Jump to content

தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் யோசிதவின் கருத்து


Recommended Posts

தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் யோசிதவின் கருத்து

தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் யோசிதவின் கருத்து

 

பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக கடமையாற்ற தனக்கு அனுபவம் இருப்பதாக யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பதவி தனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு அரசு பதவி

20 அக்டோபர் 2020
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
யோஷித ராஜபக்ஷ

பட மூலாதாரம், FACEBOOK

 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது மகன், நமல் ராஜபக்ஷ, அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ (71), நாட்டின் அதிபராக பதவி வகிக்கிறார். மூத்தவரான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பிரதமராக இருக்கிறார். 

மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கிறார். 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று மகன்கள். மூத்தவரான நமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவரது வரிசையில், இலங்கை கடற்படையில் அதிகாரி ஆக பணியாற்றி வந்த யோஷித ராஜபக்ஷ, பிரதமர் அலுவலகத்தில் ஊழியர் பிரிவு தலைமை அதிகாரியாக (இலங்கையில் பணியாளர் சபை பிரதானி என இப்பதவி அழைக்கப்படுகிறது) நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இதற்கு ஏதுவாக தான் வகித்து வந்த இலங்கை கடற்படை அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜிநாமா செய்தார்.

சில தினங்களுக்கு முன்பு, யோஷித ராஜபக்ஷவின் புதிய நியமன அறிவிப்பு தொடர்பான தகவலை, இலங்கையில் உள்ள சீன தூதர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதன் பிறகு, இலங்கையில் இந்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளானது. இலங்கை கடற்படை அதிகாரியாக இருக்கும் யோஷித, எவ்வாறு பிரதமர் அலுவலக பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார் என்று பரவலாக கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இலங்கை கடற்படை பணியில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு தனது ராஜிநாமா கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே அளித்திருந்ததாகவும் அது கடந்த 10ஆம் தேதி கடற்படை தலைமையகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் யோஷித ராஜபக்ஷ தெரிவித்தார். 

யோஷித ராஜபக்ஷ

பட மூலாதாரம், FACEBOOK

 
படக்குறிப்பு, 

யோஷித ராஜபக்ஷ

இதைத்தொடர்ந்து யோஷிதவின் புதிய பதவி நியமனத்துக்கு இலங்கை அமைச்சரவை கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதையடுத்தே தமது பதவியை ராஜிநாமா செய்து விட்டு அவரது அலுவலகத்தில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்படையில் 2006 முதல் 2020ஆம் ஆண்டுவரை பணியாற்றிய யோஷித ராஜபக்ஷ, யுக்ரேனில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்தவர். 

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஆண்களும் அரசுப் பதவியில் உள்ள நிலையில், அவரது இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ மட்டும் இன்னும் அரசுப் பதவி ஏதும் வகிக்கவில்லை. 

பைலட் மற்றும் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரான ரோஹித, திருமணமாகி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிகளின்படி இரண்டு அலுவல்பூர்வ அரசு குடியிருப்புகள் உள்ளன. முன்னாள் அதிபர் என்ற முறையில் அவருக்கு விஜேராம பிரதேசத்தில் உள்ள ஒரு இல்லம், பிரதமர் பதவி வகித்து வருவதற்காக அலரி மாளிகையில் ஒரு இல்லம் உள்ளது.

இதில் அலரி மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மஹிந்த ராபஜக்ஷ, விஜேராம பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், அலரி மாளிகையில் ரோஹித ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வசித்து வந்தனர். பிரதமர் அலரி மாளிகையில் தங்கியிருக்காத வேளையில், அவரது மகன் குடும்பத்துடன் அங்கு தங்கியிருப்பது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என கருதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் இல்லத்துக்கே செல்லுமாறு ரோஹித்தவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. 

நாட்டின் அதிபர் என்றபோதும், கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு ஒதுக்கப்பட்ட அதிபர் மாளிகையில் தங்கியிருக்காமல் தொடர்ந்து மிரிஹானவில் உள்ள வீட்டிலேயே வசித்து வருகிறார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-54617509

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் ஆட்சியில் இது பரவாயில்லை. மகனுக்கு வேறு என்ன பிரதமர் அலுவலகத்தில் பியூன் வேலையா கொடுக்கமுடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.