Jump to content

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

-அனுதினன் சுதந்திரநாதன்   

இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள்  ஒழிந்திக்கின்றன.  

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.  

ஒட்டுமொத்தமாகப் பார்க்கின், சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோவொரு வகையில் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இத்தகைய இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு 77.7 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர், கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது மீளச்செலுத்தும் இயலுமையின் அடிப்படையில், கடன் நிலுவையின் அளவு மாறுபடக்கூடியதாக இருக்கும்.  

உண்மையில், கடனட்டைப் பயன்பாடு, பல்வேறு வகையில் நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டைச் சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால், அதுவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். 

எனவே, பல்வேறு தரப்பினரால் மோசமாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கடனட்டைகள் மூலம், அடைந்துகொள்ளக்கூடிய நலன்களையும் அதற்குப் பின்னால் ஒழிந்திருக்கக் கூடிய வணிக மூலோபாயங்களையும் பார்க்கலாம்.  

0% கடன் தவணைக் கொடுப்பனவு முறை 

கடனட்டைகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் மிக அதியுச்சமான நன்மைகளில் இதுவே முதன்மையானது. இலங்கையில் கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து, இந்தச் சேவையைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. 

இதன் மூலமாக, குறித்தவொரு பொருளை எந்தவித மேலதிக கட்டணமும் இல்லாமல் அல்லது, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மேலதிக கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, தொலைகாட்சியையோ, குளிர்சாதனப்பெட்டியையோ கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், நமது மாதாந்த சேமிப்பையோ, மாதாந்த வருமானத்தின் ஒருபகுதியையோ முழுமையாகச் செலவிட்டு, இந்தப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். 

ஆனால், இந்தக் கடன் தவணை கொடுப்பனவு முறை மூலமாக, வேறெந்த மேலதிக கட்டணமுமில்லாமல் உங்களுக்குத் தேவையான பொருள்களை, உங்கள் வருமானத்தில் சுமையற்ற வகையில் கொள்வனவு செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். சாதாரணமாக, நாம் கடனட்டைகளைப் பயன்படுத்தி, ஏதேனுமொரு பொருளைக் கொள்வனவு செய்து, அதற்கான மாதாந்தக் கட்டணத்தை, கடனட்டையில் பயன்படுத்திய பணத்தை மீளச்செலுத்த தவறின், அதற்காக அதிக வட்டிவீதத்தில், தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கும்.  

எனவே, கடனட்டை வழங்கும் நிறுவனத்தால், இப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது, இதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக, மிகப்பெரும் செலவீனங்களை மாதாந்தம் செலுத்தக்கூடிய Easy Monthly Installment (EMI) முறையாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு, மாதாந்தத் தவணைக் கட்டணமாக மாற்றிக்கொண்ட பின்பு, மாதம்தோறும் தவணைத்திகதி பிந்தாமல் பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இல்லையெனில், மீளவும் கடனட்டையின் மீளாக்கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.  

பண முற்பணவசதி 

கடனட்டைகளிலிருந்து உங்கள் அவசர தேவைகளுக்கு ATM வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம்! உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி, உங்கள் கடன் எல்லையின் அளவின் 50% அவசரதேவைகளின் போது, பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சேவை வரி, வட்டி வீதம் ஆகியவை அறவிடப்படுகின்றபோதும், அவை கடனட்டையில் செலவீனங்களைச் செய்கின்றபோது, அறவிடப்படும் வரி, வட்டிவீதங்களைப் பார்க்கிலும் சிறிது அதிகமாகும். 

எனவே, கடனட்டைகளை வீணாகப் பயன்படுத்தி, தேவையற்ற கடன்சுமையை ஏற்படுத்திக்கொள்வதை விட, இந்த வகையில் கடனட்டையை வினைதிறனாக் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  

பண ஊக்குவிப்புகள் 

தற்போதைய நிலையில், பல்வேறு கடனட்டை வழங்கும் நிறுவனங்களும் புதிதாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வழங்கிவரும் சலுகையாக இந்தப் பண ஊக்குவிப்பு முறை அமைந்துள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பிரபலமான இந்தத் திட்டமானது தற்போது இலங்கையிலும் பிரபலமாகி வருகின்றது. 

குறிப்பாக, நீங்கள் ஏதேனுமொரு கடையில் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளின் மொத்தப் பெறுமதியில், குறித்தவொரு சதவீதம் உடனடியாகவே மீளவும் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும். இதன்மூலமாக, குறித்த பொருளை குறைவான விலைக்கு வாங்க முடிவதுடன், உங்கள் கடனட்டையின் செலவீனங்களையும் குறைக்க முடியும். இந்த ஊக்குவிப்பு முறையானது, மேலே குறிப்பிட்ட வசதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பெறுபேற்றைக் கொண்டிருந்தாலும், இதன் மூலமாகவும் உங்கள் பணத்தைச் சேமிக்கக்கூடிய வசதிகள் உண்டு.  

இலவச பயணக் காப்புறுதிகள்

நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றபோது, உங்கள் விசாவைப் பெற்றுக்கொள்வது உட்பட, தற்பாதுகாப்புக்காகப் பயணக் காப்புறுதிகளை பெற்றுக்கொள்வதும்  அவசியமாகிறது. இதற்காகப் பயணமுகவர்களை அணுகும்போது, பெரும்தொகையை செலவீனமாகச் செலுத்த வேண்டி வரும். ஆனால், நீங்கள் கடனட்டை ஒன்றைக் கொண்டிருக்கும்போது, முதலில், உங்கள் கடனட்டை வழங்கும் நிறுவனத்திடம் உங்கள், இலவச பயணக் காப்புறுதி தொடர்பில் விசாரித்து கொள்ளுங்கள். தற்போது, பெரும்பாலான கடனட்டை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு கடனட்டை மூலமாக, இலவச வெளிநாட்டு காப்புறுதித் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்போது, உங்கள் விமானச்சீட்டை, குறித்த கடனட்டையைப் பயன்டுத்திக் கொள்வனவு செய்தாலே போதுமானதாகும். இதன்மூலமாக,வெளிநாட்டுப் பயணத்தின்போது, நீங்கள் மிகப்பெரும் தொகையைச் சேமித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.  

மேற்கூறியவை தவிரவும், கடனட்டைகளின் மேலதிக பயன்பாடு காரணமாக, குறித்தவொரு கடனட்டையில் நீங்கள் அதிக கடன்சுமையைக் கொண்டிருக்கின்றபோது, அதை மற்றுமொரு கடனட்டைக்குத் தவணைக் கட்டண முறை அடிப்படையில் மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உண்டு. இதன்போது, நீங்கள் கடனட்டைக்கு செலுத்தும் அதியுயர் வட்டிவீதத்திலும் பார்க்க, மிகக் குறைவான வட்டி வீதத்தையே செலுத்த வேண்டிவரும். 

கடனட்டை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே, நம்மில் பலருக்கு கடன், வட்டிவீதம், கடன்சுமை ஆகியவைதான் கண்ணெதிரே வந்துபோகும். ஆனால், இவற்றுக்கு அப்பால் கடனட்டைகளைச் சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. எதுவுமே, ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதுபோல, கடனட்டையின் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சினால், நம் கழுத்தையிறுக்கும் கடன்காரன்தான். எனவே, எல்லாவற்றையும் அளவுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   
 

http://www.tamilmirror.lk/வணிகம்/கடனட்டையில்-ஒழிந்திருக்கும்-நன்மைகள்/47-256651

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எந்த கடன் அட்டை அதிகம் புழக்கத்தில் உண்டு 
என்று யாராவது கூறுவீர்களா?

