Jump to content

மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா?

 
image0-1-2-696x392.jpeg
 45 Views

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது. அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா, கசிப்பு வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.

இந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கும் சென்ற குறித்த மாணவனும் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்கள்  கொண்டு செல்லும்  பூ மாலை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்கப்படுவதில்லை. மாறாக வெளியில் உள்ள சுவாமிக்குத்தான் அணிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை. இவ்வாறு தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில்  பாராபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளது.

தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த  மாணவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், மாணவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியதாக  பாதிக்கப்பட்ட  மாணவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது, ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் . அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர், இங்கு நிர்வாகம் எடுப்பதுதான் தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய
நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த
மாணவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன்.  அந்த மாணவனுடைய வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் குறித்த மாணவனைப் போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர, இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது
தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற
மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

 

https://www.ilakku.org/மாணவனுக்கு-தேவாரம்-பாட-ம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லட்சணத்தில் தான் தமிழ் தேசியத்தை பாதுகாக்கப்போகிறீர்களோ அண்ணாமார்களே ....?
ஐயகோ....உங்கள் தமிழ் தேசியத்தில் JCB க்கு இருக்கும் மரியாதை சாதாரண இந்து சாமானியனுக்கு இல்லாமல் போய்விட்டதே.....  சகலகலாவல்லியே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

by vithaiOctober 19, 20200376
spacer.png

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் சகலகலாவல்லி மாலை பாட முற்பட்ட உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இளைஞர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்றினைக் குறித்த காணொலி ஒன்றினை ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாதியத்தின் அடிப்படையிலான வன்கொடுமைகள் குறித்தும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தும் பேச்சுகள் எழும்போதெல்லாம் சாதியம் இப்போது ஒழிந்துவிட்டது என்றும் இல்லாத விடயத்தை ஏன் பேசுகின்றீர்கள் என்றும் சொல்லித் தட்டிக்கழிக்கின்ற சாதியவாதிகளின் பொய்களை பொதுவெளியில் இவ்வாறான ஒடுக்குமுறைகளைக் கொண்டுவருவதன் மூலமே வெளிக்கொண்டுவர முடியும்.

இந்தக் காணொலியில் குறித்த இளைஞர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

”வணக்கம்,
நான் பிள்ளையார் கோயிலுக்கு வந்தனான். தேவாரம் பாடோனும் என்று ஆசையா வந்தனான். இன்றைக்கு சரஸ்வதி பூசை என்று எல்லோருக்கும் தெரியும். சகலகலாவல்லி மாலை பாடோனும் என்று ஆசையா வந்தனான். என்னைத் தேவாரம் பாட வேண்டாம், வெளியில போ என்று கலைச்சுவிட்டிட்டினம். உண்மையா சரியான கவலையாக் கிடக்கு. நாங்கள் தேவாரம் பாடிறதே ஒருத்தருக்கும் பிடிக்கிறேல்ல. எங்கட குடும்பத்தையே முழுசா புறக்கணிக்கிறது. என்ன பிரச்சனை என்று இதுவரைக்கும் தெரியாது. எல்லாரும் சாதி என்று தான் சொல்லினம், ஆனால் எனக்கு அது வடிவா தெரியேல்ல. ஆனால் அதோ முக்கிய பிரச்சனையோ வடிவா தெரியேல்ல. சில பேர் சொல்லினம் படிப்பில பொறாமையென்று, நல்லாப் படிக்கிறோமாம், அதால பொறாமையாம் என்று நிறையக் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கினம். உண்மையில எனக்கு மனவருத்தமா இருக்கிது. ஆனால் இவையள எதிர்த்துக் கதைக்கிறதுக்கு இங்க ஒருத்தரும் இல்லையெண்டுறதுதான் முக்கிய பிரச்சனை.

(ஊடகவியலாளர்: இன்றைக்கு என்ன காரணம் சொல்லி உங்களைத் திருப்பி அனுப்பிச்சினம்? என்ன சொல்லிச்சினம்)
நீ இதில் தேவாரம் பாடாதை, வெளியில போ, அவ்வளவுதான் தலைவர் சொன்னவர். அவர் சமாதான நீதவானும் கூட.

(ஊடகவியலாளர்: இதுக்கு முதல் எத்தனை தடவை இப்படியான சம்பவம் நடந்தது)
நாலைஞ்சு தரத்துக்கு மேல நடந்திருக்கு, ஆனா நான் ஊருக்குள்ள பிரச்சனை, வெளியில சொல்லக்கூடாது சொல்லக்கூடாது என்று இருந்தால் இப்படியே ஒதுக்கிக்கொண்டு தான் இருப்பினம்.

***

ஆலய நுழைவுப்போராட்டம், தீண்டாமை ஒழிப்பிற்கான வெகுஜனப் போராட்டம் போன்ற சமூக நீதிக்கான முக்கியமான போராட்டங்கள் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் கூட சாதியத்தைப் பேணிக்கொண்டே எமது சமூகம் இயங்கிவருகின்றது. அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையால் மார்ச் 12, 2017 அன்று அப்போதையை இந்துக் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றில் ”சிறுபான்மைத் தமிழரின்” ஆலயப் பிரவேசத்தைத் தடுக்கின்ற ஆலயங்கள் என்று 102 ஆலயங்களின் பெயர்ப் பட்டியல், விலாசம், பதிவிலக்கம் என்பவற்றைப் பட்டியலிட்டு அனுப்பியதுடன் “எல்லாருக்கும் வழிபாட்டிற்காக திறந்துவிடப்பட்ட ஆலயங்களிலும் ஆதிக்க சாதியினர் கபடமாக, நுட்பமான முறையில் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லாத திருப்பணிச் சபை அமைத்து அதனூடாக சுவாமி காவுதல், தேர் இழுத்தல் மற்றும் திருப்பணி வேலைகளிலும் எமது மக்கள் தடுக்கப்படுகிறார்கள். 1971 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட சமூக குறைபாட்டு ஒழிப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்கள்” என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய உரிமைகளைத் தடுக்கும் நோக்குடனேயே நிதிவளங்கள் இருந்தும் கூட பல ஆலயங்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன என்பதையும் அந்தக் கடிதம் கவனப்படுத்தியிருந்தது.

