Jump to content

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய  விரிவுரையாளர் படுகொலை! | Athavan News

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த இளைஞனை கைதுசெய்ய முயன்ற போது, அவர் தப்பியோடியதால், அவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது, குறித்த இளைஞனிடமிருந்து சிறிய கைத்துப்பாக்கியும், ஒரு கூரான கத்தியும் பொலிஸார் கைப்பற்றினர்.

தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் மாஸ்கோவில் பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘எங்களுடைய குடிமகன் ஒருவரை இழந்துவிட்டோம். ஏனென்றால் அவர் மாணவர்களுக்கு கருத்து சுதந்திதத்தையும், நம்பகத்தன்மையையும் கற்றுக்கொடுத்ததற்காக! ஆசிரியர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்கும்’ என கூறினார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

http://athavannews.com/பிரான்ஸில்-நபிகள்-நாயகத்/

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

நானிருக்கும் இடத்திற்கு அருகாமையில்தான் நடந்தது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். போராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

அவரவர் சமயமும் கடவளும் அவரவர் பிரச்சனை. இதில் இன்னொரு சமயத்தவருக்கு என்ன பிரச்சனை.

அதுசரி இவரென்ன கேலிச்சித்திர விரிவுரையாளரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ellam Theringjavar said:

அவரவர் சமயமும் கடவளும் அவரவர் பிரச்சனை. இதில் இன்னொரு சமயத்தவருக்கு என்ன பிரச்சனை.

அதுசரி இவரென்ன கேலிச்சித்திர விரிவுரையாளரா.

செய்தியை பல மூலங்களிலிருந்தும் தேடி வாசியுங்கள். 

அப்போதேனும் உங்களுக்குத் ஏதேனும் தெரிய வருகிறதா எனப் பார்க்கலாம் 

☹️

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

செய்தியை பல மூலங்களிலிருந்தும் தேடி வாசியுங்கள். 

அப்போதேனும் உங்களுக்குத் ஏதேனும் தெரிய வருகிறதா எனப் பார்க்கலாம் 

☹️

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜெகதா துரை said:

நானிருக்கும் இடத்திற்கு அருகாமையில்தான் நடந்தது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். போராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 

3 minutes ago, விசுகு said:

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

செய்தியின் அடிபடையே புரியாமல் / தெரியாமல் கருத்துக் கூறமுற்பட்டால் வாதம் விதண்டாவாதமாய் முடியும். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

நிச்சயமாக. அது ஐரோப்பா முழுவதும் வலுப்பெற்று இருக்கு. ஒரு நாள் உலகை ஆளும் அவர்களது கனவு வெகு தொலைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது ! 

ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து.....
பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளவிடயம் வெளிநாட்டவர்களின் கட்டற்ற வருகையே எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

சிலர் வெளிப்படையகவே இஸ்லாமியரைப் பொதுவாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இஸ்லாம் குடியரசுப் பெறுமானங்களுடன் ஒத்துப்போக முடியாத ஒன்று எனப் பிரலாபம் செய்கின்றனர். தீவிர வலதுசாரிக் கட்சிகளோ தாம் சொல்லுவதை அனேகமாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
இம்மானுவெல் ஆசியர் பிரான்சில் வாழும் செச்சீனியா நாட்டின் இளைஞர் ஒருவரால் சிரைச்சேதம் செய்யப்பட்டதையடுத்து பிரான்சில் போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டவர்கள் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்ப்படுகிறது. 

மீளவும் வெளிநாட்டவர்கள் வருகை தொடர்பாகவும், இஸ்லாம்-குடியரசு அவற்றிக்கிடையேயான உடன்பாடு-முரண்பாடு தொடர்பாகவும் விவாதங்கள் மேலெழுந்த வண்ணமுள்ளன. 

இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த வேளையில், அழிவுகளிலிருந்த நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் நோக்கில் தமது காலணியாகவிருந்த வட ஆபிரிக்காபிலிருந்து ஏராளமான இஸ்லாமியத் தொழிலாளர்கள் பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் பலர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தார்கள். இக்காலத்தில் அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்கள் பலர் ஆண்களாக இருந்தனர். 72 ம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் தமது குடும்பங்களையும் பிரான்சுக்குக் கூட்டிவரும் உரிமை வழங்கப்பட்டது. 
இவ்வாறான தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடுப்பங்களுக்குமென மத்திய நகரிலிருந்து சற்றுத் தொலைவிலான புறநகரங்களில்தொடர்மாடிக் கட்டடங்கள அமைக்கப்பட்டன. பிரான்சின் முக்கிய நகரங்களில் அனைத்தைச் சுற்றியும் இது நடைபெற்றது. பொருளாதார மையங்களாக இருந்த, இருக்கின்ற பெருநகரங்களின் யதாரத்தம் இதுதான். 
(சுருக்கமான முன்னோட்டமாக....) 

2019ம் ஆண்டு "மதசார்பின்மை அவதான மையம்" வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, பிரான்சில் ஒரு மதத்தைப் பினபற்றுபவதாகப் பிரகடனம் செய்பவர்களில் 14 வீதமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். 
இவர்களில் 18-29 வயதுக்கிடைப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் உள்ளனர். அண்ணளவாகப் பார்த்தால், 1990 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் இருமதத்தினரும் சம எண்ணிக்கையில் உள்ளனர். 

ஒட்டுமொத்த பிரான்சின் சனத்தொகையில் 6 வீதத்தினரே இஸ்லாமியராக இருக்கும்போதும் (4,1 மில்லியன்) கத்தோலிக்கர்களின் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கை அடியாகக் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதம் சவூதி போன்ற நாடுகளின் பாரிய நிதிப்பங்களிப்புடன் பிரான்சில் வளர்ச்சியடைந்துள்ளது என்பது பொதுவான அவதானிப்பாக உள்ளது. பிரான்சில் உள்ள (பள்ளிவாசல்கள் உட்பட்ட) இஸ்லாமிய வழிபாட்டிடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் அதிகமானதாகும். இவற்றுள் தீவிரவாதத்தைப் போதிக்கும் இடங்களாக நூற்றுக்கும் மேற்பட்டவையுள்ளன என்கிறது உள்நாட்டமைச்சின் அறிக்கை யொன்று. 

இதன் விளைவுகளாகச் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்: 

முக்காடு போடும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு ஒரேயொரு இஸ்லாமியத் தனியார் பாடசாலையே பிரான்சில் இருந்தது. இன்று அது எண்ணிக்கையில் 120 ஆக உயர்ந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் தொழுகைக்கான இட ஒதுக்கீடும் அதற்கான இலவச நேரமும் கோரப்படுகிறது. பாடசலை உணவகங்களில் "ஹலால்" உணவு கோரப்படுகிறது. பெண்களுக்குப் பெண்கள்தான் வைத்தியம் செய்ய வேண்டும் எனக் கோரப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதானால், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்கள் தம்மதக் கோட்பாடுகளுக்கு அமைவான வகையிலான வாழ்வுரிமையைக் கோருகிறார்கள். அல்லது நடைமுறைப்படுத்துகிறார்கள். 
ஆனால், பிரஞ்சுக் குடியரசு தான் மதசார்பற்றது என்ற கோசத்தைக்கொண்டது. அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இங்கேதான் முரண்பாடுகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. 

இதில் சில விடயங்களை நாம் துல்லியமாகக் கருத்திலெடுக்க வேண்டும். 

- பிரான்சில் சமூக-பொருளாதார ரீதியாக இஸ்லாமிய சமூகம் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டுள்ளது, 
- பிரான்சில் இஸ்லாமியருக்கு எதிராக குறிப்பாகப் பிரான்சில் வாழும்அரபுகளுக்கு எதிரான இனவாதம் பாரிய அளவில் வளர்ச்சிகண்டுள்ளது. 
- இதன்காரணமாக அது தன்னையொரு ஒதுக்கப்பட்ட தனித்த அலகாக்க கருதி இஸ்லாமை மையப்படுத்திய வாழ்கையை நோக்கிச் சென்றுடிகொண்டிருக்கிறது, 
- இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. 
- இஸ்லாமியக் குழந்தைகளின் பிறப்புவீதம் அதிகரித்துள்ளது. 

