Jump to content

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதில் தான் வேலை செய்கிறீர்களா?

கான்ஸ்டபிளாக சேர்ந்து கான்ஸ்டபிளாகவே ரிட்டையர் ஆவது எல்லாம் கரீயர் முன்னேற்றம் என்று சொல்லமுடியாதல்லவா! அதனால் மேச்சலுக்குப் போய்விட்டேன்🤓

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடனட்டை (credit  card), செலவட்டை (debit card) இவற்றில், நுகர்வோர்  பாதுகாப்பு என்பது அரசாங்கம் கொண்டுவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தங்கி இருக்கிறது.

இதில்    செலவட்டை (debit card)  எந்த வொரு நுகர்வோர் பாதுகாப்பு சட்டதின் வரையறைக்குள்  இல்லை, UK ஐ பொறுத்தவரை. அநேகமான மேலை நாடுகளிலும் அதுவே நிலைமையாக இருக்கும்.

அனால், கடனட்டை   (credit  card), UK இன்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 75 ஆம் பிரிவால், சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது, ஓர் குறிப்பிட்ட அளவுக்கு (120 pounds என்றே இறுதியாக கண்டதாக நினைவு) மேல் ஒரு செலவீடாக இருக்கும் போது. இதை  போலவே  அநேகமான மேலை நாடுகளில் நிலைமை. 


கடன் அட்டையில், 0% balance  transfer என்பது பொதுவாக நுகர்வுக்காக, ஆனால் சில கடன் அட்டைகள் 0% money transfer உம் இருக்கிறது. 

மேற்கு நாடுகளில் கடனட்டை ஒரு போதுமே கடனில் சிக்க வைப்பதற்கான ஓர் பொறிமுறையாக கருதப்பட முடியாது. 

ஏனெனில்,நுகர்வோர் பாதுகாப்பு, பொறுப்பான கடன் வழங்கல், வாடிக்கையாளரை நியாமான முறையில் நடத்துவது, மற்றும் எதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் கடன் செலுத்த முடியாமல் போனாலும், கடன் அறவீட்டைம், வாடிக்கையாளரையும் நியாமான முறையில் அணுகுவது போன்ற நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்ட அடிப்படையில் இருப்பதனால். மற்றும், மீள் செலுத்தப்படாத நுகர்வு  கடனின் (அதாவது அறுதியற்ற கடன்)  காலாவதியாகும் (statue barred) வரையறுக்கப்பட்ட காலம் போன்றவை.   

ஆனாலும், இவை எல்லாமே சட்ட  அடிப்படையில் ஆக்கப்பட்டதற்கான காரணம், நுகவோரோ அல்லது வாடிக்கையாளர் பற்றிய  முதற்கரிசனை அல்ல.

இது கடன் (debt) என்பதை தொழிற்துறையாக (industry) அறிமுகப்படுதுவதற்காக.    

கணக்கிலியல் மற்றும் சட்ட அடிப்படையிலும், நுகர்வோருக்கு கடன் (unsecured lending), வங்கிகளுக்கு asset. நீங்கள் கையெழுத்து வைக்கும் பத்திரம் (அதாவது கடன் உடன்பாட்டு பத்திரம்) (contract), சட்ட அடிப்படையில் மற்றும் வரையறைக்குள் (அதாவது statue barring period) வங்கிகளுக்கு lending security ஆகும்.  

அதாவது நுகர்வு கடன்    சட்ட அடி ப்படையில்  மற்றும் கால வரையறைக்குள், recourse கடன் ஆகும். அதற்கு அப்பால், non-recourse கடன் ஆகும். இதனால், கடன் ஒரு போதுமே இல்லாமல் போகாது, records இல் இருந்து மட்டுமே அகற்றப்படும்.  

உண்மையில், ஒரு போதுமே கடன் வழங்கப்படுவதில்லை. வங்கிகள் கடன் பெறுபவரிடம் இருந்து securities ஐ வங்குவதே உண்மையாக நடப்பது.  முன்பே வங்கிகள், வீட்டுக் கடன் (mortgage) பற்றி எழுதும் போது சொல்லியவை எல்லாமே கடனட்டைக்கும் பொருத்தும். 

நான் இதை விளங்கப்படுத்வத்தை விட, கேளே உள்ள யூடுபே வீடியோ நன்றாக விளங்கப்படுத்துகிறது. 

இங்கே கிரெடிட் கார்ட் மூலமாக, அசையா சொத்தை  வாங்கியதாக ஓர் பதிவாளர் குறிப்பிட்டு உ ள்ளார். அதை, இங்கு உதாரணம்  மட்டும் ஆக எடுத்து, அது சட்ட அடிப்படையில் எத்தகைய நுகர்வாக கருதப்படும் என்பதை விளங்கி கொள்ளலாம்.    
 

 

 

1 hour ago, goshan_che said:

நிதி முகாமைத்துவம் ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். ஆனால் எந்த பாடசாலையிலும் இதை படிபிப்பதில்லை. 

எமக்கு ஊரில் இருந்த சேமிப்பு பழக்கம் கூட இங்கே பிள்ளைகளுக்கு இல்லை.

