Jump to content

ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்...

பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர்  19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு செய்தியாளராகப் பரிணமித்த அவர், தனது பணியில் காட்டிய கடமையுணர்விற்கும் நேர்மைப்பண்பிற்கும் வெகுமதியாக, கொலைஞர்கள் அவருக்கு மரணத்தைப் பரிசளித்துள்ளனர்.

பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்ட செய்தி தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த மனவேதனையையும் அளித்துவிட்டது.

கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள இராணுவத்தின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி அவலவாழ்வை அனுபவித்துவரும் யாழ்ப்பாணமக்களது துன்ப-துயரங்களையும் இந்த இராணுவ ஆட்சியை மூடிமறைக்க சிங்கள அரசு எடுக்கும் கண்துடைப்பு அரசியல் நடவடிக்கைகளையும் வெளிஉலகிற்கு அம்பலப்படுத்துகின்ற அரியபணியை நிமலராஜன் ஆற்றிவந்தார்.

தமிழ் – சிங்கள மொழிகளில் நல்ல தேர்ச்சிபெற்றிருந்த அவர் பி.பி.சியின் தமிழோசை மற்றும் அதன் சிங்கள மொழி ஒலிபரப்பான சந்தேசிய உட்பட வெளிநாட்டுத் தமிழ்வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளராக திறம்படப் பணியாற்றி- மக்களின் அபிமானத்தையும் பெற்றிருந்தார்.

கணீரென்ற வெண்கலக்குரலில் குடாநாட்டு நிலவரங்களை செய்தியாகத் தொகுத்து நிமலராஜன் வழங்கும் விதம் அலாதியானது. அவர் வழங்கும் செய்திகள் தகவல்கள் தெளிவுடன் இருக்கும். எந்தவிதமான பூடகத்தன்மைகளும் இல்லாது வெளிப்படையாக செய்திகளைக் கொடுப்பது அவர் கடைப்பிடிக்கும் தனித்துவமான பாணி. அவர் வழங்கும் செய்திக் கண்ணோட்டங்களில் நேர்மையான விமர்சனம் இருக்கும். குடாநாட்டு மக்கள் சந்திக்கும் அவலவாழ்வை அம்பலப்படுத்தும்போது அவரது குரலில் தார்மீகக் கோபம் கொப்பளிக்கும். அதுமட்டுமல்ல அவரது செய்திகளிலும்-அரசியல் கண்ணோட்டங்களிலும்-அம்பலப்படுத்தல்களிலும் தமிழ்த்தேசிய உணர்வு மையசக்தியாகத் திகழும். மக்களின் துன்ப-துயரங்களை எடுத்துக்கூறி, அவற்றிற்குக் காரணமானவர்களை சுட்டுவிரல் நீட்டி பகிரங்கமாகவே குற்றம் சுமத்தும்போது அவரது கருத்துக்கள் மௌனமாக உள்ள குடாநாட்டு மக்களது மனச்சாட்சியின் குரலாக ஓங்கி ஒலிக்கும்.

இவை காரணமாக நிமலராஜனுக்கு தமிழ்மக்கள் மத்தியில் பேரபிமானமும் சந்தேசியவின் சிங்கள நேயர்கள் மத்தியில் பிரபலமும், படையினர் மற்றும் அடிவருடிகள் மத்தியில் வெறுப்புணர்வும் இருந்து வந்தது.

சர்வதேச வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளராக நிமலராஜன் பணிசெய்யத் தொடங்கும் வரை குடாநாட்டு மக்களின் துயரவாழ்க்கை வெளி உலகிற்கு சரியாகத் தெரியவரவில்லை.

யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சிக்குப் பதிலாக சிவில் நிருவாகம் அமைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்றும், தமிழ்க்கட்சிகள் அங்கே ஜனநாயகமுறையில் அரசியல் வேலைத்திட்டங்களைத் தொடங்கிவிட்டன என்றும்; குடாநாடு புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செயப்படுகின்றது என்றும் சிங்கள அரசு வெளியிட்ட செய்திகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால், நிமலராஜனூடாக யாழ்ப்பாணத்தின் உண்மைநிலவரங்கள் படிப்படியாக வெளிவரத்தொடங்கின. படையினரின் அட்டூழியங்கள் அம்பலத்துக்கு வந்தன. தமிழ்க்குழுக்களின் அராஜகங்கள் வெளிக்கொணரப்பட்டன. சிங்கள அரசின் கண்துடைப்பு அரசியல் தோலுரித்துக்காட்டப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

ஆனையிறவுத்தள அழிப்புடன் தென்மராட்சிப் பகுதிக்குள் சண்டை பரவியபோது அங்கிருந்த மக்களின் உயிர்ப்பாதுகாப்பிற்காக இடம் பெயர்ந்து செல்லுமாறு புலிகள் இயக்கம் வேண்டுகோள்விடுத்தது. ஆனால் படையினர் தமது பாதுகாப்பிற்காக அம்மக்களை வெளியேறவிடாது தடுத்து அவர்களுக்கு ஒரு பேரழிவினை உண்டுபண்ண முயன்றபோது அம்மக்களின் நிலையை உலகறியச் செய்விப்பதற்காக உயிராபத்தையும் பொருட்படுத்தாது நிமலராஜன் நேரடியாகவே அப்பகுதிகளுக்குச் சென்றார். அந்த மக்களுடன் உரையாடி அங்கிருந்து நிலைமைகளை வானலைகளில் பரப்பி இராணுவத் தலைமைப்பீடத்தை நெளியவைத்து-சிங்கள அரசைச் சிக்கலுக்குள்ளாக்கினார்.

