Jump to content

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாட்டுக்கு பொருத்தமற்றது என சமகால அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/parliment/01/259174?ref=imp-news

Link to comment
Share on other sites

இருண்ட யுகம் ஒன்றில் இருந்து மேலும் அகண்ட படுகுழிக்குள் தள்ளக் கூடிய இருண்ட யுகம் நோக்கி இலங்கை நகர்கின்றது. இந்த சர்வாதிகாரத்தின் பங்காளிகளாக சிங்கள மக்களில் பெரும்பான்மையினரு, எதிராளிகளாக தமிழ் மக்களும் நிற்கின்றனர். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று  பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் விதமாக அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்று  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இரு வாக்கெடுப்பிலும் 08 எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அத்துடன் இவ் இரு வாக்கெடுப்பின் போதும் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, முதலாவது வாக்கெடுப்பு முடிவடைந்த போது, 20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

1. ஐ.ம.ச. தேசிய பட்டியல் உறுப்பினர் - டயானா கமகே 

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

3. முஸ்லிம் தேசிய கூட்டணி உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

7. ஐ.ம.ச. உறுப்பினர் அரவிந்த் குமார் 

8. ஐ.ம.ச. உறுப்பினர் இஷாக் ரஹ்மான் 
 

https://www.virakesari.lk/article/92768

Link to comment
Share on other sites

ஹஹ்ஹா... வழக்கப் போல் முஸ்லிம் காங்கிரஸ் பல்டி அடித்து விட்டது. இனி அமைச்சர் பதவிகள் தான். 

கிழக்கு முன்னாள் முதலமைச்சருக்கு அமைச்சு பதவி கொடுத்தால் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மேலும் ஒதுக்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி !

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 17 வது சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது

இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/92765

இலங்கை வரலாற்றில் இன்று இருண்ட நாள் - சிவஞானம் சிறதரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படுவதால் தமிழர்களின் இருப்புக்கும் இறைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை வரலாற்றில் இன்று இருண்டநாள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறதரன்  சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

sritharan-mp « Radiotamizha Fm

அவர் மேலும் கூறுகையில்,

20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் இந்த நாடு ஓர் இருண்ட யுகத்தை நோக்கி நகர்கிறது. முசோலினி, ஹிட்லர் அல்லது ஒரு இடியமீன்  யுகத்தை நோக்கியே  நாடு நகரப்போகிறது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன புதிய அரசிலமைப்பொன்றை கொண்டுவந்திருந்த சந்தர்ப்பதில் அதன் ஆபத்தை கொல்வின் ஆர்.டி.சில்வா விளக்கியிருந்தார். 

எந்தவொரு நபருடைய கருத்தையுத் செவி சாய்க்காது ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில் மீண்டும் 42 வருடங்களின் பின்னர் ஒரு தனிநபரிடம் அதிகாரத்தை குவிக்கும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கிதான் நகரும்.

1948 ஆம் ஆண்டு இலங்கையின் தலா தேசிய வருமானமும் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலா தேசிய வருமானமும் சமமாக காணப்பட்ட நிலையில் இன்று அந்த நாடுகள் அடைந்துள்ள நிலையை பார்க்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்த நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளது. ஜனாதிபதியிடம் இன்று குவிக்கப்படும் அதிகாரங்கள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள்மீதான அதிகார துஷ்பிரயோகத்திற்கு அல்லது அவர்களுடைய வாழ்வுக்கு பாதகமாக இருக்கும்.

42 வருடங்கள் இராணுவச் சிந்தையில் உள்ள ஒருவர்தான் ஜனாதிபதியாகியுள்ளார். அவர் பதவியேற்ற நாள்முதல் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை. அநுராதபுரத்தில் நடைபெற்ற அவரது பதவியேற்பு உரையில் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு பிரச்சினை உள்ளதென்பதைக் கூட அவர் கூறவில்லை. இந்தியாவுக்கு சென்ற போது அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய  பேட்டியிலும் கூட இனப்பிரச்சினை பற்றி அவர் பேசவில்லை. அதேபோன்று பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையிலும் இனப்பிரச்சினை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை.

இவ்வாறான ஒருவரிடம் தான் அதிகாரங்கள் குவிக்கப்படுகிறது. ஏனைய இனங்களை மதித்து பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மதித்து அவர் ஆட்சி செய்வார் என்ற உத்தரவாதம் இந்தச் சட்டத்தினால் கொடுக்கப்படுமா? இதனை சிந்திக்க வேண்டும். சிங்கள மக்களை நினைத்து கவலையடைகிறேன். இந்த நாள் ஓர் ஆபத்தான இருண்ட நாள். இன்னும் 20 வருடங்களுக் பின்னர் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இது இருக்கும். நாம் பாதிக்கப்பட்ட இனம். 70 வருடங்களாக இந்த மண்ணில் இருப்புக்காகவும் இழந்துபோன இறைமையை மீட்கவும் போராடுகிறோம்.

 எமக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இருப்பது என்றால் இவ்வாறு அதிகாரம் குவிக்கப்படுவது ஆபத்தானது. அதன்hல் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சிங்கள மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை நேர் வழியில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த எதிர்காலம் அமையும். வரலாற்றின் கறுப்புநாளை வாக்களிக்கும் உறுப்பினர்கள் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள் நாளை இந்த அதிகாரங்கள் உங்களுக்கு எதிராகவே திரும்பும் என்றார்.https://www.virakesari.lk/article/92764

Link to comment
Share on other sites

அரச தரப்பில் ’20’ க்கு ஆதரவாக வாக்களிக்காத ஒரேயொரு உறுப்பினர்; மைத்திரிபால சிறிசேன

sirisena-1024x576.jpgஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் இன்றிரவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 221 பேர் மட்டுமே இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஐ.தே.க. மற்றும் ஞானசார தேரரின் கட்சி என்பன தமது தேசியப் பட்டியல் உறுப்பினரை இதுவரையில் தெரிவு செய்யவில்லை. அதனைவிட சபாநாயகர், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் 221 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தார்கள்.