இலங்கை மத்திய வங்கி ஏதாவது சொந்த கடன் அட்டை அறிமுகம் செய்து இருக்கிறதா?
அல்லது விசா மாஸ்டர் கார்ட்  அமெரிக்கன் எஸ்பிரெஸ் போன்ற அமெரிக்க கடன் அட்டைகளின் 
பிரானித்துமாவாக இருக்கிறதா?

சீனாவின் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாக இருக்கிறது 
இன்று அமெரிக்க பெடரேல் பாங்க் டிஜிட்டல் டாலரை அறிமுகம் செய்ய 
போவதாக அறிவித்து இருக்கிறது.
நாம் வெகு விரைவில் டிஜிட்டல் பணத்துக்கு மாற  போகிறோம்
இந்தியா சொந்த டிஜிட்டல் கரன்சி உருவாக்கி தெற்காசியாவில் அறிமுகம் செய்தால் 
இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாக இந்த தலைப்பில் பார்க்கிறேன்.

சொல்வது உண்மையில் சரியானது...

உறவினர், நண்பர்களிடம் பல்லு இளிப்பதிலும் பார்க்க, இந்த கடன் மட்டையிடம் பல்லு இளிக்கலாம்.

நள்ளிரவு 12 மணிக்கு, ஒரு ATM போய் கூட, பணத்துடன் வந்துவிடலாம். ஒரு நண்பனை, உறவினரை எழுப்பவா முடியும்?

சரியாக கையாளுபவர்களுக்கு....மிகச்சிறந்த நண்பன். 👊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

-அனுதினன் சுதந்திரநாதன்   

இந்த அவசர உலகில், கடனுக்குப் பொருள்களையோ, சேவைகளையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை, நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், கடனட்டைப் பயன்பாடு, தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது. அப்படி, மாற்றம் பெற்றிருக்கும் கடனட்டை எனும் வில்லனுக்கு உள்ளும், சில நன்மைகள்  ஒழிந்திக்கின்றன.  

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காகக் கடனட்டையையோ வரவட்டையையோ பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.  

ஒட்டுமொத்தமாகப் பார்க்கின், சுமார் 18.4 மில்லியன் மக்கள் ஏதோவொரு வகையில் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இத்தகைய இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு 77.7 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர், கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது மீளச்செலுத்தும் இயலுமையின் அடிப்படையில், கடன் நிலுவையின் அளவு மாறுபடக்கூடியதாக இருக்கும்.  

உண்மையில், கடனட்டைப் பயன்பாடு, பல்வேறு வகையில் நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டைச் சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால், அதுவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். 

எனவே, பல்வேறு தரப்பினரால் மோசமாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கடனட்டைகள் மூலம், அடைந்துகொள்ளக்கூடிய நலன்களையும் அதற்குப் பின்னால் ஒழிந்திருக்கக் கூடிய வணிக மூலோபாயங்களையும் பார்க்கலாம்.  

0% கடன் தவணைக் கொடுப்பனவு முறை 

கடனட்டைகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் மிக அதியுச்சமான நன்மைகளில் இதுவே முதன்மையானது. இலங்கையில் கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து, இந்தச் சேவையைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. 

இதன் மூலமாக, குறித்தவொரு பொருளை எந்தவித மேலதிக கட்டணமும் இல்லாமல் அல்லது, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மேலதிக கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, தொலைகாட்சியையோ, குளிர்சாதனப்பெட்டியையோ கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், நமது மாதாந்த சேமிப்பையோ, மாதாந்த வருமானத்தின் ஒருபகுதியையோ முழுமையாகச் செலவிட்டு, இந்தப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். 

ஆனால், இந்தக் கடன் தவணை கொடுப்பனவு முறை மூலமாக, வேறெந்த மேலதிக கட்டணமுமில்லாமல் உங்களுக்குத் தேவையான பொருள்களை, உங்கள் வருமானத்தில் சுமையற்ற வகையில் கொள்வனவு செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும். சாதாரணமாக, நாம் கடனட்டைகளைப் பயன்படுத்தி, ஏதேனுமொரு பொருளைக் கொள்வனவு செய்து, அதற்கான மாதாந்தக் கட்டணத்தை, கடனட்டையில் பயன்படுத்திய பணத்தை மீளச்செலுத்த தவறின், அதற்காக அதிக வட்டிவீதத்தில், தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கும்.  

எனவே, கடனட்டை வழங்கும் நிறுவனத்தால், இப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது, இதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். இதன்மூலமாக, மிகப்பெரும் செலவீனங்களை மாதாந்தம் செலுத்தக்கூடிய Easy Monthly Installment (EMI) முறையாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு, மாதாந்தத் தவணைக் கட்டணமாக மாற்றிக்கொண்ட பின்பு, மாதம்தோறும் தவணைத்திகதி பிந்தாமல் பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இல்லையெனில், மீளவும் கடனட்டையின் மீளாக்கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வீர்கள்.  

பண முற்பணவசதி 

கடனட்டைகளிலிருந்து உங்கள் அவசர தேவைகளுக்கு ATM வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம்! உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி, உங்கள் கடன் எல்லையின் அளவின் 50% அவசரதேவைகளின் போது, பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சேவை வரி, வட்டி வீதம் ஆகியவை அறவிடப்படுகின்றபோதும், அவை கடனட்டையில் செலவீனங்களைச் செய்கின்றபோது, அறவிடப்படும் வரி, வட்டிவீதங்களைப் பார்க்கிலும் சிறிது அதிகமாகும். 

எனவே, கடனட்டைகளை வீணாகப் பயன்படுத்தி, தேவையற்ற கடன்சுமையை ஏற்படுத்திக்கொள்வதை விட, இந்த வகையில் கடனட்டையை வினைதிறனாக் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  

பண ஊக்குவிப்புகள் 

தற்போதைய நிலையில், பல்வேறு கடனட்டை வழங்கும் நிறுவனங்களும் புதிதாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வழங்கிவரும் சலுகையாக இந்தப் பண ஊக்குவிப்பு முறை அமைந்துள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பிரபலமான இந்தத் திட்டமானது தற்போது இலங்கையிலும் பிரபலமாகி வருகின்றது. 

குறிப்பாக, நீங்கள் ஏதேனுமொரு கடையில் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளின் மொத்தப் பெறுமதியில், குறித்தவொரு சதவீதம் உடனடியாகவே மீளவும் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும். இதன்மூலமாக, குறித்த பொருளை குறைவான விலைக்கு வாங்க முடிவதுடன், உங்கள் கடனட்டையின் செலவீனங்களையும் குறைக்க முடியும். இந்த ஊக்குவிப்பு முறையானது, மேலே குறிப்பிட்ட வசதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பெறுபேற்றைக் கொண்டிருந்தாலும், இதன் மூலமாகவும் உங்கள் பணத்தைச் சேமிக்கக்கூடிய வசதிகள் உண்டு.  