பல பிள்ளைகள் ஒரு வகை consumer culture இல் அள்ளுபட்டு போவபர்களாக, instant gratification தேடுபவர்களாக இருக்கிறார்கள்.  அந்த வயதுக்கு இது இயற்கைதான் (நாங்கள் வாங்காத நொகியா போனா🤣) என்றாலும் முறைசார் கல்வியில் பெற்றார் காட்டும் அதே அக்கறையை, நிதி முகாமைதுவம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

ஆம், இதை அவரகள் ஓர் idea ஐ அண்ணளவாக புரிந்து கொள்ளும் வயதில் இருந்து ஆரம்பித்தேன். இப்போது அவர்களே  economics, banking, wealth generation போன்றவற்றில் இருக்கும் பிரச்னைகள், நெழிவு சுவுகளை ஆசானுக்கு வாதம் புரியும் அளவு வந்து விட்டார்கள், பாடசாலை இன்னும் முடிக்கவில்லை ஆயினும். ஆகவே படிப்படியாக சொல்லிக்கொடுத்தால், அநேகமாக எல்லா இளந்தலைமுறையும் இந்த அறிவை பெரும், வளர்க்கும்.

இதை இங்கே யாழ் இலும் பல தடவை சொல்லி இருந்ததேன். எவர் வாசித்தார்களோ தெரியவில்லை. 

உண்மையில், கடன், வீட்டுக் கடன் எல்லாமே தன்மையில் மோசடியானவை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

கடனட்டை (credit  card), செலவட்டை (debit card) இவற்றில், நுகர்வோர்  பாதுகாப்பு என்பது அரசாங்கம் கொண்டுவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தங்கி இருக்கிறது.

இதில்    செலவட்டை (debit card)  எந்த வொரு நுகர்வோர் பாதுகாப்பு சட்டதின் வரையறைக்குள்  இல்லை, UK ஐ பொறுத்தவரை. அநேகமான மேலை நாடுகளிலும் அதுவே நிலைமையாக இருக்கும்.

அனால், கடனட்டை   (credit  card), UK இன்  நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 75 ஆம் பிரிவால், சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது, ஓர் குறிப்பிட்ட அளவுக்கு (120 pounds என்றே இறுதியாக கண்டதாக நினைவு) மேல் ஒரு செலவீடாக இருக்கும் போது. இதை  போலவே  அநேகமான மேலை நாடுகளில் நிலைமை. 


கடன் அட்டையில், 0% balance  transfer என்பது பொதுவாக நுகர்வுக்காக, ஆனால் சில கடன் அட்டைகள் 0% money transfer உம் இருக்கிறது. 

மேற்கு நாடுகளில் கடனட்டை ஒரு போதுமே கடனில் சிக்க வைப்பதற்கான ஓர் பொறிமுறையாக கருதப்பட முடியாது. 

ஏனெனில்,நுகர்வோர் பாதுகாப்பு, பொறுப்பான கடன் வழங்கல், வாடிக்கையாளரை நியாமான முறையில் நடத்துவது, மற்றும் எதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் கடன் செலுத்த முடியாமல் போனாலும், கடன் அறவீட்டைம், வாடிக்கையாளரையும் நியாமான முறையில் அணுகுவது போன்ற நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்ட அடிப்படையில் இருப்பதனால். மற்றும், மீள் செலுத்தப்படாத நுகர்வு  கடனின் (அதாவது அறுதியற்ற கடன்)  காலாவதியாகும் (statue barred) வரையறுக்கப்பட்ட காலம் போன்றவை.   

ஆனாலும், இவை எல்லாமே சட்ட  அடிப்படையில் ஆக்கப்பட்டதற்கான காரணம், நுகவோரோ அல்லது வாடிக்கையாளர் பற்றிய  முதற்கரிசனை அல்ல.

இது கடன் (debt) என்பதை தொழிற்துறையாக (industry) அறிமுகப்படுதுவதற்காக.    

கணக்கிலியல் மற்றும் சட்ட அடிப்படையிலும், நுகர்வோருக்கு கடன் (unsecured lending), வங்கிகளுக்கு asset. நீங்கள் கையெழுத்து வைக்கும் பத்திரம் (அதாவது கடன் உடன்பாட்டு பத்திரம்) (contract), சட்ட அடிப்படையில் மற்றும் வரையறைக்குள் (அதாவது statue barring period) வங்கிகளுக்கு lending security ஆகும்.  

அதாவது நுகர்வு கடன்    சட்ட அடி ப்படையில்  மற்றும் கால வரையறைக்குள், recourse கடன் ஆகும். அதற்கு அப்பால், non-recourse கடன் ஆகும். இதனால், கடன் ஒரு போதுமே இல்லாமல் போகாது, records இல் இருந்து மட்டுமே அகற்றப்படும்.  

உண்மையில், ஒரு போதுமே கடன் வழங்கப்படுவதில்லை. வங்கிகள் கடன் பெறுபவரிடம் இருந்து securities ஐ வங்குவதே உண்மையாக நடப்பது.  முன்பே வங்கிகள், வீட்டுக் கடன் (mortgage) பற்றி எழுதும் போது சொல்லியவை எல்லாமே கடனட்டைக்கும் பொருத்தும். 

நான் இதை விளங்கப்படுத்வத்தை விட, கேளே உள்ள யூடுபே வீடியோ நன்றாக விளங்கப்படுத்துகிறது. 

இங்கே கிரெடிட் கார்ட் மூலமாக, அசையா சொத்தை  வாங்கியதாக ஓர் பதிவாளர் குறிப்பிட்டு உ ள்ளார். அதை, இங்கு உதாரணம்  மட்டும் ஆக எடுத்து, அது சட்ட அடிப்படையில் எத்தகைய நுகர்வாக கருதப்படும் என்பதை விளங்கி கொள்ளலாம்.    
 