மேலே குறிப்பிடப்பட்டிருந்த பெரிய பரந்தனில் இடம்பெற்ற சம்பவத்தில், குறித்த இளைஞரின் குடும்பம் ஆலய நிர்வாகத்தினால் சாதிய ரீதியிலான பாகுபாட்டுக்கு உள்ளாகின்றது என்றே தெரிகின்றது. சுயமரியாதையும் சமத்துவமும் நிறைந்ததோர் சமூகம் ஒன்றைக்கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் விதை குழுமம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது. இதுபோன்ற ஒடுக்குமுறைகள் பரவலாக நடைபெறுகின்றபோதும் மிக மிகச் சொற்பமான சந்தர்ப்பங்களிலேயே அவை குறித்து பொதுவெளியில் உரையாடல்கள் எழுகின்றன. எனவே அவற்றைச் சிறிதேனும் உதாசீனம் செய்துவிடாது சமூகநீதிக்காகக் போராடுபவர்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும். ஆலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும். ஈழத்தைப் பொருத்தவரை பெரும்பாலான கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதியவாரியாக சிறுபான்மையினராகவே வசிக்கின்றார்கள். இந்தச் சம்பவம் நடந்த ஆலயச் சூழலிலும் மிகமிகக் குறைவானவர்களாகவே குறிக்கப்பட்ட இளைஞரின் சாதியப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. இப்படியான சூழலும் சமூக அமைப்பும் ஒடுக்கப்படுபவர்கள் துணிந்து தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுத்துவிடும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றது. சமூக நீதிக்காகவும், சாதிய ஒழிப்பிற்காகவும் போராடுபவர்கள் அமைப்பு ரீதியில் ஒன்றிணைவதும் உணர்வுத்தோழமையுடன் செயலாற்றுவதுமே இப்போதைய தேவை. சமூக நீதிக்கான முதலாவது அடியை எங்கள் குடும்பங்களில் இருந்து, நாம் வாழும் சூழலில் இருந்து, நாம் ஊடாடும் அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்களில் இருந்து தொடங்குவோம்.

நன்றி – இந்தக் காணொலி ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தத்திற்குரிய செயல். 😢

எங்களுக்கு இன்னமும் எத்தனை முள்ளிவாய்க்கால்கள் ஏற்பட்டால் திருந்துவோம் 😳

Link to comment
Share on other sites

19 hours ago, உடையார் said:

மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா?

 
image0-1-2-696x392.jpeg
 45 Views

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது. அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா, கசிப்பு வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.

இந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கும் சென்ற குறித்த மாணவனும் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்கள்  கொண்டு செல்லும்  பூ மாலை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்கப்படுவதில்லை. மாறாக வெளியில் உள்ள சுவாமிக்குத்தான் அணிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை. இவ்வாறு தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில்  பாராபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளது.

தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த  மாணவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், மாணவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியதாக  பாதிக்கப்பட்ட  மாணவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது, ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் . அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர், இங்கு நிர்வாகம் எடுப்பதுதான் தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய
நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த
மாணவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன்.  அந்த மாணவனுடைய வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் குறித்த மாணவனைப் போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர, இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது
தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற
மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

 

https://www.ilakku.org/மாணவனுக்கு-தேவாரம்-பாட-ம/

எத்தனையோ அழிவுகளும் அனர்த்தங்களும் நேர்ந்தும் இன்னும் எமது சமூகம் திருந்தவில்லை, இப்படிச் செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பது மிக அவசியம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பையன் சொல்கிறார்.. பாட விடாததற்கு என்ன காரணமென்று சரியாகத் தெரியவில்லை என்று.

ஆனால்.. சமூக வலை.. இணைய வலை சாதி விருப்பு ஆர்வலர்கள்.. கட்டுரை கட்டுரையாக அள்ளி விடுவது என்னவோ.. தம் உள் விருப்பான..  சாதி இருப்பை நிலை நிறுத்தும் வகையில் இந்தச் சம்பவத்துக்கு முழுச் சாதிய சாயம் பூசுவதையே காண்கிறோம். 

சாதாரண நாட்களில் சிறுவர்களை பா ஓத அனுமதிக்கும் சில ஆலய நிர்வாகங்கள்.. விசேட தினங்களில் விடுவதில்லை.. பா ஓதல் மூத்தோர் தான் அனுமதிக்கப்படுவதுண்டு.

இதனை நல்லூரில் இருந்து.. யாழில் பல கோவில்களில் நாம் எமது சிறு பராயத்தில் அவதானித்ததில் சொல்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் நேர்காணலின் போதே தெரிகின்றது இது சாதி பிரச்சனைதான் என...
கண்டிக்க வேண்டிய செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அந்தப் பையன் சொல்கிறார்.. பாட விடாததற்கு என்ன காரணமென்று சரியாகத் தெரியவில்லை என்று.

ஆனால்.. சமூக வலை.. இணைய வலை சாதி விருப்பு ஆர்வலர்கள்.. கட்டுரை கட்டுரையாக அள்ளி விடுவது என்னவோ.. தம் உள் விருப்பான..  சாதி இருப்பை நிலை நிறுத்தும் வகையில் இந்தச் சம்பவத்துக்கு முழுச் சாதிய சாயம் பூசுவதையே காண்கிறோம். 

