Jump to content

புதிய அனைத்துலக ஒழுங்கில் இந்துமா கடலின் முக்கியத்துவமும்ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அனைத்துலக ஒழுங்கில் இந்துமா கடலின்  முக்கியத்துவமும்ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பும்

 
120026761_628986894308908_42295381693183
 30 Views

1945ஆம் ஆண்டில் 2ஆவது உலகப் பெரும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அனைத்து உலக நாடுகளின் மன்றம் நிறுவப்பட்டது முதல் ஐக்கிய அமெரிக்கா அனைத்துலக பொருளாதார நிறுவனங்களையும், இருதரப்பு பிராந்திய பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளையும், தாராண்மைவாத அரசியல் விதிமுறைகளையும் கட்டி எழுப்பிப் பேணுதல் மூலம் தனது அனைத்துலகு குறித்த அக்கறைகளை வளர்த்து வந்தது. இந்த கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் கூட்டாக ‘அனைத்துலக ஒழுங்குமுறை’  என அழைக்கப்பட்டது.

அண்மைக் காலங்களில் வளரச்சியுற்றுள்ள உலக அதிகார மையங்கள் இந்த ‘அனைத்துலக ஒழுங்கு முறை’க்கு சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஆசியாவைப் பொறுத்த மட்டில் பனிப்போர் மூலம் சோவியத் இரஸ்சிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அமைப்பாண்மைகளை வலுவிழக்கச் செய்த அமெரிக்காவுக்குச் சீனமக்கள் குடியரசின் உலகப்  பொருளாதார மேலாண்மை புதிய சவால்களை; அனைத்துலக பொருளாதார முறைமைகளிலும், அனைத்துலகப் பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளிலும் ஏற்படுத்தி வருகிறது.

அதேவேளை, இந்தியத் துணைக் கண்டத்தில் இந்திய நடுவண் அரசின் அதிகார எழுச்சி  என்பது, ஒரு பெரும் நிலப்பரப்பின்  பிராந்திய மேலாண்மை என்ற தளத்திலிருந்து  தெற்காசிய நிலப்பரப்பின் வலுவாக மாறி, அதனையும் தாண்டி உலகச் சந்தையிலும், உலக அரசியலிலும் ஆசியா சார்ந்த மற்றொரு தீர்மானிக்கும் சத்தியாக-எழுச்சியாக உருவாகிய நிலைமையில் இந்தியா உலகநாடுகளின் மன்றத்தின் தீர்மானம் எடுக்கும் உரிமையிலும்; அதாவது அனைத்துலக நாடுகளின் மன்றத்தின்  பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் தன்னை உறுதிப்படுத்த முனைகிறது.

இந்நிலையில், இன்று உலக சமூகங்களையும், பொருளாதாரத்தையும், அரசியலையும், ஆன்மிகத்தையும் முற்றுமுழுதாக பத்து மாதத்தில் பந்தாடி முழு உலகையுமே நிச்சயமற்ற சமூக, பொருளாதார, ஆன்மீக அரசியல்  உலகாக கோவிட் – 19 மாற்றி நிற்கிறது.

இந்த ‘அசாதாரணத்தின் சாதாரணம்’  என்ற இக்கட்டான உலக வாழ்வியல் நிலைக்குள் உலக நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீகக் கட்டமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசரகாலநிலை காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

இந்த மறுசீரமைப்பில் சீனா ஏற்கனவே திட்டமிட்ட முறையில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் ஏற்படுத்தி வைத்துள்ள கடன் பொறிக்குள் உள்ள நாடுகள் சீனாவிடமே முழுதும் தங்கி நின்று நிதி உதவி பெற வேண்டிய இயல்புநிலை தோன்றியுள்ளதால், உலகின் புதிய வல்லாண்மையாக சீனா பேரெழுச்சி கொள்ளும் என்பது பலத்த எதிர்வு கூறலாக உள்ளது.