 

 

ஆம், இதை அவரகள் ஓர் idea ஐ அண்ணளவாக புரிந்து கொள்ளும் வயதில் இருந்து ஆரம்பித்தேன். இப்போது அவர்களே  economics, banking, wealth generation போன்றவற்றில் இருக்கும் பிரச்னைகள், நெழிவு சுவுகளை ஆசானுக்கு வாதம் புரியும் அளவு வந்து விட்டார்கள், பாடசாலை இன்னும் முடிக்கவில்லை ஆயினும். ஆகவே படிப்படியாக சொல்லிக்கொடுத்தால், அநேகமாக எல்லா இளந்தலைமுறையும் இந்த அறிவை பெரும், வளர்க்கும்.

இதை இங்கே யாழ் இலும் பல தடவை சொல்லி இருந்ததேன். எவர் வாசித்தார்களோ தெரியவில்லை. 

உண்மையில், கடன், வீட்டுக் கடன் எல்லாமே தன்மையில் மோசடியானவை. 

 

உங்கள் பிள்ளைகளுக்கு இந்த அறிவை போதித்தமைக்கு வாழ்துக்கள். நானும் இதே வழியில் போகவே தலைப்படுகிறேன்.

மேற்கில் சட்ட பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு எல்லாம் இருப்பது சரிதான். வட்டி குட்டி போடும் கதைகள் இங்கே இல்லைத்தான். ஆனால் இங்கே கிரெடிட் ஸ்கோர் படுத்துவிடும் என்ற பயம் இருப்பதால் - பலர் கடனுக்கு வாழ்நாள் அடிமையாக இருக்கிறார்கள். என்னை பொறுத்த வரை இது ஒரு வேறு வகையான கடனில் சிக்க வைக்கும் பொறிமுறைதான்.

ஆனால் தெளிவான புரிதல், கட்டுப்பாடு இருந்தால் இந்த விளையாட்டை வெல்லலாம்.

அதீத சொத்து உள்ளவர்கள் மட்டுமே richest 5%) இந்த பொறிமுறையில் ஈடுபடாமல் இருக்கும் option உடையவர்கள்.

ஏனையோர் எல்லாரும் இந்த விளையாட்டை ஆடியே தீர வேண்டும்.

சிலர் வெல்வர். சிலர் தோற்பர்.

நாம் வென்றாலும், தோற்றாலும் வங்கிக்கு லாபம்தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இங்கு வங்கிகளில் லீகல் ஹக்கேர்ஸ், நல்ல கொழுத்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.

படுபாவிகளுக்கு வேலையே.... மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

 🤗

படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. 🙄எனது மகன் cyber security😊முன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும். 

இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, shanthy said:

படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. 🙄எனது மகன் cyber security😊முன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும். 

இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 

நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁

சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு.

நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது.

உதாரணமாக யாராலுமே உடைக்க முடியாது என்று விளம்பரப்படுத்தப்பட்ட சந்தைக்கு போகவுள்ள, பூட்டினை, சந்தையில் ஒருவர் உடைத்தெறிந்து கரி பூச முன்னர், நிறுவனத்தின் இன்னும் ஒரு பகுதி.... உடைக்க முணைந்து.... முடியாது என்ற நிலையில் சந்தைக்கு அனுப்புதல் போன்றது.

உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

உண்மையில், எல்லா ஓட்டைகளும் (என்று கருதபடுகின்ற) அடைக்கப்படுகின்றதா?

ஓட்டைகள் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே அடைக்கப்படுகிறது.

deterministic system இல் கூட, இது முடியாது (அதாவது  ஓட்டைகள் என்று கருதப்படுவதும்    அடைக்கப்படுவது) என்பதே இப்போதைக்குக்கு சொல்லக் கூடியது.

ஓட்டைகள் என்று கருதப்படுவது  எல்லாம் அடைக்கப்பட வேண்டும் என்றால்,  run time PCA (principal component analysis) செய்யப்பட வேண்டும்.  அனால்,pca  கூட எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், pca இல் சிறு வேறுபாடுள்ள பாதைகள் வேண்டாத பாதைகளாக (noise) புறக்கணிக்கப்படும்.   

இதை விட , determinacy (துணிதற்றகவு) of a standalone system என்பது software  determinacy மற்றும் hardware determinacy இல் தங்கி இருக்கிறது.

software  determinacy,  hardware determinacy இல் தங்கி இருக்கிறது

இந்த hardware determinacy என்பது இப்போது பார்வைக்கு deterministic  இருக்கிறது, ஆனால் chip அளவில் quantum phenomenon determinacy தான் உள்ளது. இது சாதாரண முறைகளால் கையாளப்பட முடியாது.


ஆனாலும், அப்படி (அடையாளம் காணப்படுவது) அடைக்கப்படுவது கூட, சில வேளைகளில் composite systems இல் (இப்போதைய நிலை) security posture இல் (combination of people, processes and technologies) வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எப்போதும் போலவே, எந்த இடத்திலும் பாதுகாப்பு உணர்வு என்பது சமநிலைப்படுத்தும் தொழிற்பாடாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

உண்மையில், எல்லா ஓட்டைகளும் (என்று கருதபடுகின்ற) அடைக்கப்படுகின்றதா?

