Jump to content

பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!

spacer.png

 

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன.

இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்று இருப்பதாகவும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை 'வன யுத்தம்' என்ற பெயரிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை 'குப்பி' என்ற பெயரிலும் இயக்கி வெளியிட்டவர்.

 

இதுதொடர்பாக அவர், “பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரபாகரனோடு நெருக்கமாகப் பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு ஆறு தடவை சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்தத் தொடரில் இருக்கும்” என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

 

https://minnambalam.com/entertainment/2020/10/22/3/prabakaran-biopic-web-series-director-invite-act-vijay-sethupathi

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

யோவ் அது வேறை இது வேறை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

😂

முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

 

46 minutes ago, வாத்தியார் said:

யோவ் அது வேறை இது வேறை 😂

 

11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.

மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

 

 

மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

இப்படி வீணாய் போனதுகள் விழங்காமல் போனதுக்காக ஓரிரு நிமிடங்கள் செலவு செய்வது வீண் உடையார்.
நானும் முதலே பார்த்துவிட்டு கடந்து போய்விட்டேன்.

Link to comment
Share on other sites

18 hours ago, கிருபன் said:

பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!

spacer.png

 

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன.

இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்று இருப்பதாகவும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை 'வன யுத்தம்' என்ற பெயரிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை 'குப்பி' என்ற பெயரிலும் இயக்கி வெளியிட்டவர்.

 

இதுதொடர்பாக அவர், “பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரபாகரனோடு நெருக்கமாகப் பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு ஆறு தடவை சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்தத் தொடரில் இருக்கும்” என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

 

https://minnambalam.com/entertainment/2020/10/22/3/prabakaran-biopic-web-series-director-invite-act-vijay-sethupathi

 

 

குப்பி நீண்ட காலம் பெட்டிக்குள் இருந்து வெளிவந்த படம் , அதை பார்த்த பொழுது வெளியே வராமல் பெட்டிக்குள்ளேயே இருந்து இருக்கலாமே என தோன்றியது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின தலைவரின் படம் வெளிவருகிறது | தடை விதித்தால் போராட்டம் வெடிக்கும் |மக்கள் கருத்து

 

Link to comment
Share on other sites

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!


800 படம் விஜய் சேதுபதி நடிக்க என வர முன் யாராவது விமர்சித்தார்களா?? 
இல்லை. ஏன் விமர்சிக்கவில்லை என உங்களை நீங்களே கேளுங்கள். விடை தானாக வந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

கயித்த விழுங்கிவிட்டீர்கள் போல ... 😂

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.

நியாயத்தைக் கதைக்கும்  விளக்கம் குறைஞ்சவர் இருவரும் ஒரே ஆள்தானா 😂

3 hours ago, உடையார் said:

 

 

மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

இவர்களுடன் நேரவிரயம் செய்யாதீர்கள் . பலனில்லை. ☹️

 

51 minutes ago, nunavilan said:


800 படம் விஜய் சேதுபதி நடிக்க என வர முன் யாராவது விமர்சித்தார்களா?? 
இல்லை. ஏன் விமர்சிக்கவில்லை என உங்களை நீங்களே கேளுங்கள். விடை தானாக வந்து விடும்.

ஏன் உங்களுக்கு வேண்டாத வேலை. நாய்வாலை நிமிர்த்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா ☹️

Link to comment
Share on other sites

ஏன் இந்த வேண்டாத வேலை? முரளி ஏதோ தன்னைப்பற்றி சொல்ல வந்தார் முடியவில்லை.

பிரபாகரனைப் பற்றி யாருக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? இதுவரையும் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கு படத்தின் மூலம் எதை சொல்லப் போகிறார்கள்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அபராஜிதன் said:

குப்பி நீண்ட காலம் பெட்டிக்குள் இருந்து வெளிவந்த படம் , அதை பார்த்த பொழுது வெளியே வராமல் பெட்டிக்குள்ளேயே இருந்து இருக்கலாமே என தோன்றியது.

😄

ஈழத்து கடவுள் பக்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது முன்பு கடவுளின் புகழை சொல்லி ஒரு தமிழ்படம் எடுக்கபட்டதாம் ஆனால் அந்த படத்தை பார்த்தால் கடவுள் நம்பிக்கை வருகிற மாதிரி இல்லையாம்
ஆனால் இங்கு தேசத்தின் தூண்கள் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்றால் நடித்தே தீரவேண்டும்

Link to comment
Share on other sites

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

😄

ஈழத்து கடவுள் பக்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது முன்பு கடவுளின் புகழை சொல்லி ஒரு தமிழ்படம் எடுக்கபட்டதாம் ஆனால் அந்த படத்தை பார்த்தால் கடவுள் நம்பிக்கை வருகிற மாதிரி இல்லையாம்
ஆனால் இங்கு தேசத்தின் தூண்கள் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்றால் நடித்தே தீரவேண்டும்

நீங்களும் ஏதோ ஒரு தூண் என்று விளங்குகிறது. எதுவாக இருக்கும்???😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

😄

ஈழத்து கடவுள் பக்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது முன்பு கடவுளின் புகழை சொல்லி ஒரு தமிழ்படம் எடுக்கபட்டதாம் ஆனால் அந்த படத்தை பார்த்தால் கடவுள் நம்பிக்கை வருகிற மாதிரி இல்லையாம்
ஆனால் இங்கு தேசத்தின் தூண்கள் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்றால் நடித்தே தீரவேண்டும்

திருந்துவதற்கு இடமுண்டு

விளங்க நினைக்கமுன் திருந்த நினைக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனைப்போல  எவரும்  நடிக்கப்போவதில்லை

ஏனெனில் பிரபாகரனிடம் நடிப்பு  என்றும்  எப்பொழுதும்  இருந்ததில்லை

அவருடைய செயல்களை எவராலும் காட்சிகளாக்கமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்.!

