Jump to content

முத்தையா முரளிதரனை மையப்படுத்திவரும் தமிழின எதிர்ப்பு அரசியலை முறியடிக்க அருட்தந்தை சக்திவேல் வேண்டுகோள்


Recommended Posts

 

 
மலையக மக்களைத் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்காத

முத்தையா முரளிதரனை மையப்படுத்திவரும் தமிழின எதிர்ப்பு அரசியலை முறியடிக்க அருட்தந்தை சக்திவேல் வேண்டுகோள்

கொலை அரசின் அரசியலுக்கு பலியாகவேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோரிக்கை
 
 
 
 
main photo
 
ஒரு விளையாட்டு வீரனாகப் பரிணமித்து தற்போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சிபுரியும் கொலை அரசாங்கம் சார்ந்த அரசியலுக்குத் தானும் பலியாகி தனது தம்பியையும் ராஜபக்சவின் கட்சி அரசியலில் ஈடுபடுத்தியிருப்பவர் தான் முத்தையா முரளிதரன். இவர் ஆட்சியாளர்களின் கைப்பொம்மை. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 800 படத்தின் அரசியல் நோக்கம் தமிழ் மக்களின் தேசியத்தைச் சிதைக்கும் நோக்குள்ளதன்றி வேறெதுவாகவும் இருக்கமுடியாது என்று மலையகத்தைப் பின்னணியாகக் கொண்ட மனிதநேய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும் முற்போக்குவாதியுமான அருட்தந்தை சக்திவேல் கூர்மை செய்தி இணையத்திற்குத் தெரிவித்தார். இந்த முயற்சி தோற்கடிக்கப்படவேண்டும். இதற்கு தமிழக நடிகர் விஜய் சேதுபதி துணை நிற்கக்கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 

விஜய் சேதுபதி ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒருவர். அதைப் போன்று மக்கள் மத்தியிலே சமத்துவம் இருக்கவேண்டும் என்று போராடிய ஒருவர்.

ஆனால், சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்த்துநிற்கின்ற முரளிதரனாக அவர் நடிப்பதென்பதை தமிழ் மக்களாக எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மலையக மக்களின் உரிமைக்காகவும் வட கிழக்கு வாழ் தமிழர்களின் உரிமைக்காகவும் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவரும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சார்ந்தவர் என்றபோதும் கூட மலையக மக்களுக்காகச் செயற்படாத ஒருவர். ஏனென்றால் தற்போதைய ஆட்சியாளர்கள் எப்போதுமே மலையகத்துக்கு எதிராகத்தான் செயற்பட்டிருக்கிறார்கள். மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காதவர்கள். அந்த அரசியலில்தான் தன்னையும் முரளிதரன் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் என்றார் அருட்தந்தை சக்திவேல்.

முரளிதரன் பற்றிய திரைப்படம் அவரது விளையாட்டு வீரன் பின்னணி சார்ந்து எடுக்கப்படுவதாகத் தோற்றமளித்தாலும் அதற்குப் பின்னால் பாரிய ஓர் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும் என்றார் சக்திவேல். இது தமிழினத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தமிழின அழிப்பைத் தொடரும் அரசியலின் ஒரு செயலாகவே பார்க்கப்படவேண்டியது.

ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் சார்பாக, தமிழினத்தின் தேசியத்தின் சார்பாக நாங்கள் கேட்பது உலகளாவிய தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியத்திலே அக்கறையுள்ள முற்போக்குச் சக்திகளும் இதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்றார் அவர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1613&fbclid=IwAR3bjBRHlCEI5CUp54KKyl7AWaqIr8pLepPYRR7bamt_iat4xyLbvVkBtm4

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்! – ரூபன் சிவராஜா

ரூபன் சிவராஜா

‘சிறிலங்கா’ கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான சுயவரலாற்றுப் படத்தில் (Biopic) விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான சர்சைக்கான எதிர்வினைகள் பல்வேறு வகையான அணுகுமுறைகளை அவதானிக்க முடிகிறது. ஒன்று இதன் அரசியல் பரிமாணத்தை முன்வைத்து விஜய் சேதுபதியிடம் வினயமாகக் கோரிக்கை வைக்கின்ற கருத்தில் அணுகுமுறை. அது அறிவார்ந்த நாகரீகத்தின் பாற்பட்டது. இந்த விவகாரத்தை துரோகி, வந்தேறி சொல்லாடல்களினாலும் மிரட்டல்களினாலும் உணர்ச்சிக்கூச்சலாக முன்வைக்கும் அணுகுமுறை இன்னொரு வகையிலானது. இரண்டாவது அணுகுமுறையே பெரும்போக்காக இருக்கின்றது. இவர்கள் பொதுவாக அனைத்துச் சர்ச்சைகளிலும் இப்படியாகவே இயங்கிவருகின்றனர்.