ஆக மொத்தத்தில் பிரஞ்சும் சமூகம் மிகக் குறுகிய காலத்துள் "சமூகங்களாகப்" பிரியும் ஆபத்து யாதார்த்தமாகிவிட்டது. தற்போது அரசியல் வாதிகளும் சமூக விஞ்ஞானிகளும் இவ்விடயத்தைத் தெளிவாகப் புரிந்து அதற்குரிய, இந்நிலையைத் தடுக்கும் வகையிலான சட்ட மாற்றங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

இஸ்லாமியப் பிறப்பு வீதத்தைக் குறைக்க வேண்டுமானால் இஸ்லாமியப் பெண்களின் "சுதந்திரத்தை" வலியுறுத்வேண்டும் எனும் நோக்கில், பொதுவாகவே குடும்பத்தில் பெண் சுயாதின உரிமையுடையவாக வாழவேண்டும் எனும் முற்போக்குக் கருத்தை முன்நிறுத்திச்   சட்டவியல் திருத்தங்கள் செய்தார்கள். பெண்விடுதலையெனும் கோசத்தை முன்வைத்த பொதுச்சங்களுக்கு அரசு பாரிய நிதியை ஒதுக்கியது. 
விளைவு: பிரான்சில் குடும்பப் பிளவுகள் பாரிய அளவில் ஏற்பட்டன. விவாக ரத்துகள் அதிகரித்தன. தீவிர பெண்ணியம் தலையெடுத்து ஆண்-பெண் உறவுகளை மேலும் விரிசலாகின. திருமண வீதங்கள்வீழ்ச்சியடைந்தன. பிரஞ்சுக் காரரின் பிறப்புவீதம் சரிவடைந்தது. சமபால் உறவுகள் அதிகரித்தன. ஆனால் இச்சட்டங்கள் இஸ்லாமியக் குடும்பங்களைச் சென்றடையவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத்தின் இறுக்கமாக சுவர்களை இச்சட்டங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. 

தற்போதைய மக்ரோனின் அரசாங்கள் "பிரிவினை" க்கெதிரான சட்ட ஆக்கங்களுக்கான முனைப்பில் உள்ளது. அதுவும் வெற்றுத் தோட்டாவாக முடியவடையலாம். 

லெபனான் ஹிஸ்பொள்ளா இயக்கம் பிரான்ஸ் விரைவில் இஸ்லாமியக் குடியரசாக மாறும் என்று வேறு கட்டியம் கூறியுள்ளது. 

இப்பின்னணியில்தான், "சார்லி எப்டோவின்"கேலிச் சித்திரங்களை ஆராய வேண்டும். இக்கேலிச்சித்திரங்கள் முதலில் ஆத்திரமூட்டும் நோக்கத்திலேயே வரைந்து வெளியிடப்பட்டன. இஸ்லாமியர்களின் இறைதூதரைக் வேகலப்படுத்தி மலினப்படுத்தி இஸ்லாமியரை வம்புக்கிழுத்தார்கள் இந்த கேலிச் சித்திரக்காரர்கள். இவர்களுக்குப் பின்னால் அதிகார மையங்களின் கரம் இருந்ததை பலர் கண்டுகொள்ளவில்லை. "கருத்துச் சுதந்திரம்" பறிபோகிறது என்று அலறினார்கள். 
ஆனால், மற்றைய மதங்களைக் கேலி செய்தவர்களின் "கருத்துச் சுதந்திரத்தை" குழிதோண்டிப் புதைத்தவர்கள் பலரும் இவர்கள்தான் என்பது முரண்நகை. 

சிரைச்சேதம் செய்யப்பட்ட அப்பாவி ஆசிரியர் யாருக்குப் பலியானார் ? ஒரு பதினெட்டு வயது மடையன் யாரோ சொன்னவற்றைக் கேட்டு அந்த ஆசரியரைச் சிரைச்சேதம் செய்தான். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. "இல்-து-பிரான்ஸ்" என அழைக்கப்படும் பரிசையும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் எந்தப்பாடசாலையை எடுத்தாலும் அங்கு இஸ்லாமிய மாணவர்கள் இல்லாதிருப்பது அரிது. 