சாதாரண நாட்களில் சிறுவர்களை பா ஓத அனுமதிக்கும் சில ஆலய நிர்வாகங்கள்.. விசேட தினங்களில் விடுவதில்லை.. பா ஓதல் மூத்தோர் தான் அனுமதிக்கப்படுவதுண்டு.

இதனை நல்லூரில் இருந்து.. யாழில் பல கோவில்களில் நாம் எமது சிறு பராயத்தில் அவதானித்ததில் சொல்கிறோம். 

ஏன் இந்த வேலை - சிறுவனின் காணொளியில் நன்றாக தெரிகின்றது மேட்டுகுடிகளின் ஆதிக்க வெறி, அதை கண்டிக்காமல் பா ஓதுகின்றது என்று வேறு என்னவோ எழுதுகின்றீர்கள். இப்படிப்பட்டவர்க்களை கல்லால் எறிந்து ஊரைவிட்டு துரத்த வேண்டும்

நீங்கள் தான் உங்கள் உள் சாதி விருப்பிற்கு எழுதுவது மாதிரி தெரிகின்றது. காணொளியை திரும்பவும் கேளுங்கள், சாதி வெறியாகவும் இருக்கலாம், குடும்பத்தையே ஒதுக்கி வைத்துள்ளார்கள் என கூறுகின்றார் 

 

Link to comment
Share on other sites

ஜாதியின் மூலவேர்கள் வைதீக கோயில் கருவறைக்குள் இருந்து தொடங்குகின்றன...

மானிட ஜாதியம்...
பாலின ஜாதியம்...
பிரதேச ஜாதியம்....
மூட நம்பிக்கைகள்...
இவற்றை தூக்கி உடனே குப்பையில் வீசிவிட முடியாது... காய்தல் உவத்தல் அற்று ஆராய வேண்டியவை...

பெரியாரை இருட்டிப்புச் செய்தது போதும்... போய்ப் பெரியாரைப் படியுங்கள், படிப்பியுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பராபரன் said:

ஜாதியின் மூலவேர்கள் வைதீக கோயில் கருவறைக்குள் இருந்து தொடங்குகின்றன...

மானிட ஜாதியம்...
பாலின ஜாதியம்...
பிரதேச ஜாதியம்....
மூட நம்பிக்கைகள்...
இவற்றை தூக்கி உடனே குப்பையில் வீசிவிட முடியாது... காய்தல் உவத்தல் அற்று ஆராய வேண்டியவை...

பெரியாரை இருட்டிப்புச் செய்தது போதும்... போய்ப் பெரியாரைப் படியுங்கள், படிப்பியுங்கள்...

பெரியாரை யார் இருட்டடிப்பு செய்தார்கள்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

சாதாரண நாட்களில் சிறுவர்களை பா ஓத அனுமதிக்கும் சில ஆலய நிர்வாகங்கள்.. விசேட தினங்களில் விடுவதில்லை.. பா ஓதல் மூத்தோர்

 பொருள், பயன் ஒதல் செய்வதே வயது வந்தோர் ஆக இருத்தல் நல்லது.

ஆனாலும், அப்படி வயது வந்தோர் எப்படி சரியாக பயன் சொல்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

எனது அம்மா பா, பொருள், பயன் எல்லாம் ஒதுவார். 

ஆனால், அது அவருக்கு படித்து, தங்கம்மா அப்பாக்குட்டி, சுழிபுரம் கணபதி பிள்ளை (  பாடசாலை அதிபர்) போன்றவர்களுடன் பா, பொருள், பயனை போன்றவர்களுடன் பா பொருள், பயனை பற்றி ஆய்வு செய்ததால் வந்த அறிவு.

நான் இங்கு ராசா அன்னை எனும் திரியில் எண்கள் குடும்பத்தில் இருந்த துறை தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதி இருந்தேன்.

ஆனால், அந்த நூல்களின் எண்ணிக்கைக்கு மிஞ்சிய இல்லகிய, இலக்கண, புராண, இதிகாச, வெண்பாக்கள், நீதி நூல்கள் என்று பலவிதமான நூல்கள், தமிழிலுm, சமஸ்கிருதத்தில் இருந்தன. இவ்வளவையும் படித்து, எனையோருடன் ஆய்ந்த அனுபவத்தில் தான் பா, பொருள், பயன் சொன்னவர். 

இவ்வளவு அறிந்தும், இளையவர்கள் யாராவது பா, பொருள், பயன் சொல்ல முன்வந்தால், எனது அம்மா அவர்களுக்கு இடம் கொடுத்தார். ஏனென்றால், அந்த ஓர் சந்தர்ப்பம் மட்டுமே இளையவர்கள் பயிற்றுவிக்க பட இயற்கையாக இடம் தருவதால். அதன் மூலம் இந்த கலாசாரம் வளரும் மற்றும் தொடர்வதற்கு வழி என்பதும்.

இளையவர்கள் தயஙஇனாலும் ஊக்கமளித்து இடம் கொடுப்பார், அவர்கள் சிரமப் படும் அல்லது தவ்ரு விடும் போது, உதவியாக இருந்தார் அல்லது திருத்தி விடுவார்.

இதை பெருமைக்காக சொல்லவில்லை.

இப்படியே போனால், இன்னும் ஓரிரு தலை முறைகளில் இந்த கலாசாரம் இல்லாது போய்விடும்.