Screenshot-2020-10-24-21-32-16-684-com-a 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கதாபாத்திரமேற்று நடிக்க உள்ளார்.

நீலம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜி.வெங்கடேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/10/24/18395/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்.!

Screenshot-2020-10-24-21-32-16-684-com-a 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கதாபாத்திரமேற்று நடிக்க உள்ளார்.

நீலம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜி.வெங்கடேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/10/24/18395/

வெட்டி வேலை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragaa said:

திருந்துவதற்கு இடமுண்டு

விளங்க நினைக்கமுன் திருந்த நினைக்கவும்

இந்த ragaa வும் தானும் ஒரு தேசத்தின் தூண் தான் என்று காட்ட விரும்பி இப்படி அலைந்து கொண்டு திரிகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த ragaa வும் தானும் ஒரு தேசத்தின் தூண் தான் என்று காட்ட விரும்பி இப்படி அலைந்து கொண்டு திரிகிறார்

இன மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் எல்லோரும் தேசத்தின் தூண்கள் தான், நிருபிக்க ஒன்றுமேயில்லை

நீங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தலைவரின் போராட்ட வாழ்க்கை பல சினிமாக்காரர்களுக்கு சில்லறை பார்க்க நன்றாகத்தான் உதவுகின்றது.

 

பிரபாகரனாக பாபி சிம்ஹா: ‘சீறும் புலி’ தடையை தாண்டுமா?

spacer.png

 

முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் திட்டமிடப்பட்டு, பல தரப்பிலுமிருந்து வெளியான எதிர்ப்பினால் விஜய் சேதுபதி அந்தத் திரைப்படத்திலிருந்து விலகினார். முத்தையா முரளிதரனின் விடுதலைப் புலிகள் எதிர்ப்புப் பார்வையை முன்வைத்தே விஜய் சேதுபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை தவறாக சித்தரிக்கக்கூடாது என்று முன்வைக்கப்பட்ட குரல்கள் எழுப்பிய சத்தத்தால் இன்னொரு டீமும் எழுந்திருக்கிறது. அது இயக்குநர் வெங்கடேஷ் குமாரின் ‘சீறும் புலி’ டீம்.

இயக்குநர் வெங்கடேஷ் குமார் தமிழ் சினிமா படைப்பாளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். பாலு மகேந்திராவிடம் சினிமா பயின்ற வெங்கடேஷ் இதுவரை உனக்குள் நான், லைட்மேன், நீலம் என மூன்று திரைப்படங்களை எடுத்திருக்கிறார். இவற்றில், முதல் இரண்டு திரைப்படங்களும் சினிமா தொடர்பானவை. மூன்றாவதாக வெங்கடேஷ் இயக்கிய ‘நீலம்’ திரைப்படம் இந்திய தணிக்கை துறையினால், இந்தியாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என தடை செய்யப்பட்ட திரைப்படமாகும்.

spacer.png

 

இலங்கையில் நடைபெற்ற போரினை அடிப்படையாகக் கொண்ட நீலம் திரைப்படம், இலங்கையில் இயங்கிவந்த தமிழ் புலிகள் அமைப்பின் எழுச்சியைப் பற்றிப் பேசியது. இலங்கையில் போர் முடிந்து நான்கு வருடங்கள் கழித்து 2013-இல் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தினை இந்திய தணிக்கை துறை ‘இலங்கையுடனான உறவு பாதிக்கும்’ என்று சொல்லி தடை செய்திருந்தது. ஆனால், அதே வருடம் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘சிலோன்(இனம்)’ திரைப்படம் ரிலீஸாகி, ஈழத் தமிழர் ஆதரவாளர்களின் எதிர்ப்பினால், அப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

இப்படி இலங்கையில் நடைபெற்ற போரின் தாக்கம், இந்திய-தமிழக சினிமாவில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்க, இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் திரைப்படத்தினை எடுக்கப்போகிறார் வெங்கடேஷ் குமார். தன்னை ஒரு நல்ல நடிகனாக தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தியுள்ள பாபி சிம்ஹாவுக்கு, பிரபாகரனைப் போல திரையில் நடிப்பது சவாலாக இருக்கும் என்றாலும், இந்தத் திரைப்படத்தைத் திரையில் கொண்டுவருவதற்கு அதைவிட கடுமையான சவால்களை ‘சீறும் புலி’ திரைப்படம் சந்திக்கவேண்டியதிருக்கும்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்படவிருக்கும் இப்படத்தில் ஒரு மாணவன் போராளியாக மாறியதும், அந்தப் போராளி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவனாக மாறியதும் காட்சிப்படுத்தப்படும் என்கின்றனர்.

https://minnambalam.com/entertainment/2020/10/25/15/bobby-simha-vijay-sethupathi-vidudhalai-pulikal-prabhakaran

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.