Jump to content

தமிழர்களுக்கு வரலாறு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு வரலாறு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம்

efae9b23-b098-4614-9185-3cf8a67923c9-696
 40 Views

தமிழ், நம் தாய்மொழி.  இது, பன்னிரெண்டு கோடித் தமிழ் மக்களால், பேசப்படுகின்ற பழமையான மொழி. இம்மொழிக்குத் தாய் நிலங்களாகத் தமிழ்நாடும், தமிழீழமும் உள்ளன. மொழி ஆராய்ச்சியின் அடிப்படையில், இத்தமிழ் மொழியை உலகம் செம்மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், சீனம், சமற்கிருதம் ஆகியன குறிப்பிடத்தகுந்த செம்மொழிகள். தமிழை, இங்குக் குறிப்பிட்ட செம்மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், தமிழ் இச் செம்மொழிகளுக்கும் மூத்த மொழியாக இருக்கின்ற உண்மை தெரியவரும். அப்படியானால், தமிழ் செம்மொழிகளில் ஒன்று அன்று. அது, செம்மொழிகளுக்கும் மூலமான மொழி. ஆதலால், அதனை உயர்தனிச் செம்மொழி என்று உரைப்பதே பொருத்தம் என்று மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் ஆய்ந்து நூல் எழுதியுள்ளார்.

தமிழ் மக்களுக்குத் தமிழ் பற்றிய இத் தகுதி பெருமைக்குரியதுதான். ஆனால், உலகம் தமிழிற்கு இந்தத் தகுதியை கொடுத்திருக்கின்றதா என்பதும், தமிழன் இந்தத் தகுதியால் பெருமை பெற்றானா என்பதும், நம் முன் நிற்கும் கேள்விகள்.

தமிழின் சிறப்பு, தமிழ் அறிஞர்கள் இடையில் மட்டும் பேசப்படுவதாக உள்ளது. தமிழர்கள், இந்தத் தமிழின் தகுதியை அறிவதும் இல்லை; பேசுவதும் இல்லை. உலகமோ, பெயருக்குத் தமிழைக் குறிப்பிடுகின்றது.  ஆனால், உலக அரங்கில் உலகம் தமிழைச் சிறப்பிப்பதில்லை. கண்முன்  நிலைகொண்டுள்ள இந்த இயல்பான போக்கினைத் தமிழர்களாகிய நாம் மாற்ற வேண்டும்; தமிழ் மக்களுடைய கடமையாக இது விரிய வேண்டும். செல்வாக்குள்ள மொழிகள் பலவற்றிற்கும் நாடுகள் உள்ளன. அதன் காரணமாக அந்தந்த மொழிகள் உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ் மக்களும் இச் செல்வாக்குப் பெற்ற மொழிகளின் பின்னால், ஓடுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். தமிழ், மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த மூலமொழியாக இருந்தாலும், அது தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும்கூட உயிர்ப்புடன், மதிப்புடன்  விளங்கவில்லை.

தமிழ்நாடு இந்தியாவிற்குள்ளும், தமிழீழம் சிங்களத்திற்குள்ளும் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான வரலாற்றுச் சூழலில் சிக்கிக் கொண்டு விட்டன.  வரலாறில்லாத இந்தி மொழியும், வரலாறு இல்லாத சிங்கள மொழியும் தமிழர்களை அடக்கி ஒடுக்கித் தமிழ் மொழியைச்  சிதைப்பதை அரசக்கடமையாகச் செய்து வருகின்றன.  உலக அரசுகளும் இந்த இரு அரசுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு துணை போகின்றன. ஆட்சி அதிகாரங்களின் முன், இரு நிலத் தமிழர்களும் மீளமுடியாமல், தங்கள் மொழியை மீட்க முடியாமல் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தி, சமற்கிருத  திணிப்புகளை எதிர்த்துத் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும், சிங்களத் திணிப்பை எதிர்த்துத்  தமிழீழத் தமிழ் மக்களும் கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்தி கற்றும், சிங்களம் கற்றும் நாம் வாழ்ந்தால் என்ன என்று நினைக்கின்ற தமிழ் மக்களும் இவ் இரு நிலத்திலும் உள்ளனர். இத்தகைய போக்கு பெருகினால், எதிர்காலத்தில் இவ் இரு நிலத்திலும் தமிழ் இல்லாமல் போய்விடும். எனவே வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழர்கள் இந்தி, சிங்களம், ஆங்கிலம் மற்ற மற்ற மொழிகள் எனப் பலவற்றைக் கற்றாலும், தமிழ்தான் தங்களின் அடையாளம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்; தமிழர்கள் தமிழை வளர்க்க வேண்டும். அவ்வாறு தமிழை வளர்க்கத் தவறினால், தமிழ்நாடும், தமிழீமும் எதிர்காலத்தில் தமிழர் நிலங்களாக இல்லாமலே போய்விடும். இவ்விரு நிலத்து மக்களும் எதிர்காலத்தில் இவ்விரு நிலத்திலும் வேறு வேறு இனங்களுக்கு அடிமையாகி வாழ வழியின்றிப் போய்விடுவர்.