அது மட்டுமல்ல, இந்த பா, பொருள், பயன் என்பதன் வழியாக எமது வரலாறும், தொன்மையும் வாய் வழியாக அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

ஏன் இந்த வேலை - சிறுவனின் காணொளியில் நன்றாக தெரிகின்றது மேட்டுகுடிகளின் ஆதிக்க வெறி, அதை கண்டிக்காமல் பா ஓதுகின்றது என்று வேறு என்னவோ எழுதுகின்றீர்கள். இப்படிப்பட்டவர்க்களை கல்லால் எறிந்து ஊரைவிட்டு துரத்த வேண்டும்

நீங்கள் தான் உங்கள் உள் சாதி விருப்பிற்கு எழுதுவது மாதிரி தெரிகின்றது. காணொளியை திரும்பவும் கேளுங்கள், சாதி வெறியாகவும் இருக்கலாம், குடும்பத்தையே ஒதுக்கி வைத்துள்ளார்கள் என கூறுகின்றார் 

 

 

உடையார் நீங்கள் உங்கள் கற்பனையில் இருப்பதற்கு வடிவம் கொடுக்கக் கூடாது. அந்தச் சிறுவன் சொல்கிறான்.. சிலர் இது சாதின்னு சொல்லினம்.. எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது. ஆனால்.. இன்று தேவாரம் பாட அனுமதிக்கவில்லை. முன்னர் தேவாரம் பாடி இருக்கிறான் அந்தச் சிறுவன். 

இப்போ ஒருவர் தேவாரம் பாட நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் சாதியத்தை எதற்கு புகுத்த வேண்டும். அந்தச் சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புக் கூடவா சமூக வலை.. இணைய வலை சாதி ஆர்வலர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. 

கோவில் நிர்வாகம்.. இந்த தன்னார்வ சிறுவர்களை புறக்கணிக்காமல்.. அவர்களுக்கும் ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நன்றே.. இதுதான் முன்வைக்கப்பட வேண்டிய கருத்தே அன்றி.. சாதி விதைப்பு.. அல்லது சாதியத்துக்குப் பின்னால் ஓடி ஒளிவதும் குற்றம் சாட்டுவதுமல்ல. 

3 minutes ago, Kadancha said:

 பொருள், பயன் ஒதல் செய்வதே வயது வந்தோர் ஆக இருத்தல் நல்லது.

ஆனாலும், அப்படி வயது வந்தோர் எப்படி சரியாக பயன் சொல்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

எனது அம்மா பா, பொருள், பயன் எல்லாம் ஒதுவார். 

ஆனால், அது அவருக்கு படித்து, தங்கம்மா அப்பாக்குட்டி, சுழிபுரம் கணபதி பிள்ளை (  பாடசாலை அதிபர்) போன்றவர்களுடன் பா, பொருள், பயனை போன்றவர்களுடன் பா பொருள், பயனை பற்றி ஆய்வு செய்ததால் வந்த அறிவு.

நான் இங்கு ராசா அன்னை எனும் திரியில் எண்கள் குடும்பத்தில் இருந்த துறை தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதி இருந்தேன்.

ஆனால், அந்த நூல்களின் எண்ணிக்கைக்கு மிஞ்சிய இல்லகிய, இலக்கண, புராண, இதிகாச, வெண்பாக்கள், நீதி நூல்கள் என்று பலவிதமான நூல்கள், தமிழிலுm, சமஸ்கிருதத்தில் இருந்தன. இவ்வளவையும் படித்து, எனையோருடன் ஆய்ந்த அனுபவத்தில் தான் பா, பொருள், பயன் சொன்னவர். 

இவ்வளவு அறிந்தும், இளையவர்கள் யாராவது பா, பொருள், பயன் சொல்ல முன்வந்தால், எனது அம்மா அவர்களுக்கு இடம் கொடுத்தார். ஏனென்றால், அந்த ஓர் சந்தர்ப்பம் மட்டுமே இளையவர்கள் பயிற்றுவிக்க பட இயற்கையாக இடம் தருவதால். அதன் மூலம் இந்த கலாசாரம் வளரும் மற்றும் தொடர்வதற்கு வழி என்பதும்.

இளையவர்கள் தயஙஇனாலும் ஊக்கமளித்து இடம் கொடுப்பார், அவர்கள் சிரமப் படும் அல்லது தவ்ரு விடும் போது, உதவியாக இருந்தார் அல்லது திருத்தி விடுவார்.

இதை பெருமைக்காக சொல்லவில்லை.

இப்படியே போனால், இன்னும் ஓரிரு தலை முறைகளில் இந்த கலாசாரம் இல்லாது போய்விடும்.

அது மட்டுமல்ல, இந்த பா, பொருள், பயன் என்பதன் வழியாக எமது வரலாறும், தொன்மையும் வாய் வழியாக அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படுகிறது.

நிச்சயமாக இளைய தலைமுறையினருக்கு கோவில் பங்களிப்பில்.. வழி சமைக்கப்படனும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

கோவில் நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆனால்.. அந்தச் சிறுவனே முதன்மைப்படுத்தாத.. சிலர் இதை சாதின்னு சொல்லினம் எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது... ஒரு விடயத்தை ஏன் சமூக வலையில்.. இணைய வலையில் எழுதித் தள்ளினம்..

போர் உச்சமாக இருந்த வேளையில்.. தேசிய தலைவரை.. தலித்தியம் சார்ந்து வசைபாடி எழுதியவர்கள்.. இன்று தாம் போர்த்திருந்த போலி தலித்திய சாயம் கழன்று.. அவர்களை போற்றி எழுதியோரிடமே வசை எழுத்து வாங்கிக் கொண்டிருக்கினம்..

தேவையா இதெல்லாம் நம்மவர்களுக்கு. அடி மண்ணுக்குள் புதைந்திருப்பதற்கு எதற்கு உயிர் கொடுத்து பயிராக்கி வளர்க்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

 

உடையார் நீங்கள் உங்கள் கற்பனையில் இருப்பதற்கு வடிவம் கொடுக்கக் கூடாது. அந்தச் சிறுவன் சொல்கிறான்.. சிலர் இது சாதின்னு சொல்லினம்.. எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது. ஆனால்.. இன்று தேவாரம் பாட அனுமதிக்கவில்லை. முன்னர் தேவாரம் பாடி இருக்கிறான் அந்தச் சிறுவன். 

