Jump to content

பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!

spacer.png

 

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன.

இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்று இருப்பதாகவும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை 'வன யுத்தம்' என்ற பெயரிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை 'குப்பி' என்ற பெயரிலும் இயக்கி வெளியிட்டவர்.

 

இதுதொடர்பாக அவர், “பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரபாகரனோடு நெருக்கமாகப் பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு ஆறு தடவை சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்தத் தொடரில் இருக்கும்” என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

 

https://minnambalam.com/entertainment/2020/10/22/3/prabakaran-biopic-web-series-director-invite-act-vijay-sethupathi

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

யோவ் அது வேறை இது வேறை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

😂

முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

 

46 minutes ago, வாத்தியார் said:

யோவ் அது வேறை இது வேறை 😂

 

11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.

மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

 

 

மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

இப்படி வீணாய் போனதுகள் விழங்காமல் போனதுக்காக ஓரிரு நிமிடங்கள் செலவு செய்வது வீண் உடையார்.
நானும் முதலே பார்த்துவிட்டு கடந்து போய்விட்டேன்.

Link to comment
Share on other sites

18 hours ago, கிருபன் said:

பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு!

spacer.png

 

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன.

இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்று இருப்பதாகவும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை 'வன யுத்தம்' என்ற பெயரிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை 'குப்பி' என்ற பெயரிலும் இயக்கி வெளியிட்டவர்.

 

இதுதொடர்பாக அவர், “பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரபாகரனோடு நெருக்கமாகப் பழகியவர்களுடன் பேசி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். எனக்கும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய அனுபவம் இருக்கிறது. இலங்கைக்கு ஆறு தடவை சென்று தகவல்களைத் திரட்டி இருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதும் இந்தத் தொடரில் இருக்கும்” என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

 

https://minnambalam.com/entertainment/2020/10/22/3/prabakaran-biopic-web-series-director-invite-act-vijay-sethupathi

 

 

குப்பி நீண்ட காலம் பெட்டிக்குள் இருந்து வெளிவந்த படம் , அதை பார்த்த பொழுது வெளியே வராமல் பெட்டிக்குள்ளேயே இருந்து இருக்கலாமே என தோன்றியது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின தலைவரின் படம் வெளிவருகிறது | தடை விதித்தால் போராட்டம் வெடிக்கும் |மக்கள் கருத்து

 

Link to comment
Share on other sites

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!


800 படம் விஜய் சேதுபதி நடிக்க என வர முன் யாராவது விமர்சித்தார்களா?? 
இல்லை. ஏன் விமர்சிக்கவில்லை என உங்களை நீங்களே கேளுங்கள். விடை தானாக வந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விஜய் சேதுபதியை அண்மைக்காலமாக கேவலமாக விமர்சித்த தேசத்தின் தூண்கள் இதற்கு எப்படியான கருத்தை தெரிவிப்பார்களோ!

கயித்த விழுங்கிவிட்டீர்கள் போல ... 😂

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

முரளிதரனாக படத்தில் நடிக்க போகிறார் என்பதிற்காக அவரை தெலுங்கன் என்றார்கள் இந்த படத்தில் அவர் நடிக்காவிட்டால் தெலுங்கன் என்பார்கள் தேசத்தின் தூண்கள்.

நியாயத்தைக் கதைக்கும்  விளக்கம் குறைஞ்சவர் இருவரும் ஒரே ஆள்தானா 😂

3 hours ago, உடையார் said:

 

 

மிகவும் கேவலமான சிந்தனை - ஏன் விஐய் சேதுபதியை நடிக்க வேண்டாமென்று ஏதித்தார்களென்று தெரியாத மாதிரி நடித்து கேட்கும் கேள்வி இது. கேவலம் கெட்ட முரளியை தலைவருடன் ஒப்பிட முடியுமா.

தெலுங்கன் என திட்டி பேசிய நாம் தமிழரின் ஒரு காணொளியை காட்ட முடியுமா. கருத்துக்கள் பதிய வேண்டுமென்றே காற்றில் கம்பை சுத்தாமல் ஆதரத்துடன் பதியவும்

விஜய் சேதுபதி விரும்பி நடித்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அவரின் முக சாயல் தலைவருடன் ஒத்திருக்கின்றது. 