உலக வரலாற்றில் விழித்துக் கொண்ட இனங்களே மீண்டு எழுந்து நிலை பெற்றுள்ளன. அந்த வகையில், தமிழ் மக்கள் யாவரும் தங்கள் மொழியின் மாட்சிமையை வரலாற்று அடிப்படையில் ஊன்றிக் கற்று, அம்மொழிவழி தங்கள் வாழ்வை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். உலக மொழிகள் பலவற்றை ஈன்ற நம் தாய் மொழியாகிய தமிழைச் செம்மொழிகள் பேசும் மக்கள் மட்டும் அல்லாமல் உலகின் பிறபிற மொழிகளைப் பேசுகின்ற மக்களும் கற்க விரும்புகின்ற நிலையை வரலாற்றில் உருவாக்க வேண்டும். இது, பிற மொழிகளுக்கோ பிற இனங்களுக்கோ எதிரான முயற்சி அன்று. உலகப் பெரும் சொத்தாகிய தமிழினைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அறிவார்ந்த தேடல் உலகத்திற்கு ஏற்படும் வண்ணம் தமிழர்களின் பணிகள் அமைதல் வேண்டும். அப்பணிகளில் முதன்மையான பணி, இவ்விரு நிலங்களையும் வரலாற்றில் சிக்கியுள்ள சிற்றினங்களின் கையிலிருந்து மீட்பதுதான். தன்னுரிமை பெற்ற நிலங்களாக இந் நிலங்களை மீட்டெடுப்பதைக் கனவிலும் மறவாதிருக்க வேண்டும். அந்தப் பணியின் பின்னர்தான் தமிழிற்கும், தமிழர்க்கும் நிலையான வாழ்வு ஏற்படும். இதனை உலகெங்கும் பரந்து வாழும் பன்னிரெண்டு கோடித் தமிழ் மக்களும் உணர வேண்டும்.

உலக அரசுகள் இந்தியாவுடனும், இலங்கையுடனும் தொடர்பு கொள்கின்ற போது, இந்தியையும், சிங்களத்தையும் மனதில் கொண்டே செயற்படுகின்றன. இந்தியாவில் வாழும் பத்துக் கோடித் தமிழர்களையும், ஈழத்தின் ஏறத்தாழ இருபத்தி ஐந்து இலக்கம் தமிழர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களின் மொழி, நாகரிக, பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு, வாழ்விற்கு எந்தச் சிறு உதவியையும்  செய்வதில்லை. உலக அரசுகளுக்கு அரசியல் ஆதாய, வணிக நலன்கள்தான் முதன்மையானது; அவர்களுக்கு ஞாயம், அறம், தருமம் என்று எதுவும் இல்லை என்று 27 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழீழத் தேசியத் தலைவர் அறிந்து உரைத்தார். எனவே அதிகாரம் யார் கையில் இருக்கின்றதோ அவரின் பக்கம்தான் உலக அரசுகளின் செயலும் அமையும்.

புலம்பெயர் தேசத்தில், தமிழீழப் போராட்டத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஏறத்தாழ பதினைந்து இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்கள் இவ்வளவான தொகையில் புலம்பெயர் தேசங்களில் வாழவில்லை. ஆனாலும், தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் தேசத்தில் உள்ள அரசுகளும் இந்திக்கும், சிங்களத்திற்கும் கொடுக்கின்ற மதிப்பினைத் தமிழிற்குக் கொடுப்பதில்லை. நம் கண்முன் தெரிகின்ற இந்த உண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு அரசுகள் கிடைக்கின்றவரை உலகம் தமிழ் மக்களை, தமிழை ஏறெடத்துப் பார்க்காது   என்பதை ஒவ்வொரு நொடியும் தமிழ் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயர் வருமுன் தமிழீழத் தமிழ் மக்களும், தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும் தன்னுரிமை பெற்றவர்களாகவே தங்கள் தாய்நிலத்தில் வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர் இந்நிலங்களைக் கைவிட்டுச் சென்ற பிறகு இவ்விரு நிலத்துத் தமிழ் மக்களின் குடுமிகள் இந்தியர், சிங்களர் கைகளில் சிக்கிக் கொண்டன. இந்தியாவும், இலங்கையும் பெற்ற விடுதலை என்பது, தமிழ் மக்களுக்கான விடுதலை அன்று. இந்தியர், சிங்களர் விடுதலை போலவே தமிழர் விடுதலையும் வரலாற்றில் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சொந்தத் தாயகத்தில் வாழ்ந்த தமிழீழ மக்கள், சிங்கள அரசினால் மட்டும் அல்லாமல், இந்திய அரசினாலும், உலக அரசுகளாலும் அழித்தொழிக்கப்பட்டனர். உலகில் 12கோடித் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும், ஒன்றேகால் கோடிச் சிங்களர்களுக்கு உலகம் துணை செய்தது; செய்து வருகின்றது.  இந்த வரலாற்றுக் கொடுமையைக் கண்முன் கண்ட பிறகாவது தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும் நாம் சிங்கள அரசின் கீழும், இந்திய அரசின் கீழும் தொடர்ந்து வாழலாம் என்று நினைப்பது மிகப் பெரிய அறியாமையாகும்; அடிமை மனப்பான்மையாகும். தமிழ் வாழவும், தமிழ் இனம் வாழவும் தமிழர்கள் அனைவரும் இன விடுதலையையும், நாட்டு விடுதலையையும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும்;  இரு தமிழ்ப் பேரரசுகளை  மீட்டெடுக்க வேண்டும். இது, வரலாறு நமக்கு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம்.

முனைவர் கு.அரசேந்திரன்

 

https://www.ilakku.org/தமிழர்களுக்கு-வரலாறு-உணர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.