ஓட்டைகள் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே அடைக்கப்படுகிறது.

deterministic system இல் கூட, இது முடியாது (அதாவது  ஓட்டைகள் என்று கருதப்படுவதும்    அடைக்கப்படுவது) என்பதே இப்போதைக்குக்கு சொல்லக் கூடியது.

ஓட்டைகள் என்று கருதப்படுவது  எல்லாம் அடைக்கப்பட வேண்டும் என்றால்,  run time PCA (principal component analysis) செய்யப்பட வேண்டும்.  அனால்,pca  கூட எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், pca இல் சிறு வேறுபாடுள்ள பாதைகள் வேண்டாத பாதைகளாக (noise) புறக்கணிக்கப்படும்.   

இதை விட , determinacy (துணிதற்றகவு) of a standalone system என்பது software  determinacy மற்றும் hardware determinacy இல் தங்கி இருக்கிறது.

software  determinacy,  hardware determinacy இல் தங்கி இருக்கிறது

இந்த hardware determinacy என்பது இப்போது பார்வைக்கு deterministic  இருக்கிறது, ஆனால் chip அளவில் quantum phenomenon determinacy தான் உள்ளது. இது சாதாரண முறைகளால் கையாளப்பட முடியாது.


ஆனாலும், அப்படி (அடையாளம் காணப்படுவது) அடைக்கப்படுவது கூட, சில வேளைகளில் composite systems இல் (இப்போதைய நிலை) security posture இல் (combination of people, processes and technologies) வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எப்போதும் போலவே, எந்த இடத்திலும் பாதுகாப்பு உணர்வு என்பது சமநிலைப்படுத்தும் தொழிற்பாடாகும்.

சிம்பிள் ஆன்சர்; முடிவிலி.

முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும்.

பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, shanthy said:

இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 

வித்தியாசம் உங்கள் மகனோ, அல்லது எவரோ படிக்கும் பொது மட்டுமே விழித்திருக்க வேண்டி இருந்திருக்கும்.

இவர்கள், அந்த வேலை செய்யும் வரையும் அநேகமான நாள் விழித்து இருக்க வேண்டும்.
 

1 minute ago, Nathamuni said:

சிம்பிள் ஆன்சர்; முடிவிலி.

முடிந்தால் இரு பக்கமும் வேலை இல்லாமல் போய்விடும்.

பிச்சைக்காரன் புண் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆம், பூனையும், எலியும் போல, ஒரே ஓட்டம், துரத்துதலும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

ஆம், பூனையும், எலியும் போல, ஒரே ஓட்டம், துரத்துதலும்   

Poacher makes the best gamekeeper 🤣. காலத்துக்கு ஏற்ப மாறுகிறது.

 

Link to comment
Share on other sites

6 hours ago, Nathamuni said:

நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁

சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு.

நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது..

உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.

உண்மை தான். நான் ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் எனக்கு பயமாக இருக்கும். 

மேலதிக விளக்கதுதிற்கு நன்றி நாதமுனி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நிதி முகாமைத்துவம் ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். ஆனால் எந்த பாடசாலையிலும் இதை போதியளவு படிபிப்பதில்லை. 

எமக்கு ஊரில் இருந்த சேமிப்பு பழக்கம் கூட இங்கே பிள்ளைகளுக்கு இல்லை

நிதி முகாமைத்துவம் அறிந்தவுடன் 2000 ஆண்டில் முதலாம் திகதி செய்த வேலை உள்ள கிரெடிட்  காட்டுக்கள் எல்லாம் கத்தரிக்கோலால் வெட்டி போட்டது தான் அதன் பின் ஒரு கோதாரி  காட்டும் வேண்டாம் டெபிட் காட் மட்டுமே கடந்த 20 வருட வாழ்க்கை .

சந்தோசமாய் தான் வாழ்க்கை போகுது .

 

சேமிப்பு முக்கியம் இங்குள்ளவர்களால் 4ல் ஒன்றை இலகுவாக சேமிக்க முடியும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

உண்மை தான். நான் ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் எனக்கு பயமாக இருக்கும். 

மேலதிக விளக்கதுதிற்கு நன்றி நாதமுனி. 

எங்களுக்கு இப்பதான் தொடங்குது தலை சுத்த, நீங்கள் அனுபவித்துவிட்டீர்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நான் கடனட்டை பற்றி தெரிந்து கொன்டதை விட இன்னுமொரு மனதை பாதிக்கும் விடையத்தையும் அவதானித்தேன்.என்ன தான் அறிவாலும் வயதாலும் வளர்ந்தாலும் இன்னும்  கண்ணைக் கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் என்ட மாதிரி சின்னப்பிழைத்தனமான  விடையம் தான் அது.திருந்துவார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கடனட்டையை பாவிப்பதில் ஆரம்பத்தில் தயக்கமும், பின்னர் சரியான திட்டமிடல் இல்லாதமையால் கடன் சுமையும் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அனுபவங்கள் தந்த பாடங்களால் சரியான திட்டமிடல்களுடன் கடனட்டையை பாவிக்க தொடங்கி சில வருடங்களாக சரியான விதத்தில் பாவிக்கின்றேன். 

