Jump to content

தெஹிவளையில் வைத்து... ரிஷாட் பதியுதீன் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெஹிவளையில் வைத்து ரிஷாத் கைது | Athavan News

தெஹிவளையில் வைத்து.. ரிஷாட் கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

http://athavannews.com/தெஹிவளையில்-வைத்து-ரிஷாத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுக் காவலில் உள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

என்ன தல நீ ..
நித்தியானந்தாவின்  கைலாஷா லெவலுக்கு டப் கொடுத்து ஒரு காட்டு காட்டுவ 
என்று பார்த்தால் எங்க ஊரு கள்ள கசிப்பு பாக்கியம் அக்கா போல அவனுகளோட ஏரியாவிலேயே போய் மாட்டியிருக்க,
சுத்த வேஸ்ட்டுப்பா நீயி   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்ன தல நீ ..
நித்தியானந்தாவின்  கைலாஷா லெவலுக்கு டப் கொடுத்து ஒரு காட்டு காட்டுவ 
என்று பார்த்தால் எங்க ஊரு கள்ள கசிப்பு பாக்கியம் அக்கா போல அவனுகளோட ஏரியாவிலேயே போய் மாட்டியிருக்க,
சுத்த வேஸ்ட்டுப்பா நீயி   

 

அக்னியஷ்த்ரா....
இவர் எப்படியும்... கல்முனை,  காத்தான்குடி  பக்கம் ஒளித்திருப்பார்,
இவரை பிடிப்பது கஸ்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்க....
ஆள்... தெகிவளையிலை... ஒளிச்சு   நிண்டிருக்கிறார்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதியினர் கைது

DicksithOctober 19, 2020
 
rishad-bathiudeen.jpg

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தெகிவளை எபினேசர் பிளேஸில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், ஒரு மருத்துவர் மற்றும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெகிவளைக்கு வருவதற்கு முன்னர், எம்.பி. பதியுதீன் தஞ்சம் கோரிய மற்ற இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

எம்.பி. பதியுதீன் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

 

http://www.battinews.com/2020/10/blog-post_920.html

 

Link to comment
Share on other sites

இவரோட சேர்ந்து சில தமிழ் அரசியவாதிகள் எண்கள் நீண்டகால நலனுக்கு ஆப்பு வைக்கும் செயலில் ஈடுபடவை. அவை கட்டாயம் இவரை பிணையில் வெளியிலையெடுப்பினம்!

Link to comment
Share on other sites

ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது

ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் தெஹிவளை, எபனைஸ் கிளேஸ் பகுதியின் அடுக்குமாடி வீட்டு தொடரில் உள்ள வீடொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

 

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 19 , மு.ப. 06:42 - 0     - 335

AddThis Sharing Buttons

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன்,  தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து  பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரிஷாட் பதியுதீன் 6 நாட்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://tamil.adaderana.lk/news.php?nid=135365

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்துக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/92496

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன தல நீ ..
நித்தியானந்தாவின்  கைலாஷா லெவலுக்கு டப் கொடுத்து ஒரு காட்டு காட்டுவ 
என்று பார்த்தால் எங்க ஊரு கள்ள கசிப்பு பாக்கியம் அக்கா போல அவனுகளோட ஏரியாவிலேயே போய் மாட்டியிருக்க,
சுத்த வேஸ்ட்டுப்பா நீயி   

பாக்கியம் அக்காவை ரிசாத்துடன் ஓப்பிட்டமைக்கு, அக்காவின் விழுதுகள் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் படிஞ்சிட்டுது போல ...இரண்டு நாளில் பிணையில் வந்துடுவார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பாக்கியம் அக்காவை ரிசாத்துடன் ஓப்பிட்டமைக்கு, அக்காவின் விழுதுகள் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣

 பாக்கியம் அக்காவின் விழுதுகள் சார்பான கண்டனத்தை ஏற்றுக் கொண்டு பாக்கியம் அக்காவின் என்றும் பசுமையான நினைவலை ஒன்றை பதிவிடுகிறோம், கள்ளக் கசிப்பு விற்பதில் பெயர் போன அக்கா அதை போலிசுக்கே விற்றதில்
போலிசுக்கே மப்பேத்திய புலிகேசி என்று அன்போடு அழைக்கப்பட்ட அந்த சம்பவத்தை யாழில் பதிவேற்றி பெருமை கொள்ளும் அதே வேளை
பாக்கியம் அக்காவை சரியான நேரத்தில் முதன்மை படுத்தி, கண்டனத்தை பதிவு செய்ததற்க்காக கோசான் தலயை பாக்கியத்திற்கு வாக்கியம் தந்த புலிகேசி என்று அன்போடு அழைப்பதில்  யாழ் இரட்டை பெருமிதம் கொள்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 பாக்கியம் அக்காவின் விழுதுகள் சார்பான கண்டனத்தை ஏற்றுக் கொண்டு பாக்கியம் அக்காவின் என்றும் பசுமையான நினைவலை ஒன்றை பதிவிடுகிறோம், கள்ளக் கசிப்பு விற்பதில் பெயர் போன அக்கா அதை போலிசுக்கே விற்றதில்
போலிசுக்கே மப்பேத்திய புலிகேசி என்று அன்போடு அழைக்கப்பட்ட அந்த சம்பவத்தை யாழில் பதிவேற்றி பெருமை கொள்ளும் அதே வேளை
பாக்கியம் அக்காவை சரியான நேரத்தில் முதன்மை படுத்தி, கண்டனத்தை பதிவு செய்ததற்க்காக கோசான் தலயை பாக்கியத்திற்கு வாக்கியம் தந்த புலிகேசி என்று அன்போடு அழைப்பதில்  யாழ் இரட்டை பெருமிதம் கொள்கிறது

கோசான், பா.வா.த.பு என்று என் பெயருக்கு பின் போட்டு கொள்வதை விட எனக்கு இனி வாழ்நாளில் வேறு ஒரு பெருமை இல்லை என்பதை பணிவாக தெரிவித்து நன்றி பாராட்டுவதுடன், அக்காவின் அருமையை சொல்லும் ஒரு குட்டி கதையை நானும் சொல்லவிழைகிறேன்.

அக்கா காசு விடயத்தில் மிகவும் கறார் என்பது தெரிந்ததே, ஆனால் ஒரு நாள் மிச்சமாக போய்விட்டதே என்ற கடுப்பில் அக்கா ரெண்டு கிளாசை ஓவராக சாப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சமயம், அக்காவின் சங்க கடை கூப்பன் புத்தகம் தவறி கீழே விழுந்து விட்டதாம்.

அதை பார்த்து கொண்டிருந்த அக்காவின் விழுது ஒன்று, “அக்கா கூப்பன் புத்தகம் கீழே விழுந்து விட்டது” என சொல்ல, நின்று நிதானித்த (!) அக்கா, “பரவாயில்லை யாராவது பாவப்பட்டவர் எடுத்து பாவிக்கட்டும்” என்றபடி கடந்து சென்றராம்.

இவ்வாறான ஒரு ஏழை பங்காளி எங்கள் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கோசான், பா.வா.த.பு என்று என் பெயருக்கு பின் போட்டு கொள்வதை விட எனக்கு இனி வாழ்நாளில் வேறு ஒரு பெருமை இல்லை என்பதை பணிவாக தெரிவித்து நன்றி பாராட்டுவதுடன், அக்காவின் அருமையை சொல்லும் ஒரு குட்டி கதையை நானும் சொல்லவிழைகிறேன்.

அக்கா காசு விடயத்தில் மிகவும் கறார் என்பது தெரிந்ததே, ஆனால் ஒரு நாள் மிச்சமாக போய்விட்டதே என்ற கடுப்பில் அக்கா ரெண்டு கிளாசை ஓவராக சாப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சமயம், அக்காவின் சங்க கடை கூப்பன் புத்தகம் தவறி கீழே விழுந்து விட்டதாம்.

அதை பார்த்து கொண்டிருந்த அக்காவின் விழுது ஒன்று, “அக்கா கூப்பன் புத்தகம் கீழே விழுந்து விட்டது” என சொல்ல, நின்று நிதானித்த (!) அக்கா, “பரவாயில்லை யாராவது பாவப்பட்டவர் எடுத்து பாவிக்கட்டும்” என்றபடி கடந்து சென்றராம்.

இவ்வாறான ஒரு ஏழை பங்காளி எங்கள் அக்கா.

ஆரய்யா இந்தப் பாக்கியமக்கா? இவ்வளவு நாளும் எங்க இருந்தா இந்த மகராசி? 