இலவச பயணக் காப்புறுதிகள்

நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றபோது, உங்கள் விசாவைப் பெற்றுக்கொள்வது உட்பட, தற்பாதுகாப்புக்காகப் பயணக் காப்புறுதிகளை பெற்றுக்கொள்வதும்  அவசியமாகிறது. இதற்காகப் பயணமுகவர்களை அணுகும்போது, பெரும்தொகையை செலவீனமாகச் செலுத்த வேண்டி வரும். ஆனால், நீங்கள் கடனட்டை ஒன்றைக் கொண்டிருக்கும்போது, முதலில், உங்கள் கடனட்டை வழங்கும் நிறுவனத்திடம் உங்கள், இலவச பயணக் காப்புறுதி தொடர்பில் விசாரித்து கொள்ளுங்கள். தற்போது, பெரும்பாலான கடனட்டை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு கடனட்டை மூலமாக, இலவச வெளிநாட்டு காப்புறுதித் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்போது, உங்கள் விமானச்சீட்டை, குறித்த கடனட்டையைப் பயன்டுத்திக் கொள்வனவு செய்தாலே போதுமானதாகும். இதன்மூலமாக,வெளிநாட்டுப் பயணத்தின்போது, நீங்கள் மிகப்பெரும் தொகையைச் சேமித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.  

மேற்கூறியவை தவிரவும், கடனட்டைகளின் மேலதிக பயன்பாடு காரணமாக, குறித்தவொரு கடனட்டையில் நீங்கள் அதிக கடன்சுமையைக் கொண்டிருக்கின்றபோது, அதை மற்றுமொரு கடனட்டைக்குத் தவணைக் கட்டண முறை அடிப்படையில் மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உண்டு. இதன்போது, நீங்கள் கடனட்டைக்கு செலுத்தும் அதியுயர் வட்டிவீதத்திலும் பார்க்க, மிகக் குறைவான வட்டி வீதத்தையே செலுத்த வேண்டிவரும். 

கடனட்டை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே, நம்மில் பலருக்கு கடன், வட்டிவீதம், கடன்சுமை ஆகியவைதான் கண்ணெதிரே வந்துபோகும். ஆனால், இவற்றுக்கு அப்பால் கடனட்டைகளைச் சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. எதுவுமே, ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதுபோல, கடனட்டையின் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சினால், நம் கழுத்தையிறுக்கும் கடன்காரன்தான். எனவே, எல்லாவற்றையும் அளவுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   
 

http://www.tamilmirror.lk/வணிகம்/கடனட்டையில்-ஒழிந்திருக்கும்-நன்மைகள்/47-256651

இதுவும் ஒரு வகை நுண் கடந்தான். 

கூடவே கிரெடிட் ஸ்கோர் என்பதன் மூலம் - கடனே இல்லாதவன்/வாங்காதவன் நம்பிக்கை வைக்க இலாயக்கு அற்றவன் என்ற கட்டமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

கிட்டதட்ட, புலி வாலை பிடித்த கதைதான். அதுவும் இலகுவாய் வரும் பணத்தை எடுத்து  வெத்து சீன் போடும் ஆக்கள் என்றால் - அதோ கதிதான். வாழ்கை முழுவதும் மினிமம் பேமண்டில் ஓடி விடும்.

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சாத்தான்களில் ஒன்றாக கடன்/கடன் அட்டையை ஆக்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் அதை வெட்டி ஆடுவதுதான் கேம். நாம் கடனை பாவிக்கிறோமா, கடன் நம்மை பாவிக்கிறதா என்பதுதான் கேம்.

ஒரு குறிப்பிட்ட அளவு வரை கிரெடிட் ஸ்கோரை ஏற்றி விட்டு, வீட்டு கடன் போன்ற பெரிய கடன்களையும் வாங்கி விட்டு, ஒண்டு அல்லது இரெண்டு நல்ல வட்டி வீதம் உள்ள அட்டைகளை மட்டும் வைத்து கொண்டு ஏனையவற்றை தலையை சுற்றி ஏறிந்தால் ஒரெளவுக்கு கேமை வெல்லலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இலங்கையில் எந்த கடன் அட்டை அதிகம் புழக்கத்தில் உண்டு 
என்று யாராவது கூறுவீர்களா?

இலங்கை மத்திய வங்கி ஏதாவது சொந்த கடன் அட்டை அறிமுகம் செய்து இருக்கிறதா?
அல்லது விசா மாஸ்டர் கார்ட்  அமெரிக்கன் எஸ்பிரெஸ் போன்ற அமெரிக்க கடன் அட்டைகளின் 
பிரானித்துமாவாக இருக்கிறதா?

சீனாவின் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாக இருக்கிறது 
இன்று அமெரிக்க பெடரேல் பாங்க் டிஜிட்டல் டாலரை அறிமுகம் செய்ய 
போவதாக அறிவித்து இருக்கிறது.
நாம் வெகு விரைவில் டிஜிட்டல் பணத்துக்கு மாற  போகிறோம்
இந்தியா சொந்த டிஜிட்டல் கரன்சி உருவாக்கி தெற்காசியாவில் அறிமுகம் செய்தால் 
இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.  

வீசா, மாஸ்டர்தான்.  எல்லா அரச, தனியார் வங்கிகளிலும் இருக்கிறது.

ஆனால் இன்னும் கிரெடிட் ரேட்டிங் வெளிநாடுகள் போல் ஒழுங்கமைவாக இல்லை. ஆகவே குறித்த அளவு வருமானம் உள்ளவர்களைதான் நம்பி கொடுக்கிறார்கள். 

டிஜிட்டல் கரன்சி இல்லாதபோதும், இங்கே யூகேயில் இப்போதே cashless economy பெரிய அளவில் உருவாகி விட்டது. 

தமிழர்கள்/தெற்காசியர்கள் மட்டையை ஆட்டையை போடுவதில் வல்லவர்கள் என்பதால் அவர்கள் கடையில் மட்டும்தான் காசை பாவிப்பேன்🤣

கொரொனா வைரஸ் வேறு காசில் அதிகம் வாழும் என்பதால் இது இன்னும் அதிகமாயுள்ளது.

நான் இந்த வருடம் தொடங்கியதில் இருந்து 5 தடவை அளவில்தான் காசை பயன்படுத்தி இருப்பேன், மிகுதி எல்லாமே cashless பரிவர்த்தனைகள்தான்.

 

யு எஸ் சில் எப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

வீசா, மாஸ்டர்தான்.  எல்லா அரச, தனியார் வங்கிகளிலும் இருக்கிறது.

ஆனால் இன்னும் கிரெடிட் ரேட்டிங் வெளிநாடுகள் போல் ஒழுங்கமைவாக இல்லை. ஆகவே குறித்த அளவு வருமானம் உள்ளவர்களைதான் நம்பி கொடுக்கிறார்கள். 

டிஜிட்டல் கரன்சி இல்லாதபோதும், இங்கே யூகேயில் இப்போதே cashless economy பெரிய அளவில் உருவாகி விட்டது. 

தமிழர்கள்/தெற்காசியர்கள் மட்டையை ஆட்டையை போடுவதில் வல்லவர்கள் என்பதால் அவர்கள் கடையில் மட்டும்தான் காசை பாவிப்பேன்🤣

கொரொனா வைரஸ் வேறு காசில் அதிகம் வாழும் என்பதால் இது இன்னும் அதிகமாயுள்ளது.