மருது மாதிரி நானும் மாதத்துக்கு 100 டொலர் வரைக்கும் தான் பணத்தாள்களை பயன்படுத்தி செலவு செய்வது. மிச்சமெல்லாம், கடனட்டையில் தான். அதே நேரத்தில் அப்படி வாங்குவனவற்றுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையையும் ஏற்படவிடுவதில்லை.கடனட்டையால் வரும் Rebate மற்றும் சேகரிக்கும் points களைக் கொண்டு புது வருட ஆரம்பத்தில் புதிய பொருட்களை வாங்குவதும் உண்டு.

கனடாவில் 1 விதத்தில் இருந்து 4 வீதம் Rebate கொடுக்கும் கடனட்டைகளையும் பெற முடியும்.இவற்றை சரியாக பயன்படுத்தினால் வருட இறுதியில் நல்ல தொகை வந்து சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 04:04, பெருமாள் said:

நிதி முகாமைத்துவம் அறிந்தவுடன் 2000 ஆண்டில் முதலாம் திகதி செய்த வேலை உள்ள கிரெடிட்  காட்டுக்கள் எல்லாம் கத்தரிக்கோலால் வெட்டி போட்டது தான் அதன் பின் ஒரு கோதாரி  காட்டும் வேண்டாம் டெபிட் காட் மட்டுமே கடந்த 20 வருட வாழ்க்கை .

சந்தோசமாய் தான் வாழ்க்கை போகுது .

 

சேமிப்பு முக்கியம் இங்குள்ளவர்களால் 4ல் ஒன்றை இலகுவாக சேமிக்க முடியும் .

 

நானும் இந்த கடனட்டையால் சிக்கி தவித்தேன்.உருவ உருவ இன்பமாக இருக்கும். கடைசியில் இறுகும் போது அதன் அந்தரம் சொல்லி வேலையில்லை.
கடைசியில் எல்லா கடனட்டைகளையும் பாசல் பண்ணியே சொந்த இடத்துக்கு அனுப்பி விட்டேன்.
நீங்களும் உங்கடை கோதாரியும்....😁

Barclaycard Student - die Kreditkarte für Studenten!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

UK அரசும், ஏன் மற்ற எல்லா அரசுக்களும், cashless society என்பதை கொண்டுவர முனைகின்றன.

கண்காணிவும், கட்டுப்படுத்தவும் மிகவும் இலகு.

சமூகத்தை அரசு நினைக்கும் வழியில் mould பண்ணுவதற்கு மிகவும் இலகு.   

உங்கள் கடனட்டையில் சிப் பழுதினால் நீங்கள் கையகலாமல் போனதை சிறு அளவில் எடுத்து , அதை அரசு எவ்வாறு ஓர் சமூகத்தை கண்காணிவும், கட்டுப்படுத்தவும் பாவிக்கலாம் என்று சிந்தித்தால் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ராசவன்னியன் said:

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

பெரும்பாலான கடனட்டைகளுக்கு நீங்கள் புதிதான ஒரு நாட்டுக்கு பயணம் செய்யும் போது travel notice கொடுக்க வேண்டிய தேவை சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. இது உங்கள் கடனட்டையை யாரும் கள்ள கார்ட் காரர் துஷ்பிரயோகம் செய்யாமலிருக்க வழி செய்யும் ஏற்பாடு. இதனால் முன்னறிவிக்காமல் திடீரென்று வேறொரு நாட்டில் பாவித்தால் (அதுவும் கையொப்பம் இல்லாமல் மெசினில் பாவித்தால்) உங்கள் பாதுகாப்புக்காகவே அந்தப் பரிமாற்றத்தைத் தடுத்து விடுவர். 

தற்போது இருக்கும் சிப் முறையில் travel notice அவசியமில்லை எனக் கேள்விப் படுகிறேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

அதுக்கு தானே இப்போது Apple Pay or Samsung Pay இருக்கிறதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

test.png

என்னிடம் இருப்பது ஒரேயொரு கடன் அட்டைதான்.

விமான பயணங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்ய பாவிப்பதுண்டு. குடும்பத்துடன் செல்லும்போது விமான நிலையங்களில் மூன்று மணிநேரம் "லாஞ்சி"ல் நேரத்தை செலவழிக்கலாமென வங்கி கொடுத்ததில் வசதி இருந்தது.

சென்ற வருடம் லண்டன் வந்தபொழுது, கையில் பிரித்தானிய நோட்டுகள் அதிகம் வைத்திருந்தேன்.கையில் இருந்த ஒரேயொரு கடன் அட்டையையும் கொண்டு சென்றேன்.

லண்டனில் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தாலும், செக்-இன் செய்யும்போது வந்தது பிரச்சினை. நான் கொண்டுவந்த கடன் அட்டையில் இருந்த "சிப்" சரிவர வேலை செய்யவில்லை.

"வேறு கடன் அட்டையை கொடுங்கள்..!" என்றார். என்னிடம் வேறு அட்டை இல்லாததால் பிரித்தானிய காசை நீட்டினேன். அவரோ "இல்லை சார்.. கிரடிட் கார்டு மட்டுமே..!" எனக் கூறிவிட்டார்.

தர்ம சங்கடமாகிப்போனது.