800.2.pngஇவர்கள் தவிர, இன்னும் பல தரப்பினர் உள்ளனர். இத்தகைய அதிருப்தி வெளிப்பாடுகளைக் கிண்டல் செய்பவர்களும் உள்ளனர். இவர்கள் எதிர்வினையின் அடிப்படைப் பரிமாணத்தை விட்டுவிட்டு ஒரே பல்லவிகளை திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருப்பவர்கள். பிரச்சினையின் அடிப்படையை மடைமாற்றுபவர்கள். மற்றுமோர் தரப்பினர் இத்தகையை எதிர்வினைகளைப் படைப்புச் சுதந்திரத்தில் கைவைப்பதாகக் கண்டனம் செய்கின்றனர்.

எந்தப்படத்தில் நடிப்பது நடிக்காமல் விடுவது என்பது நடிகனின் தேர்வுச் சுதந்திரம் சார்ந்தது. அதில் தலையிட எமருக்கும் உரிமை இல்லை என்று வாதங்ககளையும் காணக்கிடைக்கின்றது. திரைப்படம் வெளிவந்த பின்னர் அதனைக் கருத்தியல் தளத்தில் விமர்சிக்கலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. இந்தத் திரைப்படம் தொடர்பான எதிர்வினையை விஜய் சேதுபதியின் சுதந்திரத்தில் தலையிடும் விடயமாக சுருக்க முடியாது. அப்படிச் சுருக்குவது கருப்பு வெள்ளை அணுகுமுறை. அதேவேளை அவரை மிரட்டும் பாணியிலான அறிக்கைகள், வற்புறுத்தல்கள், வசைவுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

விஜய் சேதுபதியை நோக்கி வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏன்? இயக்குனர், தயாரிப்பு நிறுவனத்திற்கு இதில் பொறுப்பில்லையா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. தவிர விஜய் சேதுபதி இல்லாமல் வேறு மொழி நடிகர் யாரவது அல்லது ஹொலிவூட் நடிகர் யாரேனும் நடித்தால் இத்தகைய எதிர்ப்பினைத் தமிழர்கள் வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள் என்று கருத்துத் தெரிவிப்போரும் உள்ளனர். ஆனால் இங்கே முத்தையா முரளிதரன் அல்லாத, தமிழர் அல்லாத வேறு யாரோவொரு இவர் போன்ற பேரினவாத ஆதரவாளரோ, விஜய் சேதுபதி அல்லாத வேறு மொழி நடிகர் இதில் நடிப்பதாக இருந்திருந்தாலுமோ எதிர்வினைகளுக்கு ஒரு அரசியல் அடிப்படை உண்டு.

விஜய் சேதுபதி தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர், மக்கள் செல்வாக்கும் நட்சத்திர அந்தஸ்துமுடைய ஒருவர். அவரை அணுகுவது இலகு. இந்ந விடயத்தின் பின்னணியையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளக்கூடியவர் என்ற வகையில் அவரிடம் வேண்டுகோள் விடுப்பதென்பது இயல்பு.

800.3.jpgதவிர மற்றைய நடிகர்களுடன் ஒப்பிடும்போது, சமூக, அரசியல் சார்ந்து மக்கள் நலனை முன்னிறுத்திய காத்திரமான கருத்துகளை வெளிப்படுத்துகின்ற நடிகராக விஜய் சேதுபதி தன்னைப் பொதுவெளியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். சமகால நடிகர்களில் பிரகாஸ்ராஜ் மற்றும் விஐய் சேதுபதி ஆகிய இருவரினதும் சமூக-உலகப் பார்வை கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

முத்தையா முரளிதரன் ஒரு மாபெரும் விளையாட்டு வீரர், சாதனையாளர், உழைக்கும் மக்கள் சமூகத்திலிருந்து வந்தவர். ஒரு சாதனையாளராக அவரது வாழ்க்கை வரலாறு பதிவாகுவதை எதிர்ப்பது நியாயமில்லை என்ற வாதிடுவோரும் உள்ளனர். இதனை ஒரு சர்ச்சை ஆக்கும் அளவிற்கும் எதிர்க்க வேண்டிய அளவிற்கு பெறுமதியான விடயம் இல்லை. கடந்துபேக வேண்டியது என்று கருதுவோரும் உள்ளனர்.