இவரது செய்திகளால் உத்வேகமடைந்த உலக மனிதஉரிமை அமைப்புக்கள் சிங்கள அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து மக்களின் சுதந்திரமான இடப்பெயர்வுக்கு வழிசமைத்தன.

X08NhYwFrZUgIUYcKWrk.jpg

 

தனி ஒருவனைக்கொண்ட படைபோல நிமலராஜன் தனித்துநின்று குடாநாட்டு நிலவரங்களை அம்பலப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கும்-அவர்களது அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துவந்தார்.

யாழ்ப்பாணத்தில் சாதாரண இளைஞர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, கொல்லப்பட்டவர் புலி உறுப்பினர் என படையினர் விளக்கம்சொல்லி செய்தி வெளியிடுவது வழமை. ஆனால், இராணுவத்தின் அந்தச் செய்தியையும் வானலைகளில் பரப்பி கொல்லப்பட்டவர் ஒரு மாணவர் அல்லது ஒரு அப்பாவி இளைஞன் என நிரூபணங்களையும் எடுத்துக்கூறி அது ஒரு மிலேச்சத்தனமான படுகொலை என உலகிற்கு நிமலராஜன் ஒப்புவிக்கும் விதம் அவரது செய்தி வழங்கும் பாணியின் தனிரகமானது.

இவைகாரணமாக படையினரின் எச்சரிக்கைகளுக்கும் – பயமுறுத்தல்களுக்கும் நிமலராஜன் பலதடவை உள்ளாகியிருந்தார்.

படையினரின் இரும்புப்பிடிக்குள் நடைபெறும் யாழ்ப்பாணத்தின் “ஜனநாயக அரசியலையும்” அதை நடாத்தும் தமிழ்க்குழுக்களின் அடாவடித்தனங்களையும் மிகத் தெளிவாகவே, அவர் உலகிற்கு எடுத்துக்கூறினார். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல்கூத்தில் தமிழ்க்கட்சிகள் குறிப்பாக ஈ.பி.டி.பியினர் தீவகத்தை ஒரு அடிமைத்தீவாக வைத்திருக்கின்றனர். அங்குள்ள மக்களை அடிமைகள் போல தம்விருப்பப்படி ஆட்டுவிக்கின்றனர் என விமர்சனம் செய்தார். படையினரின் பாதுகாப்பில் இந்தத் துரோகிகள் நடாத்தும் கேலிக்கூத்தான அரசியலை எள்ளிநகையாடி, நிமலராஜன் செய்திகளை வெளியிட்டார்.

இதனால் தமிழ்க்குழுக்களின் குறிப்பாக ஈ.பி.டி.பியினரின் கொலை மிரட்டல்களுக்கு இவர் உள்ளானார்.

எனினும், இந்தவகை மிரட்டல்களைக்கண்டு நிமலராஜன் தனது பணியில் தடுமாறவில்லை. தனி ஒருவனைக்கொண்ட படைபோல நிமலராஜன் தனித்துநின்று குடாநாட்டு நிலவரங்களை அம்பலப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கும்-அவர்களது அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துவந்தார்.

யுத்தகளத்திற்கு நேரடியாகச் சென்று போர்ச்செய்திகளைத் திரட்டும் பத்திரிகையாளர்கள் ஒருவகை. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் வசித்தபடி, ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுள் ஒருவராக இருந்துகொண்டே-அரசியல், இராணுவ நிலவரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் வேறோருவகையினர். முதல்வகைச் செய்தியாளர்களுக்குச் சாவு ஒருதடவைதான் வரும். ஆனால் அடுத்தவகைச் செய்தியாளர்கள் சாவை சதா சந்தித்தபடியே வாழ்க்கையை ஓட்டுவார்கள். நிமலராஜன் இந்தவகைச் செய்தியாளராகவே பணியாற்றினார். பலமுனைகளிலிருந்தும் சாவை சதா சந்தித்தபடியே-சாவுக்குப் பயப்படாது அவர் துணிச்சலுடன் பணியாற்றினார்.

ஒரு செய்தியாளன் என்ற நிலைக்கும் அப்பால்-குடாநாட்டுமக்களின் அவலவாழ்க்கையை துணிச்சலுடன் உலகிற்கு எடுத்துக்கூறும் ஒரு மக்கள் பிரதிநிதி போலவே நிமலராஜனின் செயற்பாட்டை தமிழ்மக்கள் கருதினர்.

அதனாலேயே, கொலைஞர்களின் குண்டுக்கு அவர் பலியானபோது குடாநாட்டு மக்கள் மட்டுமல்ல, தமிழீழ மக்கள் அனைவருமே தங்களது குரலை இழந்துவிட்டதுபோலத் துயரப்பட்டனர்.அவரது சாவுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டங்களை நடாத்தினர். அவரின் உயிரைப் பறித்த கொலைஞர்களைக் கண்டனம் செய்து-தமது கோபத்தை வெளிப்படையாகக் காட்டினர்.

குடாநாட்டுச் செய்தியாளராக நிமலராஜன் பணியாற்றிய காலம் தமிழ்மக்களால் என்றும் நினைவுகூரப்படும். நிமலராஜன் என்ற செய்தியாளனும் தமிழரின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் நிலையான இடத்தைப் பெறுவார்.

– விடுதலைப்புலிகள் (குரல்:96 ,ஐப்பசி, கார்த்திகை 2000) இதழிலிருந்து வேர்கள்…!

 

https://www.thaarakam.com/news/0b6cf61e-d8be-49f5-8332-aef9c0193080

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.