அதே போல வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் தாண்டிச் சென்று அருகேயிருந்த மெட்ரோ நிலயம் சென்று டிக்கட் எடுக்க "கவுண்ட்டர்"களை தேடினேன். ஒரு பயலையும் காணோம். தடுமாற்றமாக இருந்தது. அங்கிருந்த செக்யூரிட்டி அருகிலிருந்த மெசினைக் காட்டி "இதில்தான் டிக்கட் எடுக்கவேண்டும்.. உங்கள் கிரடிட் கார்டை சொருகி, செல்லுமிடம் அழுத்தினால் டிக்கட் வரும்.." என்றார். நான் பலமுறை முயன்றும் என்னுடைய அட்டையிலுள்ள "சிப்" வேலை செய்யவில்லை. அதற்கு முன்தினம் வரை, வட அயர்லாந்தில் இருந்தபோது ஓட்டல் அறைக்கு கடன் அட்டை மூலமே பணம் கட்டினேன்.

வேறு வழியின்றி உடன்வந்த நண்பர் எனக்கு அவருடைய அட்டையை கொடுத்து சிலமுறை உதவினார்.

எனவே கடன் அட்டையை உபயோகிக்கும்போது 'அது சரிவர வேலை செய்கிறதா..?' என உபயோகித்து பார்த்துவிட்டு அதை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது உசிதம்..அல்லது குறைந்தது இரண்டு அட்டைகளாவது வைத்திருக்கலாம்.

புரியாத விடையம்..! 🤔

'ஏன் பண பரிவர்த்தனையை இங்கிலாந்தில் பெரும்பாலும் 'அட்டைகள்' மூலமே நடைபெறுகிறது..? வெளிநாட்டவர்கள் உள்நாட்டு கரன்சியை வைத்திருந்தாலும் அங்கே அவற்றை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறது..?'

நான் கொண்டுவந்த பணத்தில் 50 பவுண்ட்ஸ்க்கும் குறைவாகவே கரன்சியை செலவழித்தேன். மொத்த பணத்தையும் அப்படியே திரும்பக் கொண்டுவந்ததில் எனக்கு நட்டமே ஏற்பட்டது.

🙄😔😇

வன்னியரே....

உங்கள் நண்பர் இருந்தபடியால் உதவி கிடைத்தது. யாருமே இல்லாவிடில்?

அடுத்த முறை இவ்வாறு நடந்தால், இரண்டாவதாக, யாழ் உறவுகளுக்கு சொல்லுங்கள். எப்படியும் உதவுவார்கள்.

அப்ப முதலாவது?

உங்கள் கடன் மட்டை (விசா, மாஸ்டர்) நிறுவனம் (உங்கள் உள்ளூர் வங்கி அல்ல) உலகளாவியது. உங்களுக்கு உதவ கடமைப் பட்டுள்ளது.

அவர்களுக்கு தொடர்பு கொண்டு உஙகள் நிலையினை சொல்லி இருந்தால், அவர்கள் உதவி செய்து இருப்பார்கள். அது அவர்களது சட்ட் ரீதியான கடமை.

உங்கள் மட்டையில் பயன் படுத்தக்கூடிய வசதி இருந்து, நீங்கள் அதனை நம்பி வந்திருந்தால், அவர்கள் கட்டாயமாக உங்களுக்கு உதவ வேண்டும்.

நீங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ரிசெப்ஷன், அவர்களை தொடர்புகொள்ள உதவி இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியவில்லை. மேனேஜரிடம் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டில், இதனை சொல்லியே இருக்கிறார்கள். நீங்கள் எங்கவாது எமது கார்டுடன் பயணித்து, தமது கார்டினை எடுக்காத நிறுவனத்தில்,  பணம் செலுத்த முடியாமல் தவித்தால், உடனே எம்மை தொடர்பு கொள்ளுங்கள். நாம் உதவி செய்வோம் என்கிறார்கள்.

ஆகவே அடுத்த முறை உதவி கேளுங்கள்.   

1 hour ago, tulpen said:

அதுக்கு தானே இப்போது Apple Pay or Samsung Pay இருக்கிறதே. 

அதுக்கு லிமிட் உள்ளது என்று நினைக்கிறேன்.

முன்னர் £30. இப்போது, கொரோன காரணமாக £45.

ஹோட்டல் ரூமுக்கு கொடுக்க கூடுதலாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kadancha, Justin, tulpen, Nathamuni அனைவருக்கும் நன்றி.

எனது இங்கிலாந்து பயணத்தை கடன் அட்டை கொடுத்த வங்கியிடம் சொல்லி, அட்டையை அங்கு செலவழிக்க அங்கீரம் பெற்றே எடுத்து வந்தேன். லண்டனின் ஓட்டல் அலுவலர் சொன்னது "இந்த சிப், வங்கியிடம் பணத்திற்கு அங்கீகரிக்கும்(Authentication & Approval) தொழிற் நுட்பம் பழையதாக இருக்கலாம், எங்கள் கடன் அட்டை தேய்க்கும் கருவி புத்தம் புதிது.." என ஒரு போடு போட்டார் பார்க்கணுமே..எரிச்சலிலும் சிரிப்பே வந்தது..!

எந்த புதிய கருவிகளும், அதன் செயல்பாடுகளும்  முந்தைய தொழிற்நுட்பத்தை அனுசரிக்கும்விதமாகவே (Backward compatibility) சில குறிப்பிட்ட காலம் வரை இருக்க முடியும் என எண்ணுகிறேன். அதே கடன் அட்டையை இங்கே திரும்பிவந்து உபயோகப்படுத்தினேன், வேலை செய்தது. இப்பொழுது அந்த வங்கி புதிய கடன் அட்டையை வழங்கி புதுப்பித்துள்ளது.

கொசுறு தகவல்:

வரவேற்பறையில் இருந்தவர்கள் ஒரு இலங்கையரும், சில ஆங்கிலேயர்களும். என்னிடம் பேசியவர் அந்த இலங்கையர்..!