நான் இந்த வருடம் தொடங்கியதில் இருந்து 5 தடவை அளவில்தான் காசை பயன்படுத்தி இருப்பேன், மிகுதி எல்லாமே cashless பரிவர்த்தனைகள்தான்.

 

யு எஸ் சில் எப்படி ?

நான் கடந்த சில வருடமாக கார் கழுவுவதுக்கு மட்டுமே காசு பாவிப்பது உண்டு 
மற்றும்படி என்னிடம் காசு இருப்பதே இல்லை 
ஒரு முறை இரவு கார் ஒட்டிக்கொண்டு  இருக்கும்போது 
பெட்ரோல் முடிந்துகொண்டு இருந்தது சென்று க்ரெடிகார்டை போட்ட போது 
கார் வேலை செய்யவில்லை அடுத்த பெட்ரோல் ஸ்டேஷனுக்கு எனது காரில் 
இருந்த பெட்ரோலின் அளவு காணாது இருந்தது .. வேறு தெரிவு இருக்கவில்லை 
ஆதலால் ஓட தொடங்கினேன் ... நல்ல வேளையாக பொய் சேர்ந்தேன்.
அன்று இரவு நினைத்தேன் அவசரத்துக்கு ஒரு $20 என்றாலும் வைத்திருக்க வேண்டும் என்று 
இன்றுவரை நாய் சாக்கு எடுத்த கதைதான் இன்னமும் எடுத்து வைக்கவில்லை .

இங்கு நிறைய கொன்ஸ்ரபிரசி கதைகள் உண்டு ஆதலால் 
பலருக்கு இன்னமும் பேங்க் அக்கவுண்டே இல்லை ... வீணாக காசு கொடுத்து 
தமது சம்பள செக்கை காசு ஆக்குபவர்கள் கூட உண்டு. வங்கி கணக்கு இருப்பின் 
அது இலவசம். பெருத்த பணக்கார்களே லூசு கதைகளை நம்பி காசுகளை 
எடுத்து வந்து வீட்டில் வைப்பதும் உண்டு. 

அமெரிக்காவை ஒரு டெஸ்ட் லாப் போலவே பயன்படுத்தி வருகிறார்கள் 
முதலில் உலகில் அறிமுகம் செய்ய முன்னர் இங்கே பரிசோத்தித்து பலாபலனை 
அறிவதுக்கு. ஆகவே மக்களை மூடர்களாக வைத்த்திருக்க வேண்டிய ஒரு கட்டயாம் அரசுக்கு உண்டு 
ட்ரம்பின் அரசு கூட ஒரு பரிசோதனைதான் ...... இப்போ அவர்கள் எந்த எந்த ஏரியாவில் எவ்வளவு மூடர்கள்   
இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்து  அவர்களுக்கு ஏற்ற கதைகளை அவித்து கொட்டிக்கொண்டு 
இருப்பார்கள்.

இங்கு கடன் அட்டையால் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் வருமானம்  
ஆனால் எல்லாமே கொன்சுமருக்கு சாதகமாவே இருக்கிறது 
நான் $10-15 ஆயிரம் வரையில் கடன் அட்டையில் கடன் வைத்து இருக்கிறேன்  
15-24 மதம் வரை 0% இன்டெரெஸ்ட்டில் கடன் எடுக்கலாம் ஆதலால்தான் 
அதை வேறு வேறு வங்கிகளுக்கு மாற்றிக்கொண்டு இருப்பேன் வட்டி இல்லாத கடன் 
அதை வேறு வழியில் முதலீடு செய்துவிடுவேன். இதில் ஒரு நஷ்ட்டம் எனது கிரெடிட் ஸ்கோர் 
குறைந்து இருக்கும் கூடிய கடன் இருப்பதால் .... வீடு வாங்குவது என்றால் ஒரு நாலு மாதம் முன்பு 
எல்லாவற்றையும் கட்டி விடுவேன் க்ரெடிட் ஸ்கோரை ஏற்றுவதுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு 

உங்களுக்கு தேவையான நேரம் வங்கி கடன் தராது 
தேவை இல்லாத நேரத்திலதான் தருவார்கள் என்று 

அந்த தேவை இல்லாத நேரத்தை எமக்கு சாதகமாக 
நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

நான் கடந்த சில வருடமாக கார் கழுவுவதுக்கு மட்டுமே காசு பாவிப்பது உண்டு 
மற்றும்படி என்னிடம் காசு இருப்பதே இல்லை 
ஒரு முறை இரவு கார் ஒட்டிக்கொண்டு  இருக்கும்போது 
பெட்ரோல் முடிந்துகொண்டு இருந்தது சென்று க்ரெடிகார்டை போட்ட போது 
கார் வேலை செய்யவில்லை அடுத்த பெட்ரோல் ஸ்டேஷனுக்கு எனது காரில் 
இருந்த பெட்ரோலின் அளவு காணாது இருந்தது .. வேறு தெரிவு இருக்கவில்லை 
ஆதலால் ஓட தொடங்கினேன் ... நல்ல வேளையாக பொய் சேர்ந்தேன்.
அன்று இரவு நினைத்தேன் அவசரத்துக்கு ஒரு $20 என்றாலும் வைத்திருக்க வேண்டும் என்று 
இன்றுவரை நாய் சாக்கு எடுத்த கதைதான் இன்னமும் எடுத்து வைக்கவில்லை .

இங்கு நிறைய கொன்ஸ்ரபிரசி கதைகள் உண்டு ஆதலால் 
பலருக்கு இன்னமும் பேங்க் அக்கவுண்டே இல்லை ... வீணாக காசு கொடுத்து 
தமது சம்பள செக்கை காசு ஆக்குபவர்கள் கூட உண்டு. வங்கி கணக்கு இருப்பின் 
அது இலவசம். பெருத்த பணக்கார்களே லூசு கதைகளை நம்பி காசுகளை 
எடுத்து வந்து வீட்டில் வைப்பதும் உண்டு. 

அமெரிக்காவை ஒரு டெஸ்ட் லாப் போலவே பயன்படுத்தி வருகிறார்கள் 
முதலில் உலகில் அறிமுகம் செய்ய முன்னர் இங்கே பரிசோத்தித்து பலாபலனை 
அறிவதுக்கு. ஆகவே மக்களை மூடர்களாக வைத்த்திருக்க வேண்டிய ஒரு கட்டயாம் அரசுக்கு உண்டு 
ட்ரம்பின் அரசு கூட ஒரு பரிசோதனைதான் ...... இப்போ அவர்கள் எந்த எந்த ஏரியாவில் எவ்வளவு மூடர்கள்   
இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்து  அவர்களுக்கு ஏற்ற கதைகளை அவித்து கொட்டிக்கொண்டு 
இருப்பார்கள்.

