Jump to content

நவராத்திரிக் கவிதைகள்


Recommended Posts

முத்தேவியரின் புகழ் பாடிடும் இனிய இரவு
முத்தமிழ் இன்பத்தில் மூழ்கித்திளை மனது
மெய் ஒன்று உளதென ஆன்மா உணரும்;
மெய்யன்போடு வையத்தை வாழ்த்தி மகிழும்.

*********

வண்ண நறுமலர்கள் கண்கவர் அலங்காரம் 
எண்ணெய்  தீபம்  காண் உள்ளமும்  பிரகாசம்.
பண்ணுடன் இசை வாணி புகழ் கேள் மனம்
மண்ணிலே ஓர் சொர்க்கத்தை உணரும்.
*********

சங்கீத சுரங்கள் செவி தனைச் சேர்ந்திட 
சிந்தையில் உதித்திடும் அழகுக் கோலமும்,
அசைவிலா வண்ணச் சித்திரம், சிற்பம் மனதை 
அசைவுறும் வண்ணம் செய்திடும் விந்தையும்,
அழகுறு மங்கையர் அபிநய நடனம் காண் 
ஆன்மா செய் நடனத்தின் அற்புத உணர்வும் 
கலைமகள் உந்தன் இருப்பினை உணர்த்திடும் ;
கலைத்தாய் உன்னைப் போற்றிடும் என்னுள்ளம்!
*********

பொருள் தேடி அலை மனம் - வாழ்வின் 
பொருள்  மறக்கும்  நிலை வரலாம் 
அளவிலா நிதிநலம், நிலம், இல்லம் - இவை
இழந்து  இழிநிலை  கொள் காலம் வரலாம் 
அழியாத  செல்வமெனத் தெளிவான  சிந்தை,
தளராத  மனம் தந்தருள்வாய்  அலைமகளே!

*********

வீணை இசை கேட்டு மனம் அசைந்தாடும் மாயம் என்ன!
வெண் தாமரை கண்டு முகம் தாமரையாய்
மலர்வதென்ன!
ஆண்டு பல சென்றும் என்னில் உந்தன் ஆட்சி இன்னும்  என்ன!
வாணியின் நினைவினிலே எண்ணம் பூண்ட வண்ணக்கோலம் என்ன!

*********

உனை உருகிப் பாடுகையில் குரலும் இனிதாகும்
உன் நாமம் எழுதுகையில் எழுத்தும் அழகாகும் 
உனை நினைவில்  பசித்திருக்க சிந்தை சீராகும்
உன் அடியார் முகம் காண அடங்கிடும் ஆணவம்
உன் நினைவுடன் இயற்றும் கலையும் நயமுறும்
வாணியே! உன் மீது அன்பு கொண்ட மனம்
வையத்தை வாழ்திடும்!

(நவராத்திரிக் காலம், 2015)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வீகக் கவிதைகளின் நறுமணம் நாசிக்குள் சென்று இதயத்தை வருடுது மல்லிகை வாசம்........!  🌹

Link to comment
Share on other sites

12 hours ago, suvy said:

தெய்வீகக் கவிதைகளின் நறுமணம் நாசிக்குள் சென்று இதயத்தை வருடுது மல்லிகை வாசம்........!  🌹

நெஞ்சைத்தொட்ட உங்கள் கருத்துக்கு நன்றி சுவி அண்ணா. நவராத்திரிக்கால வாழ்த்துக்கள்! 🌱🌺🌸🌼🌻🌷🌹

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.