Jump to content

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!


Recommended Posts

16 minutes ago, Ellam Theringjavar said:

சிவத்தையாகச் சொன்னால் விட்டிருப்பார்களா?

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

இங்கே குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவர்களின் ஆக்கிரமத்தை எதிர்த்தவர்களை பயங்கரவாதிகளெனவும் தீவரவாதிகளிகளெனவும் முத்திரைகுத்தி வகைதொகையாக கைது செய்து செய்து அதிஉச்ச சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொலை செய்தார்கள். மைதானங்களில் கூடுயோரை ஈய்வு இரக்கமின்றி சுட்டுக்கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் அப்படியே இப்பவும் இலங்கையும் இந்தியாவும் தம்நாட்டுப் பிரைசைகளுக்கு செய்தகொண்டிருக்கிறார்கள்.

எங்கேயாவது ஒரு ஐரோப்பிய நாடு தன் நாட்டுப் பிரசைகை இப்படி தண்டிக்கிறார்களா?

மற்றய நாடுகளிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரி பின்னர் அந்தந்த நாட்டுப் பிரசைகளானவர்கைத் தவிர.

மதமும் விஞ்ஞானமும். போருக்கு ஆணையிடுவதற்கு முன் அரச தலைவர்கள் வேதப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு தேவாலயத்துக்குப் போய்வருகறார்களே. ஏன்?

நவீன ஆயுதங்களில் நம்பிக்கை இல்லாமலா?

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

அதுசரி இது பச்சையா? காஞ்சதா?

யாழில் எழுதும் மதவாதிகளுக்கு சமர்ப்பணம்.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Ellam Theringjavar said:

யாழில் எழுதும் மதவாதிகளுக்கு சமர்ப்பணம்.

 

 

இதை நீங்கள் முதலில் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!  | Athavan News

துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி உரையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், ‘பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறை இருந்தால் முஸ்லிம்களைப் பாதுகாக்க உலகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவர், அப்துல்லாக் அன்சோரோவ் என இளைஞரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது’ என கூறினார்.

இந்த பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

http://athavannews.com/துருக்கியர்களுக்கு-பிரா/

Link to comment
Share on other sites

துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து, அட்டை படம் வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிகை

Turkey president rips Charlie Hebdo mag for 'disgusting' cartoon

mail?url=https%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Ait3GcIdQnk%2FX5lW_KqVsvI%2FAAAAAAAFtTo%2FHJR8w2sOYCA8KrhYwx3UvPwwEM4xgoUaQCLcBGAsYHQ%2Fw400-h250%2FJKTZ6BEB6QN67K53OPYWBVGNJQ.jpg&t=1603961185&ymreqid=13fa43f7-e755-4382-1c36-b4009201e100&sig=5tdvPPlIzRB1dWmP7uTzow--~D


பிரான்சின் பிரபல பத்திரிகை துருக்கி ஜனாதிபதியை எர்டோகனை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ள சம்பவத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகமது நபியின் கார்ட்டூனை வகுப்பறையில் காட்டியதற்காக வரலாற்று ஆசிரியர் பாட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

மக்ரோன் கருத்திற்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்சின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தனது அட்டை படத்தில் துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ளது.

இதற்கு துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளிடையே நிலவி வந்த பதற்றம் தற்போது அதிகரித்துள்ளது.

-Jaffnamuslim.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அரசிற்கு எதிராக ஈரானில் வலுக்கும் போராட்டம்

 
1-116.jpg
 61 Views

இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பிரான்ஸுக்கு எதிராக ஈரானில்   போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பிரான்ஸ் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர்  படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே பொலிஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள  பிரான்ஸ்  தூதரகத்தின் முன்  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ரெசா அலாவி கூறும்போது, “அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருந்தோம். ஆனால், இதுதான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்குச் சரியான நேரம். இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்”  என்றார்.

https://www.ilakku.org/பிரான்ஸ்-அரசிற்கு-எதிராக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நபிகள் நாயகம் கார்ட்டூன் - நிச்சயம் பதிலடி கொடுக்கனும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த பிரான்ஸ் பத்திரிக்கை!  | Athavan News

சார்லி ஹேப்டோாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெறுக்கத்தக்க தாக்குதல்: எர்டோகன் கண்டனம்

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸின் சார்லி ஹேப்டோ பத்திரிக்கை துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேலிச்சித்திரத்திற்கு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு வெறுக்கத்தக்க தாக்குதல் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததன் பின்னணியில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்ட பின்னர் 2011ஆம், 2015ஆம் மற்றும் 2020ஆம் ஆகிய ஆண்டுகளில் அந்த பத்திரிக்கை அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்ட் உட்பட பத்திரிக்கை ஊழியர்கள் 12பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவரை அப்துல்லாக் அன்சோரோவ் என்ற இளைஞர் படுகொலை செய்தார்.

ஏற்கனவே கிரேக்கம்- துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், விரிவுரையாளரின் படுகொலைக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் இருநாடுகளுக்கிடையேயான மோதலை அதிகரிக்க செய்துள்ளது.

http://athavannews.com/துருக்கி-ஜனாதிபதியை-சர்ச/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் ஆசிரியர் தலைவெட்டிக்கொலை: 17 வயது இளம்பெண் உட்பட மூன்றுபேர் கைது

பிரான்சில் ஆசிரியர் தலைவெட்டிக்கொலை: 17 வயது இளம்பெண் உட்பட மூன்றுபேர் கைது

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில்  ஆசிரியர் சாமுவேல் பட்டி, செசான்ய பயங்கரவாதியான அப்துல்லா அன்சோரவ்  (18) என்பவரால் கொல்லப்பட்டார். வரலாற்று ஆசிரியரான சாமுவேல் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் உருவான பிரச்சினையால் கோபமடைந்த இஸ்லாமியர்களில் ஒருவரான அப்ட்துல்லா அவரை தலையை வெட்டிக் கொலை செய்தார்.

இதனால் பிரான்ஸ் நாடே கொதிப்படைந்தது, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியேற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இப்போதைக்கு இந்த வழக்கில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட, பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அப்துல்லாவுடன் தொடர்பிலிருந்ததாக சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவரும், செசன்ய நாட்டு இளைஞர் ஒருவரும், கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர்.

அந்த இளைஞர்களில் ஒருவருடன் அந்த 17 வயது இளம்பெண் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். ஆகவே, அந்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

https://www.dailythanthi.com/News/World/2020/11/07141831/Teenager-Charged-In-France-For-Hailing-Teachers-Beheading.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.