Jump to content

பரவும் போர் - உலகப்போர் 2 பாகம் - 11


Recommended Posts

கம்யூனிஸமா? நாஸிசிசமா? இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று என்னைக் கேட்டால், நான் கம்யூனிசம் என்று தான் சொல்வேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. 1937 ல் சேர்ச்சில் இப்படி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான பிரிட்டனை ஆட்சி செய்திருந்த சேர்ச்சில் கம்யூனிசத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரே காரணத்தோடு தான். கம்யூனிஸம், நாஸிஸம் இரண்டையும் அவர் ஒரே வரிசையில் வைத்து தான் ஒப்பிடுகிறார்.

சாம்பர்லைன் ஹிட்லரை ஆதரிப்பதை தொடக்கம் முதலே சேர்ச்சில் எதிர்த்து வந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். நாம் இணைய வேண்டியது சோவியத்துடன் என்று 1938 முதலே சேர்ச்சில் சொல்லி வந்திருக்கிறார். ஐரோப்பாவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது. பிரான்ஸை வசப்படுத்தியது. பிரிட்டனை தாக்கியது என்று ஹிட்லரை வெறுக்க பல்வேறு காரணங்கள் சேர்ச்சிலிடம் இருந்தன.

கம்யூனிஸத்தை சேர்ச்சில் எக்காலத்திலும் ஆதரித்ததில்லை. சோவியத் எதிர்ப்பை அவர் எந்த நோடியிலும் கைவிட்டதும் இல்லை. என்றாலும் ஹிட்லரை வீழ்த்துவதற்கு சோவியத்துடன் இணைந்தாகவேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு தயக்கம் இருந்ததில்லை.

ஜேர்மனி, சோவியத் மீது போர்பிரகடனம் செய்த போது சேர்ச்சில் ரேடியோவில் அன்றைய தினமே அறிவித்தார். கம்யூனிஸத்தைப் பற்றி நான் இதுவரை சொல்லி வந்த கருத்துக்கள் எதிலும் மாற்றம் இல்லை. ஆனால், சோவியத் இப்போது தாக்கப்பட்டதைப் பார்க்கும் போது முன்னால் சொன்னவை அனைத்தும் மறைந்துவிட்டன, ஜுலை 12, 1941  அன்று பிரிட்டனும் சோவியத்தும் ஒப்பந்தம் செய்துகொண்டன, போர்க் காலத்தில் நமக்குள் உதவி செய்து கொள்ளலாம் என்பது அடிப்படை சாரம்சம்.

 

பேர்ல் துறைமுக தாக்குதல்

கிழக்கு முனையில் சோவியத்திற்கும் ஜேர்மனிக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், டிசம்பர் 7, 1941 அன்று ஜப்பான், பேர்ல் துறைமுகத்தை (Pearl Habour) தாக்கியது. ஹவாயில் இருந்த இந்த துறைமுகப்பகுதியில் தான் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை அமைத்திருந்தது. இது நாள் வரை ஒதுங்கி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவை பேர்ல் துறைமுகத் தாக்குதல் உலுக்கியெடுத்தது. 

பதினெட்டு மாதங்களுக்கு முன்பே ரூஸ்வெல்ட் அமெரிக்கப்படைகளை பேர்ல் துறைமுகத்தில் குவித்து வைத்திருந்தார். ஜப்பானின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தப் படை உதவும் என்று அமெரிக்கா நம்பியது. ஜப்பான் சீனாவுடன் தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த சமயம் அது. போரைச் சமாளிக்க எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மூலப்பொருட்கள் ஜப்பானுக்கு குறைவின்றி தேவைப்பட்டன. இதை உணர்ந்து கொண்ட நேச நாடுகள் ஜப்பானுடனான வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டன. ஜுன் 1941 ல் இந்த வர்த்தக உறவு முடிவுக்கு வந்தது. எண்ணெய் வளமிக்க பிரதேசங்களான கிழக்கிந்திய தீவுகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றுவது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு ஜப்பான் வந்து சேர்ந்தது. ஐரோப்பா கொடுக்காவிட்டால் என்ன? எமக்கு வேண்டியதை நாங்கள் பறித்துக்கொள்வோம். ஜப்பான் இப்படித்தான் சிந்திக்கும் என்று அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் எப்படியாவது தடுத்து நிறுத்திவிடலாம் என்று நம்பியது அமெரிக்கா.

