Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்த இந்தியா! சீனாவுக்குப் பதிலடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அண்மையில் காணொளி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தியிருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அகற்றும் முனைப்பில் ராஜபக்ச அரசு ஈடுபட்டுள்ள நிலையில், மோடியின் இந்த அறிவிப்பு கொழும்பு அரசுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதன் பின்னர் சீனாவுடன் ராஜபக்ச அரசு நெருக்கத்தைக் காண்பிக்கத் தொடங்கியது. இலங்கை விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறை தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் விமர்சனங்களை முன்வைத்திருந்த பின்னணியில், சீன உயர்மட்டக் குழுவின் கொழும்புக்கான திடீர் பயணம் அமைந்திருந்தது.

இலங்கையுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாகக் காண்பிக்கும் வகையில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தொடர்ச்சியாக டுவிட்டரில் பதிவுகளையும் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் இந்திய மத்திய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் பேச்சுக்கான அழைப்பை டில்லி விடுத்துள்ளது.

காணொளி ஊடாக இந்தப் பேச்சு விரைவில் நடைபெறவுள்ளது. இந்திய மத்திய அரசின் உயர் மட்டத்தினர், டில்லி தரப்பின் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களுடன் காணொளி ஊடான சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.

https://www.tamilwin.com/politics/01/258791?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவா சொல்லியாச்சு.

தமிழர் மீதான கவலையில் இல்லை.

சீனாக்காரனுக்கு செக் வைக்க....

அட போங்கப்பா.... உங்களைப் பத்தி சிங்களம் பழம் தின்று, கொட்டையை போட்டிருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

தெளிவா சொல்லியாச்சு.

தமிழர் மீதான கவலையில் இல்லை.

சீனாக்காரனுக்கு செக் வைக்க....

அட போங்கப்பா.... உங்களைப் பத்தி சிங்களம் பழம் தின்று, கொட்டையை போட்டிருக்குது

அதையும் மீறி சில விடயங்களை உடனே செய்விக்கும் படி இவர்களால் வற்புறுத்தி உடனே நடைமுறைப் படுத்த வேக்க வேண்டும் செய்வார்களா? இவர்கள் ஒற்றுமையாக ஒரு நிலைப்பாட்டுக்கு வர முன் சிங்களம் கிந்தியர்களின் படுக்கை அறை வரை சென்று விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

 சிங்களம் கிந்தியர்களின் படுக்கை அறை வரை சென்று விடும். 

அவர்கள் அங்கேதானே லிவிங்க்ஸ்டன்🤣

 

ஆனால் கூப்பிட்ட வாய்ப்பை தவறவிடாமா போய், முன்னர் போல தனிபட்ட சலுகைள் பற்றி பேசாமல், 13 ஐ எப்படியாவது அமல் படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுபார்களா? பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப இனித்தான் இருக்கு.

யாருக்கு 😂

இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு நான் ஆயத்தம் இல்லை 

☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.