(எங்கள் எல்லாருக்கும் மிகப் பரிச்சயமான "தமிழ் (ழர்) நாட்டுக் கட்சியொண்டில ஒரு சீற் எடுத்துக் கொடுக்கலாமெண்டு தான் கேட்டனான் :grin:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

ஆரய்யா இந்தப் பாக்கியமக்கா? இவ்வளவு நாளும் எங்க இருந்தா இந்த மகராசி? 

(எங்கள் எல்லாருக்கும் மிகப் பரிச்சயமான "தமிழ் (ழர்) நாட்டுக் கட்சியொண்டில ஒரு சீற் எடுத்துக் கொடுக்கலாமெண்டு தான் கேட்டனான் :grin:)

என்னது பாக்கியம் அக்கா யாரா? மீன்பாடும் தேன்னாட்டினை “நீர்வள” நாடாக ஆக்கியதே அக்காதான்🤣

தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து, மேட்டு குடிகள் மட்டுமின்றி அனைவருக்கும் அதை எடுத்துச் சென்ற ஒரு சோசலிஸ்ட் எங்கள் அக்கா🤣

அக்காதான் உண்மையான சம்பெயின் சோசலிஸ்ட்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

என்னது பாக்கியம் அக்கா யாரா? மீன்பாடும் தேன்னாட்டினை “நீர்வள” நாடாக ஆக்கியதே அக்காதான்🤣

தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து, மேட்டு குடிகள் மட்டுமின்றி அனைவருக்கும் அதை எடுத்துச் சென்ற ஒரு சோசலிஸ்ட் எங்கள் அக்கா🤣

அக்காதான் உண்மையான சம்பெயின் சோசலிஸ்ட்🤣

அக்காவை நாம் தமிழர் கட்சியுடன் லிங்க் பண்ண ஏதும் தகவல் இருக்குமா?
அக்காவிடம் கசிப்பு வாங்கி குடித்த யாரவது பின்பு நாம் தமிழருக்கு ஆதரவு 
கொடுப்பது போல ஏதாவது சின்ன பொறியாவது கிடைக்காதா?

என் போன்ற அறிவாளிகள் மட்டற்ற் மகிழிச்சி அடைய 
எதாவது? கிழக்கு மாகாணத்தில் யாராவது ஒருவர் தகவல் தந்தாலே போதும் 
பின்பு அவரது பெரியப்பா .. அவருடைய சிறிய மகன் சிநேகிதன் என்று 
நாம் மீதியை பார்த்து கொள்வோம்.. நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

அக்காவை நாம் தமிழர் கட்சியுடன் லிங்க் பண்ண ஏதும் தகவல் இருக்குமா?
அக்காவிடம் கசிப்பு வாங்கி குடித்த யாரவது பின்பு நாம் தமிழருக்கு ஆதரவு 
கொடுப்பது போல ஏதாவது சின்ன பொறியாவது கிடைக்காதா?

என் போன்ற அறிவாளிகள் மட்டற்ற் மகிழிச்சி அடைய 
எதாவது? கிழக்கு மாகாணத்தில் யாராவது ஒருவர் தகவல் தந்தாலே போதும் 
பின்பு அவரது பெரியப்பா .. அவருடைய சிறிய மகன் சிநேகிதன் என்று 
நாம் மீதியை பார்த்து கொள்வோம்.. நன்றி 

அக்காவின் நற்பெயரை கறையாக்க நான் விரும்பவில்லை🤣

சரி இந்த குத்துபாட்டை விடுங்கோ மருதர்.

நான் உங்கட கதைய கேட்டு உந்த ஸ்டொக் ஆராய்சில இறங்கீட்டன். திரி ஒண்ட திறவுங்கோவன்.