தனக்கு ஆசிய ஆபிரிக்க நாடுகள் வழியாக உலகச் சந்தை இணைப்பைத் தந்த தனது முன்னைய பட்டு வர்த்தகப் பாதையினை மீளவும் கடலிலும், தரையிலும் மீண்டும் தொடங்கும் சீனாவின் திட்டத்தால்  150 நாடுகளுக்குச் சீனா நிதிக்கடன் உதவிகளை பல்வேறு வழிகளில் செய்து; இன்று அவற்றின்  தேசிய வருமானங்களில் குறிக்கப்பட்ட வீதம் சீனாவுக்கு வட்டியாகவும், இறக்குமதிப் பொருட்களுக்கும் சேவைகளுக்குமான விலைகளாகவும் செலுத்தப்படும் புதிய நிலையை உருவாக்கியுள்ளதால், சீனா மேலும் மேலும் நிதிப்பலம் பெறும் என்பது வெளிப்படையான உண்மை.

இது இதுவரை உலக வல்லாண்மைகளாக, பிராந்திய மேலாண்மைகளாக இருந்து வந்த நாடுகளுக்குப் புதிய அரசியல் சவாலாக மாறியுள்ளது. இதனால் இன்று மீளவும் புதிய அனைத்துலக ஒழுங்குமுறை ஒன்றை அமெரிக்கா உருவாக்க வேகமாக முனைவதும் இயல்பாகிறது.

இந்த முயற்சியில் இந்துமா கடலின் முக்கிய தளமாக உள்ள இலங்கைக் கடற்பரப்பில் அகலக் கால் வைத்துள்ள சீனா, அதனை மேலும் வலுப்படுத்த இவ்வருட மார்ச் மாதத்தில்  500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியையும், அக்டோபர் மாதத்தில் கோவிட் கால உதவி நிதியமாக 90 மில்லியன் டொலர் உதவியையும் வழங்கி சிறீலங்கா அதனது இறையாண்மை ஒப்பந்தங்களாகப் பெற்ற படுகடன்களுக்கு வட்டிகூட கட்ட இயலாது வங்குரோத்தாகும் அபாயத்தில் இருந்து காப்பாற்றி; அதன் பின்னணியில் சிறீலங்காவை தனது கடன்பொறிக்குள் மேலும் அகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2010இல் சீனாவுக்கான படுகடன் வட்டியைக் கட்ட இயலாத நிலையில் மகிந்த ராஜபக்ச அரசு தவித்த போது, அம்பாந்தோட்டையில் கடலோர 15000 ஏக்கரை தனதாக்கி; அங்கு தனது எக்ஸ்ஈம் வங்கி (EXIM Bank) மூலம்  துறைமுகத்தின் முதலாம் பகுதியை அமைப்பதற்கு 361 மில்லியன் டொலரை முதலிட்டு கட்டியெழுப்பி,  அத்துறைமுகம் செயற்படத் தொடங்கியது முதல் அதில் தன்னாட்சியாக 85 வீதத்தைக் கொண்டு திகழ்கிறது.

இது தேவை ஏற்படும் காலங்களில் சீனா தனது போர்க்கப்பல்களை நிறுத்துவதை சிறீலங்காவின் இறைமையால் தடுக்க முடியாத நிலையினை ஏற்படுத்தி உள்ளதால், சிறீலங்காவை இறைமையும், தன்னாதிக்கமும் உள்ள தனிநாடாக; அனைத்துலக நாடுகளின் மன்றத்தில் உறுப்புரிமை உள்ளதாகக் கருத முடியுமா என்ற கேள்வியை 1956இற்குப் பின்னர் மீளவும் எழுப்பி உள்ளது.

