Jump to content

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 22:46, குமாரசாமி said:

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

 

On 18/10/2020 at 22:51, விசுகு said:

நிச்சயமாக. அது ஐரோப்பா முழுவதும் வலுப்பெற்று இருக்கு. ஒரு நாள் உலகை ஆளும் அவர்களது கனவு வெகு தொலைவில் இல்லை.

 

 

இந்தக் காணொளியை... முழுமையாக பார்க்க நேரம் கிடைக்காவிட்டாலும்,
5´வது  நிமிடத்திலிருந்து, 7´வது  நிமிடம் வரை...  கேளுங்கள்.
கோசான்... 2´ம்  பக்கத்தில்  கூறிய கருத்தும், அதற்கு.. வலு சேர்க்கின்றது. 

############   ############  #############

உதவி:  என்னால்... முதலாம்  பக்கத்தில், மேற்கோள் காட்டிய கருத்துக்களுடன்,
இரண்டாம் பக்கத்தில் பதிந்தவரின் கருத்தையும்.... சேர்த்து,
மேற்கோள் காட்ட முடியாதுள்ளது. 
இரண்டு பக்க மேற்கோள்களையும்... ஒரே பதிவில் போட, வழிமுறைகள் உள்ளனவா?  

On 19/10/2020 at 21:59, goshan_che said:

இஸ்லாத்துக்கும் மேற்கிற்கும் இடையேயானது ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத இரு நாகரீகங்களுக்கிடையான முரண்.

இது என்றோ ஒருநாள் நாகரிகங்களுக்கிடையான பெரும் சமரில் (clash of civilisations)தான் முடியும்.

இந்த சமர் ஐரோப்பா, வட அமேரிக்க, அவுஸ்ரேலியாவில் தான் மையம் கொள்ளும்.

இப்போ காண்பது வெறும் டிரைலர் மட்டுமே. மெயின் பிக்சர் இனித்தான்.

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

 

 

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சாத்திரம் மாதிரித்தானே கிடக்கு சிறித்தம்பி? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சாத்திரம் மாதிரித்தானே கிடக்கு சிறித்தம்பி? :cool:

குமாரசாமி அண்ணா...
வெள்ளைக்காரன்,  சொன்னால்....  அது, உண்மை என்றும்... ⁉️

எங்களது,  தமிழ் மூதாதையர்  சொன்னால்,
அது.. பொய்யும், பிரட்டும், சுத்து மாத்து என்றும்...சொல்ல 
எங்களது, தமிழ் ஆட்களே... "ரெடியாக"  இருக்கின்றார்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா...
வெள்ளைக்காரன்,  சொன்னால்....  அது, உண்மை என்றும்... ⁉️

எங்களது,  தமிழ் மூதாதையர்  சொன்னால்,
அது.. பொய்யும், பிரட்டும், சுத்து மாத்து என்றும்...சொல்ல 
எங்களது, தமிழ் ஆட்களே... "ரெடியாக"  இருக்கின்றார்கள்.  :)

வெள்ளைக்காரன் இத்தினை மணிக்கு இவ்வளவு நேரம் மழை பெய்யும்....இவ்வளவு  தண்ணி நிரம்பும் எண்டு அச்சொட்டாய் சொல்லுறானாம், அப்ப அவன் கெட்டிக்காரன் தானே 😛

எங்கடை ஆக்கள் சற்றலையிட் ஒண்டுமில்லாமலே காலநிலை கணிச்சது வேறை விசயம் கண்டியளோ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் சாத்திரம் சொன்னால் என்ன தமிழ் மூதாதையர் சாந்திரம் சொன்னால் என்ன பொய் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளைக்காரன் சாத்திரம் சொன்னால் என்ன தமிழ் மூதாதையர் சாந்திரம் சொன்னால் என்ன பொய் தான்.

ஆதாரம் இருக்கா சார் :cool:

Link to comment
Share on other sites

19 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கூகிழில் தேடினாலே எல்லாம் கிடைக்கின்றன. ஆசிரியர் சமயோசிதமாக நடக்கவில்லை. முஸ்லீம் அமைப்புக்கள் ஆசிரியர் படுகொலை பற்றி என்ன கூறுகின்றன? 

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம். பிரான்ஸ் பல விசயங்களில் உலகத்துக்கு முன்னோடியான ஒரு நாடு. இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை அந்த நாடு ஒரு சவாலாகவே எடுக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகளே. 

திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில்  இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போத்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

1708 களில் வேலுநாய்ச்சியாரின் கணவர் முத்துவடுகானந்த பெரிய உதயதேவர் கோவிலில் வைத்து ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபின், அவரின் உடலை அடங்கம் செய்து அதேஇடத்தில் ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்பேன் என சபதம் செய்துவிட்டு தனது பெணகுழந்தையோடு வெளியேறுகிறார். எட்டு வருடங்கள் மறைந்துவாழ்கிறார். ஆங்கிலேயரிடம் பிடிபடாமலிருக்க அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வாராம். இப்படியே ௐருமுறை மன்னர் கைதர் அலிடயிடம் உதவிகேட்டு வந்திருக்கிறார்.

இராணி ஒரு இராசராசேசுவரியின் பக்தை எனவறிந்து கொண்டு, இராணி அங்கிருக்கும் காலங்களில் வழிபடவென ௐரு அம்மன் கோவிலையே மன்னர் கட்டிக்கொடுதாராம். அத்தோடு ஐம்பொன்னாலான ௐரு அம்மன் சிலையோடு ௐரு திருவாசியையும் பரிசாகக் கொடுத்தாராம்.

இன்னமும் அந்தக்கோயில் அந்தகோயிலிருக்கிறது .ஐம்பொன்னாலா திருவாசி பாதுகாப்பிலிருக்கிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொஞ்சக்காலம் ஆட்சிசெய்த பின் மருது சகோதரர்களிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

மருது சகோதரர்களின் ஆட்சியில் பல  கோயிலகளைக் கட்டினார்கள்.

அத்தோடு தேவாலயங்களையும் மசூதிகளையும் கட்டிக்கொடுத்தார்கள்.

அவற்றிற்கு பல மானியங்களையும் கொடுத்துதவினார்களாம்.

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.

உண்மைதான். ஏதும் மாறியிருக்கிதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மது நபியின் கேலித் சித்திரத்தை வெளியிட்ட பிரான்ஸ் - கொதித்தெழுந்துள்ள முஸ்லிம் உலகு!

by Admin on October 24, 2020 in Common, World


முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதமாக "ஷார்லி ஹெப்டோ" பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரத்தை நேற்றைக்கு முன் தினம் 22ம் திகதி பிரான்ஸ் அரச கட்டிடத்தில் காட்சிப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் சீண்டிப்பார்த்துள்ளது.

 

இத்தகைய செயற்பாட்டை எந்தவொரு இஸ்லாமியராலும் துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பிரான்ஸின் இந்த இழி செயலை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டிப்பதுடன், இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நாமும் வன்மையாக கண்டிக்கிறோம்.

 

மத்திய கிழக்கு நாடுகள் முதல் உலகில் முஸ்லிம்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் பிரான்ஸின் இச்செயல் பல்வேறு வடிவங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் சில அரபுலக நாடுகள் பிரான்ஸின் உற்பத்திகளை புறக்கணிப்பதினூடாகவும் தமது கடுமையான எதிர்ப்பினையும் பதிவு செய்துள்ளனர்.

 

இதன் பின்னணியாக

 

பிரான்ஸ் தலை நகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள " செயின்ட் ஹொனோரின்" எனும் இடத்தில் வைத்து புவியியல் மற்றும் வரலாற்றுப் பாட ஆசிரியரான சாமுவேல் பேட்டி என்பவர் கடந்த 17ம் திகதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு அமையப் பெற்றுள்ளது.

 

குறித்த ஆசிரியர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் "ஷார்லி எப்டோ" வெளியிட்ட நபி (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திர புகைப்படங்களை மாணவர்களிடம் காண்பித்தது வகுப்பொன்றை நடத்தியதாகவும், ஆசிரியரை கொலை செய்யதவர் ரஷ்யாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் "செசன்யா" பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் என்றும் பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த ஆசிரியர் "சாமுவேல் பேட்டி" இந்த கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டியது தொடர்பாக பல இஸ்லாமிய பெற்றோர் சாமுவேல் பேட்டி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் அதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் முறைப்பாட்டை முறையாக கையாண்டிருந்தால் கூட ஆசிரியர் கொலை செய்யப்பட்ட துயர நிகழ்வு தடுக்கப்பட்டிருக்கலாம்.

 

சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியரின் கொலைக்கு காரணமாக அமைந்த "ஷார்லி ஹெப்டோவின்" கேலிச்சித்திரங்களை பிரான்ஸ் அரச கட்டிடத்தில் மீண்டும் காட்சிப்படுத்துவது மென்மேலும் இன முறிவுக்கும், அசம்பாவிதங்களுக்கும் வித்திடுமே தவிர ஒரு போதும் இன ஒற்றுமைக்கான வடிகாலாக அமையாது என்பதை பிரான்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

 

எது எப்படியோ முஸ்லிம் மாணவர்களின் மனது புன்படும் வகையில் வகுப்பு நடத்திய ஆசிரியரின் செயல் கண்டனத்துக்குரியது என்பதுடன் அதற்காக அவரை கொலை செய்ததை அங்கீகரிக்க முடியாது. அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். பிரான்ஸிலுள்ள இஸ்லாமிய அறிஞர்களும் "அப்பாவி மக்களைக் கொல்வது, நாகரிகம் அல்ல; அது காட்டுமிராண்டித்தனம்" என்று குறித்த செயலை கண்டித்துள்ளனர்.