உண்மையாகதான் சொல்லுறன். யாழில் செலவழிக்கும் நேரத்தில் 10% யாவது பயனுள்ளவகையில் செலவழிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ஏதாவது ரேஸற்றுக்கு வேணும் தானே.யாமாயுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியம் அக்காவின் புகழ் அமெரிக்கா, லண்டன் என்று ஒங்கிபெருகுவதை பார்த்து  பேருவகை கொள்ளும் அதேவேளை  அக்காவின் சாதனைகளை  நேரடியாக பார்த்தும் கேட்டும் ரசித்தவன் என்ற முறையில்  அதனை யாழில் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடுள்ளவனாக நேர்மையாக  எனது சேவையை தொடர்வேன் என்பதை அக்காவின் கறள் புடிச்ச கசிப்பு கலன் மீது அடித்து  சத்தியம் செய்துவிட்டு அக்காவின் வரலாற்று குறிப்புகளை இங்கே செதுக்குகிறேன். 
அக்காவின் சாதனைப்பயணம் அவரது எட்டாம் வகுப்பு விஞ்ஞானப்புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது,
எட்டாம் வகுப்பையே மூன்று வருடங்கள் எம்பி எம்பி படித்த அக்காவிற்கு தெரிந்து விட்டது இனி ஏணி வைத்தாலும் படிப்பு நமக்கு எட்டாது என்று , இருந்தாலும் கற்ற கல்வி வீண் போகக்கூடாது என்று வெறித்தனமாக விஞ்ஞானப்புத்தகத்தை புத்தகத்தை புரட்டிய  போது அவரது பார்வை ஒரு படத்தின் மேல் குத்தி நின்றது , அதுதான் காய்ச்சி வடிக்கும் செயன்முறை ,  நியூட்டனுக்கு ஆப்பிளை பார்த்ததும் பொறி பிறந்ததை போல் அக்காவிற்கு காய்ச்சிவடிப்பை பார்த்ததும் விளங்கிவிட்டது இனிமேல் நம்முடைய எதிர்காலமே இதுதான் என்று ,
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காய்ச்சி வடிப்பில் பல சுட்சுமங்களை கண்டுபிடித்து  (பல்லி வால், பழைய இறதல் சைக்கிள் ரிம் போன்றவற்றை கனகச்சிதமாக மிக்ஸ் பண்ணி ) 
ஊரிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய  சுய தயாரிக்கப்பட்ட தொழில்முனைவோர்  (self made entrepreneur) ஆக மாறிப்போனார். 
சப்பட்டை , உருண்டைகளை கையில் இருபது ரூபாவை மட்டும் வைத்துக்கொண்டு எட்ட நின்று பார்த்து ஏங்கிய குடிமக்களை அக்கா வாரியணைத்து போதும் போதுமென்று மப்பேத்தினார் ,விடுமா இலங்கை காவல்துறை  முன்னே பெட்டிக்கடை பின்னே மப்புக்கடை என்று ஜரூராக நடந்த வியாபாரத்தில் ரெய்டு நடத்தி அக்காவின் சமூக சேவைக்கு முட்டு கட்டைபோட்டார்கள், ஜப்தி பண்ணிய கசிப்புபோத்தலில் ஒரு இரண்டு துளியை உள்ளே விட்ட போலீசார் அக்காவின் பார்முலாவிற்கு அடிமையாகிப்போய் முழுநேர வாடிக்கையாளராகிப்போன அதிசயங்களும் நடந்தன.

அக்காவின் கசிப்பு பார்முலா மேற்கூறியவைகளை தவிர்த்து வேறு எவ்வாறான குடும்ப,சமூக,பொருளாதார உட்கட்டுமான  அபிவிருத்திகளையும்  மருத்துவ,விஞ்ஞான துறைகளின்  வளர்ச்சிக்கு எவ்வாறு வழியேற்படுத்திக்கொடுத்தது  என்பதுடன் Corvid19 இற்கான உடனடி தற்காலிக  தீர்வில் இதனையும் ஒன்றாக கவனத்திலெடுக்க வேண்டிய அவசியத்தையும் வாசக நல்லுள்ளங்களின் ஆதரவை தொடர்ந்து அடுத்த பதிவில்  பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்  

தொடரும்  

Link to comment
Share on other sites

தலைமறைவாக 6 நாட்கள் இருந்த ரிஷாட்டை சி.ஐ.டி.யினர் நெருங்கியது எப்படி? ‘சிம்’ அட்டைதான் அவரைக் காட்டிக்கொடுத்ததா?

risad-ciourts.png6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புதிய கையடக்கத் தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதவிர, கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக்கிழமை வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

உறவினர் ஒருவரின் பெயரிலான சிம் அட்டையை அவர் பயன்படுத்துகின்றார் என்பதை விசாரணைகளின் போது அறிந்துகொண்ட சி.ஐ.டி.யினர், அந்த இலக்கம் எங்கிருந்து பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்த நிலையிலேயே ரிஷாட் மறைந்திருந்த வீட்டை நெருங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான பொலிஸார் அதிகாலை 3.00 மணியளவில் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்த போது ரிஷாட் கைது செய்யப்பட்டார்.