இவர்களுடன் நேரவிரயம் செய்யாதீர்கள் . பலனில்லை. ☹️

 

51 minutes ago, nunavilan said:


800 படம் விஜய் சேதுபதி நடிக்க என வர முன் யாராவது விமர்சித்தார்களா?? 
இல்லை. ஏன் விமர்சிக்கவில்லை என உங்களை நீங்களே கேளுங்கள். விடை தானாக வந்து விடும்.

ஏன் உங்களுக்கு வேண்டாத வேலை. நாய்வாலை நிமிர்த்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா ☹️

Link to comment
Share on other sites

ஏன் இந்த வேண்டாத வேலை? முரளி ஏதோ தன்னைப்பற்றி சொல்ல வந்தார் முடியவில்லை.

பிரபாகரனைப் பற்றி யாருக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? இதுவரையும் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கு படத்தின் மூலம் எதை சொல்லப் போகிறார்கள்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அபராஜிதன் said:

குப்பி நீண்ட காலம் பெட்டிக்குள் இருந்து வெளிவந்த படம் , அதை பார்த்த பொழுது வெளியே வராமல் பெட்டிக்குள்ளேயே இருந்து இருக்கலாமே என தோன்றியது.

😄

ஈழத்து கடவுள் பக்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது முன்பு கடவுளின் புகழை சொல்லி ஒரு தமிழ்படம் எடுக்கபட்டதாம் ஆனால் அந்த படத்தை பார்த்தால் கடவுள் நம்பிக்கை வருகிற மாதிரி இல்லையாம்
ஆனால் இங்கு தேசத்தின் தூண்கள் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்றால் நடித்தே தீரவேண்டும்

Link to comment
Share on other sites

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

😄

ஈழத்து கடவுள் பக்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது முன்பு கடவுளின் புகழை சொல்லி ஒரு தமிழ்படம் எடுக்கபட்டதாம் ஆனால் அந்த படத்தை பார்த்தால் கடவுள் நம்பிக்கை வருகிற மாதிரி இல்லையாம்
ஆனால் இங்கு தேசத்தின் தூண்கள் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்றால் நடித்தே தீரவேண்டும்

நீங்களும் ஏதோ ஒரு தூண் என்று விளங்குகிறது. எதுவாக இருக்கும்???😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

😄

ஈழத்து கடவுள் பக்தர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது முன்பு கடவுளின் புகழை சொல்லி ஒரு தமிழ்படம் எடுக்கபட்டதாம் ஆனால் அந்த படத்தை பார்த்தால் கடவுள் நம்பிக்கை வருகிற மாதிரி இல்லையாம்
ஆனால் இங்கு தேசத்தின் தூண்கள் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என்றால் நடித்தே தீரவேண்டும்

திருந்துவதற்கு இடமுண்டு

விளங்க நினைக்கமுன் திருந்த நினைக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனைப்போல  எவரும்  நடிக்கப்போவதில்லை

ஏனெனில் பிரபாகரனிடம் நடிப்பு  என்றும்  எப்பொழுதும்  இருந்ததில்லை

அவருடைய செயல்களை எவராலும் காட்சிகளாக்கமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்.!

Screenshot-2020-10-24-21-32-16-684-com-a 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கதாபாத்திரமேற்று நடிக்க உள்ளார்.

நீலம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜி.வெங்கடேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/10/24/18395/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்.!

Screenshot-2020-10-24-21-32-16-684-com-a 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய விருது பெற்ற நடிகர் பொபி சிம்ஹா விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கதாபாத்திரமேற்று நடிக்க உள்ளார்.