இது இப்படியிருக்க, 

- புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம். 
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

இங்கேதான் ஒரு அரசியல் தெளிவாக முன்வந்து நிற்கிறது. ஆற்றாமையின் அரசியல். பிரஞ்சுக் குடியரசு தன் அரசியலில் அதாவது மக்கள் தொகை, குடிவரவு போன்ற விடயங்களில் பாரிய தோல்வியை அடைந்துவிட்டது. இஸ்லாம் ஒரு நாள் தன்தேசத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனும் தூரப்பார்வையை அது கொண்டிருக்கவில்லை. இறுதியில் ஆத்திரமூட்டல்களால் மிதவாத இஸ்லாமியர்களையும் தீவிர வாதத்தை நோக்கி நகர்திக்கொண்டிருக்கிறது. 

தற்போது "ஆற்றா நண்டு" தணலைக் கவ்வும் வேலையைச் செய்கிறது. அதாவது, கல்வி அமைச்சின் ஊடாக இஸ்லாமியச் சந்ததியை அதன் மத நம்பிக்கைகளிலிருந்து பிடுங்க நினைக்கின்றது பிரஞ்சுக் குடியரசு. அதற்குக் கருவியாகிப் பலியாகிவர்தான் பாவம் அந்த சாமுவேல் பத்தி ஆசிரியர். இது அரசின் ஆராக்கியமான போக்கல்ல. அரசின் கல்விக் கொள்ளை நிiதானமானதாக இல்லை. சமூக அமைதியைப் பேணுவதாக இல்லை. ஆத்திமூட்டல்களால் ஏதும் நடைபெறப்போவதில்லை. 

எத்தனை ஊர்வலங்களை நடாத்தினாலென்ன, மெழுகுவரத்திகளை ஏற்றினாலென்ன, பூங்கொத்துகள் விதைத்தாலென்ன, கோசங்களை எழுப்பினாலென்ன, எத்தனை சட்டங்களைப் போட்டாலென்ன, மிதவாதச் சத்திகளை தன்னுடன் இணைத்து ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்து முன்நகர்ந்தாலன்றி, பாரிய சமூக சச்சரவுகளுக்கு ஒட்டுமொத்தத் பிரஞ்சு தேசமும் முகம் கொடுக்கவேண்டியேற்படும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. 

வாசு தேவன்
18.10.2020.

6 minutes ago, Kapithan said:

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம்
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

மன்னிக்கவும் சகோ நேரமின்மையால் இதை இணைக்கின்றேன் போதுமான விளக்கம் இதில் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது ! 

ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து.....
பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளவிடயம் வெளிநாட்டவர்களின் கட்டற்ற வருகையே எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

சிலர் வெளிப்படையகவே இஸ்லாமியரைப் பொதுவாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இஸ்லாம் குடியரசுப் பெறுமானங்களுடன் ஒத்துப்போக முடியாத ஒன்று எனப் பிரலாபம் செய்கின்றனர். தீவிர வலதுசாரிக் கட்சிகளோ தாம் சொல்லுவதை அனேகமாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
இம்மானுவெல் ஆசியர் பிரான்சில் வாழும் செச்சீனியா நாட்டின் இளைஞர் ஒருவரால் சிரைச்சேதம் செய்யப்பட்டதையடுத்து பிரான்சில் போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டவர்கள் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்ப்படுகிறது. 

மீளவும் வெளிநாட்டவர்கள் வருகை தொடர்பாகவும், இஸ்லாம்-குடியரசு அவற்றிக்கிடையேயான உடன்பாடு-முரண்பாடு தொடர்பாகவும் விவாதங்கள் மேலெழுந்த வண்ணமுள்ளன. 

இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த வேளையில், அழிவுகளிலிருந்த நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் நோக்கில் தமது காலணியாகவிருந்த வட ஆபிரிக்காபிலிருந்து ஏராளமான இஸ்லாமியத் தொழிலாளர்கள் பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் பலர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தார்கள். இக்காலத்தில் அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்கள் பலர் ஆண்களாக இருந்தனர். 72 ம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் தமது குடும்பங்களையும் பிரான்சுக்குக் கூட்டிவரும் உரிமை வழங்கப்பட்டது. 
இவ்வாறான தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடுப்பங்களுக்குமென மத்திய நகரிலிருந்து சற்றுத் தொலைவிலான புறநகரங்களில்தொடர்மாடிக் கட்டடங்கள அமைக்கப்பட்டன. பிரான்சின் முக்கிய நகரங்களில் அனைத்தைச் சுற்றியும் இது நடைபெற்றது. பொருளாதார மையங்களாக இருந்த, இருக்கின்ற பெருநகரங்களின் யதாரத்தம் இதுதான். 
(சுருக்கமான முன்னோட்டமாக....) 