43 minutes ago, Nathamuni said:

வன்னியரே....

உங்கள் நண்பர் இருந்தபடியால் உதவி கிடைத்தது. யாருமே இல்லாவிடில்?

அடுத்த முறை இவ்வாறு நடந்தால், இரண்டாவதாக, யாழ் உறவுகளுக்கு சொல்லுங்கள். எப்படியும் உதவுவார்கள்...

நன்றி திரு. நாதமுனி..

இவ்வருடமும் இதே நேரம் அங்கு வரவேண்டியது தள்ளிப்போய்விட்டது.

திட்டப்பணிகளின் ஒப்பந்தம், இன்னொரு ஜெர்மன் நிறுவனத்திற்கு சென்றுவிட்டது. அவர்களின் பரிசோதனை இடம் சுட்கார்ட் அருகே 'நூரன்பர்க்'கில் இருக்கிறது.. ஆனால் ஜெர்மனிக்காரர்கள் "செம உசார் பக்கிரிகள்"..! 😀

"கொரானா பயணத்தடை இருப்பதால், எல்லாவற்றையும் உங்கள் துபாய் 'ஜெபல் அலி' தொழிற்பேட்டையில் வைத்து முடித்து தருகிறோம்.." என சொல்லிவிட்டார்கள்..!

காசும், நேரமும் மிச்சம் ஆகிறதில்லையா..? வலு திறமை..! 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இவ்வருடமும் இதே நேரம் அங்கு வரவேண்டியது தள்ளிப்போய்விட்டது.

கொரோனா குறைந்து மீண்டும் பயணிக்க முடிந்தால் சொல்லிவிட்டு வாருங்கள்.  மறக்காமல் இரண்டு கடனட்டைகள் கொண்டு வாருங்கள். ஒன்றுடன் வந்தாலும் காரியமில்லை!

பணநோட்டுகள், நாணயங்கள் எல்லாம் பாவனை குறைந்துவிட்டது. நானும் ஒரு பவுண்ட் பொருளைக் கூட கடனட்டை பாவித்துத்தான் இப்போது வாங்குவது (தமிழரின் கடைகளைத் தவிர!)

சரியாக ஒரு வருடம் முன்னர் சுவிற்சலாந்தில் பணநோட்டு இல்லாமல் இக்கட்டில் மாட்டி அருந்தப்பில் மீண்டிருந்தேன்.😃

வார இறுதி பிறந்தநாள் கொண்டாட்டம் (ஞாயிறு பிற்பகலில்தான் வைத்தார்கள்) ஒன்றுக்கு போயிருந்தேன். சர்ப்ரைஸாக இருக்கவேண்டும் என்பதற்காக சனிக்கிழமை பாசல் நகரில் இறங்கி கார் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கி அடுத்தநாள் ஓல்ரன் நகரில் கொண்டாட்டம் முடித்து ஞாயிறு இரவே காரை பாசல் எயார்போட்டில் கொடுத்துவிட்டு லண்டன் வரும் திட்டம்.😎

சர்ப்ரைஸாகப் போனதால் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து திட்டமிட்ட நேரத்திற்கு விடைபெற்று வெளியேறமுடியவில்லை. பாசல் போகும்  autobhan இல் சூரிச்சைத் தாண்டியதும் வாகன நெரிசல்வேறு ஆமைவேகத்தில் நகரச் செய்தது😖. கூகிள் வழிகாட்டியைப் பாவித்து autobhan ஐ விட்டு வெளியே வந்து ஒன்றிரண்டு மலையால் ஏறி இறங்கி 7:30 மணியளவில் பாசல் எயார்போட்டுக்கு கிட்ட வந்துவிட்டேன்.

பெற்றோல் முழுவதுமாக நிரப்பவேண்டுமென்பதால் ஒரு காஸ் ஸ்ரேசனுக்குப் போய் ஃபுல் ராங்க் பெற்றோலை நிரப்பிவிட்டு பணம் செலுத்தப் போனால் அங்கு கார்ட் சிஸ்டம் சரியாக வேலைசெய்யவில்லை! என்னிடம் நோட்டுக்கள் எதுவும் இருக்கவில்லை😫. காஷியர் பெண் வேறு ஆங்கிலம் தெரியாது என்று ஏதோ டொச்சில் சொல்லிக்கொண்டிருந்தாள். 8:40க்கு பிளைற் வேறு. பணம்செலுத்த வேறு வழியில்லை என்று அவளுடன் சண்டைபோட்டுப் பின்னுக்கு வரிசையில் நின்றவர்களுக்கும் எரிச்சலைக்கொடுத்து அரைமணித்தியாலம் மினக்கெட்ட பின்னர்  சிஸ்டம் வேலை செய்தபோது கடனட்டை மூலம் பணத்தைச் செலுத்தி காரை ஸ்ரார்ட் பண்ணினேன்.

