Jump to content

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?


Recommended Posts

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

 

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர்.

இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெயராமல், இன்னும் அலரி மாளிகையிலேதான் வசித்து வருகிறார்கள். தற்போது அவர்களையும் அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உததரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாட்டின் பிரதமர் அலரி மாளிகையில் வசிக்காமலிருக்கும்போது அதில் இன்னுமொரு குடும்பம் வசிப்பது உகந்தது அல்லவென ஜனாதிபதி கருதுவதாக அறியப்படுகிறது.

நாட்டின் அதிபர் என்ற ரீதியில் ஜனாதிபதி ராஜபக்சவே அலரி மாளிகையில் வசிப்பதற்கு உரிமை பெற்றவர். ஆனால் அவர் மிரிஹனவிலிருக்கும் தனது பிரத்தியேக இல்லத்தில் வசித்து வருகிறார்.

ஜனாதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து றோஹித ராஜபக்ச பெட்டகனே டூவா தெருவிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது

https://marumoli.com/றோஹித-ராஜபக்சவை-அலரி-மாள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு?

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சிறி யண்ணை 
இப்படி சப்பென்று முடித்தால் எப்படி ..?எங்கடை ஆய்வு (அவியல்) இந்த பிரச்சினை மூலம் கிடைக்கப்போகும்  தனி தமிழீழம் வரையல்லவா நீளப்போகிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். :grin:

இலவு காத்த கிளி தெரியுமா😂 தமிழ்சிறி 

 

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இந்த உத்தரவால், 
ராஜபக்சவுக்குள்..  குடும்பச்  சண்டை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக...
யாழ்.கள,  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். :grin:

அது எப்போதோ ஆரம்பமாகி 20 ஆவது சட்டத்திருத்தத்தில் சூடுபிடித்திருக்கிறது. கோத்தாவின் வியத்மகா கோத்தாவுக்கு அசுரபலத்தை கொடுக்க கொண்டுவந்த இந்த சட்டதிருத்தத்தை எதிர்க்க சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கத்தொலிக்க கார்டினல் வரை இவ்வளவு துணிச்சல் பெற்றதற்கு பின்னணியில் இந்த சட்டதிருத்தத்தால் பலமிளக்க இருக்கும் மகிந்த ராஜபக்ச இருப்பது யாழ் களத்துக்கு புரியவில்லையே?😒 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இலவு காத்த கிளி தெரியுமா😂 தமிழ்சிறி 

 

அண்ணனுக்கும் தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்கனவே உள்ளது. விடயம் புதியதல்ல. ஆனால் குடும்பம் என்று வரும்போது அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். அதிலும் பிள்ளைகள் மிகவும் அன்னியோன்னியமாய் உள்ளனர். 👍

 

இரதிக்கு சட்டென்று கோபம் மூக்கு நுனியில் வந்துவிட்டதே. காரணம் எதுவோ 🤔🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎10‎-‎2020 at 20:47, Kapithan said:

அண்ணனுக்கும் தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்கனவே உள்ளது. விடயம் புதியதல்ல. ஆனால் குடும்பம் என்று வரும்போது அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். அதிலும் பிள்ளைகள் மிகவும் அன்னியோன்னியமாய் உள்ளனர். 👍

 

இரதிக்கு சட்டென்று கோபம் மூக்கு நுனியில் வந்துவிட்டதே. காரணம் எதுவோ 🤔🤔

 

கோபம் ஒன்றும் இல்லை ...எப்ப இந்த தமிழாக்கள் திருந்த போயினம் என்ற ஆதங்கம் தான் ...என்னைப் பொறுத்த வரைக்கும் மகிந்தா ,கோத்தா சகோதரர்களை பிரிக்க முடியாது ...மகிந்தா இறந்தால் அதற்கு பிறகு இலகுவாய் இருக்கும் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.