இங்கு கடன் அட்டையால் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் வருமானம்  
ஆனால் எல்லாமே கொன்சுமருக்கு சாதகமாவே இருக்கிறது 
நான் $10-15 ஆயிரம் வரையில் கடன் அட்டையில் கடன் வைத்து இருக்கிறேன்  
15-24 மதம் வரை 0% இன்டெரெஸ்ட்டில் கடன் எடுக்கலாம் ஆதலால்தான் 
அதை வேறு வேறு வங்கிகளுக்கு மாற்றிக்கொண்டு இருப்பேன் வட்டி இல்லாத கடன் 
அதை வேறு வழியில் முதலீடு செய்துவிடுவேன். இதில் ஒரு நஷ்ட்டம் எனது கிரெடிட் ஸ்கோர் 
குறைந்து இருக்கும் கூடிய கடன் இருப்பதால் .... வீடு வாங்குவது என்றால் ஒரு நாலு மாதம் முன்பு 
எல்லாவற்றையும் கட்டி விடுவேன் க்ரெடிட் ஸ்கோரை ஏற்றுவதுக்கு 

£20 எடுத்து வைத்தால் மட்டும் போதாது அதை செலவழிக்காமலும் இருக்க வேணும்.  இல்லையெண்டால் தேவை படும் போது இராது. 

நான் இதற்கு ஒரு ஐடியா வைத்துள்ளேன். பொங்கலுக்கு அம்மாவின் கையால் £20 வாங்கி பேர்சில் உள் அடுக்கில் வைத்து விடுவேன். அதை அடுத்த பொங்கலுக்கு இன்னொரு £20 வைக்கும் வரை எடுப்பதில்லை. அவசர தேவைக்கு எடுத்தால் ஒழிய. 

யுனிக்காலத்தில் பத்து பவுண்டுக்கு அடித்துவிட்டுதான் ஓடுவது, அதுவும் பழைய கார், fuel gauge ஒழுங்கா வேலை செய்யாது. இடையில் ரெண்டு மூன்று தரம் நடு வழியில் நிண்டதும் உண்டு🤣

பிகருகளை ஏற்றும் போது மட்டும் கைகாவலாக £20 வரை அடித்து வைத்துகொள்வதுண்டு. கெத்து முக்கியம் அல்லவா🤣

Link to comment
Share on other sites

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.
 
சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்… அதைப்போல மோசமான ‘ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!
 கிரெடிட் கார்டு எதற்கு?

கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.

தற்போது இருக்கும் சூழ்நிலையில்… எப்போது பணம் தேவைப்படும், எவ்வளவு தேவைப்படும் என்பதை யெல்லாம் யாராலும் கணிக்க முடியாமல்தான் இருக்கிறது. ஒரு கடைக்குச் செல்கிறோம். ஆஃபர் மூலம் விற்பனை நடக்கிறது. இன்றே கடைசி நாள்… கையில் பணமி ல்லை. அந்தச் சமயத்தில் கிரெடிட் கார்டு கை கொடுக்கும். நண்பர், உறவினர் திருமணம்; பிறந்தநாள் போன்ற விழாக்கள்; அவசரமாக ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும்; எதிர்பாராத ஆஸ் பத்திரி செலவுகள்… இதுபோன்ற சூழ்நிலைகளில் ‘யாமிருக்க பயமேன்’ என கிரெடிட் கார்டு கை கொடுக்கும்.

ஒருவேளை இந்தச் செலவுகளுக்கு எல்லாம்  பணம் கையில் இருந்தால்கூட, கிரெடிட் கார்டு மூலம் வாங் குவது… சில வகைகளில் நன்மை தருவதாகவே இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் நாம் வாங்கும் பொரு ட்களுக்கு 45 நாள் முதல் 50 நாள் வரைக்கும் எந்தவிதமான வட்டியும் செலுத்தத் தேவையில்லை. உதார ணத்துக்கு… ஒவ்வொரு மாதமும் 30-ம் தேதி ‘பில்லிங் தேதி’ என்றால், ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு மே மாதம் 15 தேதி பணம் செலுத்தினால் போதுமானது. அதற்கான பணத்தை முன்கூட்டியே உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைத் திருந்து, சரியான தேதியில் செலுத்திவிடலாம். இந்த இடைப்பட்ட நாளில் நமது வங்கிக் கணக்கில் இருந்த பணத்துக்கு வட்டி (ஆண்டுக்கு 4 முதல் 6 சதவிகிதம் வரை) கிடைக்கும்.

இது மட்டுமல்ல… நமது இன்ஷூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம், வங்கிக் கடன்கள் உள்ளிட்டவற்றுடன் கிரெடிட் கார்டை இணை த்து விட்டால், எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நமது பொறுப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக் கும். சமயங்களில், கிரெடிட் கார்டுகளை பிரபலப்படுத்துவ தற்காக, கிரெடிட் கார்டு பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளில் குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை சம்பந் தப்பட்ட வங்கிகள் நமக்கே திருப்பிக் கொடுப்பார்கள்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்கும்போது 100 ரூபாய்க்கு ஒரு பாயின்ட் (ஒரு பாயின்ட் = ஒரு ரூபாய்) என்று நமக்கு பாயின்ட்டுகளை வழங்குவார்கள். இது வங்கிகளுக் கிடையே மாறுபடும். இவற்றை மீண்டும் பயன்படுத்தி நாம் பொருட்களை வாங்கலாம். அனைத்துச் செலவுகளை யும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும்போது, ஆண்டுக்கு 1,000 முதல் 2,000 பாயின்ட் கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். இது எல்லாமே… கிரெடிட் கார்டை கவனமாகவும், எல்லை மீறாமலும் பயன் படுத்தும் வரைதான். சிறிது பிசகினாலும் புதைகுழியில் சிக்கியது போல ஆகி விடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

கிரெடிட் கார்டு எப்போது எமனாகும்..?

கிரெடிட் கார்டு வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம், வங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்து கிறோம்… இப்படியே போய்க்கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட தேதியைக் கடந்துவிட்டால், நம் தலை கிரெடிட் கார்டு நிறுவனங்களின் பிடியில். முதலில் வங்கியில் இருந்து போன் வரும். குறைந்தபட்ச தொகையைக் கட்டச் சொல்வார்கள். அதாவது, பில் தொகையில் 5 சதவிகித்தை கட்டச் சொல்வார்கள். ‘50,000 பில் தொகை என்றால், 2,500 ரூபாய் கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்த லாம்’ என்று வங்கி தரப்பில் சொல்வார்கள். நீங்களும் ‘இது ஓ.கே-தானே..?!’ என்று மகிழ்ச்சியோடு 2,500 கட்டிவிடுகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?

மீதமுள்ள 47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும். மீண்டும், மீண்டும் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அது சிந்துபாத் கதைதான். கடன் எப்போது முடியும் என்று வங்கிக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. வட்டி மட்டுமல்லாமல்… லேட் பேமன்ட் அபராதமும் சேர்ந்து கொள்ளும்.

உங்கள் கார்டு லிமிட் 50,000 ரூபாய் என்றால், அதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று நினைக்கலாம். ஆனால், 50,000 ரூபாய்க்கு மேலேயும் செலவு செய்யலாம். இதற்கு ஒவர் லிமிட் சார்ஜ் என்று மாதத்துக்கு 3 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும்.

இந்தத் தகவல்கள் எல்லாம், கிரெடிட் கார்டு லிமிட் அறியாமல் பயன்படுத்தும் செலவாளிகளுக்கு செய்யும் எச்சரிக்கையே. தேவையைக் கருதி திட்டமிட்டு கிரெடிட் கார்டு உபயோகிக்கும் புத்திசாலிகளுக்கு அல்ல.