முரளிதரனை மலையகத்தின் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக, அவர்களது பிரதிநிதியாக முன்னிறுத்த முயல்வதெல்லாம் நகைப்பிற்குரியது. அம்மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக அவர் குரல்கொடுத்திருந்தால் சிறிலங்கா கிறிக்கெற் அணியில் அவர் இடம்பெற்றிருக்கவே முடியாது என்பதை அரசியல் அரிச்சுவடி மட்டும் தெரிந்தவர்கள்கூட நன்கறிவர். அவர் பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர். அதனை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டவரும் கூட. சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு. தனது முதன்மையான அடையாளம் ‘சிறிலங்கன்’ என்றும் கூறியுள்ளார். அப்படிச் சொல்வதற்கும் உணர்வதற்கும் சிங்கள பெருந்தேசிய வாதத்திற்கு ஒத்தூதுவதற்குமான உரிமை அவருக்கு உள்ளது. அது அவருடைய தெரிவு. அவருடைய சுதந்திரம்.

அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவது இங்கு பிரச்சினை இல்லை. அதில் அவரது அரசியல் சார்புகள், நிலைப்பாடுகள் பேசப்பட மாட்டாது என்பதுவும் இந்த எதிர்வினைகளுக்கான காரணங்களில் ஒன்று. விளையாட்டுத் துறையின் ஒரு ஆளுமையாக அவர் எப்படி உருவனார் என்பதைச் சுற்றியதான சித்தரிப்புகள் மட்டுமே இருக்கும் என்ற கருத்துகள் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து முன்னர் கூறப்பட்டன. அங்குதான் பிரச்சினையே உள்ளது.

கிறிக்கெற்றிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர் சிறிலங்கா அரசியல் களத்தில், பேரினவாத அரசின் தீவிர ஆதரவாளராக இயங்கி வருகின்றார். அவருடைய அரசியல் செயற்பாட்டை நீக்கிவிட்டு அவர்பற்றிய வரலாற்றுப்படத்தினை எடுப்பதென்பதை எப்படி எடுத்துக்கொள்வது?. அவரை அரசியல் நீக்கம் செய்து நாயகனாக முன்னிறுத்துவதிலுள்ள தார்மீகச் சிக்கல் சார்ந்ததே தற்போதைய எதிர்ப்புகளின் அடிப்படை.

800.3-1-1024x576.jpgமுள்ளிவாய்க்காலில் புலிகள் மட்டும் அழிக்கப்படவில்லை. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்தவர்கள் கோரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள், பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள். இத்தகைய மானிடத்திற்கெதிரான கொடூரங்களுடன் போர் நிறைவுக்கு வந்தததைத் தன் வாழ்நாளில் மிக முக்கிய நாள் என்றார். காணமற் போனவர்கள் தொடர்பான போராட்டத்தின் ஒரு அங்கமாக (2013 முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாண விஜயத்தின்போது) காணமற்போனோரின் தாய்மார் கமரூன் முன்பு நடத்திய போராட்டத்தை எள்ளி நகையாடியவர் முரளி. ராஜபக்ச சகோதரர்களின் தேர்தல் வெற்றிக்கான பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டார்.

ஒரு நபர் பற்றிய வரலாற்றுப் படம் என்பது அந்நபர் பற்றிய முழுமையான தரிசனத்தைக் கொடுக்க வேண்டும். அவர் மீதான விமர்சனங்கள், அவருடைய சார்புநிலைகள் குறித்த காட்சிகளையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முரளிதரன் போன்ற உயிர்வாழும் ஒரு பிரபலம் பற்றிய படம் அப்படியாக உருவாக்கப்படும் வாய்ப்புகள் குறைவு. பணமும், புகழும், அதிகார சக்திகளின் ஆதரவுமுடைய ஒருவர் தனது எதிர்கால அரசியல், வணிக முதலீடுகளுக்குக் குந்தகமான விமர்சனங்களுடன் தன் பற்றிய படம் வெளிவருவதை அனுமதிக்கின்ற வாய்ப்புகள் அரிது. மட்டுமல்லாமல் அவர் சார்ந்திருக்கின்ற பேரினவாதமும் அதனை அனுமதிக்கப்போவதில்லை.