இப்போ ஒருவர் தேவாரம் பாட நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் சாதியத்தை எதற்கு புகுத்த வேண்டும். அந்தச் சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புக் கூடவா சமூக வலை.. இணைய வலை சாதி ஆர்வலர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. 

கோவில் நிர்வாகம்.. இந்த தன்னார்வ சிறுவர்களை புறக்கணிக்காமல்.. அவர்களுக்கும் ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நன்றே.. இதுதான் முன்வைக்கப்பட வேண்டிய கருத்தே அன்றி.. சாதி விதைப்பு.. அல்லது சாதியத்துக்குப் பின்னால் ஓடி ஒளிவதும் குற்றம் சாட்டுவதுமல்ல. 

அந்த சிறுவனுக்கு சாதியை பற்றி அறிந்திருக்கவில்லை, தலைவிரின் காலத்தில் வாழ்ந்தவன் அதன்னால் அவனுக்கு அதைப்பற்றி தெரியாது, ஆனா புறகணிக்க வைத்து சாதியை திணிக்க பார்க்கின்றார்கள். அவனின் குடும்பத்தை ஏன் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், உங்களின் இஷ்ட சாதிய வர்க்கத்திற்கு வாதட வேண்டம் 

13 hours ago, கிருபன் said:

 

(ஊடகவியலாளர்: இதுக்கு முதல் எத்தனை தடவை இப்படியான சம்பவம் நடந்தது)
நாலைஞ்சு தரத்துக்கு மேல நடந்திருக்கு, ஆனா நான் ஊருக்குள்ள பிரச்சனை, வெளியில சொல்லக்கூடாது சொல்லக்கூடாது என்று இருந்தால் இப்படியே ஒதுக்கிக்கொண்டு தான் இருப்பினம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

அந்த சிறுவனுக்கு சாதியை பற்றி அறிந்திருக்கவில்லை, தலைவிரின் காலத்தில் வாழ்ந்தவன் அதன்னால் அவனுக்கு அதைப்பற்றி தெரியாது, ஆனா புறகணிக்க வைத்து சாதியை திணிக்க பார்க்கின்றார்கள். அவனின் குடும்பத்தை ஏன் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், உங்களின் இஷ்ட சாதிய வர்க்கத்திற்கு வாதட வேண்டம் 

முதலில் அந்தக் காணொளியில் அந்தச் சிறுவனின் வாக்கு மூலத்தை காணுங்கள். அவனே சொல்கிறான்.. இதை சிலர் சொல்லினம்... என்று தானே தவிர.. அவன் சொல்லவில்லை.

அந்தச் சிறுவனுக்கு தான் முன்னர் தேவாரம் பாடிய இடத்தில்.. இப்போ மறுக்கப்பட்டமையும்.. அதற்கு கோவில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கமும் தான் முரண்பாட்டுக்குக் காரணம்.

மிகுதி எல்லாம்..அந்தச் சிலர் சொல்லுற விடயமே. யார் அந்தச் சிலர்....???! 

மேலும்.. எங்களுக்கு என்று இஸ்ட சாதியும் இல்லை.. மதமும் இல்லை. தேவையற்ற சாயமூட்டல்களை உங்கள் கற்பனைக்குச் செய்யக் கூடாது. வாதம் வாதமாக நியாயமாக இருக்க வேண்டும்.. தனிநபர் கற்பனைச் சாடலாக இருக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

(ஊடகவியலாளர்: இதுக்கு முதல் எத்தனை தடவை இப்படியான சம்பவம் நடந்தது)
நாலைஞ்சு தரத்துக்கு மேல நடந்திருக்கு, ஆனா நான் ஊருக்குள்ள பிரச்சனை, வெளியில சொல்லக்கூடாது சொல்லக்கூடாது என்று இருந்தால் இப்படியே ஒதுக்கிக்கொண்டு தான் இருப்பினம்.

 

2 minutes ago, nedukkalapoovan said:

முதலில் அந்தக் காணொளியில் அந்தச் சிறுவனின் வாக்கு மூலத்தை காணுங்கள். அவனே சொல்கிறான்.. இதை சிலர் சொல்லினம்... என்று தானே தவிர.. அவன் சொல்லவில்லை.

அந்தச் சிறுவனுக்கு தான் முன்னர் தேவாரம் பாடிய இடத்தில்.. இப்போ மறுக்கப்பட்டமையும்.. அதற்கு கோவில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கமும் தான் முரண்பாட்டுக்குக் காரணம்.

மிகுதி எல்லாம்..அந்தச் சிலர் சொல்லுற விடயமே. யார் அந்தச் சிலர்....???! 

மேலும்.. எங்களுக்கு என்று இஸ்ட சாதியும் இல்லை.. மதமும் இல்லை. தேவையற்ற சாயமூட்டல்களை உங்கள் கற்பனைக்குச் செய்யக் கூடாது. வாதம் வாதமாக இருக்க வேண்டும்.. தனிநபர் சாடலாகக் கூடாது. 

அந்த சிறுவன் தெளிவாக தங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள் என கூறுகின்றான், உங்கள் அறிவுக்கு எதனால் ஒதுக்கி வைத்துள்ளார்கள் என விளக்க முடியுமா? இது முதல் தடவையல்ல அந்த சிறுவனுக்கு. உங்களை தனிமனித தாக்குதில் ஈடுபட எனக்கென்றுமில்லை, இதில் வந்து நீங்கள் வைக்கும் கருத்து சாதிய வெறிக்கு தீணி போடுவதாக இருக்கு, அப்ப எப்படி யோசிப்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

 

அந்த சிறுவன் தெளிவாக தங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள் என கூறுகின்றான், உங்கள் அறிவுக்கு எதனால் ஒதுக்கி வைத்துள்ளார்கள் என விளக்க முடியுமா? இது முதல் தடவையல்ல அந்த சிறுவனுக்கு. உங்களை தனிமனித தாக்குதில் ஈடுபட எனக்கென்றுமில்லை, இதில் வந்து நீங்கள் வைக்கும் கருத்து சாதிய வெறிக்கு தீணி போடுவதாக இருக்கு, அப்ப எப்படி யோசிப்பது

அந்தச் சிறுவனே சொல்கிறான்.. நீங்கள் கற்பனை பண்ணத் தேவையில்லை.