நீங்கள் எப்படி?!

கிரெடிட் கார்டு  சில அறிவுறுத்தல்கள்!

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார், நிதி ஆலோசகர் பத்மநாபன்.

 பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு எந்தவிதமான வருடாந்திர கட்டணங்களும் செலுத் தத் தேவை இருக்காது. சில கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டி இருக் கும். இன்னும் சில கார்டுகளில் வருடாந்திர கட்டணம் இருக்காது, ஆனால், வருட த்துக்கு குறைந் தபட்சம் இவ்வளவு ரூபாய் கார்டு மூலம் வாங்கி இருக்க வேண்டும் என்ற விதி இருக்கும். ஒப்பீட்டளவில் வங்கி, நிறுவனங்களை ஆராய்ந்து, அதன்பின் அவர்களிடம் கார்டு பெறவும்.

 கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, அதற்குப் பிரீமியம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்த்துவிடுங்கள். கார்டு புரொடக்ஷன் கட்டணம் என்று கட்ட ணம் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. கார்டு வாங்கும்போது எவ்விதமான கட்டணங்களும் இல்லை என்று உறுதி செய்த பிறகே வாங்குங்கள்.

 எக்காரணம் கொண்டும் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள். பணத்தை எடுத்த நாளில் இருந்து வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு 10,000 ரூபாய் எடுத்தால் 300 ரூபாய் மாதாந்திர வட்டியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

 செலவு செய்த தொகையை பணமாகச் செலுத்தினால்… ஒரு நாளைக்கு முன்பு செலுத்திவிடுங்கள், செக் என்றால் நான்கு வேலை நாட்களுக்கு முன்பு செலுத்திவிடுங்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலமாக டிரான் ஸ்ஃபர் செய்வதாக இருந்தால், 2 நாட்களுக்கு முன்பு செய்துவிடுங்கள். இல்லை யெனில், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

 சரியான தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்தத் தவறினால், மாதந்தோறும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்துவதைவிட, வாங்கிய கடனை மாதாந்திர இ.எம்.ஐ-ஆக மாற்றிக் கொள்வது சரியாக இருக்கும். இதற்கு 18 சதவிகித வட்டி செலுத்த வேண்டும்.

 கார்டைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். இரண்டு முறை பில் செய்ய வாய்ப்பிருக்கிறது. கார்டை தேய்த்த பிறகு கொடுக்கப்படும் ஸ்லிப்பை கவனமாக செக் செய்து கையெழுத்துப் போடவும். 100 ரூபாய்க்கு 1,000 ரூபாய் என்று மாற்ற நிறைய நேரம் ஆகாது. முடிந்த வரை கூடவே இருந்து கார்டை வாங்கி வரவும். ஸ்கிம்மர் மெஷினில் உங்கள் கிரெடிட் கார்டைச் செலுத்தி, டூப்ளிகேட் கார்டு தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

 ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள், எவ்வளவு செய்தீர்கள், எங்கு செய்தீர்கள் என்ற எஸ்.எம்.எஸ். வரும். ஒரு வேளை வராவிட்டால்… கஸ்டமர் கேர் செக்ஷனுக்கு போன் செய்து விசாரியுங்கள். மொபைல் நம்பரை மாற்றினால், தவறாமல் நிறுவனத்துக்குத் தகவல் சொல்லுங்கள்.

https://www.vidhai2virutcham.com/2012/03/31/கிரெடிட்-கார்டு-நன்மையு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 2000 இல் இருந்து பல ஆண்டுகள் 0% balance transfer மூலமாக வட்டி கட்டாமலே கடன்களைக் கட்டிமுடித்தேன். பல கடனட்டைகள் மாறி மாறிப் பாவித்ததால் எங்கே போகின்றது, வருகின்றது என்பதைப் பார்க்கவே விலாவாரியான macros எல்லாம் spreadsheet இல் தயாரித்து   budget ஐ கவனித்துக்கொண்டேன்😎

இப்போது ஒன்றிரண்டு கடனட்டைக்கு மேல் பாவிப்பதில்லை. ஒன்று ஒன்லைன் ஷொப்பிங் & ஹொலிடே. மற்றது வாராந்த ஷொப்பிங். தமிழ்க் கடைகளில் காசுதான் பாவிக்கின்றது. இந்த தமிழ்க்கடைகளுக்குப் போகாவிட்டால் காசில்லாமல் வெறும் கட்டனட்டையுடனும், Apple Pay, PayPal உடனும் இருக்கலாம்😀

வரவட்டை பணம் செலுத்த பாவிப்பதேயில்லை.  வரவட்டையை சுத்தினார்கள் என்றால் போற எங்கள் பணம் வந்து சேர ஆறுமாதம் பிடிக்கும்! ஆனால் கடனட்டையை சுத்தினால் அது கம்பனிக்காசு. அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடலாம்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இணைத்ததினால் தான் தமிழ்மிரர் கட்டுரைகள் படிக்கிறேன்.இப்படி பல நல்ல கட்டுரைகள் அங்கே வருகின்றது என்பது தெரிகிறது.

13 hours ago, Nathamuni said:

உறவினர், நண்பர்களிடம் பல்லு இளிப்பதிலும் பார்க்க, இந்த கடன் மட்டையிடம் பல்லு இளிக்கலாம்.

கவுரவமாக இருக்க உதவுகிற கடன் அட்டையின் பெரிய உதவி அது.

1 hour ago, கிருபன் said:

வரவட்டை பணம் செலுத்த பாவிப்பதேயில்லை.

வரவட்டை என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வரவட்டை என்றால் என்ன?

Debit card 

மேலே இணைத்த கட்டுரை மூலம்தான் அறிந்துகொண்டேன் 😀

19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்மிரர் கட்டுரைகள் படிக்கிறேன்.

அனுதினன் சுதந்திரநாதனின் கட்டுரைகள் மிகவும் தரமானவை, பயனுள்ளவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நானும் 2000 இல் இருந்து பல ஆண்டுகள் 0% balance transfer மூலமாக வட்டி கட்டாமலே கடன்களைக் கட்டிமுடித்தேன். பல கடனட்டைகள் மாறி மாறிப் பாவித்ததால் எங்கே போகின்றது, வருகின்றது என்பதைப் பார்க்கவே விலாவாரியான macros எல்லாம் spreadsheet இல் தயாரித்து   budget ஐ கவனித்துக்கொண்டேன்😎

இப்போது ஒன்றிரண்டு கடனட்டைக்கு மேல் பாவிப்பதில்லை. ஒன்று ஒன்லைன் ஷொப்பிங் & ஹொலிடே. மற்றது வாராந்த ஷொப்பிங். தமிழ்க் கடைகளில் காசுதான் பாவிக்கின்றது. இந்த தமிழ்க்கடைகளுக்குப் போகாவிட்டால் காசில்லாமல் வெறும் கட்டனட்டையுடனும், Apple Pay, PayPal உடனும் இருக்கலாம்😀

வரவட்டை பணம் செலுத்த பாவிப்பதேயில்லை.  வரவட்டையை சுத்தினார்கள் என்றால் போற எங்கள் பணம் வந்து சேர ஆறுமாதம் பிடிக்கும்! ஆனால் கடனட்டையை சுத்தினால் அது கம்பனிக்காசு. அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று இருந்துவிடலாம்☺️

நீங்கள் கிரிகெட்டுக்கே எக்செல் ஷீட் போடுகிற ஆளாச்சே🤣

ஆனால் உங்களை போல கட்டுப்பாடானவர்களுக்கு கடனட்டை வரப்பிர்சாதம்தான். தவிர நீங்கள் சொல்வது போல கடனட்டையில் அதிக நுகர்வோர் பாதுகாப்பும் உண்டு.