ஏற்கனவே பிந்திவிட்டதால் கூகிளில் கார் ட்ரொப் பண்ணும் இடத்தை தேடி வழிகாட்டியைப் பின்தொடர்ந்தேன். திடீரென்று போர்டரைக் கண்டபோதுதான் பிரெஞ்ச் பக்கம் போய்க்கொண்டிருக்கின்றேன் என்று உறைத்தது🤬. நிப்பாட்ட இடம்வேறு இல்லை. அப்படியே பிரெஞ்ச் பக்க எயார்போட்டுக்குப் போய் திருப்பவும் சுவிஸ்பக்கம் கார் ட்ரொப் பண்ணும் இடத்தை தேடி ஒருமாதிரி காரைக்கொடுத்து வேர்க்க விறுவிறுக்க எயார்போட்டுக்கு உள்ளே போனால் ஈசிஜெற் ஒன்றரை மணித்தியாலம் பிந்தித்தான் புறப்படும் என்றார்கள்! பிளேன் பிந்தியதற்காக சந்தோஷப்பட்டது அந்த ஒருதடவைதான்!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

 

இவ்வருடமும் இதே நேரம் அங்கு வரவேண்டியது தள்ளிப்போய்விட்டது.

 

தாய்லாந்தில், பெரியில் ( Ferry: இதுக்கு தமிழ் என்ன?) ஒரு தீவுக்கு போய் இறங்கியபோது இரவு 8 மணி.... கடற்கரையில் இருந்த பஸ் ஆட்களை ஏத்திக் கொண்டு கிளம்பி விட்டது. இடம் இல்லை... நாலு பேரும், நில்லுங்கள், இவர்களை இறக்கி விட்டு மீண்டும் வருவோம் என்றார்கள்.

ஆளரவம் இல்லை. பக்கத்தில் ஒரு இராணுவ சென்ட்ரி. ஒருவர் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை.

நேரம் ஒன்பது.... அவர்கள் நாலுபேருக்காக வர போவதில்லை. சிக்கி விட்டொமோ, இரவு இங்கே தானோ என்று கவலை....

ஒரு வான் ஒன்று வந்தது.... ராணுவ சென்றிக்கு இரவு சாப்பாடு, கொண்டு வந்திருக்க வேண்டும்.

அவரிடம் கேட்டொம்.... சிட்டி.... 100 பாட்... ஒன்.... 400 பாட் என்றார். பணம் இல்லை. கார்டு மட்டுமே....

ஒவொருவரிடமும் சேர்த்தால் ஒரு 30 பாட் மட்டுமே தேறும்.

அவரோ, பணத்தினை வை.... இல்லாவிடில் போகிறேன் என்கிறார். கேக்கும் பணமும் அதிகம். அட... வேறு எதாவது வரும்... ஆளை அனுப்பு என்கிறார் ஒரு நண்பன்.

இது... தெரியாத இடம்... கிடைக்கும் சந்தர்ப்பத்தினை பிடித்து... சிட்டிக்கு போகலாம்... இங்கே இருக்க முடியாது. மேலும் நடந்து போக, எமக்கு வழியே தெரியாது.

ஒரு ஐடியா வந்தது.... கையில் இருந்த மோதிரத்தினை கழட்டி, இதனை வைத்துக்கொள். சிட்டியில் காசு தந்தவுடன் தா என்றோம்.

சரி என்று, மோதிரத்தினை வாங்கி, டார்ச் விளக்கில் செக் பண்ணி ஏத்திக் கொண்டார். போகும் போது தான் தெரிந்தது... 15 மைல் பயணம்.... காலையில் தான் இனி பஸ் வரும்..

போய், ATM தேடிப்பிடித்து பணம் எடுத்துக் கொடுத்தோம்.

பாடம்... எந்த நாட்டுக்கு போனாலும், அந்த நாட்டு பணம் ஒரு 200, 300 எப்போதும் கையில் இருக்க வேண்டும். வரும் போது, விமான நிலையத்தில் செலவழிக்கலாம்.

அடுத்தது, அடித்துப் பிடித்துக் கொண்டு, வெளியே வந்து, வேறு போக்குவரத்து வசதிகள் இல்லை எனில்,  முதல் பஸ்சில், ரயில்ல இடம் பிடித்து விடவேண்டும்.... அடுத்த பஸ்சில் அடுத்தவர்கள், ஆறுதலாக வரட்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இந்த சிப், வங்கியிடம் பணத்திற்கு அங்கீகரிக்கும்(Authentication & Approval) தொழிற் நுட்பம் பழையதாக இருக்கலாம், எங்கள் கடன் அட்டை தேய்க்கும் கருவி புத்தம் புதிது.." என ஒரு போடு போட்டார் பார்க்கணுமே..எரிச்சலிலும் சிரிப்பே வந்தது..!

ஆம், இருக்கா கூடிய வாய்ப்பு இருக்கிறது.

EMV 3-d authentication உம் PCIDSS version 2 உம் வந்துள்ளது.

security இல் backward compatibility  என்பது இல்லை, கால நயப்பு (grace period) என்பதே உள்ளது.

ஆனாலும் எந்த வழியில், அதாவது, Hotel ஆ அல்லது  உங்களது card ஆ ஆகப் பிந்தியதை  கொண்டிருந்தது என்று யாருக்கு தெரியும்.

இன்னுமொன்று, EU பல regulation ஐ அவ்வப்போது வெளிவிடுவது. அந்த regulation இந்த நடைமுறை படுத்தல் கூட காரணமாக இருக்கலாம். 

10 minutes ago, Nathamuni said:

Ferry: இதுக்கு தமிழ் என்ன?

பாதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

எங்கள் கடன் அட்டை தேய்க்கும் கருவி புத்தம் புதிது.." என ஒரு போடு போட்டார் பார்க்கணுமே..எரிச்சலிலும் சிரிப்பே வந்தது..!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.