எங்கள் குடும்பம்.. படிக்கிற குடும்பம் என்பதால்.. ஒதுக்கி வைக்கப்படுகிறதாகச் சொல்லினம்.. சிலர் சாதின்னு சொல்லினம்.. ஆனால்.. எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது.. அவனுக்கே தெரியாததை எதற்கு.. இவ்வளவு பூதாகரமாக்கி.. சமூகத்துக்குள் புத்துயிர்ப்பு அளிக்கிறீர்கள்.. அந்தச் சிலர் என்பது தான் கேள்வி.

இந்தப் பிரச்சனைக்கு பதில்.. கோவில் நிர்வாகம்.. இளையோருக்கு.. பாடசாலை சிறார்களுக்கு வழிபாட்டில் வழங்க வேண்டிய வகிபாகத்தில் உண்டே தவிர.. சாதிய.. சமூக ஏற்றத்தாழ்வுகளின் பின்னால் இந்தப் பிரச்சனையை பின்னிவிடுவதில் அல்ல... என்பதை யாழ் களத்திலும் சிலர் உள்வாங்கிக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

உங்களுக்கு சாதி பற்றி பேசிக்கொண்டே இருக்கனும் என்ற உள்ளுணர்வூந்தல் அல்லது தேவை இருந்தால்.. மோகன் அண்ணாவிடம்.. கேட்டு தனித்திரி திறந்து உங்கள் உங்கள் மனங்களுக்குள் கறள் கட்டிக் கிடப்பதை தட்டி தடவி பூசி மொழுகி எழுதி மகிழுங்கள்.

அந்தச் சிறுவர்களுக்குள் விதைப்பதை தவிர்க்கலாமே..??! அவனே தெரியாது என்று சொல்வதற்குள் ஏன் அந்தச் சிலர் அதை திணிக்க முனைகின்றனர்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

அந்தச் சிறுவனே சொல்கிறான்.. நீங்கள் கற்பனை பண்ணத் தேவையில்லை.

எங்கள் குடும்பம்.. படிக்கிற குடும்பம் என்பதால்.. ஒதுக்கி வைக்கப்படுகிறதாகச் சொல்லினம்.. சிலர் சாதின்னு சொல்லினம்.. ஆனால்.. எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது.. அவனுக்கே தெரியாததை எதற்கு.. இவ்வளவு பூதாகாரமாக்கி.. சமூகத்துக்குள் புத்துயிர்ப்பு அளிக்கிறீர்கள்.. அந்தச் சிலர் என்பது தான் கேள்வி.

இந்தப் பிரச்சனைக்கு பதில்.. கோவில் நிர்வாகம்.. இளையோருக்கு.. பாடசாலை சிறார்களுக்கு வழிபாட்டில் வழங்க வேண்டிய வகிபாகத்தில் உண்டே தவிர.. சாதிய.. சமூக ஏற்றத்தாழ்வுகளின் பின்னால் இந்தப் பிரச்சனையை பின்னிவிடுவதில் அல்ல... என்பதை யாழ் களத்திலும் சிலர் உள்வாங்கிக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

உங்களுக்கு சாதி பற்றி பேசிக்கொண்டே இருக்கனும் என்ற உள்ளுணர்வூந்தல் அல்லது தேவை இருந்தால்.. மோகன் அண்ணாவிடம்.. கேட்டு தனித்திரி திறந்து உங்கள் உங்கள் மனங்களுக்குள் கறள் கட்டிக் கிடப்பதை தட்டி தடவி பூசி மொழுகி எழுதி மகிழுங்கள்.

அந்தச் சிறுவர்களுக்குள் விதைப்பதை தவிர்க்கலாமே..??! அவனே தெரியாது என்று சொல்வதற்குள் ஏன் அந்தச் சிலர் அதை திணிக்க முனைகின்றனர்..???! 

நீங்கள் காணொளி வடிவாக பார்த்தீர்களா. உங்கள் முயலுக்கு மூன்று காலென்று நிற்பவர் நீங்கள்.

சிறுவனும் முடியாத கட்டத்தில் தான் அவன் ஊடகத்திடம்  முறையிட்டுள்ளான், இப்படியே அவன் அடங்கி போயிருக்கனும் என்பதுதான் உங்கள் மேலான எண்ணமா? ஒரு முறையல்ல பல முறை சமாதான நீதவான் என செல்லும் தலைவரே இப்படி நடக்கின்றார் என்றால் மற்றவர்கள்??  யாருக்கு நீங்கள் வேலி போட பார்க்கின்றீர்கள்??