 

https://thinakkural.lk/article/81235

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

ஆரய்யா இந்தப் பாக்கியமக்கா? இவ்வளவு நாளும் எங்க இருந்தா இந்த மகராசி? 

(எங்கள் எல்லாருக்கும் மிகப் பரிச்சயமான "தமிழ் (ழர்) நாட்டுக் கட்சியொண்டில ஒரு சீற் எடுத்துக் கொடுக்கலாமெண்டு தான் கேட்டனான் :grin:)

முதல்ல உங்கள் முரளியின் கட்சியில் சேர்த்துவிடப்பாருங்கள் :grin:, அவருக்குதான் தண்ணி காணாதம் :grin:, எப்ப இருந்து இந்த ஆள் சேர்த்துவிடும் வேலை, நல்லாயிருக்கே😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

எட்டாம் வகுப்பையே மூன்று வருடங்கள் எம்பி எம்பி படித்த அக்காவிற்கு தெரிந்து விட்டது இனி ஏணி வைத்தாலும் படிப்பு நமக்கு எட்டாது என்று , இருந்தாலும் கற்ற கல்வி வீண் போகக்கூடாது என்று வெறித்தனமாக விஞ்ஞானப்புத்தகத்தை புத்தகத்தை புரட்டிய  போது அவரது பார்வை ஒரு படத்தின் மேல் குத்தி நின்றது , அதுதான் காய்ச்சி வடிக்கும் செயன்முறை ,  நியூட்டனுக்கு ஆப்பிளை பார்த்ததும் பொறி பிறந்ததை போல் அக்காவிற்கு காய்ச்சிவடிப்பை பார்த்ததும் விளங்கிவிட்டது இனிமேல் நம்முடைய எதிர்காலமே இதுதான் என்று ,
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காய்ச்சி வடிப்பில் பல சுட்சுமங்களை கண்டுபிடித்து  (பல்லி வால், பழைய இறதல் சைக்கிள் ரிம் போன்றவற்றை கனகச்சிதமாக மிக்ஸ் பண்ணி ) 
ஊரிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய  சுய தயாரிக்கப்பட்ட தொழில்முனைவோர்  (self made entrepreneur) ஆக மாறிப்போனார். 
சப்பட்டை , உருண்டைகளை கையில் இருபது ரூபாவை மட்டும் வைத்துக்கொண்டு எட்ட நின்று பார்த்து ஏங்கிய குடிமக்களை அக்கா வாரியணைத்து போதும் போதுமென்று மப்பேத்தினார்

Patentrecht – Missbrauch von geschützen Patenten kann teuer werden |  Bankenblatt Finanznachrichten

பாக்கியம் அக்கா.... எட்டாம் வகுப்பில் படித்ததை வைத்து,
உலகம் போற்றும், தொழிலதிபராக வந்தது... ஆச்சரியமாக உள்ளது. 

இவர் கண்டு பிடித்த... தொழில் ரகசியத்தை.. காப்புரிமம் (Patent) எடுத்து வைக்க வேண்டும்.
இல்லாவிடில்... சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் திருடி விடுவார்கள். :grin:

Link to comment
Share on other sites

ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி ? இதுவரைவெளிவராத புதிய தகவல்கள்

சிலோன் டுடே-

நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்ய்பபட்டார்.
அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன்தொடர்பைபேணுகின்றார், அவருடன் யார்யார் உள்ளனர்? அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன.

rishad-1-300x170.jpg
இந்த கள்ளன் பொலிஸ் விளையாட்டிற்கு காரணம் ரிசாத் அரசநிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும்.
ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் மக்களை வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பேருந்தில் அழைத்து செல்வதற்கு 233 பேருந்துகளிற்கு 9.5 மில்லியன் செலவிட்டதன் மூலம் அரசநிதியை தவறாக பயன்படுத்தினார் என்பதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தகவல்கள் உறுதியான பின்னர் சட்டமா அதிபரும் சிஐடியினரும் முன்னாள் அமைச்சரை கைதுசெய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என கோட்டை நீதவானை கேட்டுக்கொண்டனர்.எனினும் அவ்வாறான குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்வதற்கு பிடியாணை அவசியமில்லை, உரிய சட்ட கட்டமைப்புகளிற்குள் அவரை பிடியாணையின்றி கைதுசெய்யலாம் என நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை ரிசாத் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்,அவர் மாதம்பைக்கு அருகில் வந்துகொண்டிருந்தவேளை தனியார் வானொலியொன்றில் சிஐடியினர் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.