டிசம்பர் 7, 1941  காலை எட்டு மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. அமெரிக்க கடற்படையின் நான்கு கப்பல்கள் அழிக்கப்பட்டன. 3 ஆயுதம் தாங்கிய க்ரூஸர் கப்பல்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். தன் மீது தொடுக்கபட்ட மாபெரும் போராகவே அமெரிக்கா இதை எடுத்துக் கொண்டது. எப்படி இதை அமெரிக்கா அனுமதிக்கலாம் என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பின.

large.1024px-Pearl_Harbor_1941_de_svg.png.c6adcb48aa5f60d0d61cc27edf507aab.png

அடுத்த நாள். ஹாங்காங், மலேசியா, ஷங்காய் மூன்றின் மீதும் போர்ப்பிரகடனம் செய்தது ஜப்பான். ஹிட்லரே அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. கூட்டணியில் இருந்த கோலிக்குண்டு அளவுக்கே உள்ள ஜப்பான் எத்தனை ஆர்ப்பாட்டமாகத் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

மறுநாள், அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பான் மீது போர்ப்பிரகடனம் செய்தன. முன்று தினங்கள் கழித்து டிசம்பர் 11ம் திகதி ஹிட்லர் அமெரிக்கா மீது போர்ப்பிரகடனம் செய்தார். அது குறித்து அவர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி இது தான்.

large.243723347_Perlharborangriffe1941.jpg.202abc6331a4f3f6ebdfe2b542d70d24.jpg

ஒப்பந்த‍த்தின்படி, ஜேர்மனியும் இத்தாலியும் அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் எதிராக போரிட தீர்மானித்துவிட்டோம். ஜப்பானுக்கு ஆதரவாக நாங்கள் போர்ப்பிரகடனம் செய்கிறோம். ரூஸ்வெல்டின் கொள்கை உலகைக் கட்டியாள வேண்டும் என்பது தான். இத்தாலி ஜேர்மனி, ஜப்பான் மூன்றையும் எப்படியாவது அடக்கியாளவேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் விரும்புகின்றன. உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று இந்த இரு சர்வாதிகார அரசுகளும் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ஜேர்மனி அனுமதிக்காது.

இது ஹிட்லரின் முக்கிய தவறு. ஜப்பானே தாக்க ஆரம்பித்துவிட்டதே நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று ஹிட்லர் சிந்தித்திருக்க‍க்கூடும். சோவியத்துடன் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்து விடுபட இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் போன்ற பலம் மிக்க நாடுகளோடு மோதிய அவர் அமெரிக்காவை நேரிடையாக பகைத்த‍து மிகப்பெரிய தவறு. இதுவரை போரில் நேரடி பங்காளராக இல்லாமல் பார்வையாளராக  பிரிட்டனுக்கு உதவிகள் மட்டும் செய்து வந்த‍ அமெரிக்காவை பிரிட்டன் பக்கம் வலுக்கட்டாமாக தள்ளிய ஹிட்லரின் செயல் தோல்வியை நோக்கிய தனது அடிகளில் ஒன்று என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அமெரிக்காவின் வருகை பிரிட்டனை உற்சாகம் கொள்ளச் செய்தது உண்மை. பிரான்ஸின் வீழ்ச்சிக்கு பிறகு தோதான ஒரு கை பிரிட்டனுக்கு கிடைக்கவில்லை. ஜேர்மனியுடனான போரில் கணிசமான இழப்புக்களை பிரிட்டன் சந்தித்திருந்த‍து. இந்நிலையில் அமெரிக்காவோடு கைகோர்த்துக்கொள்வது அற்புதமான வாய்ப்பு. ஜப்பானின் சமீபத்திய அவதாரம் அச்சமூட்டியது. முஸோலினியும் தன்னால் முடிந்தவரை அங்கே , இங்கே என்று மோதிக்கொண்டிருக்கிறார். இந்த மூன்று நாடுகளும் ஒரணியில் நிற்பது பிரிட்டனுக்கு அச்சுறுத்தல். அதோடு ஐரோப்பாவுக்கும்.

ஜப்பான் விரைவாக சில வெற்றிகளை குவித்த‍து. பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடந்த இரண்டாவது தினம், பிரிட்டனின் இரு பெரும் கப்பல்களை (Prince of Wales, the Repulse) ஜப்பான் தகர்த்தது. அடுத்த நாள் பர்மாவை நோக்கி முன்னேறியது. டிசம்பர் 26 ம் திகதி ஹாங்காங் ஜப்பானிடம் சரணடைந்தது. ஜனவரி 1942 ல் டச்சு கிழக்கு இந்திய தீவுகளை பாய்ந்து  தாக்கி கையகப்படுத்திக் கொண்டது. அங்கிருந்த எண்ணெய் வளங்களை கைப்பற்றி கொண்டது. பெப்ரவரி 15, 1942 அன்று பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி மலேயா முழுவதையும் ஜப்பான் கைப்பற்றியது. கூடவே சிங்கப்பூரில் இருந்த மிகப்பெரிய கடற்படைத் தளத்தையும் சுற்றிவளைத்து தனதாக்கிக்கொண்டது. ஏப்ரல் 1942 ல் இந்திய எல்லைக்கு அருகே வந்து ஜப்பான் நோட்டம் விட்டபோது பிரிட்டன் உச்சக்கட்ட அதிர்ச்சியை சந்தித்தது. அடுத்து ஆஸ்திரேலியா தான் என்று பேச்சு அடிபட்டது.  

பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறவு மேலும் வலுவடைந்தது. நிதி உதவியும் ஆயுத உதவியும் மட்டுமே இதுவரை அளித்து வந்த அமெரிக்கா பிரிட்டனுடன் ஒரு தொழில் பார்ட்னராக கைகோர்த்துக் கொண்டது. டிசம்பர் 22, 1941 முதல் ஜனவரி 14 1942 வரை வாஷிங்ரனில் நடைபெற்ற மகாநாட்டின் போது, பொதுவான தலைமைக்குழு (Combined Chiefs of Staff committee) ஒன்றை உருவாக்க முடிவு செய்தனர். அமெரிக்கா பிரிட்டன் இரண்டும் இணைந்து போரிடுவதற்கான அடித்தளம் இது. எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்படும்? என்னென்ன உபகரணங்கள், மூலப்பொருட்கள் வேண்டியிருக்கும்? தகவல் தொடர்பை எப்படி முறையாக பயன்படுத்திக்கொள்வது? உளவு நிறுவனங்களிடம் இருந்து எப்படி கூட்டாக தகவல்கள் கேட்டறிவது? போக்குவரத்து ஏற்பாடுகளை எப்படிக் கவனிப்பது? போருக்கு தேவைப்படும் அத்தனை விஷயங்கள் பற்றியும் இந்த கமிட்டி முடிவு செய்தது.

முதலில் ஜேர்மனியை கவனிப்பது என்று திட்டமிட்டார்கள். சோவியத் மீது ஜேர்மனி போர் தொடுத்திருக்கும் இந்த சமயத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம். இனிமேலும் ஜேர்மனியால்(என்றால் அச்சுநாடுகளால்) ஐரோப்பாவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி செய்வோம். ஜேர்மனியை உடனே தாக்குவோம். இது அமெரிக்காவின் நிலைப்பாடு. பிரிட்டன் தயங்கியது. ஜேர்மனியை தாக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் காலம் கனியட்டுமே. நம்மிடம் உள்ள ஆயுதங்கள் போதாது. ஆட்களும் போதாது. நம் பலத்தை அதிகப்படுத்திக்கொள்வோம். பிறகு தாக்குவோம்.

பர்மா, பிலிப்பைன்ஸ், மலேசியா, டச்சு கிழக்கிந்திய தீவுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை ஜப்பான் ஏப்ரல்1942 ல் கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டது. எதிர்ப்பட்ட நேசநாடுகளின் படைகளையும் விட்டுவைக்கவில்லை. தெற்கு சீன கடல், ஜாவா கடல், இந்து மகா சமுத்திரம் ஆகிய கடல் பகுதிகளை ஒட்டி அமைக்கபட்ட பல தளங்களைக் கைப்பற்றினார்கள். நேச நாடுகளின் தளம் அமைந்திருந்த டார்வின்(ஒஸ்ரேலியா) மீது குண்டுகள் வீசப்பட்டன. அட, ஜேர்மனியைப் போலவே நாமும் பெரிய ஆள் தான் என்று ஜப்பான் பெருமிதப்பட்டுக்கொண்டது.

large.198798828_Mussolini1930.jpg.91db44f8fa9daa310e4b5988d1410229.jpgஜேர்மனியும் ஜப்பானும் ஐரோப்பாவை கலக்கிக்கொண்டிருந்த போது, இத்தாலி சாய்வு நாற்காலியில் படுத்துக்கிடந்தது. கடல் மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் தாக்கி சிசிலியை கைப்பற்றிவிட்டது நேசப்படை. ஜூலை 9, 1943 ல் ஆரம்பித்து ஆகஸ்ட் 17 ல்  முடித்துக்கொண்டார்கள். இத்தாலியப்படை ஜேர்மனியப் படை இரண்டையுமே தாக்கி வெற்றிபெற்றிருந்தது நேசப்படை. கையோடு இத்தாலியை நோக்கி நகரவும் ஆரம்பித்தது.

வானத்தில் இருந்து தினம் தினம் குண்டு மழை, நகரங்கள் அலுவலகங்கள், வீடுகள், வீதிகள் குலுங்கி வெடித்தன, மிச்சமிருந்த தொழிற்சாலைகளும் மூலப்பொருட்களை கொண்டு வர முடியாததால் மூடியே கிடந்தன. கரி இல்லை. எண்ணெய் இல்லை. சாப்பாடு இல்லை. மருந்து மாத்திரைகள் இல்லை. எனதருமை இத்தாலி மக்களே, நாம் பீடு நடை போட்டு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பொறுங்கள். இது போன்ற முஸோலினியின் வழக்கமான பிரச்சாரத்தை மக்கள் உதாசீனம் செய்ய ஆரம்பித்தனர். வாடிகன் ரேடியோவையும் லண்டன் ரேடியோவையும் திருகி உண்மை நிலவரம் அறிந்து கொண்டார்கள். ஆம், இத்தாலி தோற்றுத்தான் போகப்போகிறது.

Link to comment
Share on other sites

  • tulpen changed the title to பரவும் போர் - உலகப்போர் 2 பாகம் - 11
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கிறோம், தொடருங்கள்! 

உலகில் தற்போது நடப்பவையெல்லாம் ஏதோ புதிதாக நடப்பதாக நினைபோருக்கு, "இவை ஏற்கனவே நடந்தவை, இப்போது வரலாற்றை அறியாதோரால் மீள அரங்கேறுகின்றன" எனக் காட்ட இது போன்ற தொடர்கள் அவசியம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.