 

இஸ்லாத்தின் அடிப்படையை விளங்காத ஒரு முஸ்லிமின் செயலை ஏனைய முஸ்லிம்கள் அங்கீகரிக்காமல் அதை கண்டித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் மனதையும் புன்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசு நடந்து கொண்டதை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயக விரோத செயலாகும்.

 

குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான தண்டனையை வழங்கி நீதியை நிலை நாட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யாமல் "பிரான்ஸ் கார்ட்டூன்களை விட்டுவிடமாட்டார்கள்" என்ற அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனின் கருத்து வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன் மேற்குலகின் இஸ்லாம் விரோத செயற்பாட்டிற்கு பிரான்ஸ் துனை போவதாகவே அமைந்துள்ளது.

 

தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படும் "ஷார்லி ஹெப்டோ" குறித்து கண்டனம் பதிவு செய்யாமலும் அதை தடை செய்யாமலும் ஆசிரியரின் கொலைக்கு எதிராக வீதியில் இறங்கி கண்டனம் பதிவு செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவேலின் செயல் வேடிக்கையாகவும், பக்கச் சார்பாகவும் அமைந்துள்ளது. 

 

மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொலை செய்வதும், மன விரக்தியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டத்தை கையிலெடுத்து செயற்படுவதும் தடைசெய்யப்பட வேண்டியதுடன், ஜனநாயகம் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை கொச்சை படுத்தும் விதமாக செயல்படுவதும், கேலிச்சித்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு முஸ்லிம்களின் உள்ளத்தை புன்படுத்தி உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதும் இரண்டும் ஒரே கோணத்தில் பார்க்கப்பட்டு இரண்டும் தடைசெய்யப்பட்ட வேண்டும்.

 

எனவே முஸ்லிம்களின் மனதை புன்படுத்திய பிரான்ஸின் இஸ்லாம் விரோத செயலை இலங்கை முஸ்லிம்கள் சார்பாக வன்மையாக கண்டிப்பதுடன் கேலிச்சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

இப்படிக்கு 

எஸ்.கே ஷிஹான் முஹம்மத்

செயலாளர்,

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் தவ்ஹீத்

https://www.qatartamil.com/2020/10/blog-post_80.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளின் கடைகளில் இருந்து அகற்றப்படும் பிரான்ஸ் நாட்டுப் பொருட்கள்; தீவிரமடையும் புறக்கணிப்பு

 

பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் -

பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன.

அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரான்சில் இஸ்லாமிய இறைத்தூதர் கேலிச்சித்திரம் தொடர்பான விடயம் தொடர்ந்து சூடுபிடித்த வண்ணமே உள்ளது.

அதிபர் Emmnuel Macron கேலிச் சித்திரங்களை வரைவதை நிறுத்த வேண்டியதில்லை என அறிவித்ததை அடுத்து இஸ்லாமிய நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கட்டார் நாட்டில் நடைபெற இருந்த பிரெஞ்சுக்கலாச்சார விழா பின் போடப்பட்டுள்ளது.

கட்டாரில் அல்மீரா, சூக் அல் பலாடி ஆகிய பல்பொருள் அங்காடிகள் பிரெஞ்சுப் பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளன.

குவைத் நாட்டின் அங்காடிகளில் இருந்து பிரெஞ்சு உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

குவைத்திலுள்ள 60 வர்த்தக நிலையங்களில் பிரெஞ்சுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலுள்ள 450 பிரயாண முகவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கான விமானப் பயண முன்பதிவுகளை நிறுத்தியுள்ளனர்.

ஜோர்டான் நாட்டின் எதிர்க்கட்சி, பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரான்சில் இருந்து அதிகமான உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் வளைகுடா நாடுகள் தமது இறக்குமதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டால் பிரான்ஸ் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பொருளாதார நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_813.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

அரபு நாடுகளின் கடைகளில் இருந்து அகற்றப்படும் பிரான்ஸ் நாட்டுப் பொருட்கள்; தீவிரமடையும் புறக்கணிப்பு

 

பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் -

பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன.

அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரான்சில் இஸ்லாமிய இறைத்தூதர் கேலிச்சித்திரம் தொடர்பான விடயம் தொடர்ந்து சூடுபிடித்த வண்ணமே உள்ளது.

அதிபர் Emmnuel Macron கேலிச் சித்திரங்களை வரைவதை நிறுத்த வேண்டியதில்லை என அறிவித்ததை அடுத்து இஸ்லாமிய நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கட்டார் நாட்டில் நடைபெற இருந்த பிரெஞ்சுக்கலாச்சார விழா பின் போடப்பட்டுள்ளது.

கட்டாரில் அல்மீரா, சூக் அல் பலாடி ஆகிய பல்பொருள் அங்காடிகள் பிரெஞ்சுப் பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளன.

குவைத் நாட்டின் அங்காடிகளில் இருந்து பிரெஞ்சு உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

குவைத்திலுள்ள 60 வர்த்தக நிலையங்களில் பிரெஞ்சுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலுள்ள 450 பிரயாண முகவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கான விமானப் பயண முன்பதிவுகளை நிறுத்தியுள்ளனர்.

ஜோர்டான் நாட்டின் எதிர்க்கட்சி, பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரான்சில் இருந்து அதிகமான உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் வளைகுடா நாடுகள் தமது இறக்குமதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டால் பிரான்ஸ் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பொருளாதார நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_813.html

 

இன்னும் ஐந்து வருடம்களில்  உலக நாடுகளில் மின்சார  வாகனம்களே அனுமதிப்பார்கள்  காரணம் வேகமாக அசுத்தமடையும்  சுற்றுப்புற சூழல் இப்பவே ஒரு பரல் எண்ணெய்  பூமியின் மேல்மட்டத்துக்கு கொண்டுவரும் சிலவும் விற்பனையாகும் விலையும் நெருங்கி வருகிறது என்று ஒப்பாரி வைக்கினம் .இந்த கேட்டில் பிரான்ஸ் பொருள்களை அரபு உலகு விற்காமல் போவது அவர்களுக்குத்தான் இழப்பு .

முதலில் இந்த யாழ் முஸ்லீம் என்பவர்கள் மூளையை முலம்காலுக்குள் வைத்து  யோசிப்பதை நிறுத்தணும் 

 

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2020 at 20:31, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

இந்து சமயம் இந்த வெளிநாடுகளில் செருப்புகளில் சரஸ்வதி படம் வந்தது  போல் பலசம்பவங்கள் கணக்க  இதே கிறிஸ்தவம் இந்த நாடுகளில் என்ன பாடு படுகிறது இங்கு எல்லாசமயமும் கேலி செய்யப்படுகிறது உங்களுக்கு மாத்திரம் சொன்னவுடன் கத்தியை கழுத்தில் போட்டு அறுப்பீர்களாக்கும் அதை வேறு நியப்படுத்துவது மகாகேவலம் ஏனென்றால் உங்களை வந்த இடத்தில் அரவணைத்து இந்த குளிர்நாடுகளில் வீடும் உணவும் தந்தவர்களையே அல்லா குத்தி  கொலை செய்ய சொன்னாரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2020 at 10:29, Ellam Theringjavar said:

திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில்  இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போத்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

1708 களில் வேலுநாய்ச்சியாரின் கணவர் முத்துவடுகானந்த பெரிய உதயதேவர் கோவிலில் வைத்து ஆங்கிலேயரால் கொல்லப்பட்டபின், அவரின் உடலை அடங்கம் செய்து அதேஇடத்தில் ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்பேன் என சபதம் செய்துவிட்டு தனது பெணகுழந்தையோடு வெளியேறுகிறார். எட்டு வருடங்கள் மறைந்துவாழ்கிறார். ஆங்கிலேயரிடம் பிடிபடாமலிருக்க அடிக்கடி தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்வாராம். இப்படியே ௐருமுறை மன்னர் கைதர் அலிடயிடம் உதவிகேட்டு வந்திருக்கிறார்.

இராணி ஒரு இராசராசேசுவரியின் பக்தை எனவறிந்து கொண்டு, இராணி அங்கிருக்கும் காலங்களில் வழிபடவென ௐரு அம்மன் கோவிலையே மன்னர் கட்டிக்கொடுதாராம். அத்தோடு ஐம்பொன்னாலான ௐரு அம்மன் சிலையோடு ௐரு திருவாசியையும் பரிசாகக் கொடுத்தாராம்.

இன்னமும் அந்தக்கோயில் அந்தகோயிலிருக்கிறது .ஐம்பொன்னாலா திருவாசி பாதுகாப்பிலிருக்கிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொஞ்சக்காலம் ஆட்சிசெய்த பின் மருது சகோதரர்களிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

மருது சகோதரர்களின் ஆட்சியில் பல  கோயிலகளைக் கட்டினார்கள்.