2019ம் ஆண்டு "மதசார்பின்மை அவதான மையம்" வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, பிரான்சில் ஒரு மதத்தைப் பினபற்றுபவதாகப் பிரகடனம் செய்பவர்களில் 14 வீதமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். 
இவர்களில் 18-29 வயதுக்கிடைப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் உள்ளனர். அண்ணளவாகப் பார்த்தால், 1990 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் இருமதத்தினரும் சம எண்ணிக்கையில் உள்ளனர். 

ஒட்டுமொத்த பிரான்சின் சனத்தொகையில் 6 வீதத்தினரே இஸ்லாமியராக இருக்கும்போதும் (4,1 மில்லியன்) கத்தோலிக்கர்களின் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கை அடியாகக் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதம் சவூதி போன்ற நாடுகளின் பாரிய நிதிப்பங்களிப்புடன் பிரான்சில் வளர்ச்சியடைந்துள்ளது என்பது பொதுவான அவதானிப்பாக உள்ளது. பிரான்சில் உள்ள (பள்ளிவாசல்கள் உட்பட்ட) இஸ்லாமிய வழிபாட்டிடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் அதிகமானதாகும். இவற்றுள் தீவிரவாதத்தைப் போதிக்கும் இடங்களாக நூற்றுக்கும் மேற்பட்டவையுள்ளன என்கிறது உள்நாட்டமைச்சின் அறிக்கை யொன்று. 

இதன் விளைவுகளாகச் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்: 

முக்காடு போடும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு ஒரேயொரு இஸ்லாமியத் தனியார் பாடசாலையே பிரான்சில் இருந்தது. இன்று அது எண்ணிக்கையில் 120 ஆக உயர்ந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் தொழுகைக்கான இட ஒதுக்கீடும் அதற்கான இலவச நேரமும் கோரப்படுகிறது. பாடசலை உணவகங்களில் "ஹலால்" உணவு கோரப்படுகிறது. பெண்களுக்குப் பெண்கள்தான் வைத்தியம் செய்ய வேண்டும் எனக் கோரப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதானால், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்கள் தம்மதக் கோட்பாடுகளுக்கு அமைவான வகையிலான வாழ்வுரிமையைக் கோருகிறார்கள். அல்லது நடைமுறைப்படுத்துகிறார்கள். 
ஆனால், பிரஞ்சுக் குடியரசு தான் மதசார்பற்றது என்ற கோசத்தைக்கொண்டது. அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இங்கேதான் முரண்பாடுகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. 

இதில் சில விடயங்களை நாம் துல்லியமாகக் கருத்திலெடுக்க வேண்டும். 

- பிரான்சில் சமூக-பொருளாதார ரீதியாக இஸ்லாமிய சமூகம் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டுள்ளது, 
- பிரான்சில் இஸ்லாமியருக்கு எதிராக குறிப்பாகப் பிரான்சில் வாழும்அரபுகளுக்கு எதிரான இனவாதம் பாரிய அளவில் வளர்ச்சிகண்டுள்ளது. 
- இதன்காரணமாக அது தன்னையொரு ஒதுக்கப்பட்ட தனித்த அலகாக்க கருதி இஸ்லாமை மையப்படுத்திய வாழ்கையை நோக்கிச் சென்றுடிகொண்டிருக்கிறது, 
- இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. 
- இஸ்லாமியக் குழந்தைகளின் பிறப்புவீதம் அதிகரித்துள்ளது. 

