரிப்பது அவரின் சுயநலம் சார்ந்த உரிமை.
அதனை எதிர்ப்பது மக்கள்திரள் அரசியலின் தலையாய கடமை.

-இதயச்சந்திரன்

https://www.ilakku.org/பேரினவாதத்தின்-தமிழ்முக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசைப்பலகை வீரர்களால் நடாத்தப்பட்ட போர் இதில் செய்தியாளர்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது எந்த முன்னணி பத்திரிகையின் ஆதரவும் இல்லை ஆனால் முரளிதரன் அலறுகிறார் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.