இப்ப கீழ்இறங்கி தனிமனித தாக்குதல் செய்வது நீங்கள் இது கேவலமாக இல்லை? எனக்கு அப்படி கறளுமில்லை, அப்படியொரு போர்வையுமில்லை

நான் யாழ்பாணத்தில் படிப்பதால் குடும்பத்தை ஒதுக்கி வைத்த தாக இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இப்படி கோவில் தலைவர்களை தட்டிக்கேட்டால், ஊரில் இன்னும் ஒதுக்கி வைத்துவிடுவார்களா -

மேட்டுகுடிகளில் கீழ்தரமான எண்ணங்கள் கறள்

ஊருக்கே முன்னுதாரணமாக இருக்க சமாதான நீதவான், அச் சிறுவனை ஊக்கப்படுத்தி பாடவிட்டிருக்க வேண்டும், அல்லது சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். அவனையும் குடும்பத்தையும் கஷ்டப்படுத்திய அவனை கண்டிக்காமல் , ஊடகம் சாதியை தூண்டி விடுகின்றது என துள்ள குதிக்கின்றீர்கள், ஏலமல் போனவுடன் தனி மனித தாக்குதலுக்கும் தயாராகிவிட்டீர்கள், இதை என்ன வென்று சொல்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

இவ்வளவு பூதாகாரமாக்கி.. சமூகத்துக்குள் புத்துயிர்ப்பு அளிக்கிறீர்கள்.. அந்தச் சிலர் என்பது தான் கேள்வி.

 முலையிலேயே கிள்ளி ஏறிய வேண்டிய விடயமிது, சிறுவனுக்கு பாராட்டுக்கள் ஊடகத்தின் முன் இதனை கொண்டுவந்த திற்கு, இனி எங்கு இப்படிப்பட்ட அடக்கு முறைகள் நடந்தாலும் வெளி கொணர வேண்டும்,

சிங்களவனிடமிருந்து விடுதலை கிடைக்க முதல் எங்கள் மேட்டுகுடிகளிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

நான் யாழ்பாணத்தில் படிப்பதால் குடும்பத்தை ஒதுக்கி வைத்த தாக இதுவரை கேள்விப்பட்டதில்லை.

நீங்கள் தான் அந்தக் காணொளியை நூறு தடவை காண வேண்டும் அந்தச் சிறுவன் என்ன சொல்கிறான் என்பதை விளங்கிக் கொள்ள.

இங்கு தனக்குப் பிடிச்ச சாதி முயலுக்கு  மூனு கால் என்று நிற்பது நாங்களோ அந்தச் சிறுவனோ அந்தச் சம்பவமோ அல்ல.. உங்களைப் போன்ற சிலரும்... ஊடக அவியலாளர்கள் என்ற போர்வையில் போனும் கையுமாக அலையும் சாதி வெறியர்களுமாகவே இருக்க முடியும்.

இதில் கோவில் நிர்வாகம் சொல்வதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு சிறுவர்கள் மத்தியில் சைவத்தை வளர்க்க கோவில்கள் அளிக்க வேண்டிய வகிபாகத்தையும் கருத்தில் கொண்டே இந்த விடயம் பங்குவாமகக் கையாளப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் தான் அந்தக் காணொளியை நூறு தடவை காண வேண்டும் அந்தச் சிறுவன் என்ன சொல்கிறான் என்பதை விளங்கிக் கொள்ள.

இங்கு தனக்குப் பிடிச்ச சாதி முயலுக்கு  மூனு கால் என்று நிற்பது நாங்களோ அந்தச் சிறுவனோ அந்தச் சம்பவமோ அல்ல.. உங்களைப் போன்ற சிலரும்... ஊடக அவியலாளர்கள் என்ற போர்வையில் போனும் கையுமாக அலையும் சாதி வெறியர்களுமாகவே இருக்க முடியும்.

இதில் கோவில் நிர்வாகம் சொல்வதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு சிறுவர்கள் மத்தியில் சைவத்தை வளர்க்க கோவில்கள் அளிக்க வேண்டிய வகிபாகத்தையும் கருத்தில் கொண்டே இந்த விடயம் பங்குவாமகக் கையாளப்பட வேண்டும்.

எங்களுக்கு ஒரு முறை பார்த்தாலே காணும், உங்களின் புரிதல் நன்றாக விளங்குகின்றது, நீங்கள் கல்லில் கூட நார் உரிக்க கூடிய மாதிரி எழுதக்கூடியவர் இதைக்கூடாவ திரிக்க மாட்டீர்கள். சிறுவனை 4-5 தடவைக்கு மேல் இப்படி நடந்த படியால் தான் இந்த நிலைக்கு வந்து முடிவெடுத்துள்ளான், அதையே புரித்து கொள்ள முடியாதவரா ஊடக தர்மத்தை விமர்சிக்கின்றீர்கள்

உங்களின் நிலை அவன் அப்படி அடங்கி போயிருக்கனும் அவர்களின் அடக்கு முறைக்கு.

கோவில் நிறுவாகம் இதில் கவனமாக வையளவில்லை, அவர்களிடம் எப்படி நீதியை ஏதிர்பார்க்க முடியும். ஊடகவியலார்கள் மீதன பார்வை.................. சாதி வெறியை சுட்டிக்காட்டுகின்றீர்கள். அவர்களால்தான் பல செய்திகளை உடனுக்குடன் அறிய முடிகின்றது. அவர்கள் சாதி வெறியர்கள் என்று எப்படி உங்களால் கருத முடிந்தது, இனி பிரதேசவாத்ததையும் கக்குவீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் தான் அந்தக் காணொளியை நூறு தடவை காண வேண்டும் அந்தச் சிறுவன் என்ன சொல்கிறான் என்பதை விளங்கிக் கொள்ள.

இங்கு தனக்குப் பிடிச்ச சாதி முயலுக்கு  மூனு கால் என்று நிற்பது நாங்களோ அந்தச் சிறுவனோ அந்தச் சம்பவமோ அல்ல.. உங்களைப் போன்ற சிலரும்... ஊடக அவியலாளர்கள் என்ற போர்வையில் போனும் கையுமாக அலையும் சாதி வெறியர்களுமாகவே இருக்க முடியும்.

இதில் கோவில் நிர்வாகம் சொல்வதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு சிறுவர்கள் மத்தியில் சைவத்தை வளர்க்க கோவில்கள் அளிக்க வேண்டிய வகிபாகத்தையும் கருத்தில் கொண்டே இந்த விடயம் பங்குவாமகக் கையாளப்பட வேண்டும்.