rishad-300x170.jpg
நடக்கப்போவது நல்லவிடயமில்லை என்பதை ரிசாத் உணர்ந்ததும் அவர் மாதம்பையில் வாழும் தனது கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை அழைத்து மாதம்பைக்கு வாகனமொன்றை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தவாகனம் வந்ததும் திட்டமிட்டபடி தனது வாகனத்திலிருந்து இறங்கி அந்த வாகனத்தில் ஏறி ரிசாத் தலைமறைவாகியுள்ளார்.
அவர்தனது கையடக்க தொலைபேசி இணைப்பையும் துண்டித்துள்ளார்.
ரிசாத்பதியுதீன் புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை ஏற்கனவே அறிந்த சிஐடியினர் அவரது வாகனத்தை பின்தொடர தீர்மானித்துள்ளனா,அவர்கள் ரிசாத்தின் வாகனத்தை பின்தொடர்ந்த போதிலும் கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு அவரது வாகனம் வந்தவேளை முன்னாள் அமைச்சர் அந்த வாகனத்திலிருந்து இறங்கவில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

risad-courts3-300x200.jpg
இதன் காரணமாக சிஐடியினரின் முயற்சி வெற்றிபெறவில்லை.
இதன் பின்னர் சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர் பிரசாத்ரணசிங்க ரிசாத்தினை கைதுசெய்வதற்காக ஆறு குழுக்களை ஈடுபடுத்தியுள்ளார்.
இவை அனைத்தும் சிஐடியின் இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றுள்ளன.
முதல்மூன்றுநாட்களும் பல சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு கட்டத்தில் ரிசாத்பதியுதீன் எங்கிருக்கின்றார் என்பதை சிஐடியினரால் கண்டுபிடிக்கவே முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
17ம் திகதி ரிசாத் பதியுதீனின் நெருங்கியசகாவொருவர் குறித்து சிஐடியினருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
அந்த நபரே ரிசாத் தொடர்பான சட்டவிடயங்களை கையாள்வதில் முக்கியமானவராக காணப்பட்டவர்.
அவரது தொலைபேசி உரையாடல்களை சிஐடியினர் ஆராய்ந்தவேளை சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்புகள் அந்த நபரின் தொலைபேசிக்கு வந்துள்ளதை சிஐடியினர் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியினர் அது வெல்லம்பிட்டி வெனவத்தையில் வசிக்கும் ஒருவருடையது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த நபரை 17ம் திகதி மாலை சிஐடியினர் கைதுசெய்துள்ளனர், அவர் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய சகா என்பதால் அவரை தொடர்ச்சியாக விசாரித்தவேளை சிஐடியினருக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து ரிசாத் பதியுதீன் மறைந்திருக்ககூடிய இடங்கள் சில சிஐடியினருக்கு தெரியவந்துள்ளன..
இந்த இடங்களில் சோதனையிடுமாறு சிஐடியினருக்கு தலைமை அதிகாரிகள் உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