முத்தையா முரளிதரன் சுயவரலாற்றுப் படம் சார்ந்த சிக்கலில் அவர் ஒரு விளையாட்டுச் சாதனையாளராக மட்டும் இருந்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. இங்கு பிரச்சனை அரசியல். அந்த அரசியல் என்பது அவர் சார்ந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களுக்குச் சார்பான அரசியலும் இல்லை. அரசியல் உரிமை மறுக்கப்பட்ட, இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழ் மக்களுக்குச் சார்பானதும் இல்லை. அவருடைய அரசியல் ஈழத் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற பௌத்த சிங்கள பெருந்தேசிய வாதத்திற்கு முழுமையான முண்டுகொடுப்பினைச் செய்கின்ற, அதன் சர்வாதிகார, இன ஒடுக்குக்குமுறைப் போக்கினை நியாயப்படுத்துகின்ற அரசியல். அரசு, இனவாதம், இராணுவம் என அதன் பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத நிறுவனத்தைப் பாதுகாக்கும் கருத்தியலை 2009இன் பின் அவர் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கிறார். அனைத்துலக மட்டத்தில் இனப்படுகொலை அரசை நியாயப்படுத்தி வருகிறார் போன்றவற்றிற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் அவர் நிற்காததுகூடப் பரவாயில்லை. விளையாட்டு வீரராக அரசியலில் நிலைப்பாடு எடுக்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறையாளர்களின் மேலாதிக்கக் கருத்தினை வழிமொழியும் நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்ற ஒரு நபர் என்ற அடிப்படையில் அவர் தொடர்பான இந்தத் திரைப்படத்திற்கு எதிர்வினைகள் எழுவதிலுள்ள தார்மீக நியாயங்கள் புறந்தள்ளக்கூடியவை அல்ல. ஆனால் இந்தச் சர்ச்சையை எதிர்கொள்வதில் தமிழ்ச்சூழலில் பெரும் அணுகுமுறைக் குறைபாடுகள் உள்ளன.
தமிழகம், ஈழம், புலம்பெயர் தேசங்களில் என மூன்று தளங்களிலிருந்தும் ஒரு விடயத்தினை அதன் முழுமையான பரிமாணத்தை முன்வைத்து எதிர்வினைகள் ஆற்றப்படுவது மிக அரிது. அததற்குரிய பெறுமதியுடன், கருத்தியல் தளத்தில் நின்று அணுகுபவர்கள் மிகக் குறைவு. அரைவேட்காட்டுத்தனமாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் கொச்சைப்படுத்தல்களாகவும் சேறுபூசுதல்களாகவும் அணுகுபவர்களே அதிகம். சமூக வலைத்தளங்களில் அத்தகைய குப்பைகளே நிரம்பிக் கிடக்கின்றன. இவர்களால் தமிழர் நலனுக்கும் பயனில்லை. விமர்சனக் கலாச்சாரத்தின் ஆரோக்கியத்திற்கும் பயனில்லை.

இதில் நடித்தால் விஜய் சேதுபதியின் திரைப்பட எதிர்காலம் மண்கவ்வும் என்ற ரீதியில் பொங்குபவர்களின் கருத்துகள் அபத்தமானவை. இதற்கு அவ்வப்போது ரஜனியின் சமூக விரோதக் கருத்துகளுக்கு எழுகின்ற எதிர்ப்புகளும் ரஜனியின் திரைப்டங்களின் வியாபாரமும் நல்ல உதாரணம். கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் போராட்டங்களை சமூக விரோதமாகச் சித்தரித்து, காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டுமென்று கூறிய கருத்துகளைத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பின. காலா படத்தைப் புறக்கணிக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் நடைமுறையில் அது எவ்விதத் தாக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. இது ரஜனியின் அண்மைய உதாரணம். முன்னரும் பல தடவைகள் ரஜனியின் சமூக அரசியல் உளறல்களுக்கு எதிர்ப்புக் கிளம்புவதும் பின்னர் அந்த எதிர்ப்புகள் புஸ்வாணமாகிப் போவதும் பழகிப்போன அநுபவங்கள். தவிர லைக்கா தயாரிப்பு நிறுவனச் சர்ச்கைகளும் இவ்வாறானவையே.

சினிமா என்பது முற்றிலும் வியாபாரத்தை மையமாகக் கொண்டது. இலாப நட்டக் கணக்குகளே திரைத்துறையின் அசைவுகளைத் தீர்மானிப்பவை. வன்முறையும், பெண்களுக்கெதிரான போக்குகளும், அதிகாரத்திற்குச் சாமரம் வீசுவதும் பெரும்பாலான தமிழ்ச் சினிமாவின் போக்கு.

முரளிதரனின் அடையாளம் என்பது கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமல்ல. விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னான அவரது அரசியலும் அவரது அடையாளம். அது பேரினவாதத்திற்கு ஒத்தூதும் அரசியல். அவரது அரசியலை நீக்கம் செய்துவிட்டு விளையாட்டு வீரனாக மட்டுமே சித்தரிப்பது முழுமையான கலையாகாது.

படம் வெளிவருகின்றது – வெளிவரவில்லை, விஜய் சேதுபதி நடிக்கிறார்- நடிக்கவில்லை. விஜய் சேதுபதி இல்லாமல் வேறு யாராவது நடித்து படம் வெளிவருகின்றது போன்ற அனைத்துச் சாத்தியங்களுக்கும் அப்பால் பிரக்ஞைபூர்வபான கருத்தியல் சார்ந்த எதிர்வினைகள், அதிருப்திவெளிப்பாடுகள், வேண்டுகோள்களுக்கு குறைந்தபட்சம் குறியீட்டுப் பெறுமதி உள்ளது. அந்த குறியீட்டுப் பெறுமதி அரசியல் பரிமாணத்திலிருந்து வருகிறது.

800.4.jpg

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.