1948 முதல் 1956 வரை பிரித்தானியக் கடற்படை திருகோணமலையில் கப்பல் நிறுத்தும் உரிமை கொண்டுள்ளது என இரஸ்சியா இலங்கைக்கான அனைத்துலக உறுப்புரிமையை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு இருமுறை தடுத்து நிறுத்தியது. மேலும் கொழும்பு நகர முதலீடுகளில் ஈடுபடும் சீனர் தலைநகரிலும் தனக்கான தன்னாட்சி வலயங்களை உருவாக்கி, இலங்கை அரசியலில் தான் தீர்மானம் எடுக்கும் சக்தியாக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இந்துமா கடல் மேலான அவற்றின் மேலாண்மைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில், தங்களது சந்தையினையும், இந்துமா கடல் மேலான மேலாண்மையையும் எவ்விதமாவது தக்கவைக்க வேண்டும் என்னும் நோக்கில் 55 பில்லியன் இறையாண்மை ஒப்பந்தங்களுடன் கூடிய படுகடன்களுக்கு ஆண்டொன்றுக்கு 2.9வீத தேசிய வருமானத்தை வட்டியாக வாரிவழங்கி மகிழ்ந்து கொண்டிருக்கும் ராஜபக்ச அரசினை நிதி மீட்பு செய்தாவது தங்கள் உறவையும், சிறீலங்காவுடன் வளர்ப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் பலவகைகளில் நிதி உதவிகளையும், கடன்களையும் தொடர்கின்றன. சீனாவின் கடனிலும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கான நிதிக் கடன்களிலும், இந்தியாவின் கலாச்சாரப் பேணுகைக் கடன்களிலும் கோவிட் – 19இற்குப் பின்னரான காலத்தைச் சிறீலங்கா தொடங்கியுள்ளது.

1948 முதல் இன்று வரை இலங்கைக்கு 2 பில்லியன் டொலர்களை நிதியளிப்புச் செய்துள்ள அமெரிக்கா, இன்று மில்லேனியம் சலஞ்ச் கோப்பரேசன் (மில்லேனிய சவால்களுக்கான கூட்டுறவு) நிதியம் என்னும் பெயரில் 480 மில்லியன் டொலர்களையும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கென 39 மில்லியன் டொலர்களையும்  கொடுத்து உதவுகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் அவர்கள் இந்தோ பசுபிக் கடல்வழிப் பாதுகாப்பு அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானது என வலியுறுத்தி, இலங்கையையும் அதில் இணைத்து சிறீலங்காக் கடற்படைக்கு வலுப் பயிற்சிகளை அளிக்கவும் இணங்கியுள்ளார். இந்தச் சூழலில் இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நாற்கூட்டு இணைப்பாக இந்துக் கடல் மேலான தனது மேலாண்மையை உறுதிப்படுத்த அமெரிக்கா எடுக்கும் இந்தோ பசுபிக் பாதுகாப்பு முயற்சிகளிலும், சிறீலங்கா கடற்படையினை இணைப்பதற்கான முயற்சிகளும் அமெரிக்காவால் தொடரும் என்பது உறுதியாகிறது.

இந்தியா 1987இல் இந்திய-இலங்கை உடன்படிக்கை வழியாக  ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு மிகக்குறைந்த தீர்வாக ஒற்றையாட்சியில் மட்டுப்படுத்தப்பட்ட  நில மற்றும் நிர்வாகப் பொலிஸ் அதிகாரங்களை உடைய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற தீர்வை சிறீலங்காவின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமாக அமைக்க வைத்து அந்தப் பின்னணியில் எந்தப் பாதுகாப்புப் பிரச்சினையை சிறீலங்கா சந்தித்தாலும், தன்னிடமே முதலில் உதவி கோர வேண்டும் என்ற கட்டுப்படுத்தல் மூலம் தனக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் இந்துமா கடல் மேலான மேலாண்மையையும் நெறிப்படுத்திக் கொண்டது.  ஆனால் இதுவரை நில மற்றும் பொலிஸ் அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கே மதிப்பளிக்காமல் தனது நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் பிரித்துக் கொண்ட சிறீலங்கா இந்திய-இலங்கை உடன்படிக்கையை எவ்வித அச்சமுமின்றி மீறியது.