ஆனால் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு அது மிகபெரிய ஆப்பு.

எனக்கு சிலரை தெரியும். கடன் அட்டையில் 0% என்று போய் அதை மீளளிக்க தெரியாமல் அல்லது முடியாமல் பிறகு consolidation loan க்கு போய் அதை எடுத்து கடனட்டையை கட்டி விட்டு, அடுத்த மாதமே மீண்டும் கடனட்டையை லிமிட் வரை கொண்டு வந்து விடுபவகளை.

இப்படியானவர்களின் சம்பளம் அவர்களின் வங்கி கணக்குக்கு வந்து ஒரு ஹை, பை சொல்லி விட்டு அடுத்த நாளே ஏதோவொரு கார்ட் அல்லது லோன் கட்ட போய் விடும்.

கொஞ்ச காலம் இப்படி ஓட்டிவிட்டு பின் வேறு வழியில்லாமல் payday loan கம்பனிகளிடம் அல்லது தமிழ் கந்து வட்டி ஆட்களிடம் சரணடைந்து முடிவில் வங்குரோத்துத்தான்.

கடனட்டை

சிலருக்கு அழகான சட்டை

சிலருக்கு ரத்தம் உறுஞ்சும் அட்டை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

வர்த்தகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு 

உங்களுக்கு தேவையான நேரம் வங்கி கடன் தராது 
தேவை இல்லாத நேரத்திலதான் தருவார்கள் என்று 

அந்த தேவை இல்லாத நேரத்தை எமக்கு சாதகமாக 
நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Bank will lend you umbrella when the sun shine and takes away when it rains!

வங்கியியலில் பிரிட்டன் தான் முன்னோடி. பாங்க் ஒவ் இங்கிலாந்து தான் உலகின் முதலாவது மத்திய வங்கி என்பர்.

பணம் தரும் இயந்திரம் முதல் எல்லாமே இங்கு தான் முதலில் வந்தது.

மட்டையே இல்லாமல், வெறும் கையுடன் போய் பணத்தை எடுக்க முடியும் என்றால் நம்புவீர்களா? இங்கே முடியும். கையில் உள்ள போனுடனான இந்த தொழில் நுட்பத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு வித்தே பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

எனது கடனட்டை ஒன்றின் கிரடிட் லிமிட் முப்பத்திரெண்டாயிரம் பவுண்ஸ்.

வடக்கு இங்கிலாந்தில் வீடு ஒன்றை வாங்க பயன்படுத்தியதில்... அவயளுக்கு சந்தோசம்.

நன்றாக பாவித்தால், ஜம்பதாயிரம் வரை லிமிட் கூடலாம்.

இலங்கையில் அண்மையில் கிரடிட் ரெபரண்ஸ் ஏஜன்சி ஆரம்பித்து உள்ளனர். அதனை பாவிக்காமல் கடனட்டை, கடன் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கட்டுப்படுத்தி உள்ளது.

நுண்கடன் என ஏழைகளுக்கு கொடுத்து, வன்முறை மூலம் பணத்தை பறிப்பது அதிகரித்ததால், மங்கள, நிதியமைச்சராக இருந்த போது இது ஆரம்பித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் கிரிகெட்டுக்கே எக்செல் ஷீட் போடுகிற ஆளாச்சே🤣

 

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

 

நீங்கள் மலைப்பாம்பை, போட்டுத் தாக்குபவரா....சொல்லவே இல்லை! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

கட்டுப்பாடானவர்களுக்கு கடனட்டை வரப்பிர்சாதம்தான்

கட்டுப்பாடு இல்லாமல் இருந்ததால்தான் budget பார்க்கவேண்டிய நிலை வந்தது. 😊 ஆனால் இப்பவும் சூப் என்றால் M&S soup தான். Lidl, Aldi போன்ற இடங்களுக்குப் போவதில்லை என்று சொல்லி ஆஸ்த்திரிய/ஜேர்மன் நண்பர் கடுப்பேறியது மறக்கமுடியாது😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

Bank will lend you umbrella when the sun shine and takes away when it rains!

வங்கியியலில் பிரிட்டன் தான் முன்னோடி. பாங்க் ஒவ் இங்கிலாந்து தான் உலகின் முதலாவது மத்திய வங்கி என்பர்.

பணம் தரும் இயந்திரம் முதல் எல்லாமே இங்கு தான் முதலில் வந்தது.

மட்டையே இல்லாமல், வெறும் கையுடன் போய் பணத்தை எடுக்க முடியும் என்றால் நம்புவீர்களா? இங்கே முடியும். கையில் உள்ள போனுடனான இந்த தொழில் நுட்பத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு வித்தே பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

எனது கடனட்டை ஒன்றின் கிரடிட் லிமிட் முப்பத்திரெண்டாயிரம் பவுண்ஸ்.

வடக்கு இங்கிலாந்தில் வீடு ஒன்றை வாங்க பயன்படுத்தியதில்... அவயளுக்கு சந்தோசம்.

நன்றாக பாவித்தால், ஜம்பதாயிரம் வரை லிமிட் கூடலாம்.

இலங்கையில் அண்மையில் கிரடிட் ரெபரண்ஸ் ஏஜன்சி ஆரம்பித்து உள்ளனர். அதனை பாவிக்காமல் கடனட்டை, கடன் கொடுக்க முடியாது என மத்திய வங்கி கட்டுப்படுத்தி உள்ளது.

நுண்கடன் என ஏழைகளுக்கு கொடுத்து, வன்முறை மூலம் பணத்தை பறிப்பது அதிகரித்ததால், மங்கள, நிதியமைச்சராக இருந்த போது இது ஆரம்பித்தது.

கிரெடிட் ரெபிரென்ஸ் ஏஜெண்சிக்கு மருதங்கேணியில் இருக்கும் 
சுப்பண்ணையின் க்ரெடிட் விபரம் எப்படி தெரியும்?
மாத வருமானம் சம்பளம் ஏதாவது வங்கி ஒன்றுக்கு வந்தால் 
அதை அடிப்படையாக வைத்து கொடுக்கிறார்களா?
அல்லது வீடு காணி வாகனம் போன்ற சொத்துக்கள் இருக்கும் 
மதிப்பு எதையாவது வைத்து கொடுக்கிறார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் மலைப்பாம்பை, போட்டுத் தாக்குபவரா....சொல்லவே இல்லை! 🤔

அதெல்லாம் side dish தான். இப்பவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தது C ஒன்றுதான். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

அதெல்லாம் side dish தான். இப்பவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தது C ஒன்றுதான். 😁

அதில் தான் வேலை செய்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

 

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

 

https://www.mint.com/

https://get.quicken.com/money_management/?utm_medium=cpc&utm_source=google&utm_campaign=nb_usa_exact&gclid=CjwKCAjwlbr8BRA0EiwAnt4MTq2GcarSIJc33lA5NIw5kYxuItHDoCCXTuIN9njQ1vsWEwzzL1WD6hoCLNoQAvD_BwE

இங்கு இவ்வாறான ஒன்லைன் மேனேஜ் வசதிகள் உண்டு 
கடந்த 7-8 வருடமாக மின்ட் பாவித்து வருகிறேன் மிகவும் சுலபம் 
நாங்களே ஒரு பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கலாம் 
மாதம் 
பெட்ரோல் -$150 
கோப்பி -$100 
குரொசாரி -$400 
 என்று அது அண்ணளவாக லிமிட்டை எட்டும்போது அலெர்ட் பண்ணும் 
தவிர வார வாரம் சமரி செய்து வரவு செலவு கணக்கை அனுப்பும். 