அத்தோடு தேவாலயங்களையும் மசூதிகளையும் கட்டிக்கொடுத்தார்கள்.

அவற்றிற்கு பல மானியங்களையும் கொடுத்துதவினார்களாம்.

பேச்சு சுதந்திரம், தனிமனித உரிமை விடயங்களில் நாம் மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளோம்.

உண்மைதான். ஏதும் மாறியிருக்கிதா?

சமய புடுங்குப்பாடுகள் மாறப்போவது இல்லை. ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டதே.

விஞ்ஞானம், தொழில்நுட்ப அறிவுகளின் முன்னேற்றம் சுய சிந்தனைகளின் தேடல்களில் உருவாகின. இவற்றுக்கு மதங்களின் பங்களிப்பு என்ன?

மதங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப விருத்திக்கு ஆதரவாக செயற்பட்டதா அல்லது எதிராக செயற்பட்டதா?

நாளை சவூதி மன்னருக்கு ஹார்ட் அட்டாக் என்றால் அவரை நவீன வைத்தியசாலைக்குத்தான் உடனடியாக எடுத்து செல்வார்கள். பள்ளிவாசலுக்கு அல்ல. 

தற்போதைய எமது வாழ்க்கையை செளகரியமாக்கியது விஞ்ஞானம், தொழில்நுட்பமா அல்லது மதங்களா?

பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் எல்லாம் இல்லாமல் இவை சாத்தியம் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களும்  மனிதரை ஏமாற்றும் உடாலங்கடி வேலைகளே என்பதை இந்த கொரனா பெருந்தொற்று வந்த பின்னராவது புரிந்து கொள்ள முடியாவிட்டால் எப்போது புரிந்து கொள்வர்? 

நான் வாழும் மாநிலத்தில் மக்கள் ஆலயம் செல்லாததால் (ஆலயங்களைத் திறக்க அனுமதி அளித்தும்), வருமானம் படுத்து விட்டது! சில ஆலயங்கள் முற்றாக வங்குரோத்து அடித்து விட்டுப் பூட்டப் போகின்றனர். 

இதற்குள் எந்த மதத்தையும் முன்னிறுத்தி  கருத்துச் சுதந்திரத்தை மட்டுப் படுத்த அனுமதிக்கக் கூடாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சமய புடுங்குப்பாடுகள் மாறப்போவது இல்லை. ஆனால் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டதே.

விஞ்ஞானம், தொழில்நுட்ப அறிவுகளின் முன்னேற்றம் சுய சிந்தனைகளின் தேடல்களில் உருவாகின. இவற்றுக்கு மதங்களின் பங்களிப்பு என்ன?

மதங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப விருத்திக்கு ஆதரவாக செயற்பட்டதா அல்லது எதிராக செயற்பட்டதா?

நாளை சவூதி மன்னருக்கு ஹார்ட் அட்டாக் என்றால் அவரை நவீன வைத்தியசாலைக்குத்தான் உடனடியாக எடுத்து செல்வார்கள். பள்ளிவாசலுக்கு அல்ல. 

தற்போதைய எமது வாழ்க்கையை செளகரியமாக்கியது விஞ்ஞானம், தொழில்நுட்பமா அல்லது மதங்களா?

பேச்சு சுதந்திரம், தனி மனித சுதந்திரம் எல்லாம் இல்லாமல் இவை சாத்தியம் இல்லையே.

மதங்கள் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயற்பட்டதே வரலாறு. ☹️

2 hours ago, பெருமாள் said:

இந்து சமயம் இந்த வெளிநாடுகளில் செருப்புகளில் சரஸ்வதி படம் வந்தது  போல் பலசம்பவங்கள் கணக்க  இதே கிறிஸ்தவம் இந்த நாடுகளில் என்ன பாடு படுகிறது இங்கு எல்லாசமயமும் கேலி செய்யப்படுகிறது உங்களுக்கு மாத்திரம் சொன்னவுடன் கத்தியை கழுத்தில் போட்டு அறுப்பீர்களாக்கும் அதை வேறு நியப்படுத்துவது மகாகேவலம் ஏனென்றால் உங்களை வந்த இடத்தில் அரவணைத்து இந்த குளிர்நாடுகளில் வீடும் உணவும் தந்தவர்களையே அல்லா குத்தி  கொலை செய்ய சொன்னாரா ?

