Jump to content

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும்.

141206164716_suresh_premachandran_eprlf_

“இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது.”

    இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். இந்தச் சந்திப்பு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மையாக இருந்தால் வரவேற்கக்கூடிய விடயமாகும்.

ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே இந்தியா தொடர்ச்சியாக தமிழர் தரப்போடு பேசிக்கொண்டு வருகின்றது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசப்போவதாக அறிந்தேன். இந்தச் சந்திப்புக்கள் இணைய வழியூடான பேச்சுக்களாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கக்கூடிய விடயமாகும்.

அந்தச் சந்திப்பு எவ்வாறு நடைபெறப் போகின்றது என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்த, எமது பிரச்சினைகள் பற்றிப் பேச சகல கட்சிகளையும் இணைத்து குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இவ்வாறு ஒரு குழு நியமிக்கப்பட்டால் தமிழர் தரப்பு பிரச்சினைகளை ஒரே குரலில் பேச முடியும்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88425/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் எம்பி சிவக்தி ஆனந்தனின் நேற்றைய அறிக்கைக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அவரது அறிக்கையின் சாரம் இது.

முப்பத்துமூன்று வருசமா, ஒப்புக்கு சப்பாணியாக அக்கறை இல்லாமல்,இந்தியா, பதின்மூன்றாவது சரத்து விசயத்தில் நடந்தது.

யுத்தம் முடிந்தபின்னான பதினொரு ஆண்டுகளில் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது, சீனாக்காரன் வந்து போனதும், சிங்கள அரசை வழிக்கு கொண்டு வரலாம் என்று நிணைத்து, தமிழர் தரப்புடன் இணையத்தளம் மூலம் சந்திப்பை நடாத்தப் போகிறது, இந்தியா.

இதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

இலங்கை தமிழரை விடுங்கள். நமக்கு, சிங்களவர் அல்லது சீனர். இழப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால், உங்கள் தென்பகுதியை, சீனாவின் தீர்க்கமான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவாவது கூடுதலான அக்கறை எடுங்கள்.

ஏற்கனவே நேபால் பிரச்சணை. பூட்டானில் பிரச்சணை. பாகிஸ்தான் பிரச்சணை. இலங்கை விசயத்தில், கோட்டை விட்டால், அக்கறை இல்லாவிடில், தென் இந்தியாவே பாதிப்படையும்.

உங்கள் நலுனுக்காவது, இதயசுத்தியுடன் அணுகுங்கள். இல்லாவிடில் இழப்பு உங்களுக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்க சகல தமிழ்கட்சிகளின் பொதுச் செயற்பாட்டுக்குழு ஒன்று விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று  கட்சிகள் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அப்படியிருக்க சுரேஷ் இந்தியா தமிழ் கூட்டமைப்புடன் தனியாக பேசக்கூடாது என்கிறார். அரசியல்வாதிகளின் பேச்சு ஒன்று செய்கை வேறொன்றாக உள்ளது கவலையளிக்கிறது.

பொதுவிடயங்களில் குறிப்பாக இனப்பிரச்சினை குறித்து பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தும்போது தமிழ் கட்சிகள் இணந்து துறைசார் வல்லுனர்கள் கொண்ட ஒரு பொது குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிக சிறந்தது.

Link to comment
Share on other sites

19 hours ago, vanangaamudi said:

பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தும்போது தமிழ் கட்சிகள் இணந்து துறைசார் வல்லுனர்கள் கொண்ட ஒரு பொது குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிக சிறந்தது.

நண்பரே இது நடவாது. எனது கடந்த ஆண்டு பதிவு ஒன்றில் இது பற்றி எழுதியிருந்தேன். இவர்களிடம் நான் கண்ட அனுபவத்தின் படி துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெருமளவுக்கு அவர்களது மனோபாவம் இன்னும் உயரவில்லை. இவர்களது அரசியல் கலாச்சாரம் உயரவில்லை. அவர்கள் உயரவில்லை.

தனக்கு ஆலோசனை சொல்கிறவன் தன்னை மீறிவிடுவான், என்னுடைய குறைபாடுகள் அவருக்கு தெரிந்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க பழகியவர்கள் இவர்கள். அதனால் தான் இன்றைக்கும் ஒரே ஒருவர் தான் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவன் என்ற போக்கு. அல்லது ஆலோசனை பெறுவதென்றால் தங்களுக்கு ஆமா போடுபவனிடம் (yes men) தான் கேட்பினும். உலகவங்கியில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு துறை வரை நிபுணத்துவம் கொண்ட தமிழர் இருந்தும் அவர்கள் ஆலோசனை கூட்டங்கள்  வைத்தால் முகத்துக்கு ஆமாபோடுவிட்டு பின்னர் ஒரு follow-up ஒன்றும் நடவாது. கேட்டால் வேறொருவன் சொன்னவன் அவரைப்பற்றி, இது சரியில்லை அது சரியில்லை என சாக்குபோக்கு சொல்லி தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை அதே நிலையில் வைத்திருப்பார்கள். வெளிநாட்டவரை ஆலோசனை வழங்க கொண்டுவந்தால் கொண்டுவந்தவர் ஆர் என்று பார்த்து அவரை வெட்டுவதில் முழு நேரத்தையும் செலவழிப்பார்கள். இராஜதந்திரிகளுடன் கூட்டம் வைக்கப்போனால் கைளை ஆட்டிக்கொண்டு வருவார்கள். அந்த ராஜதந்திரிகளிடம் கையளிக்க ஒரு ஆதரக்கோவை (documentation, appeals etc) அல்லது கூட்டம் நடந்த  பின் கூட்டத்தில் அவர்கள் சொன்ன விடயங்கள் பற்றி ஆலோசனை செய்யமாட்டார்கள், follow-up ஒன்றும் நடவாது. இடைவிடாத தொடர்பாடல் (sustained diplomatic engagement) செய்யவே தெரியாத முட்டாள் கூட்டம். கூட்டம், கூட்டத்தின் பின் படம், நம்பிக்கை, தும்பிக்கை என்ற தலையகத்துடன் செய்தி. இவவளவுடன் இவர்களது வேலை முடிந்துவிடும்.  தமிழர் இன்றைக்கு இந்த நிலையில் இருப்பதட்கு இது மிகமுக்கிய காரணி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

    • தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.