risad-courts1-300x200.jpg
ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் ரிசாத் மறைந்திருக்ககூடிய இடங்கள் என சில பகுதிகளை துல்லியமாக சிஐடியினரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது, அந்த பகுதிகளில் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரிசாத்தின் நெருங்கிய சகாவொருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து ரிசாத் இறுதியாக கொழும்புகொகுவளையில் மறைந்திருந்ததை சிஐடியினர் அறிந்துள்ளனர்.
அதனைதொடர்ந்துஅவர்கள் களுபோவிலையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.
அந்த வீட்டிற்குள்நுழைந்த சிஐடியினர் முதலில் டியுசன் ஆசிரியரான வீட்டின் உரிமையாளரையும் மருத்துவரான அவரது மனைவியையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தனித்தனியாக விசாரணை செய்துகொண்டிருந்த அதேவேளை சிஐடியின் மற்றொருகுழுவினர் அந்த தொடர்மாடியை சோதனையிடும் நடவடிக்கையைஆரம்பித்துள்ளனர். அவ்வேளை சிசிடிவி கமராவில் தகவல்களை சேமிக்கும் டிஆர்வி முறை அகற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.
சிஐடியினர் தொடர்ந்து விசாரணைகளைமேற்கொண்டவேளை பதிலளிக்க முடியாத நிலைக்கு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அந்த வீட்டின் உரிமையாளர் உண்மையை தெரிவித்துள்ளார்.
ரிசாத் 13.14 15ம் திகதிகளில் எங்களுடன் இருந்தார், எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் சிசிடிவி கமராவை செயல் இழக்கச்செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆபத்துவந்தால் தான் தப்பிப்பதற்கான அந்த வீட்டின் உரிமையார் ரிசாத் தனது வீட்டிற்கு வந்தததை அருகில் உள்ள வீட்டின் சிசிடிவிகள் பதிவு செய்ததை அகற்றாமல் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
ரிசாத்பதியுதீன் தங்களுடன் மூன்று நாட்கள் இருந்தார் பின்னர் அவர் அட்டாளச்சேனை சென்றுவிட்டார். அக்கறைப்பற்றை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரே ரிசாத்தினை அழைத்து சென்றுள்ளார் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அந்த நபருக்கு தெகிவளையில் ஆடம்பர தொடர்மாடியொன்று உள்ளது அவர் ரிசாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிஐடியினர் அந்த தொடர்மாடியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நபரின் மூன்று பெண்பிள்ளைகள் அந்த வீட்டில் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டவேளை தங்கள்தந்தை அட்டாளைச்சேனைக்கு சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக அட்டாளச்சேனைக்கு சிஐடியினர் குழுவொன்று விரைந்துள்ளது.
அவர்கள் அட்டாளச்சேனையில் உள்ளஅந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன் ரிசாத்தின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முதலில் உண்மைகளை வெளிப்படுத்த தயங்கிய அவர் பின்னர் ரிசாத் எங்கிருக்கின்றார் என்பதை தெரிவித்துள்ளார்.
ரிசாத் தெகிவளை எபனேசர் பிளேசில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரிசாத்தினை கைதுசெய்வதற்கான இறுதி நடவடிக்கைகளை சிஐடியின் தலைமை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஆரம்பித்துள்ளனர்.
ஹக்கீம் என்ற நபரின் இல்லத்தில் ரிசாத் பதியுதீன் மறைந்திருக்கின்றார் என்ற தகவல் சிஐடியினருக்கு கிடைத்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு எபனேசர் பிளேசில் உள்ள வீட்டிற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்.

cid.jpg

அவர்கள் சிறிது நேரத்திலேயே ஹக்கீமின் வீட்டை கண்டுபிடித்துள்ளனர், 3.15அளவில் சிஐடியினர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் உள்ளே எவரும் இருப்பதற்கான அறிகுறிகள் முதலில் தென்படவில்லை என தெரிவித்துள்ள சிஐடியினர் 20 நிமிடங்களுக்கு பின்னர் எவரும் கதவை திறக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த பின்னர் கதவை உடைத்து உள்ளே வரப்போகின்றோம் என அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 3.35 அளவில் ரிசாத்பதியுதீனின் தனிப்பட்ட உதவியாளர் தமீஜ் கதவை திறந்துள்ளார், அவ்வேளை உள்ளே அறையிலிருந்த ரிசாத்தும் வெளியே வந்துள்ளார்.
நீங்கள் என்னை தேடுகின்றீர்கள் என்பது எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் என்னைஇப்படி கண்டுபிடிப்பீர்கள் என நினைக்கவில்லை என ரிசாத் தெரிவித்துள்ளார்

 

https://thinakkural.lk/article/81359

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்தை கைதுசெய்தமை மகிழ்ச்சி - ஞானசார

(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது எனத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை  பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரியது. அரசியல்  காரணிகளை விடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செயற்பட்ட வித்த்தை போன்றே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் நாட்டில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கி ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை போன்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

பயங்கரவாதி சாஹ்ரான் தொடர்பில் நல்லிணக்கத்தை விரும்பும் பாரம்பரிய முஸ்லிம்கள் ஞாயிறு ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்கள்.

அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதகளினால் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் இப்பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் பொதுபல சேனா அமைப்புக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

காத்தான்குடி பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்களே ஆரம்பத்தில் காணப்பட்டது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/92573

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.