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

ஒரு நாகரீகம் பின்னோக்கிப் போகிறது. பல நாகரீகங்கள் முன்னோக்கிப் போகின்றன. ☹️

Link to comment
Share on other sites

மனித சுதந்திரம் பேச்சுரிமை பற்றி விவாதிப்பவர்கள் பிரெஞ்சு நாட்டவரின் நிலையிலிருந்தும் சிந்திக்க வேண்டும். 200 வருடங்களுக்கு முன்னரே பிரெஞ்சுப் புரட்சி மூலம் அரசாட்சியை அழித்து மக்களாட்சியை உருவாக்கியவர்கள். கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றாகக் பிரான்ஸ் கருதப்பட்டது. வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே மதக் கொள்கைகள் பின்பற்றப்படுவதால் தமது மதத்தையே அரசியல், பாடசாலை, பொது வைபவங்கள் போன்ற அனைத்திலிருந்தும் தூக்கி எறிந்தவர்கள். இன்ற பல நாடுகளிலும் பிரான்சில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் அரசியல் அமைப்புக்களுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது. 1789 இல் இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்ட வரைபு காலப்போக்கில் சீரமைக்கப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது. 

போராடிப் பெற்ற இந்த உரிமை மறுக்கப்படும்போது பிரெஞ்சு மக்கள் மதவாதிகளை நோக்கிப் போராட முனைந்துள்ளனர். கறுப்பினத்தவர்களுக்காகவும் இனத்துவேசத்துக்கு எதிராகவும் போராடியகவும் எனது நண்பர்கள் கூட நேரடியாக இஸ்லாத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். இவர்களின் நெருங்கிய நண்பர்கள் பலர் முஸ்லிம்கள் ஆகும். இது இஸ்லாத்துக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து மதவாதிகளுக்கும் எதிரான போராட்டம். எந்த ஒரு மதமும் மனித சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை. 

இந்த ஆசிரியரின் கொலை ஒரு தொடர்ச்சியானது. 2015 இல் சார்லி ஹெப்டோ பத்திரிகை பிரசுரித்த கேலிச் சித்திரத்துக்காக பத்திரிகை ஆசிரியர் உட்பட 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2020 இல் அதே படத்தை மீண்டும் பிரசுரித்தபோது மீண்டும் தாக்கப்பட்டனர். 
இந்த ஆசிரியர் கொல்லப்பட்டபோது பிரான்ஸ் ஜனாதிபதியின் உரையில் தாமது நாட்டில் இக் கேலிச் சித்திரத்தைப் பிரசுரிப்பதைக் கைவிடப் போவதில்லை என்றே குறிப்பிட்டிருந்தார். 

2015 இல் சார்லி ஹெப்டோ தாக்குதல் நடந்தபோது New York Times இவ்வாறு எழுதியிருந்தது :
" உலகின் மத வெறியர்கள் வெறுக்கிற அனைத்தையும் பிரான்ஸ் பிரதிபலிக்கிறது. அவர்கள் வித்தியாசமான வகையில் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். காலையில் குறோசானுடன் கோப்பி அருந்துவதிலிருந்து விரும்பிய ஆடை அணிந்து சிரிக்கும் பெண்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வைன், வாசனையான பாண், பூங்காக்களில் விளையாடும் சிறுவர்கள், வாசனைத் திரவியங்கள், கடவுளை நம்பாத உரிமை, கலோரிகள் பற்றிய கவலையில்லாத உணவுகள், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உடலுறவு, உல்லாசப் பயணங்கள், எதையும் வாசித்தல், சிரித்து மகிழல், அரசியல்வாதிகளைப் போலவே போதகர்களையும் விமர்சிக்கும் உரிமை, சாவுக்கு அப்பால் என்ன நடக்கும் என்ற கவலையின்மை…
 உலகில் எந்த நாட்டவரும் பிரெஞ்சுக்காரர்களைப் போன்று வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்கவில்லை.  "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதற்குள் எந்த மதத்தையும் முன்னிறுத்தி  கருத்துச் சுதந்திரத்தை மட்டுப் படுத்த அனுமதிக்கக் கூடாது! 

கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்தால் மதவியாபாரம் படுத்துவிடும் என்று மதவாதிள் பயப்படுகிறார்கள். அதனால் கழுத்துக்கு கத்தி வைப்பதை கூட ஒற்றுமையாக ஆதரிப்பதை அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

மதங்கள் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயற்பட்டதே வரலாறு. ☹️

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

ஒரு நாகரீகம் பின்னோக்கிப் போகிறது. பல நாகரீகங்கள் முன்னோக்கிப் போகின்றன. ☹️

 

2 hours ago, Kapithan said:

மதங்கள் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயற்பட்டதே வரலாறு. ☹️

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

ஒரு நாகரீகம் பின்னோக்கிப் போகிறது. பல நாகரீகங்கள் முன்னோக்கிப் போகின்றன. ☹️

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

சிவத்தையாகச் சொன்னால் விட்டிருப்பார்களா?