ஆக மொத்தத்தில் பிரஞ்சும் சமூகம் மிகக் குறுகிய காலத்துள் "சமூகங்களாகப்" பிரியும் ஆபத்து யாதார்த்தமாகிவிட்டது. தற்போது அரசியல் வாதிகளும் சமூக விஞ்ஞானிகளும் இவ்விடயத்தைத் தெளிவாகப் புரிந்து அதற்குரிய, இந்நிலையைத் தடுக்கும் வகையிலான சட்ட மாற்றங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

இஸ்லாமியப் பிறப்பு வீதத்தைக் குறைக்க வேண்டுமானால் இஸ்லாமியப் பெண்களின் "சுதந்திரத்தை" வலியுறுத்வேண்டும் எனும் நோக்கில், பொதுவாகவே குடும்பத்தில் பெண் சுயாதின உரிமையுடையவாக வாழவேண்டும் எனும் முற்போக்குக் கருத்தை முன்நிறுத்திச்   சட்டவியல் திருத்தங்கள் செய்தார்கள். பெண்விடுதலையெனும் கோசத்தை முன்வைத்த பொதுச்சங்களுக்கு அரசு பாரிய நிதியை ஒதுக்கியது. 
விளைவு: பிரான்சில் குடும்பப் பிளவுகள் பாரிய அளவில் ஏற்பட்டன. விவாக ரத்துகள் அதிகரித்தன. தீவிர பெண்ணியம் தலையெடுத்து ஆண்-பெண் உறவுகளை மேலும் விரிசலாகின. திருமண வீதங்கள்வீழ்ச்சியடைந்தன. பிரஞ்சுக் காரரின் பிறப்புவீதம் சரிவடைந்தது. சமபால் உறவுகள் அதிகரித்தன. ஆனால் இச்சட்டங்கள் இஸ்லாமியக் குடும்பங்களைச் சென்றடையவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத்தின் இறுக்கமாக சுவர்களை இச்சட்டங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. 

தற்போதைய மக்ரோனின் அரசாங்கள் "பிரிவினை" க்கெதிரான சட்ட ஆக்கங்களுக்கான முனைப்பில் உள்ளது. அதுவும் வெற்றுத் தோட்டாவாக முடியவடையலாம். 

லெபனான் ஹிஸ்பொள்ளா இயக்கம் பிரான்ஸ் விரைவில் இஸ்லாமியக் குடியரசாக மாறும் என்று வேறு கட்டியம் கூறியுள்ளது. 

இப்பின்னணியில்தான், "சார்லி எப்டோவின்"கேலிச் சித்திரங்களை ஆராய வேண்டும். இக்கேலிச்சித்திரங்கள் முதலில் ஆத்திரமூட்டும் நோக்கத்திலேயே வரைந்து வெளியிடப்பட்டன. இஸ்லாமியர்களின் இறைதூதரைக் வேகலப்படுத்தி மலினப்படுத்தி இஸ்லாமியரை வம்புக்கிழுத்தார்கள் இந்த கேலிச் சித்திரக்காரர்கள். இவர்களுக்குப் பின்னால் அதிகார மையங்களின் கரம் இருந்ததை பலர் கண்டுகொள்ளவில்லை. "கருத்துச் சுதந்திரம்" பறிபோகிறது என்று அலறினார்கள். 
ஆனால், மற்றைய மதங்களைக் கேலி செய்தவர்களின் "கருத்துச் சுதந்திரத்தை" குழிதோண்டிப் புதைத்தவர்கள் பலரும் இவர்கள்தான் என்பது முரண்நகை. 

சிரைச்சேதம் செய்யப்பட்ட அப்பாவி ஆசிரியர் யாருக்குப் பலியானார் ? ஒரு பதினெட்டு வயது மடையன் யாரோ சொன்னவற்றைக் கேட்டு அந்த ஆசரியரைச் சிரைச்சேதம் செய்தான். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. "இல்-து-பிரான்ஸ்" என அழைக்கப்படும் பரிசையும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் எந்தப்பாடசாலையை எடுத்தாலும் அங்கு இஸ்லாமிய மாணவர்கள் இல்லாதிருப்பது அரிது. 

இது இப்படியிருக்க, 

- புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம். 
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

இங்கேதான் ஒரு அரசியல் தெளிவாக முன்வந்து நிற்கிறது. ஆற்றாமையின் அரசியல். பிரஞ்சுக் குடியரசு தன் அரசியலில் அதாவது மக்கள் தொகை, குடிவரவு போன்ற விடயங்களில் பாரிய தோல்வியை அடைந்துவிட்டது. இஸ்லாம் ஒரு நாள் தன்தேசத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனும் தூரப்பார்வையை அது கொண்டிருக்கவில்லை. இறுதியில் ஆத்திரமூட்டல்களால் மிதவாத இஸ்லாமியர்களையும் தீவிர வாதத்தை நோக்கி நகர்திக்கொண்டிருக்கிறது. 