நீலம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஜி.வெங்கடேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/10/24/18395/

வெட்டி வேலை ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragaa said:

திருந்துவதற்கு இடமுண்டு

விளங்க நினைக்கமுன் திருந்த நினைக்கவும்

இந்த ragaa வும் தானும் ஒரு தேசத்தின் தூண் தான் என்று காட்ட விரும்பி இப்படி அலைந்து கொண்டு திரிகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த ragaa வும் தானும் ஒரு தேசத்தின் தூண் தான் என்று காட்ட விரும்பி இப்படி அலைந்து கொண்டு திரிகிறார்

இன மான உணர்ச்சியுள்ள தமிழர்கள் எல்லோரும் தேசத்தின் தூண்கள் தான், நிருபிக்க ஒன்றுமேயில்லை

நீங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'சீறும் புலி' என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தலைவரின் போராட்ட வாழ்க்கை பல சினிமாக்காரர்களுக்கு சில்லறை பார்க்க நன்றாகத்தான் உதவுகின்றது.

 

பிரபாகரனாக பாபி சிம்ஹா: ‘சீறும் புலி’ தடையை தாண்டுமா?

spacer.png

 

முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் திட்டமிடப்பட்டு, பல தரப்பிலுமிருந்து வெளியான எதிர்ப்பினால் விஜய் சேதுபதி அந்தத் திரைப்படத்திலிருந்து விலகினார். முத்தையா முரளிதரனின் விடுதலைப் புலிகள் எதிர்ப்புப் பார்வையை முன்வைத்தே விஜய் சேதுபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை தவறாக சித்தரிக்கக்கூடாது என்று முன்வைக்கப்பட்ட குரல்கள் எழுப்பிய சத்தத்தால் இன்னொரு டீமும் எழுந்திருக்கிறது. அது இயக்குநர் வெங்கடேஷ் குமாரின் ‘சீறும் புலி’ டீம்.

இயக்குநர் வெங்கடேஷ் குமார் தமிழ் சினிமா படைப்பாளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். பாலு மகேந்திராவிடம் சினிமா பயின்ற வெங்கடேஷ் இதுவரை உனக்குள் நான், லைட்மேன், நீலம் என மூன்று திரைப்படங்களை எடுத்திருக்கிறார். இவற்றில், முதல் இரண்டு திரைப்படங்களும் சினிமா தொடர்பானவை. மூன்றாவதாக வெங்கடேஷ் இயக்கிய ‘நீலம்’ திரைப்படம் இந்திய தணிக்கை துறையினால், இந்தியாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என தடை செய்யப்பட்ட திரைப்படமாகும்.

spacer.png

 

இலங்கையில் நடைபெற்ற போரினை அடிப்படையாகக் கொண்ட நீலம் திரைப்படம், இலங்கையில் இயங்கிவந்த தமிழ் புலிகள் அமைப்பின் எழுச்சியைப் பற்றிப் பேசியது. இலங்கையில் போர் முடிந்து நான்கு வருடங்கள் கழித்து 2013-இல் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தினை இந்திய தணிக்கை துறை ‘இலங்கையுடனான உறவு பாதிக்கும்’ என்று சொல்லி தடை செய்திருந்தது. ஆனால், அதே வருடம் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘சிலோன்(இனம்)’ திரைப்படம் ரிலீஸாகி, ஈழத் தமிழர் ஆதரவாளர்களின் எதிர்ப்பினால், அப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

இப்படி இலங்கையில் நடைபெற்ற போரின் தாக்கம், இந்திய-தமிழக சினிமாவில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்க, இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் திரைப்படத்தினை எடுக்கப்போகிறார் வெங்கடேஷ் குமார். தன்னை ஒரு நல்ல நடிகனாக தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தியுள்ள பாபி சிம்ஹாவுக்கு, பிரபாகரனைப் போல திரையில் நடிப்பது சவாலாக இருக்கும் என்றாலும், இந்தத் திரைப்படத்தைத் திரையில் கொண்டுவருவதற்கு அதைவிட கடுமையான சவால்களை ‘சீறும் புலி’ திரைப்படம் சந்திக்கவேண்டியதிருக்கும்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்படவிருக்கும் இப்படத்தில் ஒரு மாணவன் போராளியாக மாறியதும், அந்தப் போராளி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவனாக மாறியதும் காட்சிப்படுத்தப்படும் என்கின்றனர்.

https://minnambalam.com/entertainment/2020/10/25/15/bobby-simha-vijay-sethupathi-vidudhalai-pulikal-prabhakaran

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.