 

http://www.pagetamil.com/151894/

இதில போய் பார்க்கவும் காரைச்சி பிரதேச செயளாலர் ஜெயாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதிய பாரபட்சத்தால் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுப்புகிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது.
அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா,கசிப்பு, வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.இந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று 18-10-2020 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்ற வருகிறது. இதன்போது அங்கும் செல்லும் குறித்த சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குறித்த குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர். இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டு சென்றால் அதனை மூலஸ்தான சுவாமி அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமி அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த
பாராபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர் சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில்
ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் இவனது வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் இவனை போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆன்மிகத்தில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி
புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
எனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்

 

https://www.todayjaffna.com/213889

41 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் தான் அந்தக் காணொளியை நூறு தடவை காண வேண்டும் அந்தச் சிறுவன் என்ன சொல்கிறான் என்பதை விளங்கிக் கொள்ள.

இங்கு தனக்குப் பிடிச்ச சாதி முயலுக்கு  மூனு கால் என்று நிற்பது நாங்களோ அந்தச் சிறுவனோ அந்தச் சம்பவமோ அல்ல.. உங்களைப் போன்ற சிலரும்... ஊடக அவியலாளர்கள் என்ற போர்வையில் போனும் கையுமாக அலையும் சாதி வெறியர்களுமாகவே இருக்க முடியும்.

இதில் கோவில் நிர்வாகம் சொல்வதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு சிறுவர்கள் மத்தியில் சைவத்தை வளர்க்க கோவில்கள் அளிக்க வேண்டிய வகிபாகத்தையும் கருத்தில் கொண்டே இந்த விடயம் பங்குவாமகக் கையாளப்பட வேண்டும்.

 

Just now, உடையார் said:


குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்ற வருகிறது. இதன்போது அங்கும் செல்லும் குறித்த சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குறித்த குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர். இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டு சென்றால் அதனை மூலஸ்தான சுவாமி அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமி அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த
பாராபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர் சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில்

ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் இவனது வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் இவனை போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆன்மிகத்தில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி
புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை இப்படி ஒருவரை பாட மட்டும் நியமிப்பது சம்பளத்தில், இது நிர்வாகத்தின் திட்டமிட்ட செயல். இந்த செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் நிர்வாகம், அதற்கு வாக்காலத்து வாங்கும் உங்களை போன்றவர்களும்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான நீதவானின் திருவிளையாடல்!! சாதி வெறியால் மாணவனுக்கு அனுமதி மறுப்பு!

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது. அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா,கசிப்பு, வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.

இந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று 18-10-2020 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.


 
குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசை இடம்பெற்ற வருகிறது. இதன்போது அங்கும் செல்லும் குறித்த சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குறித்த குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர்.

இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டு சென்றால் அதனை மூலஸ்தான சுவாமி அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமி அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த பாராபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர் சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர்தான் பாடவேண்டும் எனவும்
தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் இவனது வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் இவனை போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆன்மிகத்தில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.


எனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

 

https://jaffna7.com/archives/4033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை இப்படி ஒருவரை பாட மட்டும் நியமிப்பது சம்பளத்தில், இது நிர்வாகத்தின் திட்டமிட்ட செயல். இந்த செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் நிர்வாகம், அதற்கு வாக்காலத்து வாங்கும் உங்களை போன்றவர்களும்தான்

நிச்சயமாக ஒருபோதுமே நியமிக்கப்படுவதில்லை.

அந்த நேரத்தில் இருப்பவர்களையே பா, பொருள், பயன் பாடுமாறும், கூறுமாறும்ம் கேட்கப்படும்.  

இப்படி பலவற்றில், எமது சமய கலாசார முறைகள் ஏறத்தாழ சம பிரதிநிதித்துவம், விட்டுக் கொடுத்தல்  மற்றும் ஜனநாய பண்புகளை கொண்டு இருக்கிறது. 

அப்படி நியமிக்கப்பட்டால், எவ்வாறு மற்றவர்களும் இடமளிப்பது, குறிப்பாக இளந்தலைமுறைக்கு, என்பதும் எழுத்தில் ஓழுங்குமுறையாக பிரசுரிக்கப்பட்ட இருக்க வேண்டும்.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மீண்டும் சாதிக் கொடுமையா? ஆலயம் ஒன்றில் நடந்த சம்பவம்!

கிளிநொச்சி மாவட்டம் பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது ஆலய நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

பொது ஆலயமாக குறிப்பிடப்படும் அந்த பிள்ளையாளர் ஆலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று 18-10-2020 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் குறித்த மாணவர் வீடியோ ஒன்றில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது நவராத்திரி பூசை இடம்பெற்றுவரும் நிலையில், தனது குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளபோதும், தம்மை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

தம்மால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டு சென்றால் அதனை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்காது வெளியில் உள்ள சுவாமிக்கே அணிவிப்பதுடன் ஆலயத்திற்குள் உள்ள மணியையும் அடிக்கவிடுவதில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தான் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது, தன்னை தேவாரம் பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் கவலைதெரிவித்துள்ளனர்.

சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் என குறித்த மாணவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர்தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர், இங்கு நிர்வாகம் எடுப்பதுதான் தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த கருத்தை மறுத்துள்ள குறித்த மாணவனின் பெற்றோர், தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்காலத்தில் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் சாதிய ரீதியான பாகுபாடுகள் ஒழிந்து காணப்பட்டபோதும் தற்போது அது மீண்டும் முளைவிடத் தொடங்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

https://samugammedia.com/eelam-caste-problem-in-kilinochchi/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.