தற்போது "ஆற்றா நண்டு" தணலைக் கவ்வும் வேலையைச் செய்கிறது. அதாவது, கல்வி அமைச்சின் ஊடாக இஸ்லாமியச் சந்ததியை அதன் மத நம்பிக்கைகளிலிருந்து பிடுங்க நினைக்கின்றது பிரஞ்சுக் குடியரசு. அதற்குக் கருவியாகிப் பலியாகிவர்தான் பாவம் அந்த சாமுவேல் பத்தி ஆசிரியர். இது அரசின் ஆராக்கியமான போக்கல்ல. அரசின் கல்விக் கொள்ளை நிiதானமானதாக இல்லை. சமூக அமைதியைப் பேணுவதாக இல்லை. ஆத்திமூட்டல்களால் ஏதும் நடைபெறப்போவதில்லை. 

எத்தனை ஊர்வலங்களை நடாத்தினாலென்ன, மெழுகுவரத்திகளை ஏற்றினாலென்ன, பூங்கொத்துகள் விதைத்தாலென்ன, கோசங்களை எழுப்பினாலென்ன, எத்தனை சட்டங்களைப் போட்டாலென்ன, மிதவாதச் சத்திகளை தன்னுடன் இணைத்து ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்து முன்நகர்ந்தாலன்றி, பாரிய சமூக சச்சரவுகளுக்கு ஒட்டுமொத்தத் பிரஞ்சு தேசமும் முகம் கொடுக்கவேண்டியேற்படும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. 

வாசு தேவன்
18.10.2020.

புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம்
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

மன்னிக்கவும் சகோ நேரமின்மையால் இதை இணைக்கின்றேன் போதுமான விளக்கம் இதில் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

உண்மையில் உங்கள் கருத்து சரியான கருத்து. 
மதமும் திருமணமும் அவரவர் தனிப்பட்ட விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து.

உண்மையான கருத்து.சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பதினால் எம்மவர்கள் பலருக்கு இசுலாமின் மீது மரியாதை (பயம்🤣 உண்டு நெருப்போடு விளையாட கூடாது மதம் தனிப்பட்ட விடயம் அப்படி இப்படி சொல்லி கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மையான கருத்து.சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பதினால் எம்மவர்கள் பலருக்கு இசுலாமின் மீது மரியாதை (பயம்🤣 உண்டு நெருப்போடு விளையாட கூடாது மதம் தனிப்பட்ட விடயம் அப்படி இப்படி சொல்லி கொள்வார்கள்.

நாம் நல்ல காரியங்களுக்காக மெழுகுவர்த்தியும் குத்துவிளக்கும் ஏற்றுகின்றோம். அதுவும் நெருப்பு.
வீடு பற்றி எரிவதும் நெருப்பு.

தாகத்திற்கு குடிப்பதும் தண்ணீர்
சுனாமியாக வருவதும் தண்ணீர்
மல வாசலை கழுவுவதும் தண்ணீர்.

விளங்க நினைப்பவன் இதை விளங்கினால் பிஸ்தா 🤣 :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.

https://www.facebook.com/100021631899416/posts/755326001865123/?extid=0&d=w

எங்கே போய் எங்கே வந்து நிற்கிறோம். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டபாட்டிற்க்கு உள்ள விடுவது ,பிறகு குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பது 
அளவுக்கு அதிகமாக மனிதநேயம் இருந்தால் சிலவேளை இப்படியான சம்பவங்கள் ஐரோப்பியர்களின்  நெறிகட்டிப்போன மூளையை நீவி சரிசெய்யக்கூடும், கொத்துக்கொத்தாக செத்துவிழும் போது எதற்காக மற்றைய அரபுநாடுகள் இந்த முஸ்லிம்களுக்காக எல்லையை திறக்கவில்லை என்றும் எதற்க்காக அவர்களது நாடுகளில் வேற்று நாட்டவருக்கு குடியுரிமை இல்லை எனபதையும் ஐரோப்பியர்கள் முதலிலேயே மண்டையை உபயோகித்து சிந்தித்திருந்தால் இப்போது வெங்கிளாந்திகள் போல முழுசும் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