இந்தியா தனது நெறிப்படுத்தல்களை சிறீலங்கா ஏற்காத நிலையிலும், இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான இவ்வாண்டு மெய்நிகர் உச்சிமாநாட்டில் தனது பிரதமர் நரேந்திர மோடி மூலம் புதிய அரசியலமைப்பு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தச் செய்தது. ஆயினும் அந்த உச்சி மாநாட்டில் எதைப் பேசினேன் என்பதையே தான் மறந்து விட்டதாகச் சிறீலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்சா அறிவித்துள்ளார். இது இந்தியாவை எதிர்க்கும், பகைக்கும் சிறீலங்காவின் உண்மைநிலையை மீளவும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய சூழலில், தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் தேசியத் தன்மையுடன் தங்களுக்கு இயல்பாகவே உள்ள இறைமையின் அடிப்படையிலான தன்னாட்சி உரிமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு அனைத்துலகப் பிரச்சினையாக உள்ள தங்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பதே இன்றுள்ள கேள்வி.

இந்துமா கடலை மையப்படுத்திய இன்றைய உலக வல்லாண்மை மற்றும் பிராந்திய மேலாண்மைப் பிரச்சினைகளில் ஈழத்தமிழர்கள் தம்முடைய இந்துமா கடல் மேலான ஆதிபத்திய இறையாண்மையையும் அதனை மதியாது ஈழத்தமிழர்களின் பிரதிநிதிதித்துவமின்றி நடாத்தப்படும் எந்த இந்துமா கடல் அமைதிக்கான அல்லது நடுநிலைக்கான முயற்சியும் பலனளிக்காது என்பதையும் உலக மக்களுக்கும், நாடுகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறாவிட்டால், சிறீலங்கா இந்துமா கடலைப் பேரப் பொருளாக்குவதைத் தடுக்க இயலாது என்பதையும், உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரமாக உள்ள இந்துமா கடலில் நடைமுறை தன்னாதிக்கம் செலுத்திய 1978 முதல் 2009 வரையான 31 ஆண்டு காலத்திலும் இந்துமா கடலில் வல்லாண்மைப் போட்டிகள் தவிர்க்கப்ட்டதையும், ஈழத்தமிழர்களின் இந்துக்கடல் மேலாண்மையின் பின்னடைவே இந்திய அமெரிக்கப் பிரச்சினைகளின் இன்றைய நிலைகளின் தொடக்கமாகவும்-தொடர்ச்சியாகவும் அமைகிறது என்பதையும் உலகுக்கு விளக்க வேண்டும். எந்த இறைமையும் மக்கள் சார்ந்ததே தவிர ,தேர்தல் வழி தெரிவான பிரதிநிதிகள் அதனைச் சரிவர நிறைவேற்றாத இடத்தில் அவ்விறைமை மக்களிடமே மீண்டு விடும் என்பதையும் உலக அரசியல் அறிவியல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அந்த வகையில், உலக நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு அளிக்கக் கூடிய சிறப்புப் பிரதிநிதித்துவம் வழியாகவே இன்றைய புதிய அனைத்துலக ஒழுங்குமுறை சிறப்படையும் என்பதை ஒற்றுமையாக ஓரணியில் தாயகத்திலும், உலகெங்கும் ஈழத்தவர் தங்கள் பலமே தமக்கான ஒரே பேரம் பேசும் ஆற்றலாக உள்ளது என்ற உணர்வுடன் எடுத்துரைக்க; வல்ல கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும். இதுவே ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான புதிய பலத்தை ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கும்.

– சூ.யோ. பற்றிமாகரன் –

https://www.ilakku.org/புதிய-அனைத்துலக-ஒழுங்கில/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.