மைத்திரிபாலவை தலைவராகக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 20 ஆவது திருத்தத்தை ஆதரிப்பது என்ற முடிவை நேற்றிவு எடுத்தது. ஆனால், 19 ஆவது திருத்தத்தை கடந்த நல்லாட்சியில் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற முறையில் ’20’ ஐ தன்னால் ஆதரிக்க முடியாது என மைத்திரி இன்று காலை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

 
Link to comment
Share on other sites

“20” நிறைவேறியதை காட்டிலும் எம்.பிக்கள் துரோகம் அதிக வலி!

ஈ.சரவணபவன் ஆதங்கம்

எமது நாட்டின் தலையெழுத்தை மாற்றி, இருண்ட யுகத்துக்குள் தள்ளியுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை விடவும், அந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு நிறைவேற, மக்களின் முதுகில் குத்தி கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த துரோகமே அதிகமாக வலியைத் தருகின்றது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசுக் கட்சி முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன்.


அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ளதாவது-


ஒக்ரோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொடுத்து , ஜனநாயக ரீதியில் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளால் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நேற்று நிறைவேறியுள்ளது. ஜனநாயகத்தின் பேரைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ராஜபக்சக்களின் சதியை திட்டமிட்டபடி நிறைவேற்றியுள்ளனர். இதன் விளைவை ஒட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது.


இந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து முதுகில் குத்தி விட்டு கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே முக்கியமான காரணம். அவர்களில் 6 பேர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்தகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா ஆகிய எட்டுப்பேரே இந்தத் துரோகத்தைப் புரிந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி மலர துணைபோயுள்ளனர். 20 ஆவது திருத்தம் நிறைவேறிவிட்டதே என்ற துயரை விடவும், இந்த எட்டுப் பேரும் செய்த துரோகமே இன்னும் அதிக வலியை மக்களிடம் உண்டாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் முஸ்லிம் மக்களை ஈவிரக்கம் இல்லாமல், ஐந்தறிவு ஜந்துக்கள் போல நடத்துவதற்கும், கலவரங்களைத் தூண்டி விட்டு இழப்புக்களை ஏற்படுத்துவதற்கும் சூத்திரதாரிகளான ராஜபக்சக்களுக்கு , அதே முஸ்லிம் இனத்தின் பிரதிநிதிகள் தோள் கொடுக்க எப்படி முடிந்தது?. அவ்வளவு எளிதில் தங்கள் இனத்துக்கு ராஜபக்சக்கள் இழைத்த கொடுமைகளை மறந்துவிட்டு, சுயநலத்துக்காக ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளபவர்களை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என அழைக்கமுடியுமா?
அதேபோன்றுதான் அரவிந்தகுமாரும் , 20 ஆம் திருத்தத்துக்காக ராஜபக்சக்களுக்கு அடிமையானதன் மூலம் தனக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னமும் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க மனமில்லாமல் நாடகமாடும் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததம் மூலம் தன் மீது பெரும் களங்கத்தை உண்டுபண்ணியுள்ளார்.


இலங்கையின் எதிர்காலத்தைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்ற துணைபோனதன் மூலம் இந்த எட்டுப் பேரும் செய்த துரோகத்தை மக்கள் மன்னித்தாலும், வரலாறும், காலமும் அவர்களை மன்னிக்கப் போவதில்லை-என்றுள்ளது. 

 

https://newuthayan.com/20-நிறைவேறியதை-காட்டிலு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20’ க்குள் உள்ளடங்கும் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் தனியாக நடைபெற்ற வாக்கெடுப்பு

parliment-600.png
 7 Views

20 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான 17 ஆவது சரத்து குறித்து எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு தனியான வாக்கெடுப்பொன்றையும் கோரினர்.

இந்த நிலையில், சபாநாயகரின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட தனியான வாக்கெடுப்பின் 17 ஆவது சரத்து தொடர்பில் ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் கிடைத்தன. இதற்கமைய, 17 ஆவது சரத்து 92 மேலதிக வாக்குகளினால் திருத்தங்கள் இன்றி 20ஆவது திருத்தச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 213 ஆகும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சரத்து ஒன்றுக்கான வாக்கெடுப்புஇடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/20-க்குள்-உள்ளடங்கும்-இரட்/

Link to comment
Share on other sites

11 hours ago, கிருபன் said:

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

தலைவர் எதிர் மற்றவர்கள் ஆதரவு?, இது டபிள் கேம் (double game). திட்டமிட்டு இவர்கள் இரு பக்கமும் ஆடுகிறார்கள் 

Link to comment
Share on other sites

தமிழவின்'ல் "ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்" என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில் ""முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள்.இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இன்று இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்.இன்று இவர்கள் செய்தது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம். இவர்கள் ஆதரவு அளித்ததால்தான் இன்று இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்  என்றுள்ளது 🙄

செய்தி மூலம்: https://www.tamilwin.com/politics/01/259205?ref=home-imp-parsely

இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.