Jump to content

கற்பகா திட்டம் – ஒரு மில்லியன் பயன் தரும் விதைகள் கிளிநொச்சி நிலத்தில் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கற்பகா திட்டம் – ஒரு மில்லியன் பயன் தரும் விதைகள் கிளிநொச்சி நிலத்தில் ..

Screenshot-2020-10-22-10-46-23-447-org-m

கிளி மக்கள் அமைப்பினால் கற்பகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மில்லியன் பயன்தரும் விதைகளை கிளிநொச்சி பிரதேசங்கள் எங்கும் நடும் திட்டமாகும்.

இத்திட்டமானது கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.

"உன் தலைமுறைக்காக ஒரு மரம் நடு.."

"அடுத்த தலைமுறைக்காக ஒரு விதை நடு.."

கட்டம் 1 – 24/10/2020, வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசங்களில் 10,000 பனம் விதைகள் நடும் நிகழ்வு இடம்பெறுகிறது .

http://kilipeople.org/கற்பகா-திட்டம்-ஒரு-மில்ல/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-11-05-23-26-42-979-com-a கட்டம் - 3 . .👍

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெரு மழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை.!

Screenshot-2020-12-03-21-31-50-027-org-m

கிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விவசாய ஆராட்சி மேலதிக பணிப்பாளர்

கலாநிதி, அரசகேசரி, கண்டாவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தாகரன், விதை நெல் ஆராட்சி பிரதிப் பணிப்பாளர் திரு.சிவநேசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு தேக்கு மரங்களை நாட்டி வைத்தனர்.

நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், கமக்கார அமைப்பினர், கிளிநகர றோட்டறி கழகத்தினர், கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் இணைந்து அனுசரணை வழங்கினர்.

https://vanakkamlondon.com/world/2020/12/92992/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தை செழிப்பாக்கும் ‘கற்பகா திட்டத்தில்’ மருதநகரில் மர நடுகை.!

IMG-20201209-WA0014.jpg

கற்பகா திட்டம்-16 இல் கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலிருந்து மருதநகர் கிராமத்தில் கிளிநொச்சி குளம் நோக்கி கால்வாய் ஓரங்களில் மரம் படுகை நேற்று காலை இடம்பெற்றது.

நீர்ப்பாச திணைக்களம் இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கியிருந்தது. கிளி பீப்பிள் அமைப்பு மற்றும் கிளிநொச்சி சமூகப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு மரங்களை நாட்டினர்.

எதிர்காலத்தை பசுமையுடன் வளப்படுத்தும் கற்பகா திட்டத்திற்கு பொது மக்கள், அரச மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/93936/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பகா திட்டத்தில் அக்கராயன் – கந்தபுரம் கால்வாய் கரையில் மரங்கள் நடப்பட்டன.!

IMG-20201210-WA0011.jpg

கற்பகா திட்டம்-17ஆவது நிகழ்வாக இன்றைய தினம் அக்கராயன் குளத்தின் பிரதான கால்வாய் ஓரம் ஸ்கந்தபுரம் நோக்கி 1200 தேக்கு மரங்கள் நாட்டும் செயற்றிட்டத்தின் தொடர்ச்சி இடம்பெற்றது.

இன்று காலை 7.00 மணிக்கு இந்த நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி வனவள பணிப்பாளர். சேனநாயக்கா Rdhs ஶ்ரீ.சரவணபவன், அக்கராயன் வைத்தியசாலை மருத்துவர் ராகுலன், Dr.சத்தியமூர்த்தி, Dr.தவராசா, அதிபர்.மதுரநாயகம், அதிபர்.பங்கையற்செல்வன், அக்கராயன் நாகதம்பிரான் கமக்கார அமைப்பு உறுப்பினர்கள், வைத்தியசாலை தாதியர்கள், உத்தியோகத்தர்கள் பங்கு கொண்டனர்.

கிளி பீப்பிள் அமைப்பு மற்றும் கிளிநொச்சி சமூகப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/94076/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.