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

இங்கே குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவர்களின் ஆக்கிரமத்தை எதிர்த்தவர்களை பயங்கரவாதிகளெனவும் தீவரவாதிகளிகளெனவும் முத்திரைகுத்தி வகைதொகையாக கைது செய்து செய்து அதிஉச்ச சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொலை செய்தார்கள். மைதானங்களில் கூடுயோரை ஈய்வு இரக்கமின்றி சுட்டுக்கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் அப்படியே இப்பவும் இலங்கையும் இந்தியாவும் தம்நாட்டுப் பிரைசைகளுக்கு செய்தகொண்டிருக்கிறார்கள்.

எங்கேயாவது ஒரு ஐரோப்பிய நாடு தன் நாட்டுப் பிரசைகை இப்படி தண்டிக்கிறார்களா?

மற்றய நாடுகளிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரி பின்னர் அந்தந்த நாட்டுப் பிரசைகளானவர்கைத் தவிர.

மதமும் விஞ்ஞானமும். போருக்கு ஆணையிடுவதற்கு முன் அரச தலைவர்கள் வேதப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு தேவாலயத்துக்குப் போய்வருகறார்களே. ஏன்?

நவீன ஆயுதங்களில் நம்பிக்கை இல்லாமலா?

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

அதுசரி இது பச்சையா? காஞ்சதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

 

யாழ் களத்திலும் ஒருவர் புதிதாக வந்து கழுத்தை அறுப்பது சரி என்று பச்சையாகச் சொன்னார். (அதை உடனே நிர்வாகம் நீக்கிவிட்டது.)

சிவத்தையாகச் சொன்னால் விட்டிருப்பார்களா?

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

இங்கே குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவர்களின் ஆக்கிரமத்தை எதிர்த்தவர்களை பயங்கரவாதிகளெனவும் தீவரவாதிகளிகளெனவும் முத்திரைகுத்தி வகைதொகையாக கைது செய்து செய்து அதிஉச்ச சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொலை செய்தார்கள். மைதானங்களில் கூடுயோரை ஈய்வு இரக்கமின்றி சுட்டுக்கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் அப்படியே இப்பவும் இலங்கையும் இந்தியாவும் தம்நாட்டுப் பிரைசைகளுக்கு செய்தகொண்டிருக்கிறார்கள்.

எங்கேயாவது ஒரு ஐரோப்பிய நாடு தன் நாட்டுப் பிரசைகை இப்படி தண்டிக்கிறார்களா?

மற்றய நாடுகளிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரி பின்னர் அந்தந்த நாட்டுப் பிரசைகளானவர்கைத் தவிர.

மதமும் விஞ்ஞானமும். போருக்கு ஆணையிடுவதற்கு முன் அரச தலைவர்கள் வேதப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு தேவாலயத்துக்குப் போய்வருகறார்களே. ஏன்?

நவீன ஆயுதங்களில் நம்பிக்கை இல்லாமலா?

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

அதுசரி இது பச்சையா? காஞ்சதா?

உங்களை நீங்களே காட்டிக்கொடுப்பதற்கு நான் பொறுப்பல்ல. 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Ellam Theringjavar said:

 

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

 

1 hour ago, Ellam Theringjavar said:

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

எல்லாரும் ஒரே ரகம் தான், ஒரு வித்தியாசம் - இவர்கள் இன்னமும் தலை வெட்டுகிறார்கள்.

இணையத்தில் அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை பார்க்க கிடைத்தது - இந்த ஆசிரியர் பெரும் முட்டாள். ஏதோ ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே ஆச்சரியமானதாக இருந்திருக்கும். கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, உந்த குமாரசாமியாரை போட்டு எவ்வளவு வாட்டு வாட்டென்று வாட்டியிருப்பேன், மனுசன் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு வெட்டுறன் கொத்துறன் என்று வெளிக்கிடேல்ல பாருங்கோ. உதுதான் கருத்துச்சுதந்திரம். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம்.

சார்! சிறிலங்காவில் கருத்து சுதந்திரம் இருக்கா சார்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

 

எல்லாரும் ஒரே ரகம் தான், ஒரு வித்தியாசம் - இவர்கள் இன்னமும் தலை வெட்டுகிறார்கள்.