இப்போ கடந்த இரு வருடமாக குய்க்கேன் பாவிக்கிறேன் 
அவர்கள் சாப்ட்வேர் பாவித்துதான்  வருடாந்த வரி செய்து வருவதால் 
அதில் பல நண்மைகள் உண்டு .... முழு செலவும் அதிலே பதிவாகி இருக்கும் 
வரிவிலக்கு உள்ள செலவுகளை ட்ராக் பண்ண மிக எளிதாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

கிரெடிட் ரெபிரென்ஸ் ஏஜெண்சிக்கு மருதங்கேணியில் இருக்கும் 
சுப்பண்ணையின் க்ரெடிட் விபரம் எப்படி தெரியும்?
மாத வருமானம் சம்பளம் ஏதாவது வங்கி ஒன்றுக்கு வந்தால் 
அதை அடிப்படையாக வைத்து கொடுக்கிறார்களா?
அல்லது வீடு காணி வாகனம் போன்ற சொத்துக்கள் இருக்கும் 
மதிப்பு எதையாவது வைத்து கொடுக்கிறார்களா? 

இந்தியா எவ்வளவு தான் முன்னேறிலும் வங்கியியல் முன்னேறாது என இலண்டன் வங்கிகள் வட்டாரத்தில் கணித்துள்ளனர்.

இலங்கை இந்த வங்கி சேவையியில் திறம்பட செயல்பட முடியும் என கணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கை பங்குச்சந்தையை, இலண்டன் பங்கு சந்தை வாங்கியுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ளவர்களை அடையாள அட்டை மூலம் கிரடிட் ரெபரன்ஸ் ஏஜன்சி கண்டு கொள்கிறது. ஆளடையாள திணைக்களம் நவீனமயமாகி உள்ளது.

மறுபுறம் இந்தியாவிலும் ஆதார் அட்டை வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் உங்களைப்போல ஐரி வேலை செய்யும் 
தமிழ் நண்பர்கள் அதெல்லாம் ஆபத்து ஹக்கேர்ஸ் ஒரு நாளைக்கு 
அதை க்ஹெக் செய்து எல்லா விபரமும் திருடிவிடுவார்கள் என்று 
பயம் ஓடிக்கொண்டு இருப்பார்கள் ...
நான் பாவித்துக்கொண்டுதான் இருக்கிறேன் 
தலையிடி குறைவு தவிர எங்களை கட்டுப்பாடாக வைத்திருக்க 
மிகவும் உதவியாக இருக்கிறது 

3 minutes ago, Nathamuni said:

இந்தியா எவ்வளவு தான் முன்னேறிலும் வங்கியியல் முன்னேறாது என இலண்டன் வங்கிகள் வட்டாரத்தில் கணித்துள்ளனர்.

இலங்கை இந்த வங்கி சேவையியில் திறம்பட செயல்பட முடியும் என கணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கை பங்குச்சந்தையை, இலண்டன் பங்கு சந்தை வாங்கியுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ளவர்களை அடையாள அட்டை மூலம் கிரடிட் ரெபரன்ஸ் ஏஜன்சி கண்டு கொள்கிறது. ஆளடையாள திணைக்களம் நவீனமயமாகி உள்ளது.

மறுபுறம் இந்தியாவிலும் ஆதார் அட்டை வந்துள்ளது.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அரசுக்கு தெரியாமலே 
மில்லியன் கணக்கில் மக்கள் வாழுகிறார்கள் 
எதை ஏன் இன்னும் திருத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

இங்கும் உங்களைப்போல ஐரி வேலை செய்யும் 
தமிழ் நண்பர்கள் அதெல்லாம் ஆபத்து ஹக்கேர்ஸ் ஒரு நாளைக்கு 
அதை க்ஹெக் செய்து எல்லா விபரமும் திருடிவிடுவார்கள் என்று 
பயம் ஓடிக்கொண்டு இருப்பார்கள் ...
நான் பாவித்துக்கொண்டுதான் இருக்கிறேன் 
தலையிடி குறைவு தவிர எங்களை கட்டுப்பாடாக வைத்திருக்க 
மிகவும் உதவியாக இருக்கிறது 

இங்கு வங்கிகளில் லீகல் ஹக்கேர்ஸ், நல்ல கொழுத்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.

படுபாவிகளுக்கு வேலையே.... மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

 

Python வராத காலத்தில் C இல் கஷ்டப்பட்டு string manipulation script எழுதி, அட இதெல்லாத்தையும் இலகுவாக Excel இல் செய்யலாம் என்று ஞானமடைந்து 20 வருடங்களாகிவிட்டன😜

 

எல்லாத்தையும் ஒரு வழியில் இலகுவாக்கி, மறுவழியில் இறுக்குவார்கள்.

இமெயில், வாய்ஸ் ஓவர் ஐபி, வீடியோ, இவை எதுவுமே என் தகப்பனார் காலத்தில் இல்லை. ஆனால் நானும் எனது தந்தையும் ஒரே வேலை பழுவையே சுமப்பதாக தெரிகிறது.

இந்த debt based economy கூட இப்படி ஒரு மாயைதான். 

கண்ணை மூடும் போது எமக்கு மிஞ்ச போவது நாக்கில் இனிக்கும் M&S சூப்பின் சுவை மட்டுமே🤣.

ஆனால் எமது அடுத்த சந்ததிகள் கொடுத்து வைத்தவர்கள். நமது கட்டுபாடு, முதலீடு, கடின உழைப்பு எல்லாவற்றையும் அவர்களுக்கு ஒரு springboard ஆக விட்டு செல்கிறோம். 

ஆனாலும்,

நிதி முகாமைத்துவம் ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். ஆனால் எந்த பாடசாலையிலும் இதை போதியளவு படிபிப்பதில்லை. 

எமக்கு ஊரில் இருந்த சேமிப்பு பழக்கம் கூட இங்கே பிள்ளைகளுக்கு இல்லை.

பல பிள்ளைகள் ஒரு வகை consumer culture இல் அள்ளுபட்டு போவபர்களாக, instant gratification தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  அந்த வயதுக்கு இது இயற்கைதான் (நாங்கள் வாங்காத நொகியா போனா🤣) என்றாலும் முறைசார் கல்வியில் பெற்றார் காட்டும் அதே அக்கறையை, நிதி முகாமைதுவம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

பிகு: M&S Calamari Squid டிரை பண்ணி பாருங்கோ நல்லா இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள்.  கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.