மன்னிக்கவும். இசுலாமியர்களின் செயற்பாடுகளை நான் ஒருபோதும் ஆதரிக்காதவன். இங்கு மட்டும் அல்ல தாயகத்திலும். ஆனால் இந்த ஆசிரியர் அவர்களின் மூர்க்கத்தை கணக்கிலெடுக்காமல் சீண்டியதைத்தான் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம் என்றேன் மற்றும் படி இனக்கொலையை எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்;'...(அல்குர் ஆன் 33:6)   

Link to comment
Share on other sites

15 hours ago, Kapithan said:

செய்தியின் அடிபடையே புரியாமல் / தெரியாமல் கருத்துக் கூறமுற்பட்டால் வாதம் விதண்டாவாதமாய் முடியும். ☹️

ஆத்திகரா அல்லது நாத்திகரா. ஒரு சமயத்தை சார்ந்திருந்தால் அந்த சமயத்தை கேலி செய்யும் போது அதன் வேதனை புரியும். இதில் என்ன வாதம் விதண்டா வாதம்.

சொஞ்சம் பின்னாடிப் போனால் சமயமும் அதன் நல்லெண்ணங்களும் புரியும். 1800 களில்  ஆங்கிலேயர்கள்,

இராணி வேலுநாச்சியார், மன்னர் கைதர் அலி, மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள். 

யார் எதை யாருக்காக கட்டிக்கொடுத்தார்கள். புரிந்தால் இங்கே வாதத்திற்கே இடமில்லை.

Link to comment
Share on other sites

15 hours ago, Kapithan said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

மேற்கு நாடுகள்...... எல்லாம் வேண்டாம்.  இப்போதைக்கு இங்கிலாந்து மட்டும். நகரபாதுகவல் படையின் சீருடடை இன்னமும்  அதே காக்கிதான். Police uniform is the same khaki since 1948. This is one of the good thing they left.

They came from another continent and killed all the kings and occupied all island. Another good thing. The current government simply follow the good things which the British left behind. Occupying land in North and East. Any news papers published government corruption, killed the reporter/editor. How many temples British destroyed. Now, how many temple including the land surrounded occupied. These all good things learned from Western. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆத்திகரா அல்லது நாத்திகரா. ஒரு சமயத்தை சார்ந்திருந்தால் அந்த சமயத்தை கேலி செய்யும் போது அதன் வேதனை புரியும். இதில் என்ன வாதம் விதண்டா வாதம்.

சொஞ்சம் பின்னாடிப் போனால் சமயமும் அதன் நல்லெண்ணங்களும் புரியும். 1800 களில்  ஆங்கிலேயர்கள்,

இராணி வேலுநாச்சியார், மன்னர் கைதர் அலி, மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள். 

யார் எதை யாருக்காக கட்டிக்கொடுத்தார்கள். புரிந்தால் இங்கே வாதத்திற்கே இடமில்லை.

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

2) நீங்கள் கூறுவ்துபோல விரிவுரையாளரின் விரிவுரையில் அவர் கேலி செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே

எனவே உங்கள் வாதம் வலுவற்றது. 

🤥

1 hour ago, Ellam Theringjavar said:

மேற்கு நாடுகள்...... எல்லாம் வேண்டாம்.  இப்போதைக்கு இங்கிலாந்து மட்டும். நகரபாதுகவல் படையின் சீருடடை இன்னமும்  அதே காக்கிதான். Police uniform is the same khaki since 1948. This is one of the good thing they left.

They came from another continent and killed all the kings and occupied all island. Another good thing. The current government simply follow the good things which the British left behind. Occupying land in North and East. Any news papers published government corruption, killed the reporter/editor. How many temples British destroyed. Now, how many temple including the land surrounded occupied. These all good things learned from Western. 

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதவெறி கூடியதால் வரும் கொலைவெறி கருத்துக்களை யாழ்களம் அழித்தவிடுததே நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.