இணையத்தில் அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை பார்க்க கிடைத்தது - இந்த ஆசிரியர் பெரும் முட்டாள். ஏதோ ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே ஆச்சரியமானதாக இருந்திருக்கும். கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, உந்த குமாரசாமியாரை போட்டு எவ்வளவு வாட்டு வாட்டென்று வாட்டியிருப்பேன், மனுசன் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு வெட்டுறன் கொத்துறன் என்று வெளிக்கிடேல்ல பாருங்கோ. உதுதான் கருத்துச்சுதந்திரம். 😃

""இன்னமும்"" என்பதன் அர்த்தம் எல்லாம் அதிகமாகத் தெரிச்சவருக்குப் புரியுமோ என்னமோ 🤔🤔

Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

சார்! சிறிலங்காவில் கருத்து சுதந்திரம் இருக்கா சார்? :cool:

ஏனண்ணை அங்கே வந்தால் கவனிக்கலாம் எண்டு கிடங்கு வெட்டி வைக்க போறீங்களா? 😹சிறிலங்காவில் நீங்கள் யார் என்பதை பொறுத்து கருத்துச்சுதந்திரம் வேறுபடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

 

எல்லாரும் ஒரே ரகம் தான், ஒரு வித்தியாசம் - இவர்கள் இன்னமும் தலை வெட்டுகிறார்கள்.

இணையத்தில் அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தை பார்க்க கிடைத்தது - இந்த ஆசிரியர் பெரும் முட்டாள். ஏதோ ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே ஆச்சரியமானதாக இருந்திருக்கும். கருத்துச்சுதந்திரம் நிச்சயமாக தேவை - அது எங்கள் உரிமையும் கூட. ஆனால், மதங்கள் இன்னும் மனிதர்களை மதங்கொள்ள வைத்துக்கொண்டிருப்பதை இவ்வளவுதூரம் புரிந்து கொள்ள முடியாதவர் ஆசிரியர் வேலைக்கு போய் இருக்க கூடாது. பொதுமக்களுடன் சம்பந்தப்படாத வேலையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு என்னைப்போல யாழ் களத்தில் கருத்துச்சுதந்திரத்தை அனுபவித்திருக்கலாம். ஒரு உதாரணத்துக்கு, உந்த குமாரசாமியாரை போட்டு எவ்வளவு வாட்டு வாட்டென்று வாட்டியிருப்பேன், மனுசன் மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு வெட்டுறன் கொத்துறன் என்று வெளிக்கிடேல்ல பாருங்கோ. உதுதான் கருத்துச்சுதந்திரம். 😃

இதை நீங்கள் சீரியசாகச் சொன்னீர்களோ தெரியாது. சீரியசானால், இதை நீங்கள் அரசியலமைப்பின் முதல் திருத்தத்தைக் கொண்ட அமெரிக்கப் பின்னணியில் பார்ப்பதால் இப்படி நினைக்கிறீர்கள் போல. 

இங்கே , 1st amendment இல் இருக்கும் பேச்சுரிமையை சில காரணங்களுக்காக கட்டுப் படுத்தலாம்  என உச்ச நீதிமன்றம் வழி விட்டிருக்கிறது. அதைப் பாவித்தே சில ஆண்டுகள் முன்பு குர் ஆனை ஒரு கிறிஸ்தவ போதகர் எரிக்க முனைந்த போது பொலிஸ் தலையிட்டுத் தடுத்தது!

மேலே இணையவன் விரிவாக எழுதியிருக்கும் பிரெஞ்சு வாழ்க்கை முறையில் வளர்ந்த ஒருவராகக் கற்பனை செய்து பாருங்கள்: எதையும் நக்கல் செய்வது அவர்களது பிறப்புரிமையாக இருக்கும் போது, அந்த வாழ்க்கை முறைக்குள் வாழ வந்த ஒரு மதமோ நம்பிக்கையோ அந்த சுதந்திரத்தை மாற்ற வேண்டுமென்று எதிர்பார்ப்பது  ஆபத்தான முன்னுதாரணம்!

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஆசிரியர் இறந்ததே எங்கள் எல்லாருக்காகவும் தான்! எங்கள் எல்லாருடைய பேச்சுரிமைக்காகவும் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஆசிரியர் இறந்ததே எங்கள் எல்லாருக்காகவும் தான்! எங்கள் எல்லாருடைய பேச்சுரிமைக்காகவும் தான்!

உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஆசிரியர் இறந்ததே எங்கள் எல்லாருக்காகவும் தான்! எங்கள் எல்லாருடைய பேச்சுரிமைக்காகவும் தான்!

44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை.

பாவப்பட்ட அரபு அப்பாவிச்சனங்கள்.....இன்னும் எத்தினை இடங்களிலை குண்டு குண்டாய் விழப்போகுதோ.....என்ரை ஈஸ்வரா..... :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.